Breaking

Showing posts with label பள்ளிக் கல்வித்துறை. Show all posts
Showing posts with label பள்ளிக் கல்வித்துறை. Show all posts

Saturday, July 30, 2022

July 30, 2022

பணி மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியருக்காக பாசப்போரட்டம் நடத்திய மாணவர்கள்.. மனம் மாறிய கல்வித்துறை அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் பணியிட மாற்றம் செய்ய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (செய்தியாளர் - அ. சதிஷ்)

அடுத்த சொரகொளத்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பொற்குணம், மருத்துவாம்பாடி, கமலபுத்தூர், கருத்துவம்பாடி, கரிங்கல்பாடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

அடுத்த சொரகொளத்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பொற்குணம், மருத்துவாம்பாடி, கமலபுத்தூர், கருத்துவம்பாடி, கரிங்கல்பாடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக திருவண்ணாமலையை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரை பள்ளிக்கல்வித்துறை வேறு பள்ளிக்கு நேற்று இரவு பணி மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன் பேரில் மாற்றம் செய்யப்பட்ட பள்ளிக்கு ஆசிரியர் கணேஷ் பாபு சென்று விட்டார்.

இந்தப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக திருவண்ணாமலையை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரை பள்ளிக்கல்வித்துறை வேறு பள்ளிக்கு நேற்று இரவு பணி மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன் பேரில் மாற்றம் செய்யப்பட்ட பள்ளிக்கு ஆசிரியர் கணேஷ் பாபு சென்று விட்டார்.

இதையறியாமல் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த உடற்கல்வி ஆசிரியரை மாற்றியதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

உடற்கல்வி ஆசிரியரை பணி மாற்றம் செய்ததை கண்டித்து, மீண்டும் அதே பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியர் வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பாக தரையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடற்கல்வி ஆசிரியரை பணி மாற்றம் செய்ததை கண்டித்து, மீண்டும் அதே பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியர் வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பாக தரையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கணேஷ் பாபு, பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு சம்பந்தமான பயிற்சிகளை அன்பு கலந்த அக்கறையுடன் அளித்து, அவர்களை மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்து பரிசு பெற செய்தார் என்றும், சொரக்குளத்தூர் என்ற கிராமமே விளையாட்டால் மேம்பட்டது என்றும் கிராமவாசிகளும் பள்ளி மாணவ மாணவிகளும் தெரிவித்தனர். கணேஷ் பாபு, பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு சம்பந்தமான பயிற்சிகளை அன்பு கலந்த அக்கறையுடன் அளித்து, அவர்களை மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்து பரிசு பெற செய்தார் என்றும், சொரக்குளத்தூர் என்ற கிராமமே விளையாட்டால் மேம்பட்டது என்றும் கிராமவாசிகளும் பள்ளி மாணவ மாணவிகளும் தெரிவித்தனர்.

தொடர்ந்து இரண்டு மணி நேரமாக வகுப்புக்கு செல்லாமல் மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அந்த போராட்டத்தில் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொள்ளத் தொடங்கினர்.

தொடர்ந்து இரண்டு மணி நேரமாக வகுப்புக்கு செல்லாமல் மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அந்த போராட்டத்தில் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொள்ளத் தொடங்கினர்.

இந்நிலையில், உடற்கல்வி ஆசிரியர் கணேஷ் பாபு அதே பள்ளியில் பணியை தொடரலாம் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்நிலையில், உடற்கல்வி ஆசிரியர் கணேஷ் பாபு அதே பள்ளியில் பணியை தொடரலாம் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சுரக்களத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கணேஷ் பாபு வருகை தந்தார். அவரைப் பார்த்த மாணவ-மாணவிகள் கண் கலங்கியபடி உற்சாகமாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சுரக்களத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கணேஷ் பாபு வருகை தந்தார். அவரைப் பார்த்த மாணவ-மாணவிகள் கண் கலங்கியபடி உற்சாகமாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். பின்னர், கிராமத்தின் நுழைவு வாயில் இருந்து ஆசிரியரை கட்டி தழுவி கண்ணீர் மல்க தோளில் சுமந்தவாறு ஊர் முழுக்க சுற்றி பின்னர் பள்ளியை வந்தடைந்தனர். பின்னர், கிராமத்தின் நுழைவு வாயில் இருந்து ஆசிரியரை கட்டி தழுவி கண்ணீர் மல்க தோளில் சுமந்தவாறு ஊர் முழுக்க சுற்றி பின்னர் பள்ளியை வந்தடைந்தனர். இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது. அதன் பின்னர் பள்ளி வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது. இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது. அதன் பின்னர் பள்ளி வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது.

Friday, July 29, 2022

July 29, 2022

இந்த நாட்களில் பள்ளிகள் கிடையாது... பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை..

பள்ளி நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது எனவும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டுமெனவு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது எனவும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டுமெனவு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்‌ கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த ஜூன்‌ மாதம்‌ 13 ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில்‌ வகுப்புகள்‌ தொடங்கப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு‌ பிறகு வழக்கம் போல் பள்ளிகள் இயங்குகின்றன. மேலும் 11 ஆம் வகுப்பிற்கு ஜூன் 27 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

மேலும் இந்த கல்வியாண்டு முழுவதும் சனிக்கிழமை வகுப்புகள்‌ இயங்காது, விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்‌ துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ஆனால் சில தனியார் பள்ளிகளில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் எடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் தற்போது பள்ளிக்கல்வித்‌ துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்‌ மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது, மீறினால்‌ கடும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று எச்சரித்துள்ளது.

விடுமுறை நாள்களில்‌ மாணவர்களுக்கு வகுப்புகள்‌ எடுக்க கூடாது, பள்ளி வேலை நாட்களில்‌ மட்டுமே மாணவர்கள்‌ வர வேண்டும்‌ என்று உத்தரவிட்டுள்ளது.

Wednesday, July 27, 2022

July 27, 2022

பள்ளி சொத்துக்களை மாணவர்கள் சேதப்படுத்தினால் பெற்றோர்களே பொறுப்பு - பள்ளிக் கல்வித்துறை

பள்ளிச் சொத்துகளுக்கு ஒரு குழந்தை சேதம் விளைவித்தால் பெற்றோர்,பாதுகாவலரே பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றி அமைத்து தர வேண்டும். பள்ளிக் குழந்தைகள் தவறான செயல்களில் ஈடுபட்டால் முதலில் தக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்!

பள்ளிகளில் மாணவர்களால் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டால் அதற்கு, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களே முழுப் பொறுப்பு என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சேதமடைந்த பொருளை பெற்றோர்களோ அல்லது பாதுகாவலரோதான் மாற்றித் தரவேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான செயல்களில் குழந்தைகள் ஈடுபட்டால், முதலில் அவர்களுக்கு தக்க அலோசனை வழங்க வேண்டும். அடுத்தடுத்து தவறான செயல்களில் ஈடுபடும் குழந்தைகளை நல்வழிப்படுத்த ஒழுங்கு முறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாலலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Monday, July 25, 2022

July 25, 2022

ஆசிரியர்களின் வருகைப்பதிவு செயலி மூலம் கணக்கிடப்படும் - பள்ளிக் கல்வித்துறை அதிரடி

ஆகஸ்டு 1-ம் தேதி முதல் ஆசிரியர்களின் வருகைப்பதிவு செயலி மூலம் கணக்கிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்னை, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது ஆசிரியர்களின் வருகைப்பதிவு நோட்டில் கையெழுத்து போடுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவு செயலி மூலம் கணக்கிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என தெரிகிறது. அதே போல் மாவட்ட கல்வி, முதன்மை கல்வி அலுவலங்களிலும் இத்திட்டத்தை அமல் படுத்த உள்ளதாக தெரிகிறது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி, முதன்மை கல்வி அலுவலங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களும் கட்டாயமாக எமிஸ் என்கிற கல்வித்துறையின் செயலியில் வருகைப்பதிவை பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறக்கிப்பட உள்ளது. இந்த செயலியில் காலை 10 மணிக்குள் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. Also Read - திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் லட்ச தீபம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு மேலும் அந்த செயலியில் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து தான் வருகையை பதிவு செய்கிறார்களா என்பதை கண்கானிக்கவும் செயலில் பிரத்யேகமாக ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பள்ளிகளுக்கு 77 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | TNPSC குரூப் 4 தேர்வு....கர்ப்பிணியை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை

அவற்றில் முக்கியமான சில அறிவிப்புகள், தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னரே பள்ளிக்கு வரவேண்டும்.

மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வது, ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து இன்னும் பிற அசம்பாவிதம் என பள்ளியில் எந்த நிகழ்வு நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலரின் நேரடி கவனத்துக்கு கொண்டுவரவேண்டும். பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விடும்போது முதன்மை கல்வி அலுவலருக்கு செல்போன் மற்றும் கடிதம் மூலம் தெரிவிக்கவேண்டும். அனைத்து தலைமை ஆசிரியர்களும், பாட ஆசிரியர்களும் பள்ளியின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், பாட தேர்ச்சி சதவீதம், தேர்ச்சி விகிதத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். 10, 12-ம் வகுப்பு பாடம் போதிக்கும் ஆசிரியர்கள் சரியாக பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்தியிருக்கிறார்களா? என்பதை தலைமை ஆசிரியர் கண்காணிக்கவேண்டும்.

இதையும் படிக்க | தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு

தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வேண்டிய உதவிகளை அப்பகுதியில் வசிக்கும் தொழில் அதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை சந்தித்து பள்ளிக்கு வேண்டிய உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசு பள்ளியில் தீத்தடுப்பு சாதனம் கண்டிப்பாக இருக்கவேண்டும். மேலும் அவ்வப்போது புதுப்பிக்கவேண்டும்.

பள்ளிகள்-பொதுமக்கள் உறவு நன்றாக இருக்கவேண்டும். மாணவர்களுக்கு அவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது. ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு செல்லும்போது, கற்பித்தல் உபகரணங்களுடன் செல்லவேண்டும். ஆசிரியர்கள் பள்ளியில், வகுப்பறையில் செல்போன் பேசுவதை தவிர்க்கவேண்டும். ஆய்வு அலுவலர் பார்வையின்போது செல்போன் பேசிக்கொண்டிருந்தால், அந்த ஆசிரியர் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியில் படிக்கும் மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் ஆசிரியர்கள் தன்னுடைய சொந்த வேலைக்காக வெளியில் அனுப்பக்கூடாது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை பெற்றோர் அறிந்துகொள்ள சுமுகமான முறையில் கலந்துரையாடல் மேற்கொள்ளவேண்டும்.

மாணவர்களுக்கு நல்லொழுக்கமும், தன்னம்பிக்கை சார்ந்த வாழ்வியல் திறன்களை வளர்க்கவேண்டும். விளையாட்டு பாடவேளையில் மாணவர்களை விளையாட ஊக்கப்படுத்தி உடல்நலமும், மனநலமும் பெற உதவ வேண்டும். மாணவர்கள் செல்போனை பள்ளிக்கு கொண்டுவருவதை முழுவதுமாக தவிர்க்கவேண்டும்.

இதையும் படிக்க | உயர்கல்வி பயில கனடா விசா - 50% மனுக்கள் நிராகரிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்துக்குள் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டுவிழா நடத்தி முடிக்கப்படவேண்டும். சினிமா பாட்டு முற்றிலும் தவிர்க்கவேண்டும். மாணவர்கள் மோதிரம், செயின், கையில் ஒயர் போன்றவைகளை கண்டிப்பாக அணிந்துவரக்கூடாது.

மாணவர்கள் அணிந்துகொண்டு வந்தால், அவர்களின் பெற்றோரை அழைத்து வரச்சொல்லி விவரத்தை தெரிவிக்கவேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சதுரங்க விளையாட்டுக்கு தனி வகுப்பறை உருவாக்கப்பட்டு, பெயர் பலகை பொருத்தியிருக்கவேண்டும்.

Total Pageviews

Search This Blog