Breaking

Showing posts with label Incentive pay. Show all posts
Showing posts with label Incentive pay. Show all posts

Monday, November 10, 2025

Tuesday, October 31, 2023

October 31, 2023

கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை அறிவிப்பு - இன்னொரு ஏமாற்றம் - ஜாக்டோ- ஜியோ போராட்டங்கள் தீவிரமாக வாய்ப்பு

இன்னொரு ஏமாற்றம் - கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை அறிவிப்பு காற்றில் பறந்தது திமுக தேர்தல் வாக்குறுதி எண்: 311

ஜாக்டோ- ஜியோ போராட்டங்கள் தீவிரமாக வாய்ப்பு

அரசு ஊழியர், அவர் வகிக்ரும் பதவிக்கான அடிப்படை கல்வித் தகுதியைவிட கூடுதல் கல்வித் தகுதிக்கான படிப்பை, அவரது பணிக்காலத்தில் படித்து முடித்தால், அவருக்கு தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகையானது அவரின் அடிப்படை சம்பளத்தில் 6 சத வீதம் ஒவ்வொரு மாதமும்,அவர் ஈம்பளத்தில் கூடுதலாக பணிக் காலம் முழுவதும் வழங்கப் படும். ஒருவர் பணிக்காலத்தில் அதியுட்சம் 2 முறை இதுபோல் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை பெற முடியும். அதரவது ஒரு பட்டதாரி ஆசிரியர் பி.எஸ்சி., பி.எட்., கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்துவிட்டு, பின்னர் அவரது பணிக் காலத்தில் கூடுதலாக எம்.எஸ்சி படித்து முடித்தால் அவர் பெறும் அடிப்படை சம் பளத்தில் 6 சதவீதம் வரை ஊதிய உயர்வு மக்கத்தொகையாக வழங்கப்படும். அந்த ஊதிய உயர்வு அவரது பணிக் காலம் முழுவதும் மாதம்தோறும் கிடைக்கும்.

இதையும் படிக்க | ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) முதல்வருக்கு கோரிக்கை - நாள்.30.10.2023 - 6 Pages - PDF

Monday, October 02, 2023

October 02, 2023

Incentive salary hike for teachers - உயர்கல்வி முடித்த ஆசிரியருக்கு மீண்டும் ஊக்க ஊதிய உயர்வு!

உயர்கல்வி முடித்த ஆசிரியருக்கு மீண்டும் ஊக்க ஊதிய உயர்வு! Incentive salary hike for teachers who have completed higher education!

உயர்கல்வி முடித்த ஆசிரியருக்கு ஊக்க ஊதிய உயர்வு: மீண்டும் வழங்க மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்

'உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வை, மீண்டும் வழங்க வேண்டும்' என, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின், மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாநில துணை தலைவர் அத்தியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முத்து வரதப்பன் வரவேற்றார். மாநில சட்ட ஆலோசகர்

சக்திவேல் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் தியாகராஜன் கோரிக்கை குறித்து விளக்கினார். நேரடி நியமன முதுகலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராமு, துணை பி.டி.ஓ., ராஜேந்திர பிரசாத் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து, பணப்பலனை பெற்றுத்தர வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில், ஒவ்வொரு பாடத்திற்கும், 10 மதிப்பெண்கள் அக மதிப்பீடு மதிப்பெண்களாக வழங்கப்படுவது போல, பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்திலும், அனைத்து பாடத்திற்கும் அகமதிப்பீடு மதிப்பெண்கள் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஆசிரியர் எண்ணிக்கை உயர்நிலைப்பள்ளிக்கு, -8, மேல்நிலைப்பள்ளிக்கு, -11 என்ற பழைய முறையே தொடர வேண்டும். உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வை, மீண்டும் வழங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர், மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப் பட்டன

Friday, September 29, 2023

September 29, 2023

தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள்

Incentive for children of workers can be applied for - December 31 is the shop day தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு, வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு,1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப் படுகிறது. மாணவர்களுக்கான ஊக்கத்தொகை பெறும் தொழிலாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு, தொழிலாளர்களின் மாத சம்பளம் 25,000 ரூபாயாக இருத்தல் வேண்டும். தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, September 09, 2022

September 09, 2022

3வது ஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடுத்தவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - இனிவரும் காலங்களில் 3வது ஊக்க ஊதிய உயர்வு முற்றிலும் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவு

Order of the Joint Director of School Education seeking details of those who have filed a case for the 3rd Incentive Pay Hike - It is also ordered that the 3rd Incentive Pay Hike should not be allowed in the future.

3வது ஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடுத்தவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - இனிவரும் காலங்களில் 3வது ஊக்க ஊதிய உயர்வு முற்றிலும் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவு

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Total Pageviews

Search This Blog