part time Teachers
June 13, 2026
Showing posts with label part time teacher post. Show all posts
Showing posts with label part time teacher post. Show all posts
Saturday, June 13, 2026
Wednesday, May 27, 2026
Friday, March 13, 2026
Monday, March 02, 2026
Tuesday, January 13, 2026
Thursday, January 01, 2026
Thursday, October 09, 2025
Friday, May 16, 2025
Monday, April 28, 2025
Friday, April 25, 2025
Friday, March 28, 2025
Monday, February 03, 2025
Tuesday, November 19, 2024
Monday, November 11, 2024
Friday, September 13, 2024
Sunday, June 23, 2024
Thursday, March 14, 2024
Saturday, January 06, 2024
part time Teachers
January 06, 2024
பொங்கல் போனஸ், ஊதிய உயர்வு இல்லை - பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை!
*பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் தான் இல்லை அமைச்சர் அறிவித்த ஊதிய உயர்வையாவது கொடுத்திருக்கலாமே என பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை.*
இது குறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழ.கௌதமன் கூறியதாவது...
அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் போனஸ் வழங்குகிறது.இந்த ஆண்டும் அதற்காக 167 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வழக்கம் போலவே இந்த ஆண்டும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. நாங்களும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தானே பணிபுரிகின்றோம்,நாங்களும் தமிழர்கள் தானே,எங்களுக்கும் பொங்கல் ஒரு பண்டிகை தானே.இந்நிலையில் நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம்? எங்களை மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள். தமிழர் திருநாளாம் நன்னாளில் பக்கத்து வீட்டு பானையில் பொங்கல் பொங்குவதை ஏக்கத்தோடு பார்க்கும் வலி என்று தீருமோ தெரியவில்லை.
குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் அறிவித்த 2500 ரூபாய் ஊதிய உயர்வையாவது டிசம்பர் மாத சம்பளத்தோடு சேர்த்து கொடுத்திருந்தால் எங்கள் வீட்டுப் பானையும் பொங்கியிருக்கும்.240 நாட்களுக்கு மேல் பணிபுரிபவர்கள் தான் பொங்கல் போனஸ்க்கு தகுதியானவர்களாம்.நாங்களும் 240 நாட்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறோம் என்று தானே சொல்கிறோம்.அதற்கும் அரசு அனுமதிக்கவில்லை,அதைக் காரணம் காட்டி போனஸும் வழங்கவில்லை என்பது எந்த விதத்தில் நியாயம் எனக் கூறினார்.
Tuesday, December 19, 2023
part time Teachers
December 19, 2023
பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்
பத்திரிக்கை செய்தி
பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்
அரசுப்பள்ளிகளில் தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களாக 2012 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.ஆனால் இதுவரை அவர்களை இதுவரை பணிநிரந்தரம் செய்யவில்லை என்பதால் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பழ.கௌதமன் கூறியதாவது...
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களின் பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.ஆனாலும் எங்களின் பணிநிரந்தர கோரிக்கை கனவாகவே உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது நாங்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களில் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு.பொன்முடி அவர்களும்,புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு.சரவணன் அவர்களும் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். 2017 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் திரு.டி.கே.எஸ் இளங்கோவன் கலந்து கொண்டு பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பேசினார்.
2021 பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்தில் திமுகவின் துணைப் பொது செயலாளர் திரு.ஆ.ராசா அவர்களும்,அமைப்பு செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்களும் நேரில் கலந்து கொண்டு எங்களின் பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையிலும்,பரப்புரையிலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என மாண்புமிகு முதல்வர் அவர்கள் கூறினர்.தேர்தல் பரப்புரையின் போது ஸ்டாலின் என்ற பகுதிநேர ஆசிரியர் கோரிக்கை வைத்த போது இந்த ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர் ஸ்டாலினின் கோரிக்கை நிறைவேறும் என்றார்.ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையும் நிலையிலும் எங்களுக்கான எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கல்வித்துறை உயரதிகாரி உங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கான மே மாத ஊதியம் வழங்கப்படும் மற்றும் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து பரிசளிக்கப்படும் என்றார்.நாங்களும் அதை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை முடித்துக் கொண்டோம்.
மீண்டும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் 11 நாட்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் 2,500 ரூபாய் ஊதிய உயர்வும்,மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் என்று அக்டோபர் 4 ஆம் தேதி ஊடகங்களின் வாயிலாக அறிவிப்பு வெளியிட்டார். அது எங்களுக்கான நிரந்தர தீர்வு இல்லை என்றாலும் இன்று வரை இந்த அறிவிப்புகள் எல்லாம் அறிவிப்பாகவே உள்ளனவே தவிர அரசாணையாக வரவில்லை. தேர்தல் அறிக்கையில் சொன்னதும், நிறைவேறவில்லை, ஆட்சிக்கு வந்த பின்பு அறிவித்த அறிவிப்புகளும் செயல்வடிவம் பெறவில்லை. எதிர்கட்சியாக இருந்த போது எங்கள் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து ஆதரித்தவர்கள் ஆட்சிக்கு வந்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் இடத்தில் இருக்கும் சமூக நீதி பேசும் திமுக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
10,000 ரூபாய் மாத ஊதியத்தில் அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். எனவே திமுகவின் தேர்தல் அறிக்கை வரிசை எண் 181 ல் கொடுத்த வாக்குறுதியின் படி எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற 27.12.23 புதன்கிழமையன்று சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்குள்ளாக எங்களுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த போராட்டத்தின் மூலமாகவும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.
Monday, October 16, 2023
part time Teachers
October 16, 2023
பணி பாதுகாப்பு கேட்டு முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
பணி பாதுகாப்பு கேட்டு முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை Part-time teachers request to the principal for job security பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்றி, முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்:
பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை :
2012-ம் ஆண்டில் இருந்து 12ஆண்டாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதிபடி பணி நிரந்தரம் செய்வார் என 30 மாதங்களாக காத்துள்ளனர்.
இதை வலியுறுத்தி ஆயிரக்கணக்கில் மனுக்கள், பல கவன ஈர்ப்பு போராட்டங்கள், சட்டசபையில் அனைத்து கட்சி எம்எல்ஏ க்கள் கோரிக்கை, அனைத்து கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தற்போது பணி செய்து வரும் 10359 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ₹10ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.
மேலும் ₹20ஆயிரம் சம்பளம் வழங்கினால் காலமுறை சம்பளம் கிடைக்கும். இதனை மனிதாபிமானம் கொண்டு இந்த 10ஆயிரம் குடும்பங்கள் வாழ முதல்வர் மனது வைத்தால் போதும்.
எங்கள் வேலை குறித்து யாருக்கும் எதுவுமே தெரிவது இல்லை.
அதாவது,
பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் 10ஆயிரம் சம்பளம் தான் கிடைக்கிறது.
மே மாதம் சம்பளம் கிடையாது.
தீபாவளி வருகிறது, ஆனால் இதை கொண்டாட பண்டிகை முன்பணம்கூட எங்களுக்கு கிடைப்பது இல்லை.
இறந்தவர்களுக்கு குடும்ப நல நிதி கிடையாது.
போனஸ் கிடையாது.
இப்படி பண சலுகைகள் ஒன்றுகூட எங்களுக்கு கிடைப்பது இல்லை.
இதனால் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி வருகிறது.
பள்ளிகளில் நாங்கள் வாரத்திற்கு 3 அரைநாட்கள் என மாதத்திற்கு 12 அரைநாட்கள் பணி செய்கிறோம். இதனை நீட்டித்து, நிரந்தர வேலை செய்யும் ஏனைய ஆசிரியர்களைப் போலவே, அனைத்து நாட்களும் பணி வழங்க வேண்டும் என கேட்டு வருகிறோம்.
அதுபோல் பகுதிநேரம் என்பதை மாற்றி முழுநேரம் பணி வழங்க வேண்டும் என கேட்டு வருகிறோம்.
மே மாதம் சம்பளம் என கேட்டு வருகிறோம்.
அனைத்து நாளும் வேலை, அனைத்து மாதமும் சம்பளம் கிடைத்தால் தான் நாங்கள் செய்யும் இந்த வேலைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.
அரசு வேலையை நம்பி வந்தவர்களுக்கு ஆண்டுக்கு 11 மாதம் சம்பளம் மட்டுமே கிடைத்தால் எங்கள் வாழ்க்கை எப்படி முன்னேறும் என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
சமுதாயத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க தற்போதைய நிலை மாறவேண்டும்.
இதற்கு பணி நிரந்தரம் மட்டுமே இனி தீர்வாக இருக்க முடியும்.
அதற்கு முதல்வர் திமுகவின் 181-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதற்கு ஆணையிட வேண்டும்.
* S. செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு