Breaking

Showing posts with label part time teacher post. Show all posts
Showing posts with label part time teacher post. Show all posts

Monday, March 02, 2026

Monday, November 11, 2024

Thursday, March 14, 2024

Saturday, January 06, 2024

January 06, 2024

பொங்கல் போனஸ், ஊதிய உயர்வு இல்லை - பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை!



*பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் தான் இல்லை அமைச்சர் அறிவித்த ஊதிய உயர்வையாவது கொடுத்திருக்கலாமே என பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை.*

இது குறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழ.கௌதமன் கூறியதாவது...

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் போனஸ் வழங்குகிறது.இந்த ஆண்டும் அதற்காக 167 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வழக்கம் போலவே இந்த ஆண்டும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. நாங்களும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தானே பணிபுரிகின்றோம்,நாங்களும் தமிழர்கள் தானே,எங்களுக்கும் பொங்கல் ஒரு பண்டிகை தானே.இந்நிலையில் நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம்? எங்களை மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள். தமிழர் திருநாளாம் நன்னாளில் பக்கத்து வீட்டு பானையில் பொங்கல் பொங்குவதை ஏக்கத்தோடு பார்க்கும் வலி என்று தீருமோ தெரியவில்லை.

குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் அறிவித்த 2500 ரூபாய் ஊதிய உயர்வையாவது டிசம்பர் மாத சம்பளத்தோடு சேர்த்து கொடுத்திருந்தால் எங்கள் வீட்டுப் பானையும் பொங்கியிருக்கும்.240 நாட்களுக்கு மேல் பணிபுரிபவர்கள் தான் பொங்கல் போனஸ்க்கு தகுதியானவர்களாம்.நாங்களும் 240 நாட்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறோம் என்று தானே சொல்கிறோம்.அதற்கும் அரசு அனுமதிக்கவில்லை,அதைக் காரணம் காட்டி போனஸும் வழங்கவில்லை என்பது எந்த விதத்தில் நியாயம் எனக் கூறினார்.

Tuesday, December 19, 2023

December 19, 2023

பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்



பத்திரிக்கை செய்தி

பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்

அரசுப்பள்ளிகளில் தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களாக 2012 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.ஆனால் இதுவரை அவர்களை இதுவரை பணிநிரந்தரம் செய்யவில்லை என்பதால் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பழ.கௌதமன் கூறியதாவது...

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களின் பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.ஆனாலும் எங்களின் பணிநிரந்தர கோரிக்கை கனவாகவே உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது நாங்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களில் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு.பொன்முடி அவர்களும்,புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு.சரவணன் அவர்களும் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். 2017 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் திரு.டி.கே.எஸ் இளங்கோவன் கலந்து கொண்டு பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பேசினார்.

2021 பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்தில் திமுகவின் துணைப் பொது செயலாளர் திரு.ஆ.ராசா அவர்களும்,அமைப்பு செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்களும் நேரில் கலந்து கொண்டு எங்களின் பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையிலும்,பரப்புரையிலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என  மாண்புமிகு முதல்வர் அவர்கள் கூறினர்.தேர்தல் பரப்புரையின் போது ஸ்டாலின் என்ற பகுதிநேர ஆசிரியர் கோரிக்கை வைத்த போது இந்த ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர் ஸ்டாலினின் கோரிக்கை நிறைவேறும் என்றார்.ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையும் நிலையிலும் எங்களுக்கான எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கல்வித்துறை உயரதிகாரி உங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கான மே மாத ஊதியம் வழங்கப்படும் மற்றும் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து பரிசளிக்கப்படும் என்றார்.நாங்களும் அதை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை முடித்துக் கொண்டோம்.

மீண்டும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் 11 நாட்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் 2,500 ரூபாய் ஊதிய உயர்வும்,மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் என்று அக்டோபர் 4 ஆம் தேதி ஊடகங்களின் வாயிலாக அறிவிப்பு வெளியிட்டார். அது எங்களுக்கான நிரந்தர தீர்வு இல்லை என்றாலும்  இன்று வரை இந்த அறிவிப்புகள் எல்லாம் அறிவிப்பாகவே உள்ளனவே தவிர அரசாணையாக வரவில்லை. தேர்தல் அறிக்கையில் சொன்னதும், நிறைவேறவில்லை, ஆட்சிக்கு வந்த பின்பு அறிவித்த அறிவிப்புகளும் செயல்வடிவம் பெறவில்லை. எதிர்கட்சியாக இருந்த போது எங்கள் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து ஆதரித்தவர்கள் ஆட்சிக்கு வந்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் இடத்தில் இருக்கும் சமூக நீதி பேசும் திமுக அரசு  கண்டு கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

10,000 ரூபாய் மாத ஊதியத்தில் அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். எனவே திமுகவின் தேர்தல் அறிக்கை வரிசை எண் 181 ல் கொடுத்த வாக்குறுதியின் படி எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற 27.12.23 புதன்கிழமையன்று சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்குள்ளாக எங்களுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த போராட்டத்தின் மூலமாகவும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.

Monday, October 16, 2023

October 16, 2023

பணி பாதுகாப்பு கேட்டு முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை



பணி பாதுகாப்பு கேட்டு முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை Part-time teachers request to the principal for job security பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்றி, முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்:

பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை :

2012-ம் ஆண்டில் இருந்து 12ஆண்டாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதிபடி பணி நிரந்தரம் செய்வார் என 30 மாதங்களாக காத்துள்ளனர்.

இதை வலியுறுத்தி ஆயிரக்கணக்கில் மனுக்கள், பல கவன ஈர்ப்பு போராட்டங்கள், சட்டசபையில் அனைத்து கட்சி எம்எல்ஏ க்கள் கோரிக்கை, அனைத்து கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தற்போது பணி செய்து வரும் 10359 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ₹10ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.

மேலும் ₹20ஆயிரம் சம்பளம் வழங்கினால் காலமுறை சம்பளம் கிடைக்கும். இதனை மனிதாபிமானம் கொண்டு இந்த 10ஆயிரம் குடும்பங்கள் வாழ முதல்வர் மனது வைத்தால் போதும்.

எங்கள் வேலை குறித்து யாருக்கும் எதுவுமே தெரிவது இல்லை.

அதாவது,

பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் 10ஆயிரம் சம்பளம் தான் கிடைக்கிறது.

மே மாதம் சம்பளம் கிடையாது.

தீபாவளி வருகிறது, ஆனால் இதை கொண்டாட பண்டிகை முன்பணம்கூட எங்களுக்கு கிடைப்பது இல்லை.

இறந்தவர்களுக்கு குடும்ப நல நிதி கிடையாது.

போனஸ் கிடையாது.

இப்படி பண சலுகைகள் ஒன்றுகூட எங்களுக்கு கிடைப்பது இல்லை.

இதனால் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி வருகிறது.

பள்ளிகளில் நாங்கள் வாரத்திற்கு 3 அரைநாட்கள் என மாதத்திற்கு 12 அரைநாட்கள் பணி செய்கிறோம். இதனை நீட்டித்து, நிரந்தர வேலை செய்யும் ஏனைய ஆசிரியர்களைப் போலவே, அனைத்து நாட்களும் பணி வழங்க வேண்டும் என கேட்டு வருகிறோம்.

அதுபோல் பகுதிநேரம் என்பதை மாற்றி முழுநேரம் பணி வழங்க வேண்டும் என கேட்டு வருகிறோம்.

மே மாதம் சம்பளம் என கேட்டு வருகிறோம்.

அனைத்து நாளும் வேலை, அனைத்து மாதமும் சம்பளம் கிடைத்தால் தான் நாங்கள் செய்யும் இந்த வேலைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.

அரசு வேலையை நம்பி வந்தவர்களுக்கு ஆண்டுக்கு 11 மாதம் சம்பளம் மட்டுமே கிடைத்தால் எங்கள் வாழ்க்கை எப்படி முன்னேறும் என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

சமுதாயத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க தற்போதைய நிலை மாறவேண்டும்.

இதற்கு பணி நிரந்தரம் மட்டுமே இனி தீர்வாக இருக்க முடியும்.

அதற்கு முதல்வர் திமுகவின் 181-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதற்கு ஆணையிட வேண்டும்.

* S. செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்,

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

Thursday, October 05, 2023

October 05, 2023

DPI வளாகத்தில் இருந்தவர்கள் கைது; பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்: 11 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது



பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 3 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்களை போலீசார் இன்று காலையில் கைது செய்தனர். அவர்கள் தற்போது நுங்கம்பாக்கம், எழும்பூர் பகுதியில் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கடந்த 10 நாட்களாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் தொடர் உண்ணா விரதம் இருந்து வந்தனர். அவர்களை தொடர்ந்து கடந்த 7 நாட்களாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் இரவு பகலாக தொடர் உண்ணா விரதம் இருந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் டிபிஐ வளாகத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஆதரவு தெரிவித் து வந்தனர். அதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு, தீவிரப்படுத்தி வந்தனர். இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேரடியாக இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கை குறித்து கேட்டதுடன், முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் அவர்களின் முடிவை ஏற்காமல் மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களைப் போலவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுடன், பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும், பணி நியமனத்துக்காக நடத்தப்படும் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியத்திலாவது பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் கேட்டனர். தகுதித் தேர்வு மற்றும் ஆசிரியர் நியமனம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதற்கு பிறகு இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் இயக்குநர் தெரிவித்தார். அவரின் பதிலில் திருப்தி அடையாத அவர்கள் மீண்டும் பள்ளிக் கல்வி வளாகத்தில் தொடர் உண்ணா விரதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கல்வித்துறையை சேர்ந்தவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளுமே தோல்வியில் முடிந்ததால், மேற்கண்ட சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் டிபிஐ வளாகமே ஆசிரியர்களால் நிரம்பி வழிந்தது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன், வெளியாட்கள் யாரும் அந்த வளாகத்துக்குள் நுழையாமல் பரிசோதித்து அனுப்பினர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து சங்கங்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, கலைந்து செல்ல கேட்டுக் கொண்டனர். ஆனால் யாரும் அங்கிருந்து செல்லத் தயாராக இல்லை என்று தெரிவித்து அதே இடத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று மாலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் மற்றும் கோரிக்கை குறித்து விவரமாக எடுத்துக் கூறியதுடன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை கேட்டார். அதன்தொடர்ச்சியாக நேற்று மாலை 6 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது சில அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில் , சமவேலைக்கு சமஊதியம் கேட்கும் கோரிக்கையின் அடிப்படையில், 6வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, பல்வேறு துறைகளில் 1.6.2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடு குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிக்க 3 குழு அமைத்து அரசாணை 25 வெளியிடப்பட்டது. அதில் அரசு நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் பரிந்துரைகள் 3 காலத்துக்குள் இறுதி செய்யப்பட்டு முதல்வர் அதன் மீது உரிய முடிவெடுக்க சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதை ஏற்று எண்ணும் எழுத்து திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி நடப்பதாலும், வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு மேற்கண்ட பயிற்சியில் சேருமாறும், பயிற்சியை முடித்து பள்ளிக்கு திரும்ப வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2500 ஊதியத்தை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ரூ.10லட்சம் வரை மருத்துவ காப்பீடு அறிமுகம் செய்யப்படும். அதற்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்துள்ளவர்களுக்கு உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 என்றும், இதர பிரிவினருக்கு 58ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பல்வேறு வழக்குகள் ஆசிரியர்கள் தெரிவு சார்ந்து உயர்நீதி மன்றத்தில் ெ தாடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. 171தற்காலிக தொழில் ஆசிரியர்களை மு றையான ஊதிய விகிதத்துக்கு கொண்டு வரும் அரசாணை வெளியிடப்படும். பொது நூலகத்துறையில் நீண்ட நாட்களாக பணியாற்றும் ஊரக நூலகர்கள் 446 பேர் 3ம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை ெவளியிடப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், அரசு வெளியிட்ட இந்த அறிவிப்புகளை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் நேற்று இரவு முழுவதும் பள்ளிக் கல்வி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து, பள்ளிக் கல்வி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த கூடாரங்களை அப்புறப்படுத்திவிட்டு செல்ல வேண்டும் என்றும் போலீசார் அறிவித்தனர். ஆனால் ஆசிரியர்கள் கலைந்து செல்லவில்லை.

இதையடுத்து, இன்று காலையில் ஆசிரியர்களை போலீசார் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிச் சென்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இந்தநிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்பெறப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கூடுதலான தொகுப்பூதியம் ரூ.2500, ரூ.10 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, September 27, 2023

September 27, 2023

பணிநிரந்தரம் செய்திட வலியுறுத்தல்! வாயால் முதலமைச்சர், கல்வி அமைச்சரை வரைந்து கோரிக்கை!

Urge to make part-time teachers permanent! By drawing the chief minister, the education minister and request! பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்திட வலியுறுத்தல்! வாயால் முதலமைச்சர், கல்வி அமைச்சரை வரைந்து கோரிக்கை!

தமிழ்நாட்டில் பள்ளிக்களில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை உள்ளிட்ட எட்டு பாடப்பிரிவுகளில் பணிபுரிய சுமார் 16,000 பேர் 2012 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 13 வருடங்களாக தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து பல்வேறு காலக்கட்டங்களில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் பகுதி நேர ஆசிரியர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் போன்ற தொடர் போராட்டங்களை நடத்தினர். அப்போது எதிர் கட்சியாக இருந்த திமுக தரப்பில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களாக உள்ள 12,000 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திமுக ஆட்சி அமைந்து சுமார் 26 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதனையடுத்து விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது கோட்டை முற்றுகையிடுவோம் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் சு.செல்வம், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிகல்வி துறை அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கைகள் பயன்படுத்தாமல், வாயால் ஒரே நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் படத்தை வரைந்து உள்ளார்.

13 ஆண்டுகளாக பணிநிந்தரம் செய்யப்படாததால் பகுதிநேர ஆசிரியர்கள் உணவு, மருத்துவ செலவு, வீட்டு வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய செலவுக்கு கடன் வாங்கி கஷ்டப்படுவதாகவும், விலைவாசி உயர்வால் குடும்ப பொருளாதாரத்தை தாக்குப் பிடிக்க முடியாத நிலை உள்ளிட்ட காரணங்களால் தவிக்கும் பகுதி நேர ஆசிரியர்களை தமிழக அரசு உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளார்.


திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில், 'ப்ளீஸ் எங்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும்' வாசகத்தை எழுதி கைகள் பயன்படுத்தாமல், "வாயால் ஒரே நேரத்தில்" முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் உருவத்தை 15 நிமிடங்களில் வரைந்து ஓவிய ஆசிரியர் செல்வம் நூதன முறையில் கோரிக்கை வைத்துள்ளார்.

Thursday, August 17, 2023

August 17, 2023

4 நாட்களாக போராடி வரும் பகுதிநேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

4 நாட்களாக போராடி வரும் பகுதிநேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

அரசாணை 151 ஐ நிறைவேற்றக் கோரி நான்கு நாட்களாக போராடி வரும் பகுதிநேர மாற்றுத் திறனாளி ஆசிரியர்களை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுமாறு தமிழக முதல்வருக்கு ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் வேண்டுகோள்

மாற்று திறனாளி பகுதிநேர ஆசிரியர்கள் அரசாணை 151 ன் படி தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி சென்னை,நுங்கம்பாக்கம்,பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கடந்த 14 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உண்ணாவிரதப் போராட்டமாக தொடங்கினார்கள்.

அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று இரண்டாவது நாள் உண்ணாவிரதத்தை கை விட்டு காத்திருப்பு போராட்டமாக தொடர்ந்தார்கள்.இன்று நான்காவது நாள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றி உள்ளனர்.


மாற்றுத் திறனாளிகள் துறையை தன் வசம் வைத்திருக்கும் மாண்புமிகு.முதல்வர் அவர்களே எங்கள் சகோதரர்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலித்து அவர்களுக்கு நல்வழி காட்டும் படி கேட்டுக் கொள்கின்றேன்.

நடக்க முடியாதவர்கள்,பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்கள் எல்லாம் மிகுந்த சிரமங்களுக்கு இடையே தங்களை வருத்தி போராடிக் கொண்டிருக்கின்றனர்.அவர்களை அழைத்து பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்.

பழ.கௌதமன் மாநிலத் தலைவர் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம்.

Total Pageviews

Search This Blog