Breaking

Showing posts with label Chennai High Court. Show all posts
Showing posts with label Chennai High Court. Show all posts

Saturday, January 17, 2026

Thursday, May 08, 2025

Friday, December 15, 2023

December 15, 2023

தலைமை ஆசிரியர்களுக்கு கற்பித்தலைத் தவிர்த்து கூடுதல் பணிச் சுமை அளிப்பதை ஏற்க முடியாது - உயர்நீதிமன்றம்



Giving additional workload to head teachers apart from teaching is not acceptable - High Court - தலைமை ஆசிரியர்களுக்கு கற்பித்தலைத் தவிர்த்து கூடுதல் பணிச் சுமை அளிப்பதை ஏற்க முடியாது - உயர்நீதிமன்றம்... தலைமை ஆசிரியர்க ளுக்கும் , ஆசிரியர்களுக்கும் கற்பித் தலைத் தவிர்த்து , மடிக் கணினிக ளைப்பாதுகாத்தல் உள்ளிட்ட கூடு தல் பணிச் சுமை அளிப்பதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை வியாழக்கி ழமை தெரிவித்தது . தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை சசிகலா ராணி , மதுரை மாவட்டத் தைச்சேர்ந்தஅரசுப்பள்ளித்தலைமை ஆசிரியை கலைச்செல்வி ஆகியோர் தாக்கல்செய்தமனுக்கள் :

நாங்கள் பணிபுரிந்த பள்ளிக - ளில் மாணவர்களுக்கு வழங்குவ தற்காக வைக்கப்பட்டிருந்த இல வச மடிக் கணினிகள் திருடுபோ -யின. இந்தத் திருட்டை காரணம் காட்டி, எங்களுக்கு வழங்க வேண் - டிய ஓய்வூதியம், பணப் பலன்களை தர மறுக்கின்றனர் என அவர்கள் கூறியிருந்தனர். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் முன் மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆஷிஸ் ராவத் (தஞ்சாவூர்), சிவபிரசாத் (மதுரை) ஆகியோர் நீதிமன்றத்தில் உயர்நீதிமன்றம் நேரில் முன்னிலையாகி அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பில், தமிழ கத்தில் 140 அரசுப்பள்ளிகளில் மடிக் கணினிகள் திருடுபோயிருப்பதாக புகார் அளிக்கப்பட்டதன்பேரில், போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என வாதிடப்பட் டது. இதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மடிக் கணினிகள் திருட்டைக் கண்டறிய நவீன தொழில்நுட்ப வச திகளைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த வழக்கில் கல்வித் துறை அதிகாரிகளும், காவல் துறை அதி காரிகளும் சரியாகச் செயல்படா மல் உறக்கத்தில் உள்ளனர். பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் குளி ரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு, தலைமை ஆசிரியர்க ளுக்கும், ஆசிரியர்களுக்கும் கற்பித் தலைத் தவிர்த்து, மடிக் கணினிக ளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கூடு தல் பணிச் சுமை அளிப்பதை நீதி மன்றம் ஏற்றுக் கொள்ளாது என்ற நீதிபதி விசாரணையை ஜன. 4- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Wednesday, November 08, 2023

November 08, 2023

TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பு

TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பு 'Jaihind' at the end of the paper in TNPSC examination - Maduraiklai High Court verdict

TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ என எழுதியதால் விடைத்தாள் செல்லாது என்று கூறியது ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

2014ம் ஆண்டு நடந்த TNPSC குரூப் 2 மெயின்ஸ் தேர்வில், இயற்கை வளங்களை காப்பதற்கான முக்கியத்துவம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் முடிவில், 'ஜெய் ஹிந்த்.. இயற்கையோடு இணைந்து வாழ்வோம்' என எழுதியதற்காக, திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்பனா என்பவரது விடைத்தாள் செல்லுபடியாகாது என கூறியது ஏற்புடையதல்ல - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு.


விடைத்தாளை மீண்டும் திருத்தி, அவரது கட் ஆஃப் குரூப் 2 பணிக்கு தகுதியுடையதா என பரிசீலிக்கவும் TNPSC-க்கு உத்தரவு!

இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதும்போது, ஒருவர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு, தேச பக்தியை உணர்வது இயல்புதான்.

ஜெய்ஹிந்த்' என்றால் இந்தியாவுக்கு வெற்றி என்று பொருள். அவ்வாறு எழுதியதற்காகவே விடைத்தாள் செல்லாது என்பது ஏற்கத்தக்கது அல்ல - நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து

Friday, September 22, 2023

September 22, 2023

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு நகல்!



High School Headmaster's Promotion Appeal Case Dismissed - Madras High Court Judgment Copy! - உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு நகல்!

CLICK HERE TO DOWNLOAD உயர் நீதிமன்ற தீர்ப்பு நகல் PDF

Total Pageviews

Search This Blog