MATHS TABLES
March 25, 2025
Showing posts with label MATHS. Show all posts
Showing posts with label MATHS. Show all posts
Tuesday, March 25, 2025
Wednesday, December 11, 2024
Sunday, November 24, 2024
Tuesday, January 30, 2024
MATHS
January 30, 2024
கணிதம் படிப்பதால் மூளை இளமையாக இருக்கும் - வெ. இறையன்பு Studying-mathematics-keeps-the-brain-young
It also helps to create active neurons in the brain, thereby keeping our brain much younger. “Mathematics helps to achieve academic excellence, scientific advancement, technological improvement and engineering development depend on learning mathematics,” he said.
கணிதம் படிப்பதால் மூளை இளமையாக இருக்கும்.
விஐடி பல்கலைக்கழக கணிதத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கணிதப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா வேலூரில் உள்ள விஐடி அண்ணா அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு விஐடி.வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகையில், மாணவர் களுக்கு மற்ற பாடங்களை விட கணிதம் பாடம் மிகவும் முக்கிய மானதாகும். வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் கணிதத்தின் தேவை உள்ளது கணிதம் என்பது ஒரு தொழில்நுட்ப மொழி. எனவே கணிதம் இல்லாமல் எதிர்காலம் இல்லை. பிரச்சனைகளை தீர்க்க வும் புதுமைகளை படைக்கும் தீர்க்கமான புரிதல் ஏற்படும் கணி தம் அடிப்படையாக உள்ளது என்றார். சிறப்பு விருந்தினராக தமிழ் நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு கலந்து கொண்டு பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு கணிதப் போட்டியை நடத்திய விஐடி பல்கலைக்கழகத்தை பாராட்டு கிறேன். அறிவியல், வேதியியல், தாவரவியல் உள்பட பல படிப்பு களில் கணிதம் உள்ளது. மருத்துவத் துறையில் கணிதம் மிக வும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கணிதத்தின் தேவை 18ம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தேவைப்பட்டுள்ளது. அப்போது மக்கள் விவசாயத்தில் இருந்த னர்.
இலக்கியத்திலும் கணிதம் உள்ளது. திருக்குறளில் மனித நேயம் பற்றி கூறப்பட்டுள்ளது. விலங்கினங்களுக்கு எண்களை தெரியும். கணிதம் படிப்பதால் மூளை இளமையாக இருக்கும். ஒரு மனிதனை சுறுசுறுப்பாக வைத்தி ருக்கும். படிப்பிலும் சிறப்பான இடம் பெற வழி வகுக்கும். இது ஒரு உலக மொழியாகும். நிதி துறையிலும் கணிதம் முக்கிய பங்கு வகிக்கிறது. கணிதத்தை கடினம் என நினைத்தால் கடின மாக இருக்கும். சுலபம் என நினை த்தால் சுலபமாகிவிடும். கணித மேதை ராமானுஜம் எளிய குடும்பத்தில் பிறந்தவர். தன்னு டைய கணித திறமையால் வாழ்க் கையில் உயர்ந்தார். கணித மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை மாணவர் கள் படிக்க வேண்டும். கணி தத்தில் யாரும் நோபல் பரிசு பெற்ற தில்லை. கணிதத்தில் உயர்ந்த பரிசு என்றால் அது ஏபல் கணித பரிசாகும். இங்குள்ள மாண வர்கள் சிலர் கணித பாடத்தில் சேர வேண்டும். மேலும் கணிதத்தில் உயர்ந்த பரிசான ஏபல் கணித பரிசை பெற வேண்டும் என பேசி னார். கௌரவ விருந்தினராக விஐடி பல்கலைக்கழக முன்னாள் மாணவியும், பெங்களூரு இஸ்ரோ விஞ்ஞானியுமான லட்சுமி கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் துணைத் தலை வர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். பல்கலைக்கழக துணை வேந்தர் (பொறுப்பு) காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதி வாளர் ஜெயபாரதி, ஒருங்கி ணைப்பு செயலாளர்கள் நந்தினி, கவுரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறை வாக ஒருங்கிணைப்பு செய லாளர் ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறி னார்.
கணிதம் படிப்பதால் மூளை இளமையாக இருக்கும்.
விஐடி பல்கலைக்கழக கணிதத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கணிதப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா வேலூரில் உள்ள விஐடி அண்ணா அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு விஐடி.வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகையில், மாணவர் களுக்கு மற்ற பாடங்களை விட கணிதம் பாடம் மிகவும் முக்கிய மானதாகும். வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் கணிதத்தின் தேவை உள்ளது கணிதம் என்பது ஒரு தொழில்நுட்ப மொழி. எனவே கணிதம் இல்லாமல் எதிர்காலம் இல்லை. பிரச்சனைகளை தீர்க்க வும் புதுமைகளை படைக்கும் தீர்க்கமான புரிதல் ஏற்படும் கணி தம் அடிப்படையாக உள்ளது என்றார். சிறப்பு விருந்தினராக தமிழ் நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு கலந்து கொண்டு பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு கணிதப் போட்டியை நடத்திய விஐடி பல்கலைக்கழகத்தை பாராட்டு கிறேன். அறிவியல், வேதியியல், தாவரவியல் உள்பட பல படிப்பு களில் கணிதம் உள்ளது. மருத்துவத் துறையில் கணிதம் மிக வும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கணிதத்தின் தேவை 18ம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தேவைப்பட்டுள்ளது. அப்போது மக்கள் விவசாயத்தில் இருந்த னர்.
இலக்கியத்திலும் கணிதம் உள்ளது. திருக்குறளில் மனித நேயம் பற்றி கூறப்பட்டுள்ளது. விலங்கினங்களுக்கு எண்களை தெரியும். கணிதம் படிப்பதால் மூளை இளமையாக இருக்கும். ஒரு மனிதனை சுறுசுறுப்பாக வைத்தி ருக்கும். படிப்பிலும் சிறப்பான இடம் பெற வழி வகுக்கும். இது ஒரு உலக மொழியாகும். நிதி துறையிலும் கணிதம் முக்கிய பங்கு வகிக்கிறது. கணிதத்தை கடினம் என நினைத்தால் கடின மாக இருக்கும். சுலபம் என நினை த்தால் சுலபமாகிவிடும். கணித மேதை ராமானுஜம் எளிய குடும்பத்தில் பிறந்தவர். தன்னு டைய கணித திறமையால் வாழ்க் கையில் உயர்ந்தார். கணித மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை மாணவர் கள் படிக்க வேண்டும். கணி தத்தில் யாரும் நோபல் பரிசு பெற்ற தில்லை. கணிதத்தில் உயர்ந்த பரிசு என்றால் அது ஏபல் கணித பரிசாகும். இங்குள்ள மாண வர்கள் சிலர் கணித பாடத்தில் சேர வேண்டும். மேலும் கணிதத்தில் உயர்ந்த பரிசான ஏபல் கணித பரிசை பெற வேண்டும் என பேசி னார். கௌரவ விருந்தினராக விஐடி பல்கலைக்கழக முன்னாள் மாணவியும், பெங்களூரு இஸ்ரோ விஞ்ஞானியுமான லட்சுமி கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் துணைத் தலை வர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். பல்கலைக்கழக துணை வேந்தர் (பொறுப்பு) காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதி வாளர் ஜெயபாரதி, ஒருங்கி ணைப்பு செயலாளர்கள் நந்தினி, கவுரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறை வாக ஒருங்கிணைப்பு செய லாளர் ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறி னார்.
Tuesday, January 16, 2024
Study Materials
January 16, 2024
MATHS TABLES ( 2 to 10 ) COLOUR PRINT - PDF
MATHS TABLES ( 2 to 10 ) COLOUR PRINT - PDF CLICK HERE TO DOWNLOAD MATHS TABLES ( 2 to 10 ) COLOUR PRINT
Study Materials
January 16, 2024
Maths Square Table ( 2 to 10 ) - PDF
Maths Square Table ( 2 to 10 ) - PDF
CLICK HERE TO DOWNLOAD Maths Square Table ( 2 to 10 ) PDF
Monday, January 15, 2024
Study Materials
January 15, 2024
MATHS TABLES ( BLACK & WHITE ) - PDF
Sunday, April 09, 2023
MATHS
April 09, 2023
பிளஸ் 2 கணிதத்தில் தவறான கேள்வி பதில் எழுத முயற்சித்திருந்தால் 5 மதிப்பெண் வழங்கப்படும்
பிளஸ் 2 கணிதத்தில் தவறான கேள்வி பதில் எழுத முயற்சித்திருந்தால் 5 மதிப்பெண் வழங்கப்படும்
சென்னை, ஏப். 8: பிளஸ் 2 கணிதத் தேர்வில் குறிப்பிட்ட ஒரு கேள்விக்கு பதில் எழுத முயற்சித்திருந்தால் 5 மதிப் பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13- ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி நிறைவு பெற் றது. இதில் பிளஸ் 2 கணிதப் பாடத்தேர்வு மார்ச் 27-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வில் 5 மதிப்பெண் வினா பகுதியில் இடம் பெற்ற 47-பி கேள்வி தவறானதாக இருந்தது. அதா வது பொருத்தமற்ற வகையில் ஒரு நீள்வட்டத்துக்கும், கோட்டுக்கும் பொதுவான பரப்பினைக் காண்க என்பது கேள்வியாகும். இதற்கு கருணை மதிப்பெண் தர வேண்டுமென ஆசி ரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு தேர் வுத் துறை மறுப்பு தெரிவித்துவிட்டது. இதற்கு ஆசிரி யர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பரவலாக கண்டனங் கள் எழுந்தன. தமிழக அரசின் கவனத்துக்கும் இந்த விவ காரம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கருணை மதிப்பெண் வழங்குவதற்கு தேர்வுத் துறை தற்போது முன் வந்துள்ளது. இதற்கான திருத்தப்பட்ட விடைக்குறிப்பில், 'பிளஸ் 2 கணிதப் பாடத்தேர்வில் 5 மதிப்பெண் வினாவில் இடம்பெற்ற தவறான 47-பி கேள்வியை மாணவர்கள் எழுத முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை, ஏப். 8: பிளஸ் 2 கணிதத் தேர்வில் குறிப்பிட்ட ஒரு கேள்விக்கு பதில் எழுத முயற்சித்திருந்தால் 5 மதிப் பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13- ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி நிறைவு பெற் றது. இதில் பிளஸ் 2 கணிதப் பாடத்தேர்வு மார்ச் 27-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வில் 5 மதிப்பெண் வினா பகுதியில் இடம் பெற்ற 47-பி கேள்வி தவறானதாக இருந்தது. அதா வது பொருத்தமற்ற வகையில் ஒரு நீள்வட்டத்துக்கும், கோட்டுக்கும் பொதுவான பரப்பினைக் காண்க என்பது கேள்வியாகும். இதற்கு கருணை மதிப்பெண் தர வேண்டுமென ஆசி ரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு தேர் வுத் துறை மறுப்பு தெரிவித்துவிட்டது. இதற்கு ஆசிரி யர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பரவலாக கண்டனங் கள் எழுந்தன. தமிழக அரசின் கவனத்துக்கும் இந்த விவ காரம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கருணை மதிப்பெண் வழங்குவதற்கு தேர்வுத் துறை தற்போது முன் வந்துள்ளது. இதற்கான திருத்தப்பட்ட விடைக்குறிப்பில், 'பிளஸ் 2 கணிதப் பாடத்தேர்வில் 5 மதிப்பெண் வினாவில் இடம்பெற்ற தவறான 47-பி கேள்வியை மாணவர்கள் எழுத முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Tuesday, March 28, 2023
Public Exam 2023
March 28, 2023
பிளஸ் 2 கணிதத்தில் சதம் குறைய வாய்ப்பு - ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி!!
பிளஸ் 2 கணிதம் கேள்விகள் கடினம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணித கேள்விகள் கடினமாக இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் ராஜ் கூறியதாவது:
பத்தாம் வகுப்பில் 'ஆல் பாஸ்' பெற்று, தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, கொஞ்சம் எளிமையான வினாக்களை வைத்திருக்கலாம்.
கட்டாய வினா பகுதி கடினமாக இருந்ததால், மாணவர்கள் அதை பார்த்து பயந்திருந்தால், மற்ற கேள்விகளுக்கு பதில் எழுத சிரமப்பட நேரிட்டிருக்கும்.
ஒரு மதிப்பெண்ணில், 13 கேள்விகள் பயிற்சி பகுதியில் இருந்தும், ஏழு கேள்விகள், பாடத்தின் உள்பகுதியில் இருந்தும் கேட்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையாது. ஆனால், 'சென்டம்' மதிப்பெண் எடுப்போர் குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து அரசு மற்றும் தனி யார் பள்ளி கணித ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,
இது போன்ற வினாத்தாள்கள் மாணவர்களுக்கு கணிதபாடத்தின் மீது அச்சத்தை ஏற்படுத்தும். இத னாவ் எதிர் காலத்தில் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் பயில மாணவர் கனே இருக்க மாட்டார்கள்.
இந்த ஆண்டு கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மிக வும் குறைவாகவே இருக்க வாய்ப் புள்ளது. அதேபோல கணிதப் பாடத்தில் நேர்ச்சி விகிதமும் சற்று குறையலாம் என்றனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணித கேள்விகள் கடினமாக இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் ராஜ் கூறியதாவது:
பத்தாம் வகுப்பில் 'ஆல் பாஸ்' பெற்று, தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, கொஞ்சம் எளிமையான வினாக்களை வைத்திருக்கலாம்.
கட்டாய வினா பகுதி கடினமாக இருந்ததால், மாணவர்கள் அதை பார்த்து பயந்திருந்தால், மற்ற கேள்விகளுக்கு பதில் எழுத சிரமப்பட நேரிட்டிருக்கும்.
ஒரு மதிப்பெண்ணில், 13 கேள்விகள் பயிற்சி பகுதியில் இருந்தும், ஏழு கேள்விகள், பாடத்தின் உள்பகுதியில் இருந்தும் கேட்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையாது. ஆனால், 'சென்டம்' மதிப்பெண் எடுப்போர் குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து அரசு மற்றும் தனி யார் பள்ளி கணித ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,
இது போன்ற வினாத்தாள்கள் மாணவர்களுக்கு கணிதபாடத்தின் மீது அச்சத்தை ஏற்படுத்தும். இத னாவ் எதிர் காலத்தில் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் பயில மாணவர் கனே இருக்க மாட்டார்கள்.
இந்த ஆண்டு கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மிக வும் குறைவாகவே இருக்க வாய்ப் புள்ளது. அதேபோல கணிதப் பாடத்தில் நேர்ச்சி விகிதமும் சற்று குறையலாம் என்றனர்.
Friday, January 13, 2023
MATHS
January 13, 2023
எண்ணும் எழுத்தும் ஐனவரி மூன்றாம் வாரம் பாடக் குறிப்பு - கணிதம்
Tuesday, September 13, 2022
Study Materials
September 13, 2022
12th Maths - Quarterly examination Model Question Paper
Tuesday, May 24, 2022
Saturday, May 21, 2022
Tuesday, April 26, 2022
Monday, April 25, 2022
Sunday, April 03, 2022
Maths exam in the new question paper
April 03, 2022
தேர்வுத் தாள் லீக் - புதிய வினாத்தாளில் கணிதத் தேர்வு.
2 வது திருப்புதல் 12 ம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான கணித வினாத்தாள் சமூக வலைத்தளத்தில் கசிந்த நிலையில் அமைச்சர் விளக்கம்
புதிய வினாத்தாள் மூலம் 12 ம் வகுப்பு கணிதத் தேர்வு நாளை நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.
2nd turn 12th class maths exam math question paper leaked on social media Minister Anbil Mahesh announces that Class 12 Maths examination will be held tomorrow with the new question paper.
2nd turn 12th class maths exam math question paper leaked on social media Minister Anbil Mahesh announces that Class 12 Maths examination will be held tomorrow with the new question paper.
Wednesday, March 30, 2022
Monday, March 14, 2022
Friday, February 11, 2022
Tuesday, February 08, 2022
பிளஸ் 1 மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் தேர்வு
February 08, 2022
பிளஸ் 1 மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் தேர்வு
பிளஸ் 1 மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் தேர்வு
பிளஸ் 1 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், உற்சாகமூட்டும் தேர்வு நடத்தப்படும் என்று, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பிப்., 1 முதல் நேரடி வகுப்புகள் துவங்கின. நடப்பு கல்வி ஆண்டுக்கான பாட திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதேநேரத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு இதுவரை எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. அதனால் அவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இந்நிலையில், பிளஸ் 1 மாணவர்களை தயார்படுத்தும் வகையில், உற்சாகமூட்டும் தேர்வு நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பல மாவட்டங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து தேர்வு நடத்தப்படும்.
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்றரை மணி நேரம் தேர்வு நடக்கும். இந்த தேர்வானது பயம் ஏற்படுத்தும் வகையில் இல்லாமல், மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலான, உற்சாகமூட்டும் வகையிலான தேர்வாக நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பிளஸ் 1 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், உற்சாகமூட்டும் தேர்வு நடத்தப்படும் என்று, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பிப்., 1 முதல் நேரடி வகுப்புகள் துவங்கின. நடப்பு கல்வி ஆண்டுக்கான பாட திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதேநேரத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு இதுவரை எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. அதனால் அவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இந்நிலையில், பிளஸ் 1 மாணவர்களை தயார்படுத்தும் வகையில், உற்சாகமூட்டும் தேர்வு நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பல மாவட்டங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து தேர்வு நடத்தப்படும்.
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்றரை மணி நேரம் தேர்வு நடக்கும். இந்த தேர்வானது பயம் ஏற்படுத்தும் வகையில் இல்லாமல், மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலான, உற்சாகமூட்டும் வகையிலான தேர்வாக நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.





