Breaking

Showing posts with label JEE MAIN EXAM. Show all posts
Showing posts with label JEE MAIN EXAM. Show all posts

Monday, December 09, 2024

Friday, December 01, 2023

December 01, 2023

JEE முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

JEE முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஜேஇஇ தேர்வு - அவகாசம் நீட்டிப்பு

ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது; இன்று (30.11.2023) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிச.4ம் தேதி வரை அவகாசம் நீட்டித்தது தேசிய தேர்வுகள் முகமை

விருப்பமுள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்; தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது

Friday, November 03, 2023

November 03, 2023

JEE Main Exam Date 2024 - முதன்மைத் தேர்வு அறிவிப்பு - நவம்பர் 30ஆம் தேதி கடைசி - விண்ணப்பிப்பது எப்படி?

JEE நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு முகமை அறிவிப்பு.!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான JEE நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்ற தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அதன்படி விண்ணப்பதாரர்கள் https://jeema.nta.ac.in/என்ற இணையதளத்தில் இன்று முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு தேர்வு என்று பிரித்து நடத்தப்படுகிறது.

அதன்படி, நுழைவுத் தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அண்மையில் வெளியிட்டது.

இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மொழிகள் தாண்டி பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் விண்ணப்பப் பதிவு

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு இன்று (நவ.2) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

மாணவர்கள் நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

* அதில் JEE Main 2024 registration என்ற பகுதியை Click செய்ய வேண்டும்.

* அதில் தேவையான தகவல்களை உள்ளிட்டு, லாகின் செய்யவும்.

* அதில் விண்ணப்பப் பதிவை மேற்கொண்டு, தேவையான ஆவணங்களை உள்ளிட்டு பதிவேற்றம் செய்யவும்.

75 சதவீத மதிப்பெண்கள் அவசியமில்லை

முன்னதாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வை எழுத 12ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று என்டிஏ அறிவித்திருந்தது.

இந்த நிலையில், குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியைத் தற்போது என்டிஏ நீக்கியுள்ளது.

’அனைத்துக் கல்வி வாரியங்களிலும் முதல் 20 சதவீத (percentile) மாணவர்கள், 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியதில்லை’ என்று என்டிஏ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


கூடுதல் விவரங்களுக்கு:

https://jeemain.nta.nic.in/

தொலைபேசி எண்:011-40759000

இ- மெயில் முகவரி:jeemain@nta.nic.in

Wednesday, February 08, 2023

February 08, 2023

JEE - முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு.

JEE - முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு.

நாடு முழுதும் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய, மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான, ஜே.இ.இ., முதற்கட்ட முதன்மை தேர்வுக்கான முடிவுகள், நேற்று வெளியானது.

ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு, தேசிய தேர்வு முகமை சார்பில், ஜே.இ.இ., முதன்மை தேர்வு, இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டிற்கான முதற்கட்ட முதன்மை தேர்வு, ஜன., 24, 25, 29, 30, 31, பிப்., 1ல், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான தேர்வும், கடந்த மாதம், 28ம் தேதியில், பி.ஆர்க்., - பி.பிளானிங் போன்ற படிப்புகளுக்கான தேர்வும் நடத்தப்பட்டது.

இந்த தேர்வை, 2.43 லட்சம் மாணவியர், இரு திருநங்கைகள் உட்பட, 8.23 லட்சம் பேர் எழுதினர். நாடு முழுதும், 290 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே, 18 நகரங்களிலும், தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட, 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், ஜே.இ.இ., முதன்மை தேர்வு தாள் - -1க்கான முடிவை, தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.

இதில், 20 பேர், தேசிய தேர்வு முகமையின், 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் மாணவியர் யாரும் இடம் பெறவில்லை. தற்போது, பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான தாள் - -1க்கான தேர்வு முடிவுதான் வெளியாகி உள்ளது. 46 ஆயிரத்து, 465 பேர் விருப்பம் தெரிவித்த, பி.ஆர்க்., - பி.பிளானிங் ஆகிய படிப்புகளுக்கான தாள்- - 2ஏ, 2பி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது.

அடுத்ததாக, இரண்டாம் கட்ட ஜே.இ.இ., முதன்மை தேர்வை எழுத விருப்பம் உள்ளவர்களுக்கான விண்ணப்பப்பதிவு, jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் துவங்கி உள்ளது.

அடுத்த மாதம், 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான தேர்வு வரும், ஏப்., 6, 8, 10, 11, 12, 13 மற்றும் 15ம் தேதிகளில் நடக்க உள்ளது

Saturday, January 21, 2023

January 21, 2023

JEE Main 2023: ஜே.இ.இ. மெயின் 2023 ஹால் டிக்கெட் வெளியீடு; பதிவிறக்குவது எப்படி?

JEE Main 2023: ஜே.இ.இ. மெயின் 2023 ஹால் டிக்கெட் வெளியீடு; பதிவிறக்குவது எப்படி?- விவரம் JEE Main 2023: JEE Main 2023 Mains 2023 Hall Ticket Release; How to download?

2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு முதல் அமர்வுத் தேர்வுகள் ஜனவரி 24ஆம் தேதி தொடங்கும் நிலையில், ஹால் டிக்கெட் இன்று வெளியாகி உள்ளது. 

2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு முதல் அமர்வுத் தேர்வுகள் ஜனவரி 24ஆம் தேதி தொடங்கும் நிலையில், ஹால் டிக்கெட் இன்று வெளியாகி உள்ளது. 

ஜே.இ.இ.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. 

இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.  

இணையதளம்

இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.  2023ஆம் ஆண்டு ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு (session 1) ஜனவரி 24 முதல் 31 ஆம் தேதி வரை (26ஆம் தேதி நீங்கலாக) நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்தில் 6, 8, 10- 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.   அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதைக் கொண்டு மாணவர்கள்  தரவரிசைப்படி கல்லூரிகளில் சேரலாம். அதேபோல, கேட்கப்படும் 90 கேள்விகளில் 75 கேள்விகளுக்கு விடையளிக்க முயல வேண்டும். இரண்டாவது அமர்வுக்காக விண்ணப்பப் படிவங்கள் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளன.

இதற்கிடையே முதல் அமர்வுக்கு, மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்தனர். 

இந்த நிலையில் முதல் அமர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது.

ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

jeemain.nta.nic.in என்ற இணைய பக்கத்தை க்ளிக் செய்யவும்.

* JEE Main session 1 admit card என்ற இணைப்பைத் திறக்கவும்.

* தேர்வர்கள்  https://examinationservices.nic.in/jeemain23/downloadadmitcard/LoginDOB.aspx?

enc=Ei4cajBkK1gZSfgr53ImFVj34FesvYg1WX45sPjGXBr0Q5J+bY568shjFzDVpD98 என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

* விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்டு லாகின் செய்யவும்.

* தகவல் பலகை திறக்கப்பட்ட உடனே, ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்  

Sunday, September 11, 2022

September 11, 2022

JEE - முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

JEE - முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது

2022ஆம் ஆண்டு ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தேர்வு முடிவுகள் jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜேஇஇ முதல்நிலை மற்றும் ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தோ்வு என இரு கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெற முடியும். மேலும், இந்தத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் வருபவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல்-தொழில்நுட்ப படிப்புகளில் சோ்க்கை பெற முடியும்.

மாணவா்களின் வசதிக்காக ஜேஇஇ முதல்நிலைத் தோ்வானது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தோ்வுகளில் மாணவா் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ, அதனையே சோ்க்கைக்கான மதிப்பெண்ணாக தெரிவு செய்துகொள்ள முடியும்.

அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான முதல்கட்ட முதல்நிலைத் தோ்வு ஜூன் மாதத்திலும், இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு ஜூலையிலும் நடத்தப்பட்டது. இரண்டு கட்டத்திலும் 10,26,799 போ் பதிவு செய்து, 9,05,590 போ் எழுதினா். இவா்களில், 4,04,256 மாணவ, மாணவிகள் இரண்டு கட்ட முதல்நிலைத் தோ்விலும் பங்கேற்று எழுதினா்.

ஐஐடியில் சேருவதற்கான ஜேஇஇ முதன்மை தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி பெற்ற 40,712 பேரில் 6,516 பேர் பெண்கள் ஆவர். கடந்த ஆண்டு ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 30% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்தாண்டு 26.17% ஆக குறைந்துள்ளது

Total Pageviews

Search This Blog