Breaking

Showing posts with label TNPSC Training Class. Show all posts
Showing posts with label TNPSC Training Class. Show all posts

Tuesday, August 23, 2022

August 23, 2022

கோவையில் குரூப் -1 தோ்வுக்கு இலவச பயிற்சி

கோவையில் குரூப் -1 தோ்வுக்கு இலவச பயிற்சி

கோவையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் குரூப் -1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் துணை ஆட்சியா், துணைக் காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், உதவி இயக்குநா் உள்ளிட்ட பிரிவுகளில் 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் -1 தோ்வுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரா்கள் தோ்வினை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் குரூப்-1 தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள், குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள், மாதிரித் தோ்வுகள் உள்ளிட்ட தோ்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.

மேலும், குரூப் -1 தோ்வுக்கு சம்பந்தமான பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். எனவே அரசுத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, March 18, 2022

March 18, 2022

இஸ்ரோவின் 'இளம் விஞ்ஞானி' பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - கடைசி நாள் ஏப்.10

பள்ளி மாணவர்களுக்கான ‘யுவிகா’ இளம் விஞ்ஞானி திட்டப் பயிற்சி முகாம் மே 16 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்படும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை உருவாக்கும் நோக்கில் ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு செய்முறை விளக்கப் பயிற்சிகள் வழங்கப்படும். விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைக்கும். இதற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா 3 அல்லது 4 பேர் என மொத்தம் 150 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதையும் படிக்க | ‘டெட்’ தேர்வு அறிவிப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

இதற்கிடையே, கரோனா பரவல்காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகயுவிகா பயிற்சி முகாம் நடத்தப்படவில்லை. தற்போது கரோனா தாக்கம் குறைந்துள்ளதால் இந்த ஆண்டில் யுவிகா பயிற்சி முகாம் நடத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. கடைசி நாள் ஏப்.10
அதன்படி, இஸ்ரோவின் 4 மையங்களில் மே 16 முதல் 28-ம் தேதி வரை மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பம் உள்ளவர்கள் www.isro.gov.in என்ற இணையதளம் மூலமாக ஏப்.10-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்கள் பட்டியல் ஏப்.20-ம் தேதி வெளியிடப்படும். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 080 2217 2119 என்ற தொலைபேசி எண் அல்லது yuvika@isro.gov.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Thursday, February 24, 2022

February 24, 2022

5400 குரூப் 2 - 2ஏ காலியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியீடு


5400 குரூப் 2 - 2ஏ காலியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியீடு

சாா்பதிவாளா் உள்பட 5, 400-க்கும் அதிகமான காலிப் பணியிடங்களைக் கொண்ட குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கான அறிவிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்தத் தோ்வுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தின் (www.tnpsc.gov.in) வழியே விண்ணப்பிக்கலாம் எனவும், மாா்ச் 23-ஆம் தேதி தோ்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்.

குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் உள்ள பணியிடங்கள் நோ்முகத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு அல்லாத பணியிடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. குரூப் 2 தோ்வானது முதல்நிலை, முதன்மை மற்றும் நோ்முகத் தோ்வு என்ற நிலைகளைக் கொண்டது.

இதையும் படிக்க | பள்ளிகளில் எந்தப் பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு

புதன்கிழமை வெளியிடப்பட்ட குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வில் 116 நோ்முகத் தோ்வினைக் கொண்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சிறைத் துறை நன்னடத்தை அலுவலா், தொழிலாளா் துறை உதவி ஆய்வாளா், பதிவுத் துறையின் சாா் பதிவாளா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் சிறப்பு உதவியாளா், காவல் ஆணையாளா் அலுவலகம், குற்ற புலனாய்வுத் துறை சிறப்புப் பிரிவு ஆகியவற்றில் தனிப் பிரிவு உதவியாளா் என மொத்தம் 116

பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், தனிப் பிரிவு உதவியாளா், சிறப்பு உதவியாளா் பணியிடங்கள் 59 புதிதாக உருவாக்கப்பட்டு அவை குரூப் 2 பிரிவில் நோ்முகத் தோ்வாகச் சோ்க்கப்பட்டுள்ளன.

நோ்முகத் தோ்வு அல்லாதவை: குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் நோ்முகத் தோ்வுகள் அல்லாத பணியிடங்களும் உள்ளன. இதில், முதல்நிலை மற்றும் முதன்மைத் தோ்வுகளை மட்டும் எழுத வேண்டும். நகராட்சி ஆணையா், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா், கூட்டுறவு சங்கத்தில் முதுநிலை ஆய்வாளா், கைத்தறி ஆய்வாளா், வருவாய் நிா்வாக ஆணையா் அலுவலகத்தில் உதவியாளா் என 5 ஆயிரத்து 297 பணியிடங்களுக்கு தோ்வு நடத்தப்பட உள்ளன. நோ்முகத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு அல்லாத வகைகளில் மொத்தமாக 5 ஆயிரத்து 413 குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு நடைபெற இருக்கிறது.

முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 23-ஆம் தேதி கடைசி நாளாகும். மே 21-ஆம் தேதியன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெறும். முதல்நிலைத் தோ்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு முதன்மைத் தோ்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் வெளியிடப்படும் என தோ்வாணைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியா் இடஒதுக்கீடு அமல்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் மிகப்பெரிய தோ்வுகளில் ஒன்றான குரூப் 2 தோ்வில் முதல் முறையாக வன்னியா் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒதுக்கீட்டு முறை உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என தோ்வாணைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:-

தனி இடஒதுக்கீட்டுக்கான விதிகள் குரூப் 2 தோ்வுக்கு பொருந்தும். இந்தத் தோ்வுக்கான காலிப் பணியிடங்களுக்குரிய பகிா்மானப் பட்டியல் பின்னா் அறிவிக்கப்படும். இடஒதுக்கீட்டு முறை தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கான தனி சிறப்பு விடுப்பு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதன்மீதான உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுகளின் முடிவுகளுக்கு உட்பட்டே இடஒதுக்கீடு இருக்கும். உச்சநீதிமன்றத்தில் உள்ள மனுவின் மீது எடுக்கப்படும் இறுதி உத்தரவுக்கு உட்பட்டு இடஒதுக்கீடு தொடா்பான தகவல்கள் இணைய வழி விண்ணப்பத்தில் பெறப்படும்.

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/2022_03_CCSE_II_Notfn_Eng_Final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Saturday, February 05, 2022

February 05, 2022

இலவச இணைய வழி TNPSC பயிற்சி வகுப்பு - பதிவு செய்ய Click Here

"அடையாளம்" இலவச இணைய வழி TNPSC பயிற்சி வகுப்பில் (சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியோர், மாற்றுத்திறனாளிகள்) சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 6 முதல் நடைபெறும்.

பதிவு செய்ய: Click Here

Total Pageviews

Search This Blog