Breaking

Showing posts with label கல்வி உதவித்தொகை. Show all posts
Showing posts with label கல்வி உதவித்தொகை. Show all posts

Tuesday, August 02, 2022

August 02, 2022

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2022- 23 ஆம் கல்வியாண்டில் 1 முதல் எஸ்எஸ்எல்சி வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகையும், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ, ஐ.டி.சி, வாழ்க்கைத் தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகள் உள்பட) பயில்பவா்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இத் தொகையை பெறுவதற்கு மத்திய அரசின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு செப். 30 ஆம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு அக். 31 ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், தங்களது கல்வி நிலையத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதாா் விவரங்களை இணைத்த பிறகே விண்ணப்பங்களை சரிபாா்க்க இயலும்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில், அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை தெரிவிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம்.

Monday, August 01, 2022

August 01, 2022

கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு: பள்ளிக்கல்வித்துறை

கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு: பள்ளிக்கல்வித்துறை

கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடுத்துள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் தொடர்ந்து படிப்பை தொடருவதை உறுதி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமானோர் இறந்தனர். கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வந்தாலும் அவர்களும் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவால் பெற்றோரை இழந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் அதே பள்ளியில் கல்வி பயில்வதை பள்ளிகள் உறுதி செய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, July 31, 2022

July 31, 2022

கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை கல்வி உதவித்தொகை அறிவிப்பு

சென்னை:'கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித் தொகை பெற, செப்டம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாவலாசிரியர், பத்திரிகையாளர், சுதந்திரப் போராட்ட வீரர் என பன்முகங்களை கொண்ட, கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவாக துவக்கப்பட்ட, 'கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை' சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2022 - -23-ம் ஆண்டில் 10 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.அதனால், பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨, கல்லுாரி, பாலிடெக்னிக் மாணவர்கள், இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கடைசியாக எழுதிய தேர்வில், 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள்; 60 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்ப படிவத்தை, www.kalkionline.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, மாணவர் தன் கைப்பட பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், அதில் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, 'கீதம், முதல் மாடி, 14, நாலாவது பிரதான சாலை, கஸ்துாரிபாய் நகர், அடையாறு, சென்னை- 600 020' என்ற முகவரிக்கு, செப்டம்பர் 10-ம் தேதிக்குள், தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog