Breaking

Showing posts with label TRUST EXAM. Show all posts
Showing posts with label TRUST EXAM. Show all posts

Wednesday, December 11, 2024

Thursday, February 22, 2024

February 22, 2024

Trust Exam - ல் ஒரே பள்ளியே சேர்ந்த 39 மாணவர்கள் தேர்ச்சி



Trust Exam - ல் ஒரே பள்ளியே சேர்ந்த 39 மாணவர்கள் தேர்ச்சி!!!

திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 39 பேர் Trust Exam தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்

Tuesday, November 14, 2023

November 14, 2023

9-ஆம் வகுப்பு மாணவர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு நவ.24-க்குள் விண்ணப்பிக்கலாம்!!

9-ஆம் வகுப்பு மாணவர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு நவ.24-க்குள் விண்ணப்பிக்கலாம்!!

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு வரும் டிச.16-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்வுக்கு நவ.24 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக் கும் (சென்னை தவிர) அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தேர்வை ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகா ரம் பெற்ற பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் நிக ழாண்டுக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் மாண வர்கள், தங்கள் பள்ளி தலைமையாசிரியர்கள் வாயிலாக நவம் பர் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பப் படிவங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 14-ஆம் தேதி முதல் பதிM றக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.10 மட்டும் செலுத்த வேண்டும். மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப் பங்களை தலைமையாசிரியர்கள் தேர்வுத் துறை இணையதளத் தில் நவம்பர் 17 முதல் 28-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பின் மாணவர்களின் விண்ணப்பங்கள் மற் றும் தொகுப்பறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல கங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, October 22, 2022

October 22, 2022

ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) நடத்துதல் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவிப்பு

ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) நடத்துதல் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவிப்பு.

2022-2023- தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) நடத்துதல் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!!! 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு TRUST EXAM -10.12.2022 அன்று நடைபெற உள்ளது.

TRUST EXAM 2022 Notification - Download here

Thursday, February 17, 2022

February 17, 2022

தமிழகத்தில் 9ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் பிப்ரவரி 27ம் தேதி 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருக்கும் ஊரக திறனாய்வுத் தேர்வுகான மாணவர்களின் பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திறனாய்வுத் தேர்வு

தமிழகத்தில் மாநில அரசு சார்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பட்டியலினத்தவர்கள், ஆதிதிராவிடர் இனத்தைச் சார்த்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இத்தேர்வு 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை எழுத மாணவர்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளது. அதன்படி கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு பயில கூடிய மாணவர்கள் மட்டுமே இத்தேர்வில் பங்கேற்க முடியும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தாண்டு ஊரக திறனாய்வு தேர்வு பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவிருந்தது. அன்றைய தினம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருப்பதால் 27ம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரக திறனாய்வுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 21ம் தேதி முதல் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கூட அனுமதி சீட்டினை பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு மாணவர்களுக்கு வழங்கி உரிய அறிவுறுத்தல்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதாக என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, January 29, 2022

January 29, 2022

ஊரகத் திறனாய்வு தேர்வு - TRUST Exam தேதி மாற்றம்!

TRUST - தேர்வு தேதி மாற்றம்!

ஊரகத் திறனாய்வு தேர்வு 20.02.2022 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19.02.2022 அன்று நடைபெறவுள்ளதால் , மேற்படி தேர்வு 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Thursday, December 30, 2021

December 30, 2021

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு (TRUST) விண்ணப்பிக்க 20.01.2022 வரை கால நீட்டிப்பு செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு (TRUST) விண்ணப்பிக்க 20.01.2022 வரை கால நீட்டிப்பு செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!

Wednesday, November 24, 2021

November 24, 2021

TRUST Examination Notification - Jan 2022

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) நடத்துதல் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

அரசுத் தேர்வுத் துறையால் ஆண்டு தோறும் தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான " ஊரகத் திறனாய்வு தேர்வு " நடைபெற்று வருகிறது.

தகுதியான தேர்வர்கள் இத்தேர்விற்கு ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 9 - ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவார்கள். நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவராவர்.

ஆண்டு வருமானம் :

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ , 1,00,000 / - க்கு ( ரூபாய் ஒரு இலட்சத்திற்கு ) மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தல்

30.01.2022 அன்று நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான வெற்று விண்ணப்பங்கைைள 06.12.2021 முதல் 14.12.2021 வரை www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளம் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து , அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வெற்று விண்ணப்பங்களை மாணவர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய்ச் சான்றினையும் இணைத்து 14.12.2021 க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும் முழுமையான விவரம் அறிய கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

TRUST EXAM NOTIFICATION 2022 - Download here...

Tuesday, March 16, 2021

March 16, 2021

24.01.2021 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வில் (TRUST - 2021) வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம் மாவட்ட வாரியாக வெளியீடு

தமிழகத்தில் பள்ளி மாணவர் உட்பட 4 பேருக்கு கொரோனா – ஆன்லைன் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் கோரிக்கை!
அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி – கல்லூரி 3 நாட்களுக்கு விடுமுறை!! 24.01.2021 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வில் (TRUST - 2021) வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம் மாவட்ட வாரியாக வெளியீடு
CLICK HERE TO DOWNLOAD FULL PDF

Total Pageviews

Search This Blog