update your PAN card
December 10, 2024
Showing posts with label PAN. Show all posts
Showing posts with label PAN. Show all posts
Tuesday, December 10, 2024
Wednesday, November 08, 2023
PAN card
November 08, 2023
பான் கார்ட் தொலைந்துவிட்டதா? - 50 ரூபாயில் ஒரிஜினலே வாங்க முடியும்.
பான் கார்ட் தொலைந்துவிட்டதா? - 50 ரூபாயில் ஒரிஜினலே வாங்க முடியும்.
உங்கள் பான் கார்டு சேதமானால் அல்லது தொலைந்துவிட்டால் சில எளிய நடைமுறைகளைப் பின்பற்றி பான் கார்டை வீட்டிலேயே டெலிவரி பெற்று கொள்ளலாம்.
இதற்கு ஐம்பது ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கான அப்பிளிக்கேஷன் ப்ராசஸும் எளிமையானது தான்.
இப்படி தொலையும் போது புதிய பான் கார்டு அச்சிட பல நேரங்களில் நாம் உள்ளூர் கடைக்கு செல்லும்போது, அதற்கு ரூ.100 முதல் ரூ.200 வரை வசூலிக்கிறார்கள்.
ஆனால் ஆன்லைனில் மத்திய அரசின் இணையதளத்தில் விண்ணப்பித்தால் குறைந்த செலவில் வீட்டில் இருந்தபடியே புதிய ஒரிஜினல் பான் கார்டைப் பெறலாம். பான் கார்டை மீண்டும் அச்சிடுவதற்கான எளிதான செயல்முறை:
முதலில் நீங்கள் NSDL (நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்)
https://nsdl.co.in/அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்
அதில் இப்போது Reprint Pan Card என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
உள்ளே நீங்கள் உங்கள் பான் கார்டு எண், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீடு போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும்.
அதன் பின்னர் நீங்கள் விதிமுறை மற்றும் நிபந்தனைகளைக் காண்பீர்கள்.
அவற்றை ஏற்றுக்கொண்டால், நீங்கள் சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது உங்கள் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும்.
இதில் பான் கார்டு தொடர்பான அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட வேண்டும். அதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் செய்துகொள்ளலாம்.
அதன் பின்னர் உங்கள் அப்ளிகேஷனை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கும்போது உங்களுக்கு OTP கோரிக்கை வரும். அதை கிளிக் செய்யவும். நீங்கள் கிளிக் செய்தவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
OTP ஐ உள்ளிட்டு Validate என்பதைக் கிளிக் செய்யவும்.
அதன் பின்னர் கட்டணத்திற்கான பக்கம் திறக்கும்.
அதில் உங்கள் விருப்பமான கட்டண வழிமுறையைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் ஐம்பது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
கார்ட், UPI அல்லது நெட் பேங்கிங் மூலம் கட்டணம் செலுத்தலாம்.
பணம் செலுத்திய பின்னரே விண்ணப்பம் வெற்றிபெற்றதாக செய்தி மற்றும் மெயில் வரும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு 10 முதல் 15 நாட்களுக்குள் ஒரிஜினல் பான் கார்ட் உங்கள் வீடுவந்து சேரும்.
PAN card
November 08, 2023
How much gold can be bought without PAN card? - பான்-ஆதார் இல்லாமல் எவ்வளவு தங்கம் வாங்க முடியும்?
Moreover, in case you are buying gold from a jeweller for a value over two lakh rupees whether through cash or otherwise, you have to provide the seller with your identity like a PAN card or Aadhaar Card. So you can buy gold upto Rs. 2 lakhs without having to furnish either PAN or Aadhaar number.
பான்-ஆதார் இல்லாமல் எவ்வளவு தங்கம் வாங்க முடியும்?
தங்கத்தை வாங்குவதற்கும் வைத்திருப்பதற்கும் சில முக்கியமான விதிகள் நம் நாட்டில் உள்ளன.
அந்த விதிகளை மீறினால், நீங்கள் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம் மற்றும் வரி அதிகாரியின் கவனத்திற்கு வரலாம்.
அதனால் தங்கம் வாங்கும்போது இந்த விதிகளைத் தெரிந்து அதற்கு ஏற்றபடி பர்சேஸ் செய்வது நல்லது.
ஏதேனும் ஆவணம் தேவையா?
நீங்கள் தங்கம் வாங்கச் செல்லும்போது, உங்களிடம் பான் கார்டு அல்லது அதுபோன்ற KYC ஆவணம் கேட்கப்படலாம். நாட்டில் சில பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டைக் காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இதனால் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும்.
2 லட்சம் அல்லது அதற்கு மேல் தங்கம் வாங்கினால், பான் எண்ணைக் காட்ட வேண்டும். வருமான வரி விதிகளின் 114பி பிரிவின் கீழ் நாட்டில் இந்த விதி உள்ளது. ஜனவரி 1, 2016க்கு முன், ரூ.5 லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்கினால் பான் எண்ணைக் காட்ட வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. எவ்வளவு தங்கத்தை பணமாக வாங்கலாம்?
இதனுடன், ரொக்கமாக ரூ.2 லட்சம் வரை மட்டுமே தங்கம் வாங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகைக்கு மேல் தங்கம் வாங்கினால், அதை கார்டு மூலமாகவோ அல்லது பான் கார்டுடன் ஆவணங்கள் சமர்ப்பித்து ரொக்கமாக செலுத்த வேண்டும்.
மேலும் பண பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 269ST உள்ளது.
இதன்படி, ஒரு நாளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது. எனவே அடிப்படையில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாகச் செலுத்தி தங்கம் வாங்கினால், நீங்கள் விதிகளை நன்றாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப ஆவணங்களை சமர்ப்பிப்பது முக்கியம்.
ஆவணங்கள் மறந்தால் விதிமீறல் ஆகும்.
மேலும் இதற்கு ஒரு அபராதமும் உள்ளது, இது பணத்தை எடுக்கும் நபருக்கு விதிக்கப்படுகிறது.
யார் எவ்வளவு தங்கத்தை சேமிக்க முடியும்?
-திருமணமான பெண் தன்னிடம் 500 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம்.
- திருமணமாகாத ஒரு பெண் தன்னிடம் 250 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம்.
- ஆடவர்கள் தன்னுடன் 100 கிராம் தங்கத்தை வைத்திருக்க முடியும்.
பான்-ஆதார் இல்லாமல் எவ்வளவு தங்கம் வாங்க முடியும்?
தங்கத்தை வாங்குவதற்கும் வைத்திருப்பதற்கும் சில முக்கியமான விதிகள் நம் நாட்டில் உள்ளன.
அந்த விதிகளை மீறினால், நீங்கள் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம் மற்றும் வரி அதிகாரியின் கவனத்திற்கு வரலாம்.
அதனால் தங்கம் வாங்கும்போது இந்த விதிகளைத் தெரிந்து அதற்கு ஏற்றபடி பர்சேஸ் செய்வது நல்லது.
ஏதேனும் ஆவணம் தேவையா?
நீங்கள் தங்கம் வாங்கச் செல்லும்போது, உங்களிடம் பான் கார்டு அல்லது அதுபோன்ற KYC ஆவணம் கேட்கப்படலாம். நாட்டில் சில பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டைக் காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இதனால் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும்.
2 லட்சம் அல்லது அதற்கு மேல் தங்கம் வாங்கினால், பான் எண்ணைக் காட்ட வேண்டும். வருமான வரி விதிகளின் 114பி பிரிவின் கீழ் நாட்டில் இந்த விதி உள்ளது. ஜனவரி 1, 2016க்கு முன், ரூ.5 லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்கினால் பான் எண்ணைக் காட்ட வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. எவ்வளவு தங்கத்தை பணமாக வாங்கலாம்?
இதனுடன், ரொக்கமாக ரூ.2 லட்சம் வரை மட்டுமே தங்கம் வாங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகைக்கு மேல் தங்கம் வாங்கினால், அதை கார்டு மூலமாகவோ அல்லது பான் கார்டுடன் ஆவணங்கள் சமர்ப்பித்து ரொக்கமாக செலுத்த வேண்டும்.
மேலும் பண பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 269ST உள்ளது.
இதன்படி, ஒரு நாளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது. எனவே அடிப்படையில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாகச் செலுத்தி தங்கம் வாங்கினால், நீங்கள் விதிகளை நன்றாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப ஆவணங்களை சமர்ப்பிப்பது முக்கியம்.
ஆவணங்கள் மறந்தால் விதிமீறல் ஆகும்.
மேலும் இதற்கு ஒரு அபராதமும் உள்ளது, இது பணத்தை எடுக்கும் நபருக்கு விதிக்கப்படுகிறது.
யார் எவ்வளவு தங்கத்தை சேமிக்க முடியும்?
-திருமணமான பெண் தன்னிடம் 500 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம்.
- திருமணமாகாத ஒரு பெண் தன்னிடம் 250 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம்.
- ஆடவர்கள் தன்னுடன் 100 கிராம் தங்கத்தை வைத்திருக்க முடியும்.
Monday, July 10, 2023
Thursday, July 06, 2023
Monday, June 26, 2023
Tuesday, April 11, 2023
PAN
April 11, 2023
பான் கார்டில் பிழையா? - இனி ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்
பான் கார்டில் பிழையா? - இனி ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்
இந்தியாவில் பணப் பரிவர்த்தனை, அரசு சலுகைகள், வரிகள் செலுத்துவது உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு பான் கார்டு அவசியமாகிறது.
ஆதார் எண் எப்படி நமது அடையாள விவரங்களைக் காண உதவுகிறதோ, அதேபோல் தான் பான் கார்டு நமது நிதி விவரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளின் வரலாற்றை தெரிந்து கொள்ள உதவுகிறது. இப்படி பல முக்கிய நிதி தேவைகளுக்கு பயன்படும் பான்கார்டில் பிழை இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும்.
அப்படி பிழை இருந்தால், அத்தியாவசிய தேவையான வங்கி கணக்கு கூட தொடங்குவது கடினமாகும்.
இப்படி பான்கார்டில் பிழை இருந்தால் அதை எளிதாக ஆன்லைனிலே திருத்தம் செய்வது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
பான் கார்டு திருத்தம் செய்ய முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
பிறகு இணையதள பக்கத்தில் 'அப்ளிகேஷன் டைப்' என்ற option-ஐ தேர்ந்தெடுத்து Change of Correction in Exsiting Pan Card என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பான் கார்டு திருத்தம் செய்வதற்குத் தேவையான விவரங்களை பதிவு செய்த பிறகு டிஸ்பிளேவில், பதிவு செய்ததற்கான ரிஜிஸ்டர் எண் தெரியும், அதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண் இ-மெயில் முகவரிக்கும் அனுப்பப்படும் என்பதால், உள்ளே கொடுக்கும் விவரங்களில் சரியான இ-மெயில் முகவரியை வழங்க வேண்டும்.
அடுத்ததாகத் திருத்தம் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குறிப்பாக தற்போது பான் கார்டு பெயர், ஆதாரில் உள்ளது போன்று தான் அளிக்கப்படுகிறது என்பதால், கட்டாயம் ஆதார் நகலையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இப்படி அனைத்து விவரங்களையும் அளித்த பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பித்து, திருத்தம் செய்வதற்கான கட்டணத்தைச் செலுத்தினால், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு, விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்குத் திருத்தம் செய்யப்பட்ட பான்கார்டு வந்துவிடும்.
Tuesday, March 15, 2022
PAN
March 15, 2022
ஆதார் - பான் இணைக்காத நபர்களுக்கு ரூ.1,000 அபராதம்
ஆதார் - பான் இணைக்காத நபர்களுக்கு ரூ.1,000 அபராதம்
வரும் 31ம் தேதிக்குள் 'பான் கார்டு'டன், 'ஆதார்' எண்ணை இணைக்காவிட்டால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு பான் கார்டு எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து பான் - ஆதார் இணைப்புக்கு வழங்கப்பட்ட அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதற்கான அவகாசம் வரும் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இனி கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 31ம் தேதிக்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வரும் 31ம் தேதிக்குள் 'பான் கார்டு'டன், 'ஆதார்' எண்ணை இணைக்காவிட்டால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு பான் கார்டு எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து பான் - ஆதார் இணைப்புக்கு வழங்கப்பட்ட அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதற்கான அவகாசம் வரும் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இனி கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 31ம் தேதிக்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Saturday, September 18, 2021
PAN
September 18, 2021
பான்-ஆதாா் எண் இணைப்பு: காலக்கெடு 6 மாதங்கள் நீட்டிப்பு.
பான் (நிரந்தர கணக்கு எண்) எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கரோனா சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமத்தைக் கருத்தில்கொண்டு பான் எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராத நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கான கெடுவும் செப். 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பினாமி சொத்து பரிவா்த்தனை தடைச் சட்டம் 1988-இன் கீழ் உத்தரவு வழங்கும் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடுதல், உத்தரவை நிறைவேற்றுவதற்கான காலமும் 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கரோனா சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமத்தைக் கருத்தில்கொண்டு பான் எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராத நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கான கெடுவும் செப். 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பினாமி சொத்து பரிவா்த்தனை தடைச் சட்டம் 1988-இன் கீழ் உத்தரவு வழங்கும் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடுதல், உத்தரவை நிறைவேற்றுவதற்கான காலமும் 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, July 22, 2021
PAN
July 22, 2021
வீடு தேடி வரும் ஆதார் சேவை, மொபைல் எண் அப்டேட் – புதிய வசதி அறிமுகம்!
"உங்களது ஆதார் அட்டையில் திருந்தங்கள் இருப்பின் அதனை ஆன்லைன் முறையில் செய்வதற்கு பல வசதிகளை அரசு அறிவித்துள்ள நிலையில், உங்களது தொலைபேசி எண்ணை வீட்டிற்கே வந்து மாற்றிக் கொடுக்கும் முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய அப்டேட்:
இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை அவசிய சான்றாகும். அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான எண்ணுடன் வழங்கப்பட்டிருக்கும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் அனைத்தும் ஆதார் அட்டையின் மூலம் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டையில் புதுப்பிக்க வேண்டிய விவரங்களை ஆன்லைனில் மாற்றும் வசதியினை UIDAI முன்னதாக அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது மத்திய அரசு புதிய முறையில் அப்டேட் செய்வதற்கு ஒரு வசதியினை அறிமுகம் செய்து வருகிறது. இந்த புதிய திட்டத்திற்காக இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) இரண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் போஸ்ட்மேன் உதவியுடன் வீட்டு வாசலில் ஆதார் அட்டையில் மொபைல் எண்களை புதுப்பிக்கலாம். இதற்காக 1.46 லட்சம் தபால்காரர்கள் மற்றும், கிராமின் டக் சேவக்ஸ் (ஜி.டி.எஸ்) உடன் இந்த சேவை வழங்கப்படும்.
ஆனால் இதற்காக பயோமெட்ரிக் தொடர்பான திருத்தங்களுக்கு ரூ.100 மற்றும் மொபைல் நம்பர் அப்டேட்டுக்கு ரூ.50 கட்டணம் ஆக வசூலிக்கப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. நீங்கள் ஆதார் பி.வி.சி கார்டைப் இந்த முறையில் ஆர்டர் செய்து பெறலாம். ஆதார் எண், இமெயில் ஐடி அல்லது பதிவு ஐடியைப் பயன்படுத்தி ஆன்லைனில் uidai.gov.in அல்லது resident.uidai.gov.in மூலம் ஆர்டர் செய்யலாம். இதற்காக ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். ஆதார் பி.வி.சி தபால் மூலம் பயனர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்."
புதிய அப்டேட்:
இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை அவசிய சான்றாகும். அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான எண்ணுடன் வழங்கப்பட்டிருக்கும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் அனைத்தும் ஆதார் அட்டையின் மூலம் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டையில் புதுப்பிக்க வேண்டிய விவரங்களை ஆன்லைனில் மாற்றும் வசதியினை UIDAI முன்னதாக அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது மத்திய அரசு புதிய முறையில் அப்டேட் செய்வதற்கு ஒரு வசதியினை அறிமுகம் செய்து வருகிறது. இந்த புதிய திட்டத்திற்காக இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) இரண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் போஸ்ட்மேன் உதவியுடன் வீட்டு வாசலில் ஆதார் அட்டையில் மொபைல் எண்களை புதுப்பிக்கலாம். இதற்காக 1.46 லட்சம் தபால்காரர்கள் மற்றும், கிராமின் டக் சேவக்ஸ் (ஜி.டி.எஸ்) உடன் இந்த சேவை வழங்கப்படும்.
ஆனால் இதற்காக பயோமெட்ரிக் தொடர்பான திருத்தங்களுக்கு ரூ.100 மற்றும் மொபைல் நம்பர் அப்டேட்டுக்கு ரூ.50 கட்டணம் ஆக வசூலிக்கப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. நீங்கள் ஆதார் பி.வி.சி கார்டைப் இந்த முறையில் ஆர்டர் செய்து பெறலாம். ஆதார் எண், இமெயில் ஐடி அல்லது பதிவு ஐடியைப் பயன்படுத்தி ஆன்லைனில் uidai.gov.in அல்லது resident.uidai.gov.in மூலம் ஆர்டர் செய்யலாம். இதற்காக ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். ஆதார் பி.வி.சி தபால் மூலம் பயனர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்."

