Work Experience Certificate
June 17, 2026
Showing posts with label B.E.. Show all posts
Showing posts with label B.E.. Show all posts
Wednesday, June 17, 2026
Tuesday, August 29, 2023
counseling
August 29, 2023
BE., படிப்பு துணை கவுன்சிலிங் பதிவு துவக்கம்
BE., படிப்பு துணை கவுன்சிலிங் பதிவு துவக்கம்
அண்ணாபல்கலை இணைப்பில் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, மூன்றாம் சுற்றில் இடங்கள் பெற்ற, 44,000 பேரும் வரும், 31ம் தேதிக்கு சேர வேண்டும்.
மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு நேற்று துவங்கியது; வரும், 3ம் தேதி விண்ணப்ப பதிவு செய்யலாம்.
மேலும் விபரங்களை, www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அண்ணாபல்கலை இணைப்பில் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, மூன்றாம் சுற்றில் இடங்கள் பெற்ற, 44,000 பேரும் வரும், 31ம் தேதிக்கு சேர வேண்டும்.
மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு நேற்று துவங்கியது; வரும், 3ம் தேதி விண்ணப்ப பதிவு செய்யலாம்.
மேலும் விபரங்களை, www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Saturday, November 19, 2022
engineering colleges
November 19, 2022
BE - துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு
BE - துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு.
பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை.,யின் கீழ் உள்ள 446 கல்லூரிகளில் மொத்தம் ஒதுக்கப்பட்ட 1,93,571 இடங்களில், 85,023 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
மீதமுள்ள இடங்களில் சேர விண்ணப்பித்த மாணவர்களில், தகுதியான மாணவர்களாக 9,731 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். தரவரிசை பட்டியல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை.,யின் கீழ் உள்ள 446 கல்லூரிகளில் மொத்தம் ஒதுக்கப்பட்ட 1,93,571 இடங்களில், 85,023 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
மீதமுள்ள இடங்களில் சேர விண்ணப்பித்த மாணவர்களில், தகுதியான மாணவர்களாக 9,731 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். தரவரிசை பட்டியல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
Thursday, August 25, 2022
engineering colleges
August 25, 2022
B.E 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி துவக்கம்: செயலாளர் தகவல்
பிஇ நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது என சேர்க்கை செயலாளர் பழனி தெரிவித்தார். பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் பி.இ மற்றும் பி.டெக் நேரடி இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கான கவுன்சலிங்கை ஒவ்வொரு ஆண்டும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த ஜூன் 24ம் தேதி துவங்கி கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி துவங்கி செப்.12ம் தேதி வரை நடக்கவுள்ளது என மாணவர் சேர்க்கை செயலாளரும், கல்லூரி முதல்வருமான முனைவர் பழனி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர், தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநரின் வழிகாட்டுதலின்படி பி.இ நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நடத்தப்பட உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு 65 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கு 24,062 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் தகுதியுள்ள 20,574 மாணவர்களுக்கு தரவரிசை தயார் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவரிசை, அவர்களுக்கான இணையதள கவுன்சலிங் விவரங்கள் www.tnlea.com என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு கலந்தாய்வு வரும் 29 மற்றும் 30ம் தேதி நடக்கிறது. பொது கலந்தாய்வு செப்.11ம் தேதியும், பி.எஸ்சி மாணவர்களுக்கு 12ம் தேதியும் நடக்கிறது. விபரங்களுக்கு 94436 61901, 98431 53330 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர், தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநரின் வழிகாட்டுதலின்படி பி.இ நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நடத்தப்பட உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு 65 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கு 24,062 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் தகுதியுள்ள 20,574 மாணவர்களுக்கு தரவரிசை தயார் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவரிசை, அவர்களுக்கான இணையதள கவுன்சலிங் விவரங்கள் www.tnlea.com என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு கலந்தாய்வு வரும் 29 மற்றும் 30ம் தேதி நடக்கிறது. பொது கலந்தாய்வு செப்.11ம் தேதியும், பி.எஸ்சி மாணவர்களுக்கு 12ம் தேதியும் நடக்கிறது. விபரங்களுக்கு 94436 61901, 98431 53330 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Syllabus
August 25, 2022
பி.இ. இறுதியாண்டு மாணவா்களுக்கு 9 கட்டாயப் பாடங்கள் அறிமுகம்
பி.இ. இறுதியாண்டு மாணவா்களுக்கு 9 கட்டாயப் பாடங்கள் அறிமுகம்
பொறியியல் படிப்புகளில் இறுதியாண்டு மாணவா்களுக்கு புதிதாக 9 கட்டாயப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டில்(2022-23) அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்விவரம் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இறுதியாண்டு மாணவா்களுக்கு புதிதாக கட்டாயப் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் பொது ஆய்வுகள் அறிமுகம், இலக்கியத்தின் கூறுகள், திரைப்பட மதிப்பிடல், பேரிடா் மேலாண்மை, யோகா, ஆயுா்வேதம், சித்தா, இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு, இந்தியாவில் மாநிலத்தை கட்டியெழுப்பும் அரசியல், தொழில்துறை பாதுகாப்பு, மனித சமுதாயத்துக்கான அரசியல் மற்றும் பொருளாதாரச் சிந்தனை ஆகிய 9 பாடங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் ஏதேனும் 2 பாடங்களை இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் விருப்பத்தின் அடிப்படையில் கட்டாயம் தோ்வு செய்து படிக்க வேண்டும்.
இதுதவிர, மாணவ, மாணவிகள் தொழிற் பயிற்சி பெறும் வகையிலும் சில பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதில், ஒன்றை மாணவா்கள் தோ்வு செய்து 5 மற்றும் 6-ஆவது பருவங்களில் படிக்கலாம். பொறியியல் கல்வியை கடந்து இதர அம்சங்களையும் மாணவா்கள் புரிந்து கொள்ளும் விதமாக இந்த புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தோ்வு முடிவுகள் வெளியீடு: இதற்கிடையே, இளநிலை பொறியியல் படிப்புக்கான கடந்த ஏப்ரல் மாத இறுதி பருவத் தோ்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அவற்றை மாணவா்கள் https://coe1.annauniv.edu/home என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பொறியியல் மாணவா்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு இறுதி பருவத் தோ்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்பட்டதாகவும், 2, 3-ஆம் ஆண்டு மாணவா்களுக்கு தோ்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளில் இறுதியாண்டு மாணவா்களுக்கு புதிதாக 9 கட்டாயப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டில்(2022-23) அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்விவரம் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இறுதியாண்டு மாணவா்களுக்கு புதிதாக கட்டாயப் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் பொது ஆய்வுகள் அறிமுகம், இலக்கியத்தின் கூறுகள், திரைப்பட மதிப்பிடல், பேரிடா் மேலாண்மை, யோகா, ஆயுா்வேதம், சித்தா, இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு, இந்தியாவில் மாநிலத்தை கட்டியெழுப்பும் அரசியல், தொழில்துறை பாதுகாப்பு, மனித சமுதாயத்துக்கான அரசியல் மற்றும் பொருளாதாரச் சிந்தனை ஆகிய 9 பாடங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் ஏதேனும் 2 பாடங்களை இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் விருப்பத்தின் அடிப்படையில் கட்டாயம் தோ்வு செய்து படிக்க வேண்டும்.
இதுதவிர, மாணவ, மாணவிகள் தொழிற் பயிற்சி பெறும் வகையிலும் சில பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதில், ஒன்றை மாணவா்கள் தோ்வு செய்து 5 மற்றும் 6-ஆவது பருவங்களில் படிக்கலாம். பொறியியல் கல்வியை கடந்து இதர அம்சங்களையும் மாணவா்கள் புரிந்து கொள்ளும் விதமாக இந்த புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தோ்வு முடிவுகள் வெளியீடு: இதற்கிடையே, இளநிலை பொறியியல் படிப்புக்கான கடந்த ஏப்ரல் மாத இறுதி பருவத் தோ்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அவற்றை மாணவா்கள் https://coe1.annauniv.edu/home என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பொறியியல் மாணவா்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு இறுதி பருவத் தோ்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்பட்டதாகவும், 2, 3-ஆம் ஆண்டு மாணவா்களுக்கு தோ்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Tuesday, August 09, 2022
ENGINEERING
August 09, 2022
BE - ஆக.22-க்கு பதிலாக ஆக.25-ல் தொடக்கம்: பொறியியல் கலந்தாய்வு அக்.21 வரை நீட்டிப்பு
BE - ஆக.22-க்கு பதிலாக ஆக.25-ல் தொடக்கம்: பொறியியல் கலந்தாய்வு அக்.21 வரை நீட்டிப்பு
இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆக.22-ம் தேதிக்குப் பதிலாக வரும் ஆக.25-ம் தேதி தொடங்கி அக்.21-ம் தேதி முடிவடையும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பொறியியல் கல்லூரிகளில் தற்போது நடந்துகொண்டிருக்கிற கலந்தாய்வை கொஞ்சம் நீட்டிக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்கும் என்று அறிவித்திருந்தோம். இப்போது ஆக.22-ம் தேதி தொடங்குவதற்குப் பதிலாக, வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 21-ம் தேதி முடிவடையும்.
நீட் தேர்வு எழுதி தேர்வாகின்றவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதால், பொறியியல் கல்லூரிகளில் நிறைய காலியிடங்கள் உருவாகிறது என்பதற்காகத்தான் கலந்தாய்வை ஏற்கெனவே தள்ளிவைத்திருந்தோம். ஆனால், நீட் தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே அந்த நீட் தேர்வு முடிவுகள் வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் சமூகநீதியின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். மாணவர்களும், பெற்றோர்களும் எந்தவிதமான அச்சத்துக்கும் உள்ளாக வேண்டாம். சரியான முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆக.22-ம் தேதிக்குப் பதிலாக வரும் ஆக.25-ம் தேதி தொடங்கி அக்.21-ம் தேதி முடிவடையும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பொறியியல் கல்லூரிகளில் தற்போது நடந்துகொண்டிருக்கிற கலந்தாய்வை கொஞ்சம் நீட்டிக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்கும் என்று அறிவித்திருந்தோம். இப்போது ஆக.22-ம் தேதி தொடங்குவதற்குப் பதிலாக, வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 21-ம் தேதி முடிவடையும்.
நீட் தேர்வு எழுதி தேர்வாகின்றவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதால், பொறியியல் கல்லூரிகளில் நிறைய காலியிடங்கள் உருவாகிறது என்பதற்காகத்தான் கலந்தாய்வை ஏற்கெனவே தள்ளிவைத்திருந்தோம். ஆனால், நீட் தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே அந்த நீட் தேர்வு முடிவுகள் வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் சமூகநீதியின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். மாணவர்களும், பெற்றோர்களும் எந்தவிதமான அச்சத்துக்கும் உள்ளாக வேண்டாம். சரியான முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்" என்று அவர் தெரிவித்தார்.
Saturday, July 23, 2022
மாணவர் சேர்க்கை
July 23, 2022
பிஇ, பிடெக்கில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு
பிஇ, பிடெக்கில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆக.3 வரை நீட்டிப்பு
பி.இ., பிடெக்கில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் விண்ணப்ப தேதி ஆக.3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசமும் நீடிக்கப்பட்டது.
இதற்கு முன்பாக, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பின்பு பி.இ., கலைக் கல்லூரிகளில் சேர கால அவகாசம் 27 ஆக நீடித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், அம்மாணவர்களும், என்ஜினீயரிங், கலை&அறிவியல் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பதை மனதில் வைத்து, தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை என்ஜினீயரிங், கலை&அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படும் என்றும், தேர்வு முடிவு வெளியான நாளிலிருந்து 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இதையும் படிக்க | பெரியார் பல்கலை: வினாத்தாளில் பிழைகளுடன் முன்னாள் முதல்வர் அண்ணா பெயர்!
இந்நிலையில் நேற்று காலை சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் பி.இ., பிடெக்கின் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தின் கால அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
பி.இ., பிடெக்கில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் விண்ணப்ப தேதி ஆக.3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசமும் நீடிக்கப்பட்டது.
இதற்கு முன்பாக, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பின்பு பி.இ., கலைக் கல்லூரிகளில் சேர கால அவகாசம் 27 ஆக நீடித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், அம்மாணவர்களும், என்ஜினீயரிங், கலை&அறிவியல் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பதை மனதில் வைத்து, தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை என்ஜினீயரிங், கலை&அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படும் என்றும், தேர்வு முடிவு வெளியான நாளிலிருந்து 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இதையும் படிக்க | பெரியார் பல்கலை: வினாத்தாளில் பிழைகளுடன் முன்னாள் முதல்வர் அண்ணா பெயர்!
இந்நிலையில் நேற்று காலை சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் பி.இ., பிடெக்கின் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தின் கால அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

