Breaking

Showing posts with label Govt School Students. Show all posts
Showing posts with label Govt School Students. Show all posts

Monday, March 04, 2024

March 04, 2024

தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசுப்பள்ளிகளில் ஆன்லைனிலும் மாணவர் சேர்க்கை: அனைத்து கலெக்டர்களும் களம் இறங்குகின்றனர், பள்ளி கல்வித்துறை தீவிர நடவடிக்கை

Thursday, February 22, 2024

February 22, 2024

பள்ளிகளுக்கே வந்து ஆதார் பதிவு செய்தல் திட்டம் நாளை (23.02.2024) முதல் தொடக்கம்



பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை நாளை கோவையில் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம். பள்ளி மாணவர்களுக்கு தனி ஆதார் முகாம் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம் Separate Aadhaar camp for school students - School Education Secretary letter

தற்போது தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பிரத்தியேக தனித்தனி எண்கள் எமிஸ் வளையதளத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்களின் முழு தகவல்கள் இடம்பெற்றுள்ளன மாணவர் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தது முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் வரை ஒரே எண் பராமரிக்கப்படுகிறது

மாணவர் பற்றிய தகவல் மற்றும் மாணவருக்கு தேவையான அரசு உதவிகள் அரசின் திட்டங்கள் சென்றடைய இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பெரும்பான்மையான மாணவர்களுக்கு ஆதார் எண் குழந்தையில் பிடிக்கப்பட்டுள்ளதால் "பயோ மெட்ரிக்" அதில் இணைக்க இணைக்காமல் உள்ளது எனவே பள்ளி மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் ஆதார் பெற முயற்சி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது பெரும்பான்மையான ஆதார் அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் பள்ளி மாணவிகளுக்கு சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது

இதை கருத்தில் கொண்ட தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடும் ஒன்றை அனுப்பி உள்ளது அதில் பள்ளி மாணவர்களுக்கான பிரத்தியேகமாக ஒரு ஆதார் முகாம் நடத்த பள்ளிக்கல்வி செயலாளர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார் இதில் பள்ளி மாணவர்களுக்கு புதிய ஆதார் அட்டை மற்றும் ஆதார திருத்தங்கள் பயோ மெட்ரிக் மேம்படுத்துதல் போன்றவை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது

Wednesday, January 03, 2024

January 03, 2024

மார்ச் . 2024, பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் வெளியீடு.

மார்ச் . 2024, பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் வெளியீடு. March. 2024 Publication of Roll Number of School Students for Public Examination

மார்ச் . 2024 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் விவரங்களடங்கிய பட்டியலில் மாணவர்களின் பெயர் சேர்த்தல் ( By Transfer ) / நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 03.11.2023 பிற்பகல் முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது .

அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட மார்ச் - 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலினை அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 03.01.2024 அன்று பிற்பகல் முதல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான www.dge.tn.gov.in -க்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Monday, March 27, 2023

March 27, 2023

பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்'வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு : மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்'வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு : மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என மாநகராட்சியின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 - 24ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். சென்னை பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உடன் இணைத்த 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.

Friday, February 03, 2023

February 03, 2023

அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - கல்லால் சக மாணவர்கள் மீது தாக்குதல் - வைரலாகும் வீடியோ

அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - கல்லால் சக மாணவர்கள் மீது தாக்குதல் - வைரலாகும் வீடியோ Govt School Students Clash - Attacking Fellow Students With Stones - Video Goes Viral

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே நடந்த மோதலின்போது, சக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில், ப்ளஸ் டூ மாணவர் கல்லால் தாக்க முயற்சித்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

புதுப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்வி பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியில், பிளஸ் டூ மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீண்டும் மோதல் ஏற்பட்டதால், பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

அப்போது, பிளஸ் டூ மாணவர் ஒருவர், கல்லை எடுத்துக் கொண்டு சக மாணவர்களை தாக்க முற்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த மோதல் சம்பந்தமாக புதுப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

CLICK HERE TO WATCH VIDEO

Total Pageviews

Search This Blog