Breaking

Showing posts with label TC. Show all posts
Showing posts with label TC. Show all posts

Wednesday, March 15, 2023

March 15, 2023

EMIS இணையத்தில் Manual TC வழங்குவதற்கு புதிய வசதி

EMIS இணையத்தில் Manual TC வழங்குவதற்கு புதிய வசதி!!!

EMIS Portal ல் பெயர் இல்லாத பழைய மாணவர்களுக்கு EMIS Portal மூலமாக புகைப்படத்துடன் கூடிய Manual TC வழங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது!

பழைய மாணவர்களுக்கு EMIS Portal மூலமாக புகைப்படத்துடன் கூடிய Manual TC வசதி அறிமுகம்

EMIS Portal ல் பெயர் இல்லாத பழைய மாணவர்களுக்கு EMIS Portal மூலமாக புகைப்படத்துடன் கூடிய Manual TC வழங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

Sunday, August 14, 2022

August 14, 2022

பள்ளி TC-யில் தமிழுக்கு பதில் அசாமி

பள்ளி டிசியில் தமிழுக்கு பதில் அசாமி - கல்லூரி கவுன்சிலிங்கில் மாணவர்களுக்கு சிக்கல்

மேலுார்:மேலுார் பகுதி அரசு மேல்நிலைப்பள்ளி மாற்றுச் சான்றிதழில், முதல் மொழி என்ற இடத்தில், 'அசாமி' என குறிப்பிடப்பட்டுள்ளதால், கல்லுாரி கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்கள் சிக்கலை சந்தித்தனர்.

மதுரை மாவட்டம், மேலுார் அரசு கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதில், மேலுார் பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் சமர்ப்பித்த மாற்றுச் சான்றிதழில், முதல்மொழி என்ற இடத்தில் தமிழ் என்பதற்கு பதிலாக அசாமி என தவறாக பதிவாகி இருந்தது. இதனால் மாணவர்கள் கலந்தாய்வில் சிக்கலை சந்தித்தனர். பின்னாளில் உதவித் தொகை பெறுவதிலும் சிரமம் இருக்கும் என ஆசிரியர்கள் கூறினர்.

உதவித்தொகை

மாணவர்கள் கூறியதாவது:அரசு பள்ளியில் ஆறு முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு, மூவலுார் ராமாமிர்தம் திட்டத்தில் கல்வி உதவித் தொகை மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. எங்களுடைய மதிப்பெண் பட்டியலில் முதல் மொழி தமிழ் என்றும், மாற்றுச் சான்றிதழில் முதல் மொழி அசாமி எனவும் பதிவாகியுள்ளதால், உதவித்தொகை கிடைக்க வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைமை ஆசிரியர் கூறியதாவது:மாற்றுச் சான்றிதழில் முதல் மொழி அசாமி என பதிவானது தவறு தான். கணினியில் பதிவு செய்யும் போது, முதல் மொழி தமிழ் என காட்டுகிறது. ஆனால், மாற்றுச் சான்றிதழில் 'பிரின்ட்' செய்யும் போது, தொழில் நுட்ப பிழையால் அசாமி என மாறி விடுகிறது.

தவறான பதிவு

மாணவர்களின் உதவித் தொகைக்கு வழங்கப்படும் உண்மைத்தன்மை சான்றிதழ் மற்றும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு வாயிலாக, தவறான பதிவுகள் சரி செய்யப்படும். இதனால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, June 23, 2022

June 23, 2022

மாணவர்களுக்கு தேர்ச்சி (Promotion) வழங்குவதற்கான படிநிலைகள் - நடுநிலைப் பள்ளிகள்

மாணவர்களுக்கு தேர்ச்சி *(Promotion)* வழங்குவதற்கான படிநிலைகள்

🌻 _*நடுநிலைப் பள்ளிகள்*_

🌷 *STEP 1*

i.) 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 8-ஆம் வகுப்பில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்து COMMON POOL அனுப்பிய பிறகு,

ii ) முந்தைய வகுப்பில் உள்ள Section எண்ணிக்கையும் Promote செய்யப்படவுள்ள Section எண்ணிக்கையும் சரிபார்த்த பிறகு

🌷 *STEP 2*

7-ஆம் வகுப்பு மாணவர்களை 8-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 3*

6-ஆம் வகுப்பு மாணவர்களை 7-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 4*

5-ஆம் வகுப்பு மாணவர்களை 6-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 5*

4-ஆம் வகுப்பு மாணவர்களை 5-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 6*

3-ஆம் வகுப்பு மாணவர்களை 4-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 7*

2-ஆம் வகுப்பு மாணவர்களை 3-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 8*

1-ஆம் வகுப்பு மாணவர்களை 2-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌸 மேற்கண்ட வரிசைப்படியே *Promotion* மேற்கொள்ள வேண்டும்.

Tuesday, June 14, 2022

June 14, 2022

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

டி.சி., இல்லாவிட்டாலும் 'அட்மிஷன்'; அரசு பள்ளிகளுக்கு அறிவுரை

Headmasters have been advised to enroll students in government schools, even if they do not have the DC of Alternative Certificate. Have volunteered.

There has been a delay for parents in enrolling students in other schools due to problems in obtaining alternative certificates in some private schools. In this connection, instructions have been issued to the Headmasters of Government Schools on behalf of the Primary Education Officers. Accordingly, students wishing to enroll in government schools should apply immediately and be admitted to the schools.

Even if you do not bring alternative certificates from other schools, you will have to give the student admission first. Said. மாற்று சான்றிதழ் என்ற டி.சி., இல்லாவிட்டாலும், மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்து கொள்ள வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் துவங்கி உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளோர், தங்கள் குழந்தைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சேர்க்க முன்வந்துள்ளனர்.

சில தனியார் பள்ளிகளில் மாற்று சான்றிதழ்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதால், வேறு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதில், பெற்றோருக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களை, உடனடியாக விண்ணப்பம் வழங்கி, பள்ளிகளில் சேர்த்து கொள்ள வேண்டும்.

வேறு பள்ளிகளில் இருந்து மாற்று சான்றிதழ்கள் கொண்டு வராவிட்டாலும், முதலில் மாணவர் சேர்க்கை வழங்கி விட வேண்டும்.அதன்பின், தாங்கள் முன் படித்த பள்ளிகளில் இருந்து, மாற்று சான்றிதழ் வாங்கி வர, கால அவகாசம் வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாற்று சான்றிதழ்கள் வழங்குவதில், தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கும், சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Thursday, May 26, 2022

May 26, 2022

பள்ளி சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் வசதி - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கம்

பள்ளி சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் வசதி - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
2022-23-ம் கல்வியாண்டுக்கான வருடாந்திர நாட்காட்டி வெளியீடு, ஆன்லைன் சேவைகள் தொடக்க நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று தொடங்கி வைத்தார். உடன் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார், தொடக்கக்கல்வி இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்டோர்.

தமிழ்வழிச் சான்று உள்ளிட்ட 25 வகையான பள்ளி ஆவணங்களை ஆன்லைனில் பெறுவதற்கான வசதியை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.

தமிழக பள்ளிக்கல்வியில், வரும் கல்வியாண்டுக்கான (2022-23) நாட்காட்டி வெளியீடு மற்றும் ஆன்லைன் சேவைகள் தொடக்க விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:

தமிழ்வழியில் படித்தமைக்கான சான்று, கல்வி இணைச் சான்று உள்ளிட்ட 25 வகையான சான்றிதழ்களை, இ-சேவை மையங்கள் வாயிலாக ஆன்லைனில் பெறுவதற்கான வசதி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

பதிவேடுகள் மின்மயமாக்கல்

அதேபோல், ஆசிரியர்களின் நிர்வாகப் பணியைக் குறைக்க 100-க்கும் மேற்பட்ட பதிவேடுகளை மின்னணுமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முதல்கட்டமாக 30 பதிவேடுகள் மின்மயமாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதேபோல் வரும் கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுப்பு விவரங்கள் அடங்கிய நாட்காட்டி, ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான அட்டவணை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஆசிரியர்கள், மாணவர்கள், திட்டமிட்டு தங்கள் பணிகளை மேற்கொள்ள வழி செய்யும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார், தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து அமைச்சர் கூறியதாவது:

பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் மாணவர்களுக்கான புத்தகம், சீருடை உள்ளிட்ட இலவசக் கல்வி உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படும். அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட இருமடங்கு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஆராய்ந்து தேர்வெழுதாத மாணவர்களைச் சந்தித்து அவர்களை உத்வேகப்படுத்தி, துணைத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் கல்வியாண்டில் நீட் தேர்வு பயிற்சிக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உட்பட 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகளிலேயே உள்ள ஹைடெக் ஆய்வகம் மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. காலை சிற்றுண்டி திட்டம்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்துக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. பள்ளிகளில் காலை 8.30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார்.

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, பணி நிரந்தரம், தொழிற்கல்வி, உடற்கல்வி ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அரசின் நிதிநிலை சீரான பின்னர் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Friday, May 20, 2022

May 20, 2022

EMIS Students TC Generation and Students promotion reg.

Kind Attention :

EMIS Students TC Generation and Students promotion reg.

மாநில EMIS மையத்தில் இருந்து முறையான வழிகாட்டுதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு வரும் வரை youtube வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டாம். தகவல் தெரிவிக்கப்படும்.

- State EMIS Team

Total Pageviews

Search This Blog