Breaking

Showing posts with label அரசு பள்ளி. Show all posts
Showing posts with label அரசு பள்ளி. Show all posts

Friday, August 05, 2022

August 05, 2022

செயற்கை கோளுக்கு மென்பொருள் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) சார்பில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. வான்வெளி அறிவியலில் பெண்களின் பங்கேற்பை கவுரவிக்கும் வகையில் முற்றிலும் மாணவிகள் மட்டுமே செயற்கைக்கோள் மென்பொருட்கள் தயாரிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டனர். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் 75 பள்ளிகளை சேர்ந்த, 750 மாணவிகள் தேர்வாகியுள்ளனர். இதில் மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவிகள் பவதாரணி, ஏஞ்சல், கவுரி, ஹரி வைஷ்ணவி, ஜெய்ரின் இருதயா, யசோதாதேவி, பத்மினி, அத்சாராணி, சுவேதா, பிருந்தா ஆகிய 10 பேர் தேர்வாகினர். இஸ்ரோ சார்பில் செயற்கைக்கோளின் ஒரு பாகம் தயாரிக்க ‘சிப்’ அனுப்பி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கினர். 5 மாதத்தில் இந்த பணியை மாணவிகள் சிறப்பாக செய்து முடித்தனர். அவர்கள் தயார் செய்த மென்பொருள் இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வரும் 7ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் செயற்கைக்கோள் விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதில் பங்கேற்க மாணவிகள் 10 பேரும் இன்று சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்கின்றனர். தகவல் அறிந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, நேற்று இப்பள்ளிக்கு நேரில் சென்று சாதனை மாணவிகளுக்கு சால்வை அணிவித்து திருக்குறள், ராஜராஜசோழன் வரலாறு உள்ளிட்ட புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

Thursday, August 04, 2022

August 04, 2022

அரசு பள்ளிக்குள் திடீரென நுழைந்த அமைச்சர் அன்பில் மகேஷ்..! ஆடிப்போன ஆசிரியர்கள்..! நடந்தது என்ன..?

அரசு பள்ளிக்குள் திடீரென நுழைந்த அமைச்சர் அன்பில் மகேஷ்..! ஆடிப்போன ஆசிரியர்கள்..! நடந்தது என்ன..?

திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டு சாதனை புரிந்தார்கள்.

இதனை அறிந்த மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அப்பள்ளிக்கு சென்று மாணவிகளை ஆச்சர்யபட வைத்தார். மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்து புத்தகங்களை பரிசளித்தார். இஸ்ரோவின் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' சார்பில் இப்பள்ளியின் 10 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 'ஆர்டினோ ஐ.இ.டி சாஃப்ட்வேர்' தொழில்நுட்பத்துடன் 'வான்வெளி உயரம், தட்பவெப்பம், ஈரப்பதம்' ஆகியவற்றை உள்ளடக்கிய புரோகிராமை இப்பள்ளி மாணவிகள் வெற்றிகரமாக செய்துமுடித்தார்கள். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வேறொரு நிகழ்ச்சிக்காக மதுரை சென்றிருந்த நிலையில், இச்செய்தியினை அறிந்து அப்பள்ளிக்கு திடீரென சென்றார்.

அம்மாணவிகளையும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் சந்தித்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். 10 மாணவிகளும் ஆகஸ்ட் மாதம் 7'ம் தேதி ஸ்ரீகரிகோட்டா இஸ்ரோ மையத்திற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்க இருக்கிறார்கள். மேலும் பள்ளியை பார்வையிட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், கற்றல் முறையினையும் ஆய்வுசெய்து பள்ளிக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு காத்திருப்பதாக உறுதியளித்தார்.

Monday, August 01, 2022

August 01, 2022

மோசமான நிலையில் பள்ளிக் கட்டிடம்: நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி?

படவட்டம்மன் கோவில் தெருவில் மோசமான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் சேதமடைந்த கட்டிடங்கள் விழுந்து விபத்துகள் உள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. இதில், ஒரு சில விபத்துகளில் மரணங்களும் பதிவாகிறது. குறிப்பாக பள்ளிக் கட்டிடங்கள் விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த டிசம்பர் மாதம் நெல்லையில் தனியார் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிக் கட்டிடங்ககளையும் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், தொடர்ந்தும் மோசமான பள்ளிக் கட்டிடங்கள் இருந்து கொண்டுதான் உள்ளது. அதற்கு எடுத்துகாட்டுதான் சென்னை மாநகராட்சியின் படவட்டம்மன் கோவில் தெரு பள்ளிக் கட்டிடம். சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை உயர் நிலைப்பள்ளி ஒன்று கொருக்குப்பேட்டை படவட்டம்மன் கோவில் தெருவில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒரு கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது. ஜன்னலில் கதவு ஒன்று பாதி சேதமடைந்து கிழே விழும் நிலையில் உள்ளது.

மேலும், அந்த 2 ஜன்னல்களை சுற்றியுள்ள பகுதி பகுதிகளில் மிகவும் சேதம் அடைந்துள்ளது. எனவே, இந்தப் பள்ளி கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி கல்வி துறை துணை ஆணையர் சினேகாவிடம் கேட்டபோது, சீரமைக்க நடவடிக்க எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
August 01, 2022

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன்: விஜயகாந்த் அறிக்கை

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேமுதி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆமித்து 95 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டிருப்பதை பாராட்டுகிறேன்.
இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் மதிய உணவு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது போன்று காலை சிற்றுண்டி திட்டத்தையும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். காலை சிற்றுண்டி திட்டம் மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Sunday, July 31, 2022

July 31, 2022

இழுத்து பூட்டப்பட்ட பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடம்: சீரமைக்க மக்கள் கோரிக்கை

பந்தலூர் அருகே பழுதடைந்ததால் இழுத்து பூட்டப்பட்ட முதரகொள்ளி அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட முதரக்கொள்ளி பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கட்டிடங்கள் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதால் பழுதடைந்து பரிதாபமாக காட்சியளிக்கிறது. இதனால், மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகி மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு சிரமப்படுகின்றனர். அதனால் கடந்த பல மாதங்களாக பள்ளி கட்டிடம் பயன்படுத்தமுடியாமல் பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுதும் இதுபோல உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து தரமில்லாமல் இருந்தால் அதனை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டவேண்டும் என்னும் பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.மேலும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது தொடர்மழை பெய்து பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் முதரப்பள்ளியில் உள்ள பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலை உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் நிலை இருப்பதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை மாணவர்கள் நலன் கருதி, உடனடியாக கல்வித்துறை அதிகாரிகள் சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Friday, July 29, 2022

July 29, 2022

அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் - ஆசிரியர் கைது - பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் கைது

உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு


கோவை குனியாமுத்தூர் சுகுணாபுரத்திலுள்ள அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 5 மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
July 29, 2022

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது : பள்ளிக்கல்வித்துறை

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது : பள்ளிக்கல்வித்துறை

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது என்றும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பள்ளி நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் மாணவர்களை வகுப்புகளுக்கு வரச்சொல்லக்கூடாது என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மணப்பாக்கத்தில் பிரீமியம் 2 & 3 படுக்கையறை குடியிருப்புகள் @ 83 லட்சம்* முதல் தமிழகத்தில் 2022- 23ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடப்படும் என பள்ளி கல்வி துறை ஏற்கனவே அறிவித்தது. கடந்த ஜூன் மாதம் நடப்பு கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டது.

நடப்பு கல்வியாண்டில் இருந்து கொரோனா கால அட்டவணை போல் இல்லாமல் வழக்கம் போல பள்ளிகள் செயல்பட தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்த நிலையில், சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்றும் தெரிவித்தது. பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது. பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் ஒரு குழந்தை சரியாகப் படிக்கவில்லை எனில், கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மேலும் அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சிறப்பு கல்வியாளரிடம் குழந்தையை அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால், அதற்கு பெற்றோரே பொறுப்பேற்று, மாற்றித் தர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் தவறு செய்யும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டுமெனவும் தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருந்தால், அருகே உள்ள வேறு பள்ளிக்கு மாற்றவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளியில்‌ மாணவர்கள்‌ சண்டையிட்டுக்‌ கொள்ளுதல்‌, சாலை விபத்து, உள்ளிட்ட பிற அசம்பாவித சம்பவம்‌ எதுவென்றாலும்‌ உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்‌.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின்‌ அனுமதியின்‌ பேரில் தான்‌ ஊடகங்களுக்கு செய்தி தர வேண்டும்‌. பேருந்தில்‌ வரும்‌ மாணவர்கள்‌ பேருந்தின்‌ மேற்கூரையில்‌ அமர்ந்து கொண்டு வருவதை தவிர்க்க காலை இறை வணக்ககூட்டத்தில்‌ தக்க அறிவுரை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 26, 2022

July 26, 2022

"வேலை செய்ய கூடாது" - ஊழியரை பள்ளிக்குள் வைத்து பூட்டிய தலைமை ஆசிரியை - அரவக்குறிச்சியில் பரபரப்பு



வேலை செய்ய கூடாது" - அரசு ஊழியரை பள்ளிக்குள் வைத்து பூட்டிய தலைமை ஆசிரியை - அரவக்குறிச்சியில் பரபரப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி இளநிலை உதவியாளரை பள்ளி அலுவலகத்தில் வைத்து பூட்டி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றிவரும் செல்வ கதிரவன் என்பவர் மாலை 4.15 க்கு மேல் வேலை செய்து வந்துள்ளார். அப்போது தலைமை ஆசிரியை உமா 4.15 மணிக்கு மேல் வேலை செய்யக் கூடாது என கூறியுள்ளார். இதற்கு கதிரவன் மறுப்பு தெரிவித்ததால் தலைமை ஆசிரியை உமா, இளநிலை உதவியாளர் கதிரவனை பள்ளி அலுவலகத்தில் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து கதிரவன் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களுக்கு போன் செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் தலைமை ஆசிரியரிடம் பேசி வரவழைத்து பள்ளி கதவை திறந்து விட்டுள்ளனர்.
July 26, 2022

அரசு பள்ளி மாணவிகளுக்கு விமானத்தில் செல்ல வாய்ப்பு

சென்னையில் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விமானத்தில் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியாவில் தமிழகத்தில் முதல் முறையாக 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதுகுறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செஸ் ஒலிம்பியாட்போட்டி தொடர்பாக போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக வட்டார மற்றும் மாவட்ட அளவில் செஸ்போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களை அரசின் செலவில் விமானத்தில் சென்று செஸ் போட்டியினை பார்வையிட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. kaninikkalvi.blogspot.com மாவட்ட அளவில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஜூலை 25ஆம் தேதி நடைபெற்ற 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான செஸ் போட்டியில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவேதா முதலிடமும்,சுபலட்சுமி இராண்டாமிடமும்,17 வயதிற்குட்பட்டவர்களுக்கான செஸ் போட்டியில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷர்மிளா மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவிகள் 3 பேரும் தமிழக அரசின் சார்பில் தூத்துக்குடியில் இருந்து சென்னை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியினை காண அழைத்துச் செல்லப்படுகின்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியை ஜெயலதா பாராட்டி பரிசுகள் வழங்கினார்.பள்ளி உடற்கல்வி இயக்குனர் காளிராஜ்,உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஸ்வரி. லட்சுமி,அந்தோணியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Tuesday, July 19, 2022

July 19, 2022

அரசு பள்ளியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்: மாவட்ட கல்வி அலுவலர் புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மதிப்பெண் சான்றிதழில் திருத்தி, மாற்றம் செய்து பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் மீது கடம்பத்தூர் காவல் நிலையத்தில் மாவட்ட கல்வி அலுவலர் புகார் செய்தார்.

திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், மடத்துக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜி.ரவிச்சந்திரன்(58). இவர் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியராக பணிபுரிந்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்திற்கு புகார் வந்தது.



அதன் பேரில் அந்த ஆசிரியரின் பட்டய கல்வி சான்றிதழ்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது, ஆசிரியர் பட்டய மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்களை மாற்றம் செய்து பணியில் சேர்ந்துள்ளது தெரியவந்தது.



இதையும் படிக்க | மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குடும்ப அட்டை, வருமான சான்றிதழ் உள்ளிட்ட எந்தவித ஆவணமுமின்றி முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையலாம் - தமிழக அரசு அறிவிப்பு

இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அரசை ஏமாற்றி தனது சுயதேவைக்காக தவறான செயலில் ஈடுபட்ட இடை நிலை ஆசிரியர் ஜி.ரவிச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



இந்த நிலையில் போலி சான்றிதழ் கொடுத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியரால் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Friday, July 15, 2022

July 15, 2022

தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடுதல் - சுவரொட்டிகளை பள்ளிகளில் காட்சிப்படுத்த அரசு உத்தரவு

Monday, July 11, 2022

July 11, 2022

அரசு பள்ளிகளில் மாணவர் தேர்தல் இலாகாக்கள் ஒதுக்கி கண்காணிப்பு

சரியான தலைவரை தேர்ந்தெடுக்கும் அறிவை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் பல்வேறு அரசு பள்ளிகளில், 'மாணவர் தேர்தல்' நடத்தப்பட்டு வருகிறது.சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் சோமள்ளி கிராமத்தில் ஸ்ரீகங்காதரேஸ்வரா அரசு முதன்மை தொடக்க பள்ளி உள்ளது. இங்கு மாணவர் பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் போட்டியிட விரும்புவோர், 10 ரூபாய் கட்டணம் செலுத்தி போட்டியிடலாம் என்று கூறப்பட்டது.தற்போது நடக்கும் கிராம பஞ்சாயத்து தேர்தல் போன்றே, ஓட்டு சீட்டு நடைமுறை, விரலில் மை போன்றவை கடைப்பிடிக்கப்பட்டன. தேர்தலில் போட்டியிட்ட மாணவர்கள், பிரசாரமும் செய்தனர். தேர்தல் நாளன்று, பள்ளி மாணவர்கள் சிலர், போலீஸ் சீருடை அணிந்து, கண்காணித்து வந்தனர். வாக்காளர்களான மாணவர்கள், தங்கள் ஆதார் அடையாள அட்டை காண்பித்து ஓட்டு போட்டனர். தேர்தல் அதிகாரி மது கூறியதாவது:அதிக ஓட்டு பெற்ற மாணவர், பள்ளி முதல்வராக அறிவிக்கப்படுவார். மேலும் சில மாணவர்கள், அமைச்சர்களாக நியமிக்கப்படுவர். பிரார்த்தனை துறை அமைச்சர், பள்ளியில் பிரார்த்தனை செய்வதையும்; உணவுத்துறை அமைச்சர், சத்துணவு வழங்கலை கண்காணிப்பது; சுகாதார துறை அமைச்சர், பள்ளியை சுத்தமாக வைத்து கொள்வது, மாணவர்களின் உடல் நலனை கண்காணிப்பது.உள்துறை அமைச்சர்,

தினமும் பள்ளி முடிந்து அனைவரும் சென்ற பின், பள்ளி அறைகளை பூட்டுவது; சுற்றுலாவுக்கு நிதி சேர்ப்பது, பூஜைகளுக்கு நிதி செலவிடுவது; நிதித்துறை அமைச்சர், பள்ளி கட்டணம் வசூல் விபரம்; கல்வி துறை அமைச்சர், மாணவர்களின் குரூப் படிப்பு; நீர்ப்பாசன துறை அமைச்சர்,குடிநீர், கழிப்பறை சுத்தம் செய்வதை கண்காணிப்பார்.இதுபோன்று மாணவர்களிடையே தேர்தல் நடத்துவதால், எதிர்காலத்தில் தங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பதில் திறமையை வளர்த்து கொள்வதில் ஆர்வம் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுபோன்று, மாவட்டத்தின் பல பள்ளிகளில் மாணவர் தேர்தல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Total Pageviews

Search This Blog