Breaking

Showing posts with label Exclusive interview. Show all posts
Showing posts with label Exclusive interview. Show all posts

Saturday, January 21, 2023

January 21, 2023

அஞ்சல் துறையில் நேரடி முகவர் வேலை; நாளை மறுநாள் நேர்காணல் Direct agent work in postal industry; Interview the day after tomorrow

அஞ்சல் துறையில் நேரடி முகவர் வேலை; நாளை மறுநாள் நேர்காணல் Direct agent work in postal industry; Interview the day after tomorrow

சென்னை அஞ்சல் அலுவலகத்தின் நாளை மறுநாள் வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் நடைபெறுகிறது.

இந்திய அஞ்சல் துறையில் (India Post Office) காப்பீட்டு விற்பனை பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு சென்னையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் வரும் திங்கள்கிழமை (ஜனவரி,23, 2023) நேர்காணல் நடைபெற உள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய கோட்டம் அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை செய்யும் நேரடி முகவர்களை (Direct Agents for sale of Postal Life Insurance / Rural Postal Life Insurance products) தேர்ந்தெடுக்க நாளை மறுநாள் (ஜனவரி 23ம் தேதி)

நேர்காணல் நடைபெற இருக்கிறது. வேலை தேடுபவர்கள், காப்பீட்டு முகவர்களாக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம்.

பணி விவரம்:

ஆயுள் காப்பீட்டு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை செய்யும் நேரடி முகவர்கள் கல்வி மற்றும் பிற தகுதிகள்:

இதில் பங்கேற்க குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.

ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் இருப்பவர்களுக்கு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும்.

கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தாங்கள் வசிக்கும் சொந்த பகுதி பற்றி நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் வசிப்பவராக இருப்பது அவசியம்.

இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுய தொழில் செய்பவர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

ஊதிய விவரம்:

இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் தங்களின் பணித்திறன் (பாலிசியின் பிரீமியம் அடிப்படையில்) ஊக்கத்தொகை அல்லது கமிஷன் மட்டுமே வழங்கப்படும்.

வயது வரம்பு:

இதில் பங்கேற குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும். 50 வயது மேற்பட்டவராக இருக்கக் கூடாது. குறிப்பு: நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்: மூன்று புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்று ஆகிவைகள்.. இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய் தேசிய சேமிப்பு பத்திரம்(NSC) அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை (KVP) பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் நடைபெறும் நாள் : ஜனவர்-,23,2023 / காலை 10 மணி முதல் நேர்காணல் நடைபெறும் இடம்: எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகம்.

Saturday, January 07, 2023

January 07, 2023

108 ஆம்புலன்சில் வேலை - நேர்முகத் தேர்வு நாளை (ஜன.,8ல்) நடக்கிறது.

108 ஆம்புலன்சில் வேலை காத்திருக்கு

திருமங்கலம்- -மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் '108' ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான நேர்முகத் தேர்வு ஜன.,8ல் நடக்கிறது.

மருத்துவ உதவியாளருக்கு 19 - 30 வயதுள்ள பி.எஸ்.சி., நர்சிங்., ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., (12ம் வகுப்பிற்கு பின் 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) பி.எஸ்.சி., விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, முடித்தவர்கள் பங்கேற்கலாம்.

டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இலகுரக டிரைவிங் லைசன்ஸ் மற்றும் பேஜ் வாகன உரிமம் இருக்க வேண்டும்.

நேர்முக தேர்வின் போது அசல் சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு தலைமை அலுவலகத்தை 044 - 2888 8060,75,77ல் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர் கேசவ பிரபு தெரிவித்தார்

Friday, December 30, 2022

December 30, 2022

கௌரவ விரிவுரையாளர் பணிக்கு ஜன. 3ம் தேதி நேர்முக தேர்வு- அமைச்சர் பொன்முடி

கௌரவ விரிவுரையாளர் பணிக்கு ஜன. 3ம் தேதி நேர்முக தேர்வு- அமைச்சர் பொன்முடி Jan. for the post of Honorary Lecturer. Interview on 3rd - Minister Ponmudi அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணிபுரிய மாநில அளவில் நேர்முகத் தேர்வு ஜனவரி 3ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் கலை கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்ற 1,895 பேர் பணிக்கு எடுக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்து. கடந்த காலங்களில் கௌரவ விரிவுரையாளர்களை பணியில் அமர்த்தும் போது அந்தந்த கல்லூரி முதல்வர்களே அவர்களை பணியில் நியமனம் செய்தனர். இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதன் காரணமாக நேர்முகத் தேர்வின் வாயிலாக கௌரவ விரிவுரையாளர்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்ற 9,915 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களுக்கு வருகின்ற 3ம் தேதி சென்னையில் அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக கூறினார். 4ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தமிழக முழுவதும் உள்ள 8 பல்கலைக்கழகங்களில் பாடவாரியாக நேர்முகத் தேர்வானது நடைபெற உள்ளது. நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களின் தரத்தின் அடிப்படையில் அவர்களுக்கான பணி வழங்கப்படும். PhD, Net, Slet ஆகிய தகுதிகளின் அடிப்படையில் அவர்களுக்கான பணி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நேர்முக தேர்வில் சமூக ரீதியிலான இட ஒதுக்கீடு வழங்கப்படும். கலப்பு திருமணம் செய்வதற்கு இட ஒதுக்கீடு கிடையாது எனவும், விரிவுரையாளர்கள் பணிகளில் வட மாநிலத்தவருக்கு வாய்ப்பு கிடையாது எனவும் தெரிவித்தார்.

மேலும் கௌரவ விரிவுரையாளர்கள் 11 மாத அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கான ஊதியம் 20,000 ரூபாய் வரை வழங்கப்படும். தற்போது கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் 11 மாத காலம் பணியாற்றிய பின் அவர்களும் நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தப்படுவார்கள். அப்போது தகுதி இல்லாத கௌரவ விரிவுரையாளர்கள் பணியை விட்டு சென்று விடுவார்கள் எனவும் தெரிவித்தார் கெளரவ விரிவுரையாளர் பணிக்கு ஜன;4 -12 வரை நேர்முகத் தேர்வு - அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கொளரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 4-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், வரும் 3-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னையில் அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

Friday, September 30, 2022

September 30, 2022

எண்ணும் எழுத்தும் திட்டத்தினால் கல்வி தரம் உயராது - ஆசிரியர் கூட்டணி மூத்த நிர்வாகி அளித்த சிறப்பு பேட்டி - Literacy program does not raise educational standards

எண்ணும் எழுத்தும் திட்டத்தினால் கல்வி தரம் உயராது - ஆசிரியர் கூட்டணி மூத்த நிர்வாகி அளித்த சிறப்பு பேட்டி - Literacy program does not raise educational standards - Exclusive interview with Senior Executive of Teachers Alliance

எண்ணும் எழுத்தும் திட்டத்தினால் மாணவர்களின் கல்வியின் தரம் உயராது என்று தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த நிர்வாகி அண்ணாமலை ஈடிவி பாரத்திற்கு போட்டியளித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மிகவும் குறைவாக மதிப்பெண்களை பெறுகின்றனர் என்பதால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நடத்தும் பாடம் புரிகிறதா என்பதை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த நிர்வாகி அண்ணாமலை ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு பின்னர் பள்ளிகள் திறந்த மூன்றாவது நாள் முதல் மாணவர்களின் கற்றல் அறிவு திறனை பள்ளி கல்வித்துறை செயலாளர் உள்ளீட்டு அதிகாரிகள் ஆய்வு செய்துவந்தனர்.கரோனா தொற்றுக்கு பின் மூன்றாம் வகுப்பில் சேரும் மாணவர் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பிற்குரிய எந்தவித பாடத்தையும் படிக்காமல் நேரடியாக சேருகிறார்.

அதேபோல மூன்றாம் வகுப்பு படித்த மாணவர் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பில் பாடங்களை படிக்காமலேயே ஆறாம் வகுப்பில் நேரடியாக சேருகிறார். இதுபோன்ற மாணவர்களிடையே ஆய்வு செய்து அவர்கள் சரியாகப் படிக்கவில்லை என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் கூறுகிறார்.

பள்ளியில் காலை வகுப்பிற்கு சென்றவுடன் மாணவர்களின் விபரங்களை பதிவு செய்யவே ஆசிரியர்களுக்கு நேரம் சரியாக உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு புள்ளி விபரம் தகவல்களை கேட்கின்றனர். இதனால் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதுபோன்று புள்ளி விபரங்களை தயாரித்து அளிக்கும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து, கற்பிக்கும் பணியில் தொடர்ந்து கவனம் செலுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் பள்ளிக்கல்வித்துறையால் தயாரித்து ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்திலிருந்து பாடங்களை நடத்தாமல் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தில் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் யூகேஜி மாணவருக்கு கற்பிக்கும் பாடம் கற்பிக்கப்படுகிறது.

இதனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்கும் திறன் பெரிதும் பாதிக்கும். மேலும் தற்காலத்தில் குழந்தைகளிடம் செல்போனை கொடுத்தாலே அவர்கள் தங்களுக்கு தேவையான விபரங்களை தேடுகின்றனர். அதுபோன்ற குழந்தைகளுக்கு மிகவும் குறைந்த அளவில் படம் காட்டி ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். இந்த செயல்முறையினால் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை எதிர்காலத்தில் மிகவும் பின்னோக்கி செல்லும்.வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமனம் செய்து பள்ளிகளில் புள்ளி விபரம் தகவல் அளிக்கும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவித்தால் ஆறு மாதத்தில் தமிழ்நாட்டில் பின்தங்கியுள்ளது என்ற கல்விமுறையை மீண்டும் பழைய நிலைக்கு ஆசிரியர்கள் கொண்டு வருவார்கள் என தெரிவித்தார்.

Total Pageviews

Search This Blog