Breaking

Showing posts with label Army Requirements. Show all posts
Showing posts with label Army Requirements. Show all posts

Wednesday, February 15, 2023

February 15, 2023

பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? - இந்திய ராணுவத்தில் வேலை - கடைசி தேதி - மார்ச்,01,2023

பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? - இந்திய ராணுவத்தில் வேலை - கடைசி தேதி - மார்ச்,01,2023 10th pass? - Indian Army Jobs - Last Date - March,01,2023

பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? - இந்திய ராணுவத்தில் வேலை காத்திருக்கு

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள MTS, Cook, Washerman, Barber, Masalchi பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம் - இந்திய ராணுவம்

பதவி - MTS, Cook, Washerman, Barber, Masalchi

காலியிடங்கள் - 135

கல்வித்தகுதி - பத்தாம் வகுப்பு

சம்பளம் - ரூ.18,000 முதல் ரூ.63,200 வரை

வயது வரம்பு - 18-25

பணியிடம் - இந்தியா முழுவதும்

தேர்வு முறை - Written Test/ Trade Test/ Interview

விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

முகவரி - To The Group Commander,

HQ 22 Movement Control Group, Pin-900328, C/O, 99 APO

இணையதள முகவரி - www.joinindianarmy.nic.in

கடைசி தேதி - மார்ச்,01,2023

Wednesday, November 16, 2022

November 16, 2022

அக்னிபாத் ஆட்சேர்ப்பு முகாம் - 29ம் தேதி வரை நடக்கிறது

வரும் 29ம் தேதி வரை நடக்கிறது அக்னிபாத் ஆட்சேர்ப்பு முகாமில் திரண்ட 9 மாவட்ட இளைஞர்கள்: சான்றிதழ் இல்லாதவர்கள் ஏமாற்றம்

வேலூர்: காட்பாடியில் உள்ள வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. இதில் 9 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். உரிய சான்றிதழ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று முதல் வரும் 29ம் தேதி வரை ராணுவத்திற்கு அக்னிபாத் ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் அக்னிவீர்(ஆண்), அக்னிவீர்(பெண் ராணுவ காவல் பணி), சிப்பாய் தொழில்நுட்பம் உதவி செவிலியர், உதவி செவிலியர்(கால்நடை) மற்றும் ஜேசிஓ(மத போதகர்) போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேரடி ஆட்சேர்ப்பின் போது www.joinindianarmy.nic.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு அனைத்து ஆவணங்களையும் உரிய படிவத்தில் நேரில் கொண்டு வர வேண்டும்.

மேலும் எவ்விதமான தனி நபரையோ அல்லது முகவர்களையோ நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை நடந்த ஆட்சேர்ப்பு முகாமில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்பட 9 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்றுமுன்தினம் முதலே ஆட்சேர்ப்பு நடைபெறும் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே திரண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணி முதல் ஆட்சேர்ப்பு பணி தொடங்கியது. முதலில் உயரம் அளவீடு செய்யப்பட்டது. பின்னர் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து ஓட்ட பரிசோதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இளைஞர்கள் பலரும் போதிய சான்றிதழ் இல்லாமல் முதற்கட்ட தேர்வில் இருந்து வெளியேற்றப்பட்டனர்

Tuesday, November 01, 2022

November 01, 2022

அக்னிபத் ராணுவ வீரர்கள்: நவ. 15 முதல் ஆள்சேர்ப்பு முகாம்

அக்னிபத் ராணுவ வீரர்கள்: நவ. 15 முதல் வேலூரில் ஆள்சேர்ப்பு முகாம்

அக்னிபத் திட்டத்தின் கீழ் வேலூரில் வருகின்ற நவம்பர் 15 முதல் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

“ராணுவத்தில் கீழ்காணும் பணிகளுக்கு நபர்களை சேர்ப்பதற்கான முகாம் நவம்பர் 15 முதல் 29 வரை வேலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

i. அக்னி வீரர் (ஆண்)

ii. அக்னி வீரர் (பெண் ராணுவ காவலர்)

iii. சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர் / கால்நடை செவிலியர் உதவியாளர்

iv. இளநிலை சேவை அதிகாரி

தமிழகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து ஏற்கெனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்ட முகாம் பற்றிய அறிவிக்கையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் முகாமிற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும். ஆவணங்களை எடுத்து வருவதற்கான அமைப்பு முறையும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான ஆவணங்கள் இல்லாமல் மற்றும் அவற்றை தவறான முறையில் (குறிப்பாக உறுதிமொழி பத்திரம்) எடுத்து வரும் விண்ணப்பதாரர், முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்.

முழுவதும் தானியங்கி முறையில், நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மை வாயிலாகவும் பணிசேர்ப்பு நடைபெறும். இதனால் பொய்யான வாக்குறுதிகளைத் தந்து ஏமாற்றும் நபர்களிடமிருந்து விலகி இருக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடின உழைப்பும், தயார்முறை மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்யும்.”

Total Pageviews

Search This Blog