Breaking

Showing posts with label Virus. Show all posts
Showing posts with label Virus. Show all posts

Wednesday, March 20, 2024

Wednesday, November 29, 2023

November 29, 2023

ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழி முறைகள்

ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழி முறைகள்!

பொது மருத்துவர் விஷால்

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும். அடுத்தவர்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

தொண்டை வலி இருந்தால் வெந்நீரில் உப்பு போட்டு வாய்க் கொப்பளிக்க வேண்டும்.

வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பின் கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகு வீட்டிற்குள் நுழைய வேண்டும். அடிக்கடி கை கழுவுவதும் நல்லது.

வைட்டமின்- சி மற்றும் புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்

பொது மருத்துவர் விஷால்

முக்கியமாக வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்துகொண்டால் நோய் பரவுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

இருமும்போதும் தும்மும்போதும் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் இன்ஃப்ளூயென்சா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமில்லை.

இருப்பினும் முதியோர், இதயநோய், HIV தொற்று, சர்க்கரைநோய், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி தேவைப்பட்டால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

Wednesday, November 22, 2023

November 22, 2023

கோவை மாவட்டத்தில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல் - குழந்தைகள் மற்றும் முதியோருக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை & வழிகாட்டுதல் - பத்திரிக்கை செய்தி

Outbreak of Blue Virus Fever in Coimbatore District - District Administration Advice & Guidance for Children and Elderly - Press Release = கோவை மாவட்டத்தில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்படும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்களில் குணமாகி விடுவார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவுரை & வழிகாட்டுதல்.

பத்திரிக்கை செய்தி

கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்படக் கூடும்.

காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகியன இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக காணப்படுகிறது. பொதுவாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு நாட்களில் குணமடைந்து விடுவர். நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். இக்காலகட்டத்தில் பொது மக்கள் அனைவரும் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து பின் ஆறவைத்து குடிக்க வேண்டும், தொண்டையில் கரகரப்பு இருக்கும் பட்சத்தில் சமையல் கல் உப்பை வெந்நீரில் போட்டு, தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்க வேண்டும். இரும்மு போதும் தும்மும் போதும் உங்கள் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும், வீட்டுக்கு வெளியே சென்று வந்தபிறகு கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகே, வீட்டுக்குள் நுழைய வேண்டும். வைட்டமின் சி, புரத சத்து மிகுந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். மேற்கண்ட தொடர் செயல்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கலாம். மேலும், காய்ச்சல் கண்டவர்கள் பதிவுபெற்ற மருத்துவரை நாடி உரிய அறிவுரைக்கு பின் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் காய்ச்சல் பாதித்து உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் விவரங்களை அரசு. தனியார் மருத்துவமனைகளில் பெற்று அவர்கள் வசிக்கும் பகுதியில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Sunday, September 24, 2023

September 24, 2023

டெங்குவுக்கு பள்ளிச் சிறுமி பலி!

டெங்குவுக்கு பள்ளிச் சிறுமி பலி!

மேற்குவங்கத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் பெயர் டோனா தாஸ் என்பது தெரிய வந்துள்ளது. அவர் கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பகுதியைச் சேர்ந்தவர். 7 ஆம் வகுப்பு படித்து வரும் அவர் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 24) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு காய்ச்சல் இருந்ததால் வீட்டிலிருந்துள்ளார். அவர் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவரது உயிரை காப்பாற்றியிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவத் துறையில் மூத்த அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டபோது, டெங்கு காய்ச்சல் பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 19, 2023

September 19, 2023

நிபா பரவல் எதிரொலி - பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

கோழிக்கோட்டில் நிபா பரவல் எதிரொலி பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்


நிபா வைரஸ் காய்ச்சல் பரவலைத் தொடர்ந்து கோழிக்கோட்டில்பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவ னங்களிலும் நேற்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி 2 பேர் மரணமடைந்தனர். இந்த நோய் பாதித்த4பேர் தற்போதும் மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் மட்டும் நோய் அறிகுறிகளு டன் 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைக ளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது தவிர நோயாளி களுடன் தொடர்பில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்கா ணிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் நிபா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் கோழிக்கோடு மாவட்டத் தில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடு முறை அளிக்கப்பட்டது.

வரும் 23ம் தேதி வரை கல்வி நிறுவனங் கள் அனைத்தையும் மூட கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் கீதா உத்தர விட்டு உள்ளார். தொடர் விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைனில் வகுப்புகள் நடத்த தீர்மானிக்கப்பட் டது. தொடர்ந்து நேற்று முதல் கோழிக்கோடு மாவட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது

Monday, March 06, 2023

March 06, 2023

மாா்ச் 10-இல் 1,000 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்கள்

மாா்ச் 10-இல் 1,000 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்கள்

தமிழகத்தில் மாா்ச் 10-ஆம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

பருவகாலம் நிறைவடைந்த பிறகும் தமிழகத்தின் பல இடங்களில் காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. முதியவா்கள், குழந்தைகளிடையே காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டின் பல இடங்களில் இதுபோன்ற பாதிப்பு இருப்பதாகவும், அதற்கு இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ் பரவலே காரணம் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த வாரத்தில் தமிழக பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்விலும் அந்தத் தொற்று கண்டறியப்பட்டு மாவட்ட நிா்வாகங்களுக்கு அதுதொடா்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் முழுவதும் மாா்ச் 10-ஆம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். சென்னையில் மட்டும் 200 இடங்களில் முகாம்கள் நடத்தப்படும். குறிப்பாக, காய்ச்சல் தொற்று அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாயிலாக முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

காலை 9 மணி முதல் அந்த முகாம் நடைபெறவுள்ளது. அதில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு ஆய்வக நுட்பனா், ஒரு உதவியாளா் இருப்பாா்கள். இது குளிா்காலம் மற்றும் பருவ மழை காலம் நிறைவடையும்போது ஏற்படும் வழக்கமான காய்ச்சல் பாதிப்புதான். இதன் அறிகுறிகள் உடல் வலி, தொண்டை வலி, இருமல் சளியுடன் கூடிய காய்ச்சலாகவே உள்ளது.

முதியவா்கள், குழந்தைகள் மற்றும் இணை நோய் உள்ளவா்கள் தவறாமல் இந்த முகாமில் பங்கேற்று, தேவைக்கேற்ற சிகிச்சை பெற்றுகொள்ள வேண்டும். காய்ச்சல் முகாமிலேயே பொதுமக்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். பொதுவாக, மக்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் அவசியம் என்று அவா் தெரிவித்தாா்

Thursday, September 08, 2022

September 08, 2022

பருவகால இன்ஃப்ளூயன்ஸா தொற்று: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பருவ கால இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நோயின் தீவிரத்தைப் பொருத்து நோயாளிகளை எவ்வாறு தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்டவற்றை கரோனாவின் அறிகுறிகளாக மட்டும் கருதக் கூடாது. மாறாக, அவை பருவகால இன்ஃப்ளூயன்ஸா தொற்றாக இருக்கக் கூடும்.

எனவே, அவற்றுக்கு உரிய வழிகாட்டுதலின்படி மருத்துவக் கண்காணிப்பை அளிக்க வேண்டும். ஃப்ளூ வைரஸ்களால் பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல், நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.

நோயின் தீவிரத்தைப் பொருத்து அதற்கான சிகிச்சைகளை மருத்துவா்கள் அளித்தல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், அவா்களுக்கு அதற்கான மருந்துகளை மட்டும் அளிக்கலாம். ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை. ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேவேளையில், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள்பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்னைகளை எதிா்கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்றுநோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு ஓசல்டாமிவிா் எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும். அவா்களையும் தனிமைப்படுத்தி மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்துதல் அவசியம்.

மூன்றாவதாக தீவிர பாதிப்புக்குள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குைல், சீரற்ற இதயத்துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குைல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை ஆா்டி பிசிஆா் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.

ஓசல்டாமிவிா் உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog