Breaking

Showing posts with label New scheme. Show all posts
Showing posts with label New scheme. Show all posts

Sunday, January 21, 2024

January 21, 2024

காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு திட்டம்: பிப்ரவரியில் தொடக்கம்

காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு திட்டம்: பிப்ரவரியில் தொடக்கம்

காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு திட்டம்: பிப்ரவரியில் தொடங்கப்படும் என சென்னை காவல் ஆணையர் தகவல்

சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 67 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர். சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக பல்வேறு கருப்பொருள்களை மையப்படுத்தி மாணவர்கள் அதன் மாதிரி வடிவமைப்பை காட்சிப்படுத்தியிருந்தனர். சிறந்த மாதிரி வடிவமைப்புக்கான முதல் பரிசு பெற்ற ஆதம்பாக்கம் டிஏவி பள்ளி மாணவிகள் அஹன்யா, ஹன்சிகாவுக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ரூ.50,000 வழங்கிப் பாராட்டினார்.

சென்னை: சென்னை காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பாதுகாப்பு திட்டம் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார். சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் போக்குவரத்து வார்டன் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள், பள்ளிமாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகளை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கருப்பொருளை மையப்படுத்தி, அதன் மாதிரி வடிவமைப்பை பள்ளி மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர். இதனைகாவல் ஆணையர் சந்தீப் ராய்ரத்தோர் பார்வையிட்டு மாணவர்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து சிறப்பான வடிவமைப்பு செய்த ஆதம்பாக்கம் டிஏவி பள்ளிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், சவுகார்பேட்டை  பாதல்சந்த் சாயர்சந்த் சோர்டியா ஜெயின் வித்யாலயா மெட்ரிக் பள்ளிக்கு இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரமும், அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கினார். இதையடுத்து சென்னை போக்குவரத்து காவல் துறையில் பொதுமக்களுக்கு சிறப்பான போக்கு வரத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய வேப்பேரி போக்குவரத்துகாவல் ஆய்வாளர் பாண்டிவேலுக்கு பரிசு வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 67 பள்ளிகளைச் சேர்ந்தமாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். சாலை விபத்துகளைக் குறைப்பது, தானியங்கி சிக்னல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த மாதிரியை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். இதில் நவீனதொழில்நுட்பத்துடன் கூடிய பல புதிய யோசனைகளை மாணவர்கள் எங்களிடம் தெரிவித்துள்ளனர். சாலையில் நெரிசல் இல்லாமல் சீரான போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கு பல புதிய திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம்.


சென்னையில் சூரிய ஒளி சிக்னல் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. இதைவிட குறைந்த செலவிலான, சிக்னல் அமைப்பை மாணவர் ஒருவர் வடிவமைத்திருக்கிறார். அதனை சென்னை சாலைகளில்உள்ள சிக்னலில் பயன்படுத்தபரிசீலனை செய்ய திட்டமிட்டுள் ளோம். அதுமட்டுமில்லாமல், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், போக்குவரத்து வார்டன் ஆகியோரை ஒருங்கிணைத்து பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான புதிய திட்டத்தை (‘ஸ்கூல் சேஃப்டி ஸோன்’) அடுத்த மாதம் முதல் செயல்படுத்த இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, January 03, 2024

January 03, 2024

மகளிா் உரிமைத் தொகை திட்டம் வருவாய்த் துறையில் 323 புதிய பணியிடங்கள் உருவாக்கம்

மகளிா் உரிமைத் தொகை திட்டம் வருவாய்த் துறையில் 323 புதிய பணியிடங்கள் உருவாக்கம் Women's Entitlement Scheme Creation of 323 new posts in revenue department

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக 8 தாசில்தார் மற்றும் 101 துணை தாசில்தார் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கடந்த செப். 15ஆம் தேதி தொடக்கிவைத்தார்.

மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் முதல்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சம் மகளிா் தோ்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து, மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவா்களில் சுமாா் 11 லட்சம் போ் மேல்முறையீடு செய்திருந்தனா்.

அவா்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் போ் தகுதியானவா்களாகக் கண்டறியப்பட்டு அவா்களுக்கும் நவம்பா் மாதம் முதல் மகளிா் உரிமைத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்தாண்டில் புதிதாக உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தாசில்தார் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மகளிா் உரிமைத் தொகை திட்டம் வருவாய்த் துறையில் 323 புதிய பணியிடங்கள் உருவாக்கம் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தைத் தொய்வின்றி செயல்படுத்தும் வகையில், தமிழக வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியா் நிலையிலான 323 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.

அந்த உத்தரவு விவரம்:

கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ், 1.06 கோடி மகளிா் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறாா்கள். அத்துடன் உரிமைத் தொகை கோரி, 11.85 லட்சம் போ் விண்ணப்பம் செய்துள்ளனா். இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பெரும் பணிச்சுமை வருவாய்த் துறையினருக்கு இருந்து வருகிறது. தமிழக அரசின் மைல்கல் திட்டமாகக் கருதப்படும் கலைஞா் மகளிா் உரிமை திட்டத்தை சிறப்புடன் செயலாக்க, மாவட்ட அளவில் சமூக பாதுகாப்புத் திட்டப் பிரிவை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இது கூடுதலாக பணியாளா்களை நியமிப்பதால் மட்டுமே சாத்தியப்படும். இதைக் கருத்தில் கொண்டு, புதிதாக உருவாக்கப்பட்ட வட்டங்களில் எட்டு புதிய சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள் பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இத்துடன், உரிமைத் தொகை திட்டம் குறித்த தரவுகளை ஆய்வு செய்வது, நீக்குவது, திருத்தங்கள் மேற்கொள்வதற்காக, 38 மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களிலும் தலா ஒரு துணை வட்டாட்சியா் வீதம் 38 போ் நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வருவாய் கோட்ட அளவில் விண்ணப்பதாரா்கள் குறித்த விவரங்களை ஆய்வு செய்யவும், தகுதியில்லாதவா்களை நீக்கவும் 94 துணை வட்டாட்சியா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

மேலும், நகரப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகமுள்ள மாநகராட்சிகளில் 53 துணை வட்டாட்சியா்களும், மலை கிராமப் பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் 32 துணை வட்டாட்சியா்களும் புதிதாக நியமனம் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மண்டல துணை வட்டாட்சியா் பதவிகள் உருவாக்கப்படாத ஏழு வட்டங்களில் தலா ஒரு துணை வட்டாட்சியா் என மொத்தம் 7 பணியிடங்கள் உருவாக்கப்படும்.

கலைஞா் மகளிா் திட்டத்தில் அதிகமான பயனாளிகளைக் கொண்ட வட்டங்களில், அவா்களது விவரங்களைச் சேகரிக்கவும், தகுதியில்லாதவா்களை நீக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் 91 துணை வட்டாட்சியா் பணியிடங்கள் தேவையாக உள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக 323 புதிய பணியிடங்கள் வருவாய்த் துறையில் உருவாக்கப்பட்டுள்ளன என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதற்காக புதிய பணியிடங்கள்?

தமிழக அரசு செயல்படுத்தி வரும் சமூக பாதுகாப்புத் திட்டங்களால் 35.50 லட்சம் போ் பயன்பெற்று வருகிறாா்கள். இத்துடன் முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தால் 2.83 கோடி போ் பயனடைந்து வருகிறாா்கள். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தும் பொறுப்பு சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கான சிறப்பு வட்டாட்சியா்களையே சாரும். இந்தச் சூழ்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள் ஆகியவற்றில் இப்போதிருக்கும் வருவாய்த் துறை அமைப்பு முறைகளால் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்துவது கடினம். இதைக் கருத்தில் கொண்டே, அந்தத் திட்டத்துக்காக 323 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசின் உத்தரவில் விளக்கப்பட்டுள்ளது.

புதிய பணியிடங்கள் விவரம்

புதிய வட்டங்களில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள்: 8

38 ஆட்சியா் அலுவலகங்களில் தலா ஒரு துணை வட்டாட்சியா்: 38

வருவாய் கோட்ட அளவில் தலா ஒரு துணை வட்டாட்சியா்: 94

மக்கள் அதிகமுள்ள மாநகராட்சிகளில் துணை வட்டாட்சியா்கள்: 53

மலை-தொலை தூரப் பகுதிகளில் துணை வட்டாட்சியா்: 32

மண்டல துணை வட்டாட்சியா் இல்லாத இடங்கள்: 7

அதிக பயனாளிகள் கொண்ட வட்டங்களில் துணை வட்டாட்சியா்கள்: 91

மொத்தம்: 323 துணை வட்டாட்சியா்கள் நியமனம்

Friday, August 04, 2023

August 04, 2023

மகளிருக்கு மாதம் ரூ.1000 - நீங்கள் தகுதியானவரா? உங்க மொபைல் போன்லையே பார்க்கலாம்..!

மகளிருக்கு மாதம் ரூ.1000 - நீங்கள் தகுதியானவரா? உங்க மொபைல் போன்லையே பார்க்கலாம்..!

நீங்கள் உரிமைத்தொகை பெற தகுதியானவரா? உங்க மொபைல் போன்லையே பார்க்கலாம்..!

தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் வாழக்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமார் 1 கோடி பெண்களுக்கு வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். அதற்கான பணிகள் தற்பொழுது தமிழக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை மகளிர் பெற அலைய தேவையில்லை. நியாய விலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று அதனை வழங்கி வருகின்றனர். இந்த விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கும் அந்தந்த ஊரிலேயே சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், தமிழகம் முழுவதும் முதல்கட்ட பணியில் தற்போது 75 லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் சரிபார்க்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு குடும்ப தலைவிகள் ரூபாய் 1000 உரிமைத் தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவரா என்கிற விவரங்களும் மொபைல் நம்பருக்கு நேரடியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, March 05, 2023

March 05, 2023

இலவச தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு வெளியீடு!

சமுதாயத்தில் ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைப் பெண்கள் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு ' இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை' செயல்படுத்தி வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர். 2021-22 நிதியாண்டில் மட்டும் ரூபாய். 1.35 கோடி செலவில், 2,250 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில்,சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக, தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.
20 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள், பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடம் இருந்து தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானச் சான்று ரூ.72,000க்குள் கீழ் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை தென் சென்னை மாவட்ட சமூகநலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காரவேலர் மாளிகை, 8வது தளம், இராஜாஜிசாலை, சென்னை- 01 அலுவலத்தில் இருந்து வாங்கி கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை பூரித்தி செய்து இருப்பிடச் சான்று, ஆதார அட்டை, 2 புகைப்படம், வருமானச் சான்று, சாதிச் சான்று, வயதுச் சான்று ஆகிய சான்றுகள் இணைக்கப்பட்டு வரும் 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Friday, January 13, 2023

January 13, 2023

விவசாய மின்மோட்டார் பம்புசெட் வாங்க ரூ.10,000 மானியம்! விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

விவசாய மின்மோட்டார் பம்புசெட் வாங்க ரூ.10,000 மானியம்! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதுதான்..!

பாசன வசதியை மேம்படுத்துவதில், சிறு, குறு விவசாயிகளின் நிதிச்சுமையினை வெகுவாகக் குறைக்கும் நோக்கத்தில், மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000/- மானியமாக வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி வேளாண் துறை மூலம் 5 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் `வேளாண் இயந்திர வாடகை மையம்' அமைக்க ரூ.10 லட்சம் வரை மானியம்! தமிழக அரசு அறிவிப்பு!

உழவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கடந்த இரு ஆண்டுகளாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கு புதிதாக நீர் ஆதாரங்களை உருவாக்குதல், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வேளாண் பம்ப் செட்டுகளுக்கு புதிதாக இலவச மின் இணைப்பு, 25 லட்சத்துக்கும் அதிகமான வேளாண் பம்ப்செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கீடு, மின் இணைப்பு இல்லாத விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப் செட்டுகளுக்கு மானியம், பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு, நுண்ணீர்ப் பாசன அமைப்புக்கு மானியம் போன்று பல்வேறு வகைகளில் இந்த அரசு உதவி வருகிறது. மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள்

நடப்பு 2022-23 வேளாண் நிதிநிலை அறிக்கையில், ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகள் பொருத்தவும் ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000/- வீதம் 5,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.5 கோடி கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.விவசாய மின் மோட்டார்`வேளாண் ஸ்டார்ட்-அப்'களுக்கு ரூ.10 லட்சம் மானியம்! தமிழக அரசு அறிவிப்பு!

மானியம் வழங்க காரணம்..

பழைய, திறன்குறைந்த மின் மோட்டார் பம்புசெட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், மின்சாரப் பயன்பாடு அதிகமாவதோடு, பாசன நேரமும் அதிகரிக்கிறது. சாகுபடிக்கான செலவு அதிகரித்துவரும் வேளையில், சிறு, குறு விவசாயிகள் இத்தகைய பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றுவதற்கு தயங்குகிறார்கள். இத்தகைய விவசாயிகளின் நலனுக்காக, புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகளை வாங்குவதற்கு மானியம் வேளாண்மைப் பொறியியல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.

மானிய விபரம்

பழைய பம்புசெட்டை மாற்றி, புதிய மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணறுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கும் இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மானியம் எவ்வளவு?

வேளாண் பொறியியல் துறையின் அனுமதி பெற்று, முழுவிலையில் புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்கும் விவசாயிகளுக்கு ரூ.10,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

மானியம் பெற தகுதிகள்...

ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள், தங்களது பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்பினாலும், புதிதாக ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அல்லது திறந்தவெளி கிணறு அமைத்து, சொந்தமாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகளும், இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

நடப்பாண்டில் 5,000 சிறு குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக அரசு ரூ.5 கோடி ஒதுக்கி உள்ளது இதில் 1,000 பம்பு செட்டுகளுக்கான மானியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு அங்கீகரித்துள்ள நிறுவன மாடல்களிலிருந்து, தங்களுக்கு விருப்பமான மின்மோட்டாரை நான்கு ஸ்டாருக்கு குறையாமல், விவசாயிகள் தேர்வுசெய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இத்திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, https://mis.aed.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பித்து, தங்கள் பெயரை முன்பதிவு

Friday, December 23, 2022

December 23, 2022

மாணவர்கள் நலன் காக்க மனம் திட்டம் துவக்கம்



மாணவர்கள் நலன் காக்க மனம் திட்டம் துவக்கம்

மாணவர்களின் மன நலனை மேம்படுத்த, 'மனம்' திட்டத்தை, முதல் கட்டமாக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள, 36 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 'மனம்' என்ற மாணவர்களின் மன நலன் காக்கும் சிறப்பு திட்டம் துவக்கப்பட்டு, 'மன நல நல்லாதரவு மன்றங்கள்' அமைக்கப்பட்டு உள்ளன.

இவற்றில், மருத்துவக் கல்லுாரி முதல்வர், மன நலத் துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள், மாணவ - மாணவியர் அடங்கிய குழு அமைக்கப்படும்.

மாணவர்களின் நல்வாழ்வுக்கான நெறிமுறைகள் குறித்த புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படும். மாணவர்களின் கலை, கற்பனை உட்பட தனித் திறன்களைக் கண்டறிந்து, மேம்பாட்டுக்கான வழிவகை உருவாக்கப்படும்.

உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள், உடனடியாக மன நல மருத்துவரை தொடர்பு கொள்ள, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், 'மனம்' தொலைபேசி எண், '14416' பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இத்திட்டம் முதல் கட்டமாக, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் துவக்கப்பட்டுள்ளது. பின், அனைத்து கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது.

சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 22.84 கோடி ரூபாய் மதிப்பில், 75 புதிய மேம்படுத்தப்பட்ட, நவீன மருத்துவ உபகரணங்கள் உள்ள, 108 அவசர கால ஊர்திகளை, முதல்வர் துவக்கி வைத்தார்.

மேலும் 2.36 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, இடைநிலை பராமரிப்பு மையத்தையும் திறந்து வைத்தார்.

Monday, December 19, 2022

December 19, 2022

அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான ‘நம்ம ஸ்கூல்’ திட்டம்: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்



அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான ‘நம்ம ஸ்கூல்’ திட்டம்: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், ‘நம்ம ஸ்கூல்’ என்னும் புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கி வைக்கவுள்ளாா்.

அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில்நிறுவனங்களில் உயா்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவா்களும், தொழிலதிபா்களாக உள்ள முன்னாள் மாணவா்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தங்களது சமூகப் பொறுப்புணா்வு நிதி (சி.எஸ்.ஆா்) மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவா், வண்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் இத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இதன் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் திங்கள்கிழமை (டிச.19) நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடக்கி வைத்து அதற்கான இணையதளத்தை அறிமுகப்படுத்துகிறாா்.

இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறவா்கள், எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம். மேலும், பணிகள் முறையாக நிதி மூலம் பயன்படுத்தப்படுகிா என்பதையும் நிதி வழங்கியவா்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவா் விஸ்வநாதன் ஆனந்த், ‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேசன் தலைவா் வேணு சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

Wednesday, November 23, 2022

November 23, 2022

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்: நாளை முதல் வழங்கல்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்: நாளை முதல் வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை முதல் ரூ.1000 வழங்க அரசாணை வெளிடப்பட்டுள்ளது.

சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000 வழங்க அரசாணை வெளிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ததன் காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் அறிவிக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமானது நாளை முதல் வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, October 31, 2022

October 31, 2022

புதுமைப் பெண் திட்டம்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

புதுமைப் பெண் திட்டம்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

புதுமைப் பெண் திட்டத்துக்கு நவ. 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் திட்டம் கடந்த செப். 5-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, பட்டப் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை, கல்லூரிகளில் 2 முதல் நான்காம் ஆண்டு வரை பயிலக் கூடிய லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயன் பெற்றுள்ளனா்.

இந்தத் திட்டத்தின் கீழ், முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பம் செய்யலாம். இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள தனி இணையதளம் வழியே மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவ. 1 முதல் 11-ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்தத் திட்டத்துக்கு தகுதி பெற்றவா்கள். கல்வி நிறுவனங்கள் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பம் செய்யக் கூடாது.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு ஆகியன குறித்து கல்லூரிகளிலேயே சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மாணவிகள் தங்களது ஆதாா் அட்டை மற்றும் கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். கல்லூரிகளில் 2 முதல் 4 ஆண்டுகளுக்குள் படிக்கும் மாணவிகள் ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறியிருந்தால், இப்போது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதவி மைய எண்கள்: விண்ணப்பிக்கும் முறையில் மாணவிகளுக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால், சமூக நலத் துறை இயக்குநரக அலுவலகத்தில் செயல்படும் உதவி மைய எண்களைத் தொடா்பு கொள்ளலாம். அதாவது, 91500 56809, 91500 56805, 91500 56801, 91500 56810 ஆகிய எண்களை திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம். மேலும், ம்ழ்ஹட்ங்ஹள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சந்தேகங்களை அனுப்பி விளக்கம் பெறலாம் என தமிழக அரசுத் துறையினா் தெரிவித்தனா்.

Saturday, October 01, 2022

October 01, 2022

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் வெறும் 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கிடைக்கும்! - If you invest in this scheme you will get Rs.10 lakhs in just 3 years!

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் வெறும் 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கிடைக்கும்! - If you invest in this scheme you will get Rs.10 lakhs in just 3 years!

எஸ்பிஐயில் 3 வருட எஃப்டிக்கு 6.10 சதவிகிதம் வட்டி கிடைக்கிறது, அதேசமயம் தபால் அலுவலகத்தில் 3 வருட டெபாசிட்டுக்கு 6.7% வட்டி கிடைக்கிறது.

வங்கிகளில் முதலீடு செய்வது உங்களுக்கு சிறந்த பாதுகாப்பை தருகிறது.

தபால் நிலையங்கள் அதிக வட்டியை தருகின்றன.

Unsav திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 6.60% வட்டி வழங்கப்படுகிறது.



பெரும்பாலான மக்கள் தங்களின் எதிர்கால நிதி தேவைகளை பூர்த்தி செய்திகொள்ள பல்வேறு முதலீடு திட்டங்களை தேர்வு செய்கின்றனர். இதற்கென்றே பல தனியார் வங்கிகள், அரசு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தபால் நிலையங்கள் பல்வேறு முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகின்றன. ஆனால் இதில் எந்த நிறுவனத்தில் தங்களது பணத்தை முதலீடு செய்வது என்கிற குழப்பம் மக்களுக்கு இருந்து வருகிறது. முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பானதாக இருக்குமா, முதலீட்டின் மூலம் நிலையான வருமானம் கிடைக்குமா என பல கேள்விகள் முதலீட்டாளரின் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இப்போது வங்கிகளில் முதலீடு செய்வது உங்களுக்கு சிறந்த பாதுகாப்பையும், பலனையும் தருமா அல்லது தபால் நிலையங்களில் முதலீடு செய்வது உங்களுக்கு பாதுகாப்பையும், பலனையும் தருமா என்பது பற்றி விரிவாக காண்போம்.


ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் பிக்ஸட் டெபாசிட் என்றும், தபால் அலுவலகத்தில் டெபாசிட் செய்யப்படும் பணம் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் என்றும் அழைக்கப்படுகிறது. 1 முதல் 5 வருடங்கள் வரை போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம், இங்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுக்கு 5.5% வட்டி கிடைக்கும், அதேசமயம் 3 வருட முதலீட்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. தபால் அலுவலகத்தில் ரூ. 8,35,000 முதலீடு செய்தால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு ரூ.10,19,000 கிடைக்கும். இதில் ரூ.1,84,194 வட்டி சேர்த்து மொத்தம் ரூ.10,19,194 கிடைக்கும்.

எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள Unsav திட்டத்தில் அக்டோபர் 28, 2022 வரை கணக்கைத் திறக்கலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு வருடத்திற்கு 6.10% வட்டி வழங்கப்படுகிறது, அதுவே மூத்த குடிமக்களுக்கு 6.60% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.8,35,000 முதலீடு செய்தால், 3 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.10 லட்சத்துக்கு மேல் கிடைக்கும். இதில் ரூ.1,66,000 வட்டி சேர்த்து மொத்தம் ரூ.10,01,296 கிடைக்கும். எஸ்பிஐயில் 3 வருட எஃப்டிக்கு 6.10 சதவிகிதம் வட்டியும், தபால் அலுவலக டெபாசிட்டுக்கு 6.7% வட்டியும் கிடைக்கிறது. இந்த இரண்டையும் வைத்து பார்க்கையில் எஸ்பிஐ வங்கி திட்டத்தில் முதலீடு செய்வதை காட்டிலும் தபால் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்ததாக தெரிகிறது.

Wednesday, September 14, 2022

September 14, 2022

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் 'சிற்பி' திட்டம் எப்படி செயல்படும்? - முழு விவரம்

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் “சிற்பி” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி, மாணவர்கள் ஒழுக்கத்திலும் கல்வியிலும் மேலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், நல்வழிப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘சிற்பி‘ (SIRPI – Students In Responsible Police Initiatives) என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டம் செயல்படும் விதம் தொடர்பாக முழுமையான விவரம்: முதற்கட்டமாக 100 அரசு பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் 50 மாணவர்கள் விருப்பத்தின்பேரில் தன்னார்வலர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு நற்பண்புகள் மற்றும் உடற்பயிற்சி குறித்த வகுப்புகள் நடத்தப்படும்.

இவர்கள் 8 சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கல்வி, வரலாறு, பொது அறிவு குறித்து எடுத்துரைக்கப்படும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக, விளையாட்டுப் பயிற்சி, உடற்பயிற்சி, கவாத்து ஆகியவையும் கற்றுக் கொடுக்கப்படும். நல்லொழுக்கம், நாட்டுப்பற்று, தேசிய ஒற்றுமை, பிறருக்கு உதவுதல், தாம் கற்ற கல்வியையும், கண்டு களித்த வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் நல்ல அனுபவங்கள் குறித்து பிறருக்கு கற்றுத் தருதல் போன்ற நல்ல பண்புகளை வளர்க்க இச்சிறப்பு வகுப்புகள் உதவும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, பொதுமக்கள் அமைதியாக வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும் காவல்துறையின் செயல்பாடுகள், அமைப்பு, பணிகள் குறித்தும், அவசர உதவி மையங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும், சென்னை பெருநகர காவல் துறையின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.

இவ்வகுப்புகள் மூலம் அவர்களை சிற்பியாக உருவாக்கி, இந்த சிற்பிகள் மூலம் அப்பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் நற்பண்புகள் கற்பிக்கப்பட்டு, கல்வி, ஒழுக்கம், விளையாட்டு என அனைத்திலும் சிறந்த மாணவர்களாக அனைவரையும் உருவாக்குவதே 'சிற்பி' திட்டத்தின் நோக்கமாகும்.

Thursday, September 01, 2022

September 01, 2022

ஜன் தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்களா நீங்கள்? அப்ப ரூ.10,000 கிடைக்கும்.. எப்படி?

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் ரூ.10,000 வரை எடுக்கலாம், எப்படி என்பது இங்கே செய்தியில் பார்ப்போம்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, 2014 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர நாள் உரையில் ஜன் தன் ஜோஜனா திட்டத்தை அறிமுகம் செய்தார்.

மேலும், ஏழை எளிய மக்கள் பணம் அனுப்புதல், கடன், காப்பீடு மற்றும் ஓய்வூதியம் போன்ற நிதிச் சேவைகளுக்கு தனிநபர்கள் வங்கிச் சேவைக்குள் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆகஸ்ட் 28 தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சலுகைகள்:

ஜன் தன் யோஜனா திட்டத்தில் நிறைய வசதிகளும் சலுகைகளும் உள்ளன. அதில் முக்கியமான ஒரு வசதிதான் ஓவர் டிராஃப்ட். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் உங்களுடைய ஜன் தன் யோஜனா கணக்குகளை வைத்திருப்பவர்கள் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் (ஜீரோ பேலன்ஸ்) கூட நீங்கள் ரூ.10,000 வரை எடுக்க முடியும். கணக்கில் பணம் இருந்தாலும் இதை நீங்கள் எடுக்கலாம்.

இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் ஓவர் டிராஃப்ட் முறையில் ரூ.5000 மட்டுமே எடுக்க முடியும்.

இதன் பின்னர் அது இரட்டிப்பாக்கப்பட்டு தற்போது ரூ.10,000 வரை எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. ரூ.2000 வரை மட்டுமே நிபந்தனை இல்லாமல் எடுக்க முடியும். ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்த குறைந்தது 6 மாதங்கள் ஜன் தன் கணக்கை பயன்படுத்தியிருக்க வேண்டும்.

அப்போதுதான் ரூ.10,000 எடுக்க முடியும். இல்லாவிட்டால் ரூ.2000 மட்டுமே எடுக்க முடியும். ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறுவதற்கான வயது வரம்பு 60ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜன் தன் யோஜனா கணக்குகள் நேரடி பலன் பரிமாற்றம், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா, மைக்ரோ யூனிட்ஸ் டெவலப்மென்ட் மற்றும் ரிஃபைனான்ஸ் ஏஜென்சி வங்கி திட்டத்திற்குத் தகுதியுடையவை.

Thursday, August 25, 2022

August 25, 2022

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்க திட்ட அறிக்கை தயாா்: அமைச்சா் தகவல்

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்ட அறிக்கை தயாா் நிலையில் உள்ளது. இது குறித்த அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் விரைவில் வெளியிடுவாா் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விருதுநகா், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தாா். பள்ளிக் கல்வித் துறை ஆணையா் க. நந்தகுமாா் முன்னிலை வகித்தாா்.

இதில் அமைச்சா் பேசியதாவது:

பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை 70 லட்சத்தைக் கடந்துள்ளது. இதனை மேலும் அதிகரிக்க வேண்டும். கல்வித் துறை அதிகாரிகள் அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தனியாா் பள்ளிகளிலும் திடீா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிந்து, அவா்களை பள்ளிகளில் மீண்டும் சோ்த்து இடைநிற்றல் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

மாணவா்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க 800 மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பள்ளிகளில் தூய்மைப் பணிகளில் மாணவா்களை ஈடுபடுத்தக்கூடாது. இப்பணிகளை உள்ளாட்சி நிா்வாகம் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக, மாநில அளவில வாரம் ஒருமுறை நூலகத்திற்கு சென்று ஒரு புத்தகத்தை வாசிக்க செய்து, அதிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டு வெற்றி பெறும் மாணவா்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் உள்ளது. மதிப்பெண்கள் மட்டுமே மாணவா்களை மதிப்பீடு செய்யாது. எனவே மாணவா்கள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது.

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்ட அறிக்கை தயாா் நிலையில் உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் விரைவில் வெளியிடுவாா் என்றாா்.

கூட்டத்தில் விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள், கல்வித் துறை இணை இயக்குநா்கள், விருதுநகா் மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகெளரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tuesday, August 23, 2022

August 23, 2022

மத்திய அரசின் தங்கப்பத்திரம் திட்டம்:அஞ்சலகங்களில் ஆக.26 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் தங்கப்பத்திரம் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அஞ்சலகங்களில் அளிக்க இம் மாதம் 26 ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதுதொடா்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கோ.சிவாஜிகணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் தங்க பணமாக்கத் திட்டத்தின் கீழ் தங்கப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1 கிராம் 24 காரட் தங்கப்பத்திரத்தின் விலை ரூ.5197 ஆகும். இந்தப் பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள் அனைத்து அஞ்சலகங்களிலும் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இம் மாதம் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தனிநபா் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும், முதலீட்டு தொகைக்கு 2.50 சதவிகித வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும் அன்றுள்ள விலைக்கு நிகராக பணமும் பெறலாம்.

பத்திரம் வாங்கும்போது வாடிக்கையாளா்கள் ஆதாா் அட்டை, பான் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். வங்கிக் கணக்கு எண் கட்டாயமாகும். பத்திரம் தங்க கிராமின் மடங்காக உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி ஸ்ரீபுரம் பகுதிகளில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog