Breaking

Showing posts with label government post. Show all posts
Showing posts with label government post. Show all posts

Sunday, February 05, 2023

February 05, 2023

40,000 அஞ்சல்துறை வேலைவாய்ப்பு.... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

40,000 அஞ்சல்துறை வேலைவாய்ப்பு.... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

India Post recruitment Gramin Dak Sevak: அகவிலைப்படி உண்டா?

ஆம் உண்டு! மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றி அமைக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்கும் மாற்றி அமைத்து வழங்கப்படும்

நாட்டின் கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் (Branch Post Master), துணை கிளை போஸ்ட் மாஸ்டர் (Assistant Branch Post Master), அஞ்சல் உதவியாளர் (Gramin Dak Sevaks (GDS) அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், நாடு முழுவதும் 40,889 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள், 10ம் வகுப்பு, குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்த பதவிக்கு எந்தவித எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

1 . தமிழ்நாட்டில் காலியிடங்கள் எண்ணிக்கை:

தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. இது, முழுக்க முழுக்க மத்திய அரசு வேலையா?

ஆம். இருந்தாலும், அஞ்சல்துறை துறை சாராத சேவை அமைப்பின் (Extra Departmental system in the Department of Posts) கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை, படிகள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், அஞ்சல் துறையில் முழு நேர ஊழியர்களுக்கான சம்பள விகிதம் இவர்களுக்கு பொருந்தாது. (Gramin Dak Sevaks are holders of civil posts but they are outside the regular civil service)

3. அகவிலைப்படி உண்டா?

ஆம் உண்டு! மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றி அமைக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்கும் மாற்றி அமைத்து வழங்கப்படும் 4. ப்ரோமோஷன் உண்டா?

ஆம்! குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட இந்த கிராம அஞ்சல் உதவியாளர்கள் துறைத் தேர்வின் மூலம் இந்திய அஞ்சல் துறையில் உள்ள நிர்வாகப் பிரிவின் கீழ் (Post of Administrative Offices (Circle Office and Regional Office) வரும் குரூப் 'சி' பணிக்கு (பல்நோக்கு பணியாளர் - Multi Tasking Staff) தகுதி பெறலாம்.

அதேபோன்று, 5 ஆண்டு பணி முன் அனுபவம் உடைய, கிராம அஞ்சல் உதவியாளர்கள் எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமல், இந்திய அஞ்சல் துறை சார்நிலைப் பணிகளில் (Posts of Subordinate Office) அடங்கிய குரூப் சி (பல்நோக்கு பணியாளர் - Multi Tasking Staff) நிலைக்கு தகுதியுடைவராவார். குறைந்தது 3 ஆண்டு பணி முன்அனுபவம் உள்ள அஞ்சல் உதவியாளர்கள் துறைத் தேர்வின் மூலம் கூட இந்த பதவியை அடையலாம்.

அதன்பின், போஸ்ட்மேன், மெயில்கார்டு உள்ளிட்ட பதவிகளுக்கு உயர்வு பெற வாய்ப்புண்டு.

5. பணியின் தன்மை என்ன? பகுதி நேர ஊழியர்களாக பயன்படுத்தப்படுவார்கள். அதாவது நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 மணி நேரம் மட்டுமே வேலை இருக்கும்.

6. ஓய்வு பெறும் வயது என்ன? இந்தப் பணியாளர்கள் 65-ஆவது வயது வரை பணியில் இருப்பார்கள்.

7. படித்த இளைஞர்கள் அப்ளை செய்யலாமா? இன்றைய இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்புகளில் நாட்டம் செலுத்தி வருகின்றன.

பொதுவாக, வட இந்தியாவில் யுபிஎஸ்சி,எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு தாயராகி வரும் தேர்வர்கள், இந்த கிராம உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது வழக்கம். வேலை நேரங்கள் போக இதர நேரத்தில் தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்கின்றனர். எனவே, நீங்கள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் வருமானம் ஈட்டி வரும் நபராக இருந்தால் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இல்லையேல், ஏதேனும் தனியார் நிறுவனத்தில் பணி செய்து கொண்டு, எஸ்எஸ்சி தேர்வெழுதி நல்ல பதவியில் அமரலாம்.

Wednesday, October 19, 2022

October 19, 2022

57 ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிப்பு - Order Copy

57 ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்கப்பட்டுள்ள Order Copy Attached

57000 Odisha Government employees to be regulated and given benefits of a permanent job ..

This will benefit more than 57,000 contractual employees and their families in the state.

Click here to download pdf file

Total Pageviews

Search This Blog