B.Arch rank list
August 29, 2024
Showing posts with label B.Arch counseling. Show all posts
Showing posts with label B.Arch counseling. Show all posts
Thursday, August 29, 2024
Saturday, August 26, 2023
B.Arch counseling
August 26, 2023
B.Arch படிப்பு மாணவர் சேர்க்கை - ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு!
பிஆர்க் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 641 இடங்கள் நிரம்பின: 826 இடங்கள் காலியாக உள்ளன
பிஆர்க் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 826 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 37 கட்டிடவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் கட்டிட அமைப்பியல் (பி.ஆர்க்) படிப்புக்கு அரசுஒதுக்கீட்டில் 1,467 இடங்கள்உள்ளன.
இவை ஆண்டுதோறும் இணையதள கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
2,485 விண்ணப்பங்கள்: அதன்படி, நடப்பாண்டுசேர்க்கைக்கு 2,485 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 1,449 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 13-ல்வெளியிடப்பட்டது. இதையடுத்து சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 17, 18-ம்தேதிகளில் நடைபெற்றது. இதில் 8 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. 28 பேர் அரசுப் பள்ளி மாணவர்:
அதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கியது. இதில் 981 மாணவர்கள் தங்க ளுக்கு பிடித்த கல்லூரிகளை தேர்வு செய்தனர். அதில் 842 பேருக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதை உறுதி செய்த 633 மாணவர்களுக்கு இறுதி ஒதுக் கீட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில்28 பேர் அரசுப் பள்ளி மாணவர்களாவர்.
இந்த 633 மாணவர்களும் ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் நேரில் சென்று சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களை /barch.tneaonline.org/ எனும் வலைதளத்தில் அறியலாம்.
இதனிடையே, இந்தாண்டு பிஆர்க் படிப்பில் 641 இடங்களே நிரம்பியுள்ளன. 826 இடங்கள் காலியாக வாய்ப்புள்ளது. இறுதி நிலவரம் ஆகஸ்ட் 31-ம் தேதி தெரியவரும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Monday, August 14, 2023
B.Arch rank list
August 14, 2023
பி.ஆர்க்., சேர்க்கை தரவரிசை வெளியீடு
பி.ஆர்க்., சேர்க்கை தரவரிசை வெளியீடு
அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும், கட்டட அமைப்பியல் படிப்புக்கான பி.ஆர்க்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
மொத்தம், 37 பி.ஆர்க்., கல்லுாரிகளில், 1,467 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். விண்ணப்பித்த, 2,485 மாணவர்களில், அரசு பள்ளி மாணவர்கள், 30 பேர் உட்பட, 1,400 பேர் மட்டுமே கவுன்சிலிங்குக்கு தகுதி பெற்றுஉள்ளனர்;
தகுதியின்றி, 1,085 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.இவர்களில் இருவர், நாட்டா என்ற தேசிய ஆர்கிடெக்சர் திறன் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்; 1,083 பேர் நாட்டா தேர்வை எழுதாதவர்கள்.
தரவரிசை பட்டியலில் குறைகள் மற்றும் ஆட்சேபம் உள்ளவர்கள், இன்று முதல், 16ம் தேதிக்குள் கவுன்சிலிங் குழுவை, கவுன்சிலிங் உதவி மையங்கள் வழியே தொடர்பு கொள்ளலாம். விபரங்களை, https://barch.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும், கட்டட அமைப்பியல் படிப்புக்கான பி.ஆர்க்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
மொத்தம், 37 பி.ஆர்க்., கல்லுாரிகளில், 1,467 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். விண்ணப்பித்த, 2,485 மாணவர்களில், அரசு பள்ளி மாணவர்கள், 30 பேர் உட்பட, 1,400 பேர் மட்டுமே கவுன்சிலிங்குக்கு தகுதி பெற்றுஉள்ளனர்;
தகுதியின்றி, 1,085 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.இவர்களில் இருவர், நாட்டா என்ற தேசிய ஆர்கிடெக்சர் திறன் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்; 1,083 பேர் நாட்டா தேர்வை எழுதாதவர்கள்.
தரவரிசை பட்டியலில் குறைகள் மற்றும் ஆட்சேபம் உள்ளவர்கள், இன்று முதல், 16ம் தேதிக்குள் கவுன்சிலிங் குழுவை, கவுன்சிலிங் உதவி மையங்கள் வழியே தொடர்பு கொள்ளலாம். விபரங்களை, https://barch.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Sunday, July 30, 2023
counseling
July 30, 2023
பி.ஆர்க்., கவுன்சிலிங் ஆக., 17ல் துவக்கம்
பி.ஆர்க்., கவுன்சிலிங் ஆக., 17ல் துவக்கம்
பி.ஆர்க்., மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஆக., 17ல் துவங்க உள்ளது.
தமிழகத்தில் பி.ஆர்க்., கட்டட வடிவமைப்பு கலைக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு சேர, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க, ஆக., 4 கடைசி நாள்.
மாநிலத்தில் உள்ள 45 கல்லுாரிகளில், 1,700 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங், ஆக., 17ல் துவங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
பி.ஆர்க்., மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஆக., 17ல் துவங்க உள்ளது.
தமிழகத்தில் பி.ஆர்க்., கட்டட வடிவமைப்பு கலைக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு சேர, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க, ஆக., 4 கடைசி நாள்.
மாநிலத்தில் உள்ள 45 கல்லுாரிகளில், 1,700 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங், ஆக., 17ல் துவங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
Wednesday, October 05, 2022
counseling
October 05, 2022
பி.ஆர்க் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியானது: அக்டோபர் 8ம் தேதி முதல் கலந்தாய்வு
பி.ஆர்க் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 8ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விவரங்களை அறியலாம்,திருத்தங்கள் இருப்பின் அக்டோபர் 7ம் தேதிக்குள் மேற்கொள்ளலாம் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளனர்.
https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விவரங்களை அறியலாம்,திருத்தங்கள் இருப்பின் அக்டோபர் 7ம் தேதிக்குள் மேற்கொள்ளலாம் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளனர்.
Saturday, October 01, 2022
Minister Ponmudi's announcement
October 01, 2022
பி.ஆர்க் தரவரிசை பட்டியல் 5ம் தேதி வெளியீடு: 8ம்தேதி கலந்தாய்வு நடைபெறும்; அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பி.ஆர்க் தரவரிசை பட்டியல் 5ம் தேதி வெளியீடு: 8ம்தேதி கலந்தாய்வு நடைபெறும்; அமைச்சர் பொன்முடி அறிவிப்பு - B.Arch rank list will be published on 5th: Counseling will be held on 8th; Minister Ponmudi's announcement
பி.ஆர்க். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வருகின்ற 5ம் தேதி வெளியிடப்படும். 8ம்தேதி கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று பார்வையிட்டார்.
அதன்பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இன்ஜினியரிங் கலந்தாய்வு 2வது சுற்றில், 31 ஆயிரத்து 94 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 23 ஆயிரத்து 458 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்ததில், 14 ஆயிரத்து 153 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 5 ஆயிரத்து 16 பேர் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். 4 ஆயிரத்து 16 பேர் முதன்மை விருப்ப இடங்களுக்காக காத்திருக்கின்றனர். முதல் சுற்று கலந்தாய்வு நிறைவில், 10 ஆயிரத்து 351 இடங்களில் மாணவ-மாணவிகள் சேர்ந்து இருக்கின்றனர்.
அதேபோல், பி.ஆர்க். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 5ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வரும் 8ம் தேதி முதல் அவர்களுக்கான கலந்தாய்வும் தொடங்குகிறது. குறைவான மாணவ-மாணவிகளே விண்ணப்பித்திருப்பதால், ஒரு சுற்று கலந்தாய்விலேயே இடங்கள் நிரம்பும். நீட் தேர்வின் தாமதம் காரணமாகவே, கல்வியாண்டு தொடங்குவதில் தாமதம் ஆகிறது. கடந்த முறை நீட் தேர்வு முடிவுக்கு முன்னதாக இன்ஜினியரிங் கலந்தாய்வை நடத்தியதால், அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியில் அதிக இடங்கள் காலியாகி இருந்தன. இந்த ஆண்டு மேற்கொண்ட நடவடிக்கையால் காலி இடங்கள் இருக்காது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை நன்றாகவே நடந்து வருகிறது. இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகளை பொறுத்தவரையில், 4 சுற்று கலந்தாய்வு முடிந்ததும், அக்டோபர் இறுதியில் தொடங்கும். முதலாம் ஆண்டில் சேரும் இன்ஜினியரிங் மாணவிகளில் அரசு பள்ளிகளில் படித்து சேர்ந்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கு திட்டமும் செயல்படுத்தப்படும். பிளஸ்2 துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வராண்டா அட்மிஷன் மூலம் சேர்ந்து கொள்ளலாம். கல்லூரிகளில் காலியிடங்கள் இருக்கும் பட்சத்தில் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து கொள்ள முடியும். இதில் மாற்று கருத்து இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பி.ஆர்க். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வருகின்ற 5ம் தேதி வெளியிடப்படும். 8ம்தேதி கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று பார்வையிட்டார்.
அதன்பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இன்ஜினியரிங் கலந்தாய்வு 2வது சுற்றில், 31 ஆயிரத்து 94 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 23 ஆயிரத்து 458 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்ததில், 14 ஆயிரத்து 153 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 5 ஆயிரத்து 16 பேர் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். 4 ஆயிரத்து 16 பேர் முதன்மை விருப்ப இடங்களுக்காக காத்திருக்கின்றனர். முதல் சுற்று கலந்தாய்வு நிறைவில், 10 ஆயிரத்து 351 இடங்களில் மாணவ-மாணவிகள் சேர்ந்து இருக்கின்றனர்.
அதேபோல், பி.ஆர்க். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 5ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வரும் 8ம் தேதி முதல் அவர்களுக்கான கலந்தாய்வும் தொடங்குகிறது. குறைவான மாணவ-மாணவிகளே விண்ணப்பித்திருப்பதால், ஒரு சுற்று கலந்தாய்விலேயே இடங்கள் நிரம்பும். நீட் தேர்வின் தாமதம் காரணமாகவே, கல்வியாண்டு தொடங்குவதில் தாமதம் ஆகிறது. கடந்த முறை நீட் தேர்வு முடிவுக்கு முன்னதாக இன்ஜினியரிங் கலந்தாய்வை நடத்தியதால், அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியில் அதிக இடங்கள் காலியாகி இருந்தன. இந்த ஆண்டு மேற்கொண்ட நடவடிக்கையால் காலி இடங்கள் இருக்காது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை நன்றாகவே நடந்து வருகிறது. இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகளை பொறுத்தவரையில், 4 சுற்று கலந்தாய்வு முடிந்ததும், அக்டோபர் இறுதியில் தொடங்கும். முதலாம் ஆண்டில் சேரும் இன்ஜினியரிங் மாணவிகளில் அரசு பள்ளிகளில் படித்து சேர்ந்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கு திட்டமும் செயல்படுத்தப்படும். பிளஸ்2 துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வராண்டா அட்மிஷன் மூலம் சேர்ந்து கொள்ளலாம். கல்லூரிகளில் காலியிடங்கள் இருக்கும் பட்சத்தில் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து கொள்ள முடியும். இதில் மாற்று கருத்து இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.