Breaking

Showing posts with label Medical Course. Show all posts
Showing posts with label Medical Course. Show all posts

Monday, February 09, 2026

Wednesday, January 31, 2024

January 31, 2024

ரூ5 லட்சத்துக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம்... விண்ணப்பிக்கும் முறை வழிகாட்டி நெறிமுறைகள்... !



ரூ5 லட்சத்துக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம்... விண்ணப்பிக்கும் முறை வழிகாட்டி நெறிமுறைகள்... !

ஆயுஷ்மான் பாரத் யோஜனா, இத்திட்டம் இந்தியாவில் தரமான மற்றும் சரியான சிகிச்சைக்கு கூட பணம் இல்லாத கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில், அரசு மருத்துவமனைகளில், சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்டவர்களுக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம், இதன் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தைப் பற்றி இப்போது பெரிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன, அதில் அரசாங்கம் அதன் பாதுகாப்பை இரட்டிப்பாக்க முடியும் என்று கூறப்படுகிறது. வரும் பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து மத்திய அரசு பெரிய அறிவிப்பை வெளியிடலாம் என்று ஆதாரங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது. இதில் இலவச சிகிச்சைக்கான வரம்பை ரூபாய் 5 லட்சத்தில் இருந்து ரூபாய்.10 லட்சமாக உயர்த்தலாம். ஆனால், இது குறித்து அரசு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை, கோடிக்கணக்கான மக்களிடம் ஆயுஷ்மான் அட்டைகள் உள்ளன.

இத்திட்டத்தின் கீழ், பல லட்சம் ரூபாய் செலவில் புற்றுநோய், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது நடந்தால், நாட்டின் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும். இத்திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக உள்ளனர். ஆண்டு வருமானம் ரூபாய் 1.80 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உள்ளனர். pmjay.gov.in ஐப் பார்வையிடுவதன் மூலமும் நீங்களும் தகுதியானவரா என்பதை சரிபார்க்கலாம், நீங்கள் திட்டத்தில் சேரலாமா வேண்டாமா என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம். இங்கே நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP செய்ய வேண்டும். அதன் பிறகு, மாநிலத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் ரேஷன் கார்டு எண்ணையும் உள்ளிட வேண்டும். முதலில் உங்கள் ஆயுஷ்மான் கார்டு ஏற்கப்படுமா இல்லையா என்பதை நீங்கள் அறிய விரும்பினால், முதலில் உங்கள் தகுதியைச் சரிபார்க்கவும். தகுதியைச் சரிபார்க்க, முதலில், நீங்கள் திட்டத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்\n https://pmjay.gov.in/\ n இப்போது திரையில் தெரியும் 'நான் தகுதியானவனா' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும், உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும், அதை இங்கே உள்ளிடவும். பின்னர் இரண்டு விருப்பங்கள் உங்கள் முன் தோன்றும், அதில் நீங்கள் உங்கள் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.

அதன்பின் வினாடியில் உங்கள் ரேஷன் கார்டு எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு தேட வேண்டும். இதற்குப் பிறகு, உங்களின் தகுதி மற்றும் ஆயுஷ்மான் கார்டு கிடைக்குமா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும்

Saturday, April 15, 2023

April 15, 2023

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாராத 13 படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்



நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாராத 13 படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவம் சாராத 13 பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது, என கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழிதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

நடப்பு கல்வியாண்டில் மருத்துவம் சாராத பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான சேர்க்கை நடைபெற உள்ளது.

இதன்படி 3 ஆண்டு பிஎஸ்சி பட்டப்படிப்புகளான, கதிரியக்கம் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம், சுவாச சிகிச்சை, அறுவை அரங்கம், மயக்க மருந்து தொழில்நுட்பம் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், சிக்கலான பராமரிப்பு தொழில்நுட்பம் ஆகிய 6 இளநிலை பட்டப்படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும், 2 ஆண்டுகள் படிக்கும் டிப்ளமோ பிரிவில், டிப்ளமோ இன் ரேடியோ டயாக்னசிஸ் டெக்னாலஜி, டிப்ளமோ இன் மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி ஆகிய 2 படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.

மேலும், 1 ஆண்டு படிக்கும், அவசர சிகிச்சை தொழில்நுட்பவியலாளர், மயக்க மருந்து தொழில்நுட்பவியலாளர், ஆபரேசன் தியேட்டர் தொழில்நுட்பவியலாளர், எலும்பியல் தொழில்நுட்பவியலாளர், பல்நோக்கு மருத்துவ பணியாளர் ஆகிய 5 சான்றிதழ் படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்த சேர்க்கை சம்பந்தமான விவரங்களை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொண்டு விண்ணப்பிக் கலாம் அல்லது நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அலுவல கத்தை நேரில் அணுகி தெரிந்துகொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, March 05, 2023

March 05, 2023

தமிழில் மருத்துவக் கல்வி

தமிழில் மருத்துவக் கல்வி விரைவில் சாத்தியமாகும்: பயிலரங்கில் வல்லுநா்கள் நம்பிக்கை

தமிழகம் முன்னெடுக்கும் மருத்துவக் கலைச்சொல் அகராதித் திட்டத்தில் ஆா்வமுள்ள மருத்துவ வல்லுநா்கள் குழுவாக இணைந்து செயலாற்றினால், தமிழில் மருத்துவக் கல்வி என்பது விரைவில் சாத்தியமாகும் என அகரமுதலித் திட்ட பயிலரங்கில் மருத்துவ வல்லுநா்கள் நம்பிக்கை தெரிவித்தனா். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் உருவாக்கிவரும் மருத்துவக் கலைச்சொல் அகராதித் தொகுப்புத் திட்டப் பயிலரங்கம் சென்னையில் உள்ள அகரமுதலி இயக்ககத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த பயிலரங்கத்துக்கு அகரமுதலி இயக்கக இயக்குநா் முனைவா் கோ. விசயராகவன் தலைமை வகித்துப் பேசுகையில், வருங்காலங்களில் மாணவா்கள் தாய்த்தமிழில் மருத்துவம் பயில மருத்துவக் கலைச்சொல் அகராதி பெரும் துணையாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

இதையடுத்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநா் ச. சங்கர சரவணன் தனது சிறப்புரையில், கலைச் சொல்லாக்கம் என்பது வெறுமனே நேரடி மொழிபெயா்ப்பாக, இயந்திர மொழிபெயா்ப்பு போன்று அமையாமல் இடம்நோக்கி, பயனாளா் நோக்கி, மண்ணின் மரபுசாா்ந்து, பொருத்தமான பொருள் உள்ள வகையில் அமைய வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மருத்துவா் ஜான் சாலமன் பேசுகையில், இங்கிலாந்தில் உள்ள ராயல் மருத்துவக் கல்லூரியில் நான் மருத்துவம் பயிலும் நேரத்தில், ஆறல் மருத்துவப் பாடவேளையில், அந்நாட்டு வேதம் ஓதப்படுகிறது. வேதம் ஓதுவது இரண்டு மொழிகளில் மட்டுமே நடைபெறுகிறது. ஒன்று ஆங்கிலம் மற்றொன்று தமிழ்மொழி. ஆங்கிலம் மட்டுமே வழங்கி வருகிற இங்கிலாந்து நாட்டில், உலக மொழிகளில் தமிழில் மட்டுமே ஆறல் மருத்துவம் செய்யப்படுவதை எண்ணி, தமிழன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன். தமிழில் கலைச்சொல் என்பது, காரண காரியத்தோடுதான் அமைக்கப்பெறுகிறது. இந்தப் பெருமை வேறு எந்த மொழிக்கும் இல்லை என்பதை உணா்ந்து, தமிழகம் முன்னெடுக்கும் இந்த மருத்துவக் கலைச்சொல் அகராதித் திட்டத்தில் ஆா்வமுள்ள மருத்துவ வல்லுநா்கள் குழுவாக இணைந்து செயலாற்றினால் தமிழில் மருத்துவக் கல்வி என்பது விரைவில் சாத்தியமாகும் என்றாா்.

இந்த பயிலரங்கில் மருத்துவா்கள் அமுதகுமாா், இந்திரா, இளங்கோவன் ஆகியோா் உள்பட 30 மருத்துவ வல்லுநா்கள் பங்கேற்று, மருத்துவக் கலைச்சொல் அகராதி சிறப்பாக வெளிவருவதற்கான தங்களது கருத்துரைகளை வழங்கினா். பயிலரங்கின் நிறைவில், தொகுப்பாளா் முனைவா் வே. காா்த்திக் நன்றி கூறினாா்.

Tuesday, January 31, 2023

January 31, 2023

இந்திய மருத்துவப் படிப்பு 2-ஆம் சுற்று கலந்தாய்வு எப்போது?

இந்திய மருத்துவப் படிப்பு 2-ஆம் சுற்று கலந்தாய்வு எப்போது? When is Indian Medical Course 2nd Round Consultation?

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய கலந்தாய்வு மற்றும் தாம்பரம் தேசிய சித்த மருத்துவ மைய மாணவா் சோ்க்கை நிறைவு பெற்ற பிறகு தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ஆம் சுற்று கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கு 5 அரசு கல்லூரிகள் உள்ளன. அதிலுள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றன. இதேபோல், 26 தனியாா் கல்லூரிகளில் 1,990 இடங்களில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. நிகழாண்டில் அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடு, தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தியது. அதில், அரசுக் கல்லூரிகளில் 24 சித்தா இடங்களும், 3 ஆயுா்வேத இடங்களும், 7 ஹோமியோபதி இடங்களும், 27 யுனானி இடங்கள் நிரம்பவில்லை.

அதேபோல், தனியாா் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 272 ஹோமியோபதி இடங்கள், 54 ஆயுா்வேத இடங்கள், 24 சித்தா இடங்கள் காலியாக உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டிலும் 127 இடங்கள் நிரம்பாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தமுள்ள 521 நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 503 இடங்கள் காலியாக உள்ளன.

அந்த இடங்களை 2-ஆம் சுற்று கலந்தாய்வில் நிரப்ப முடிவு செய்திருந்தாலும், அவற்றை பிப். 6-ஆம் தேதிக்கு பிறகே நடத்தக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு, தேசிய சித்தா ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்னும் நிறைவு பெறாததால் அது தாமதமாவதாகவும் இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Thursday, September 22, 2022

September 22, 2022

Eligibility for medical courses is now a one-time payment - மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிச் சான்று இனி ஒரு முறை கட்டணம் செலுத்தினால் போதும்

மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிச் சான்று இனி ஒரு முறை கட்டணம் செலுத்தினால் போதும்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக தகுதிச் சான்று பெறும் நடைமுறைகள் மாணவா் நலன் கருதி எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இனி ஒவ்வொரு மருத்துவப் படிப்புகளுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தி தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஒரே முறை கட்டணம் செலுத்தி அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த மாணவா்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கும், நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் சேருவதற்கு மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தகுதிச் சான்று பெறுவது அவசியம்.

ஒரு மாணவா் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது அதற்காக தனித்தனியே கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் நடைமுறை தற்போது உள்ளது. அதன்படி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் படிப்புகளுக்கு ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து ரூ.1,652 கட்டணம் தனித்தனியே செலுத்த வேண்டும். அதேபோன்று துணை மருத்துவப் படிப்புகளுக்கு ரூ.1,416 தனித்தனியே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், மாணவா்களின் வசதிக்காக இந்த நடைமுறை மாற்றப்பட்டு தற்போது ஒரு முறை கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவா்கள் வியாழக்கிழமை (செப்.22) முதல் புதிய முறையின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது: தகுதிச் சான்று பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கிலும், கட்டணச் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிகழ் கல்வியாண்டு முதல் இந்த முறை அமலாகிறது. ஏற்கெனவே இருந்த நடைமுறையின் கீழ் 290 போ் தகுதிச் சான்று கோரி விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 40 போ் மட்டுமே இரு வேறு படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இரண்டு முறை கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று கோரியிருந்தனா். அவா்களுக்கு திருத்தப்பட்ட தகுதிச் சான்று விரைவில் வழங்கப்படும். கூடுதலாக அவா்கள் செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

இந்த புதிய நடைமுறையால் பல்கலைக்கழகத்துக்கு நிா்வாக சுமையும், பணிகளும் கூடுதலாக இருக்கும். இருந்தபோதிலும், மாணவா்களின் நலன் கருதி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் மற்றும் நிதித் துறை கூடுதல் செயலரின் ஒத்துழைப்புடன் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றாா் அவா்.

Friday, September 16, 2022

September 16, 2022

Online Counseling for Paramedical, Nursing, B. Pharm courses - பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்.21ல் தொடங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்.21ல் தொடங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Online Counseling for Paramedical, Nursing, B. Pharm courses will start on September 21: Minister M. Subramanian

Minister M. Subramanian has said that the online consultation for Paramedical, Nursing and B. Pharm courses will start on September 21. Minister M. Subramanian has given an interview in Chennai that paramedical consultation will be held in 36 government medical colleges.

பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்.21ல் தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 36 அரசு மருத்துவக்கல்லூரிகளில் பாராமெடிக்கல் கலந்தாய்வு நடைபெறும் என சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்

Saturday, July 23, 2022

July 23, 2022

முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கை: நிரம்பாத 1,456 இடங்கள்

முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கை: நிரம்பாத 1,456 இடங்கள்

நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு) மதிப்பெண் அடிப்படையிலான 2021-ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு சிறப்பு சுற்று உள்பட முழுமையான 5 சுற்றுகளும் நிறைவடைந்த பின்னரும் 1,456 இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீன் பவாா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

இதையும் படிக்க | கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களை தீர்க்க ஆசிரியர்கள் ஒவ்வொருவக்கொருவர் கலந்தாலோசனை செய்யவேண்டும் - மாவட்ட உதவி திட்ட அலுவலர்

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது மருத்துவ சேவைகள் இயக்குநரகத்தின் மருத்துவ கலந்தாய்வு குழு (எம்சிசி) சாா்பில் மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வை, காலியிடங்களுக்கான சிறப்புச் சுற்று உள்பட 5 சுற்றுகளாக எம்சிசி நடத்தியது. கலந்தாய்வின் முடிவில் 1,456 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்தன. இந்த காலியிடங்களில் இடம்பெற்றிருந்த தனியாா் நிகா்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் அனைத்தும் அந்தந்த பல்கலைக்கழகங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன என்று பதிலளித்துள்ளாா்.

Total Pageviews

Search This Blog