Breaking

Showing posts with label Campus Interview. Show all posts
Showing posts with label Campus Interview. Show all posts

Tuesday, January 16, 2024

January 16, 2024

20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்



Dr.ஏ.சி.சண்முகம்

B.A., B.L., Ex.MP., & MLA., FRCPS - UK ACS மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

இடம்: திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி, குடியாத்தம்

நாள்: 20.01.2024 சனிக்கிழமை

நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை

அனுமதி இலவசம்!

100 மேற்பட்ட நிறுவனங்கள்

வேலூர் பாராளுமன்ற தொகுதியை சார்ந்த பொறியியல், கலை (ம) அறிவியல், மேலாண்மை, ARCH, நர்சிங், பிசியோ, பார்மசி, AHS, மருத்துவத் துறை, டிப்ளமோ, ஐடிஐ, பள்ளி படிப்பு முடித்த / கைவிட்ட அனுபவமில்லாத / அனுபவமுள்ள அனைவரும் பங்கேற்கலாம்.

3000 மேற்பட்ட வேலைவாய்ப்புகள்

Saturday, January 21, 2023

January 21, 2023

நாளை (22.01.2023) மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூரில் நாளை மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் Tomorrow (22.01.2023) huge private placement camp

கரூரில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை (22.01.2023) நடைபெற உள்ளது. வேலை நாடுநர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அமைச்சர்  செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

January 21, 2023 by பிரபாகரன் வீரமலை

கரூரில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை (22.01.2023) நடைபெற உள்ளது. வேலை நாடுநர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என  அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை இன்று மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்ததாவது:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொழிலாளர் நலத்துறையின் சார்பாகவும், கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் கரூர் மாவட்ட மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (22.01.2023 ) நடைபெற உள்ளது.

இந்த சிறப்புமிக்க வேலை வாய்ப்பு முகாமில் மாண்புமிகு தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் கலந்து கொண்டு தொழில் திறன் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பயிற்சிக்கான சேர்க்கை சான்றிதழ்களை வழங்க உள்ளார்கள். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 220 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 26 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.  மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி 2 கோடி 67 லட்சம் இணைப்பு இணைத்து கொண்டிருக்கிறார்கள். இதில் 2 கோடிக்கு மேற்பட்ட மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்து உள்ளார்கள். இந்த முகாம் இந்த மாதம் கடைசி வரை நடைபெறுகிறது. மின் இணைப்புடன் ஆதார்  என்னை இணைப்பதால் இலவச மின் திட்டங்கள் இரத்து ஆகும் என்ற பயம் தேவையில்லை. விவசாயிகளுக்கு விசைத்தறி கைத்தறி நெசவாளர்களுக்கு குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம்  மின்சாரத் துறையை மேம்படுத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு 9048 கோடி மானியத்தை வழங்கினார்கள். இந்த ஆண்டு கூடுதலாக 4000 கோடி மானியத்தை வழங்கி உள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாசியோடு இந்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ‌.சுந்தரவதனம்,இ.கா‌.ப., மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) திரு.ஞானசேகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி ஷீலா, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் திரு சீனிவாசன், கரூர் மாநகராட்சி துணை மேயர் திரு.ப. சரவணன், கல்லூரி முதல்வர் திருமதி கௌசல்யா தேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி வாணிஸ்வரி, மண்டல தலைவர் திரு எஸ். பி.கனகராஜ் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.

Saturday, January 07, 2023

January 07, 2023

ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம்

ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம்

அரசு பள்ளி ஆசிரியர்க ளுக்கு தேர்வு நிலை வழங்கு வது குறித்து , சிறப்பு முகாம் உத்தரவிடப்பட்டு உள்ளது . அரசு பள்ளிகளில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு , அவர்களின் அனுபவம் , கல்வி தகுதி , பணி நியமன காலம் ஆகியவை கருதி , தேர்வு நிலை உயர்வு வழங்கப்படும். இதற் காக ஏராளமான ஆசிரியர்கள் விண்ணப்பித்து , நீண்ட நாட்க ளாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் , ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவது தொடர்பாக , கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் , மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடத்தி , உரிய தீர்வு காணுமாறு , கல்வி அலுவலர்களுக்கு , பள்ளிக்கல்வி கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

Friday, December 30, 2022

December 30, 2022

கௌரவ விரிவுரையாளர் பணிக்கு ஜன. 3ம் தேதி நேர்முக தேர்வு- அமைச்சர் பொன்முடி

கௌரவ விரிவுரையாளர் பணிக்கு ஜன. 3ம் தேதி நேர்முக தேர்வு- அமைச்சர் பொன்முடி Jan. for the post of Honorary Lecturer. Interview on 3rd - Minister Ponmudi அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணிபுரிய மாநில அளவில் நேர்முகத் தேர்வு ஜனவரி 3ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் கலை கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்ற 1,895 பேர் பணிக்கு எடுக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்து. கடந்த காலங்களில் கௌரவ விரிவுரையாளர்களை பணியில் அமர்த்தும் போது அந்தந்த கல்லூரி முதல்வர்களே அவர்களை பணியில் நியமனம் செய்தனர். இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதன் காரணமாக நேர்முகத் தேர்வின் வாயிலாக கௌரவ விரிவுரையாளர்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்ற 9,915 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களுக்கு வருகின்ற 3ம் தேதி சென்னையில் அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக கூறினார். 4ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தமிழக முழுவதும் உள்ள 8 பல்கலைக்கழகங்களில் பாடவாரியாக நேர்முகத் தேர்வானது நடைபெற உள்ளது. நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களின் தரத்தின் அடிப்படையில் அவர்களுக்கான பணி வழங்கப்படும். PhD, Net, Slet ஆகிய தகுதிகளின் அடிப்படையில் அவர்களுக்கான பணி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நேர்முக தேர்வில் சமூக ரீதியிலான இட ஒதுக்கீடு வழங்கப்படும். கலப்பு திருமணம் செய்வதற்கு இட ஒதுக்கீடு கிடையாது எனவும், விரிவுரையாளர்கள் பணிகளில் வட மாநிலத்தவருக்கு வாய்ப்பு கிடையாது எனவும் தெரிவித்தார்.

மேலும் கௌரவ விரிவுரையாளர்கள் 11 மாத அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கான ஊதியம் 20,000 ரூபாய் வரை வழங்கப்படும். தற்போது கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் 11 மாத காலம் பணியாற்றிய பின் அவர்களும் நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தப்படுவார்கள். அப்போது தகுதி இல்லாத கௌரவ விரிவுரையாளர்கள் பணியை விட்டு சென்று விடுவார்கள் எனவும் தெரிவித்தார் கெளரவ விரிவுரையாளர் பணிக்கு ஜன;4 -12 வரை நேர்முகத் தேர்வு - அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கொளரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 4-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், வரும் 3-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னையில் அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
December 30, 2022

நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்



செங்கல்பட்டில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து நடத்தும் இந்த முகாம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (டிச. 31) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

இதில், 8, 10-ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா் உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்க உள்ளனா்.

முகாமுக்கு வருவோா் கல்வி சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் பங்கேற்கலாம் என்று ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.

Monday, September 26, 2022

September 26, 2022

ரூ.50,000 சம்பளத்தில் கைத்தறி, துணிநூல் துறையில் வேலை - நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.9.2022

Job-in-Handloom-and-Textile-Industry---Date-of-Interview:-28.9.2022 - ரூ.50,000 சம்பளத்தில் கைத்தறி, துணிநூல் துறையில் வேலை - நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.9.2022
ரூ.50,000 சம்பளத்தில் கைத்தறி, துணிநூல் துறையில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் நிரப்பப்பட உள்ள சந்தையியல் மேலாளர் பணியிடங்களுகான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Marketing Manager

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.50,000 + இதர சலுகைகள்

தகுதி: சந்தையியல் பிரிவில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 15.9.2022 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: Co-optex Head Office, No.350, Pantheon Road, Egmore, Chennai - 600 008.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.9.2022 அன்று காலை 11 மணி

Saturday, August 20, 2022

August 20, 2022

இன்ஜி., கவுன்சிலிங் அட்டவணை அறிவிப்பு 7 நாளில் கல்லூரியில் சேர புதிய கட்டுப்பாடு

இன்ஜினியரிங் பொது மற்றும் தொழிற்கல்வி கவுன்சிலிங், 25ல் துவங்குகிறது. இதற்கான 'ஆன்லைன்' விருப்பப் பதிவு உள்ளிட்ட கால அட்டவணை மற்றும் நிபந்தனைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

1.56 லட்சம் பேர்

கவுன்சிலிங், நான்கு சுற்றுகளாக நடக்கிறது. இதில், 1.49 லட்சம் இடங்களுக்கு, 1.56 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். சிறப்புப் பிரிவு ஒதுக்கீட்டில் தகுதி பெற்றவர்களும், பொது கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.

* கவுன்சிலிங் அட்டவணைப்படி, சம்பந்தப்பட்ட 'கட் ஆப்' மதிப்பெண் மற்றும் தர வரிசை பெற்றவர்கள், அதற்கான தேதியில், தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாடப் பிரிவுகளை, 'சாய்ஸ் பில்லிங்' முறையில், பதிவு செய்ய வேண்டும்

* மாணவர்கள் பதிவு செய்த முன்னுரிமை வரிசை, காலியிடங்கள் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் கல்லுாரிகள் ஒதுக்கப்படும். ஒதுக்கப்பட்ட கல்லுாரியை ஏற்பதற்கான அவகாசத்துக்குள், உறுதி செய்ய வேண்டும்

கட்டாயம் சேர வேண்டும்

*உறுதி செய்தவர்களுக்கு மட்டும், இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். பின், ஏழு நாட்களுக்குள் ஒதுக்கீடு கிடைத்த கல்லுாரிகளில், கட்டாயம் சேர வேண்டும். சேராவிட்டால், அடுத்த சுற்று மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும்

ஆன்லைனில் மட்டுமே

* ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், அருகில் உள்ள கவுன்சிலிங் உதவி மையத்தை அணுகலாம். மேலும், www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களையும் பார்க்கலாம்

* எந்த மாணவரும் சென்னை கவுன்சிலிங் மையத்துக்கு வர வேண்டியதில்லை. அனைத்து பணிகளையும் தங்கள் வீட்டில் இருந்தோ அல்லது கவுன்சிலிங் உதவி மையங்களில் இருந்தோ, ஆன்லைனில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

கவுன்சிலிங் கால அட்டவணை

கவுன்சிலிங் கட் ஆப் மதிப்பெண் தரவரிசை விருப்ப பதிவு தேதி தற்காலிக ஒதுக்கீடு உறுதிப்படுத்தும் தேதி

முதல் சுற்று 200 முதல் 184.505 வரை ஒன்று முதல் 14,524 வரை ஆக., 25 முதல் 27 வரை ஆக., 28 ஆக., 29

இரண்டாம் சுற்று 184.500 முதல் 163 வரை 14,525 முதல் 45,577 வரை செப்., 9 முதல் 11 வரை செப்., 12 செப்., 13

மூன்றாம் சுற்று 162.995 முதல் 130.250 வரை 45,578 முதல் 94,620 வரை செப்., 23 முதல் 25 வரை செப்., 26 செப்., 27

நான்காம் சுற்று 130 முதல் 77.500 வரை 94,621 முதல் 1,56,278 வரை அக்., 9 முதல் 11 வரை அக்., 12 அக்., 13

தொழிற்கல்வி 200 முதல் 80.500 வரை ஒன்று முதல் 1,879 வரை அக்., 25 முதல் 27 வரை அக்., 28 அக்., 29

தொழிற்கல்வி 7.5 சதவீதம் 200 முதல் 80.500 வரை ஒன்று முதல் 488 வரை அக்., 25 முதல் 27 வரை அக்., 28 அக்., 29

ஒரே தேதியில் 2 கவுன்சிலிங்

அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கும், பொது கவுன்சிலிங்கின் போதே, நான்கு சுற்றுகளாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

7.5 சதவீதத்துக்கான தரவரிசையில், முதல் சுற்றில், ஒன்று முதல் 332வது ரேங்க்; இரண்டாம் சுற்றில், 333 முதல் 2,407வது ரேங்க்.மூன்றாம் சுற்றில், 2,408 முதல் 7,733வது ரேங்க் மற்றும் 7,734வது ரேங்க் முதல், 22 ஆயிரத்து, 99வது ரேங்க் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கு, அதே சுற்றிலேயே பொது கவுன்சிலிங்கும் சேர்ந்து நடக்கும்.

அவர்களுக்கான ஆன்லைன் பக்கத்தில், 'சாய்ஸ் பில்லிங்' வசதியில், அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கும், பொது கவுன்சிலிங்குக்கான இட ஒதுக்கீடுக்கும், தனித்தனியாக இரண்டு விருப்ப பதிவு பட்டியல் காட்டப்படும்.இரண்டு பட்டியலிலும், மாணவர்கள் தங்களுக்கான கல்லுாரிகளை வரிசைப்படுத்தலாம். இரண்டு பட்டியலிலும் மாணவர்களின் முன்னுரிமை வரிசை அடிப்படையில், தனித்தனியே இரண்டு வித ஒதுக்கீடுகள் வழங்கப்படும்.

அவற்றில், எந்த ஒதுக்கீட்டு கல்லுாரியில் மாணவர் சேர விரும்புகிறாரோ, அந்த கல்லுாரியில், ஒரு வாரத்துக்குள் சேர வேண்டும். அவர் சேராமல் விடும் இடம் காலியானதாக கருதப்பட்டு, அடுத்த சுற்று கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும். அதேபோல், இரண்டிலும் சேராமல் தவற விட்டால், மீண்டும் அடுத்த சுற்றில் பங்கேற்க முடியாது.
August 20, 2022

TNEA கவுன்சலிங்; கேம்பஸ் இண்டர்வியூ-வில் அசத்தும் அரசு பொறியியல் கல்லூரிகள்

Tamilnadu Government Engineering colleges campus placements status: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கவுன்சலிங் தொடங்கி உள்ள நிலையில், அரசு பொறியியல் கல்லூரிகளின் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து தெரிந்துக் கொள்வோம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கிவிட்டது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு மேல் பொது கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் பொறியியல் படிக்க நினைக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முதல் விருப்பம் கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் எம்.ஐ.டி போன்ற அரசு கல்லூரிகள் தான்.

ஆனால் அதன் பிறகு, கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி, சேலம் அரசு கல்லூரி உள்ளிட்ட ஒரு சில அரசு கல்லூரிகளைத் தவிர பிற அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை தேர்வு செய்ய மாணவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்தநிலையில், அரசு கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருக்காது, சிறந்த கற்பித்தல் மற்றும் வேலைவாய்ப்பு இருக்காது என்ற பொதுவான எண்ணம் பலரிடையே இருந்து வருகிறது. ஆனால் அரசு கல்லூரிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன, மேலும் அங்கு வளாக நேர்காணல் எனும் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் நூற்றுக்கணக்காணோர் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். இந்த அரசு கல்லூரிகளில் புகழ்பெற்ற தனியார் மென்பொருள் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தி, வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன என கல்வியாளர் ரமேஷ் பிரபா தனது யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும் அரசு பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டில் கேம்பஸ் இண்டர்வியூ-வில் தேர்வு பெற்றவர்களின் சதவீதத்தையும் ரமேஷ் பிரபா வழங்கியுள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த ஆண்டில் 90% பேர் கேம்பஸ் இண்டர்வியூ-வில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த ஆண்டில் 79% பேர் கேம்பஸ் இண்டர்வியூ-வில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டில் 77% பேர் கேம்பஸ் இண்டர்வியூ-வில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

சேலத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டில் 70% பேர் கேம்பஸ் இண்டர்வியூ-வில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டில் 56.5% பேர் கேம்பஸ் இண்டர்வியூ-வில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

பர்கூரில் உள்ள தன்னாட்சி பெற்ற அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டில் 53.2% பேர் கேம்பஸ் இண்டர்வியூ-வில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

போடிநாயக்கனூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டில் 52.5% பேர் கேம்பஸ் இண்டர்வியூ-வில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

தருமபுரியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டில் 50.7% பேர் கேம்பஸ் இண்டர்வியூ-வில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

மேலே உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், சிறந்த வேலைவாய்ப்பை பெற்றுதரும் நிலையில், அங்கு கட்டணங்களும் குறைவு என்ற நிலையில், மாணவர்கள் இந்த கல்லூரிகளை விரும்பினால் தேர்வு செய்துகொள்ளலாம் என்று ரமேஷ் பிரபா கூறியுள்ளார்.

Total Pageviews

Search This Blog