Breaking

Showing posts with label அரசு கல்லூரி. Show all posts
Showing posts with label அரசு கல்லூரி. Show all posts

Wednesday, August 03, 2022

August 03, 2022

மாணவர்கள் கல்லூரி மாறினால் முழு ஃபீஸ் திரும்ப தர வேண்டும்

மாணவர்கள் கல்லூரி மாறினால் முழு ஃபீஸ் திரும்ப தர வேண்டும்
August 03, 2022

அரசு கல்லூரிகளில் நன்கொடை மாணவர்கள், பெற்றோர் புகார்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, அந்தந்த கல்லுாரிகளால் நடத்தப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை கல்லுாரி கல்வி இயக்குனரகம் ஆன்லைன்' வழியில் பெற்றுள்ளது. விண்ணப்பங்களை, கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கை கமிட்டி பரிசீலனை செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும். தரவரிசையின்படி, மாணவர்களுக்கான பாட பிரிவுகள் ஒதுக்கப்படும். இதில், 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில், சில அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை சேர்க்கைக்கு இடம் வாங்கி தருவதாகக் கூறி, இடைத்தரகர்கள் மாணவர்களின் பெற்றோரிடம் நன்கொடை வசூலிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் குழு, மாணவர், ஆசிரியர் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயர்களில், இந்த வசூல்வேட்டை நடக்கிறது.

இதுகுறித்து, உயர்கல்வி துறை விசாரணை நடத்தி, நன்கொடை வசூலிப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sunday, July 31, 2022

July 31, 2022

அரசு கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அரசு கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சுமாா் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடத்தப்பட்டது. அதன்படி, நிகழாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி ஜூலை 27ஆம் தேதி நிறைவடைந்தது.



அதில் 4.07 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் செய்துள்ளனா். முதல்முறையாக கலை, அறிவியல் சோ்க்கை விண்ணப்பப்பதிவு 4 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அரசு கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது.



மூன்று வகையான தரவரிசைப் பட்டியலை அந்தந்த கல்லூரிகள் வெளியிடும் என்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் வெளியிடப்படும் தரவரிசை பட்டியலைத் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog