Breaking

Showing posts with label TNPSC GROUP IV EXAM. Show all posts
Showing posts with label TNPSC GROUP IV EXAM. Show all posts

Wednesday, November 15, 2023

November 15, 2023

குரூப் 4 தேர்வு அறிவிப்பு எப்போது? - TNPSC தகவல்



குரூப் 2 முதன்மை தேர்வு , குரூப் 1 முதன்மை தேர்வு இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகே குரூப் 4 தேர்வு அறிவிப்பு notification வெளியிடப்படும்

மேலும் குரூப் 1 தரத்தில் உள்ள சில பதவிகளுக்கான முதல் நிலை தேர்வை குரூப் 1 முதல் நிலை தேர்வோடு இணைத்து நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்ட பின்பு காலி பணியிடங்களை அதிகரித்து குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்

மேலும் குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகே குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது

தற்போது குரூப் 2 முதன்மைத் தேர்வில் மட்டுமே முழு கவனம் செலுத்துவதாக tnpsc தகவல்

Friday, October 27, 2023

October 27, 2023

TNPSC குரூப் 4 தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும்? முக்கியத் தகவல்கள்!



TNPSC குரூப் 4 தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும்? காலியிடங்கள் எத்தனை? முக்கியத் தகவல்கள்!

2023ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விரைவில் வெளியிடயிருப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023ம் ஆண்டிற்கான போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தினை டிஎன்பிஎஸ்சி முன்னதாக வெளியிட்டது.


இதில், பல இலட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நவம்பர் 12-ஆம் நாள் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் ,அதற்கு முன்னதாகவே குரூப் 4 தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியாகும் என்றும் எதிரிபார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும்
CLICK HERE

Monday, March 27, 2023

March 27, 2023

ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி? பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீண் - அண்ணாமலை குற்றச்சாட்டு

ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி? பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீண் - அண்ணாமலை குற்றச்சாட்டு 2000 pass from one coaching center? Hard work of thousands of youth in vain - Annamalai allegation

தென்காசியைச் சேர்ந்த அந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் 40-க்கும் அதிகமான கிளைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் பயின்ற மாணவர்கள் 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திலிருந்து, அதிக அளவில் தேர்வர்கள் எவ்வாறு தேர்ச்சி அடைந்தார்கள் என்கிற சந்தேகம், தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தங்கள் மையத்திலிருந்து 2000 பேர் தேர்வானது உண்மைதான் என்றும், தேர்வானவர்களின் பட்டியலை அளிக்க தயாராக உள்ளதாகவும், அந்த பயிற்சி மையத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார். இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது.

அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும். உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும், அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Saturday, March 25, 2023

March 25, 2023

TNPSC குரூப் - 4 தேர்வு முடிவுகளில் குளறுபடி TNPSC Group – 4 Exam Result Confusion

TNPSC குரூப் - 4 தேர்வு முடிவுகளில் குளறுபடி - TNPSC Group – 4 Exam Result Confusion

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டதில் குளறுபடி என புகார்.
March 25, 2023

TNPSC | குரூப் 4 தேர்வு தரவரிசை பட்டியலில் ஏற்பட்ட குழப்பத்தால் சிக்கல் - Problem due to confusion in Group 4 exam rank list

TNPSC | குரூப் 4 தேர்வு தரவரிசை பட்டியலில் ஏற்பட்ட குழப்பத்தால் சிக்கல் - TNPSC | Problem due to confusion in Group 4 exam rank list

Thursday, July 14, 2022

July 14, 2022

TNPSC - குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

TNPSC - குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது TNPSC.

கீழ் உள்ள TNPSC இணையதள இணைப்பில் தங்களது OTR கண எண்ணை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

TNPSC Group 4 Exam Hall Ticket Direct Link - Download here

10 நாளுக்கு முன்பே ஹால் டிக்கெட் வெளியான நிலையில் தேர்வில் பின்பற்ற வேண்டியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

விஏஓ , பல அரசுதுறைகளில் இளநிலைஉதவியாளர் உள்ளிட்ட 7,382 பணியிடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Sunday, April 17, 2022

April 17, 2022

TNPSC குரூப் 4 தோ்வு: விண்ணப்பிக்க 10 நாள்களே அவகாசம்

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க 10 நாள்களே அவகாசமாக உள்ளன. கடைசி நேர இணையதள நெரிசல் சிரமங்களை கருத்தில் கொண்டு, இப்போதே விண்ணப்பிக்க வேண்டுமென தோ்வா்களை அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

குரூப் 4 தோ்வு, கரோனா பாதிப்புக்குப் பிறகு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட மொத்தமாக 7 ஆயிரத்து 138 காலிப்

பணியிடங்களுக்கு தோ்வு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. தோ்வுக்கான அறிவிக்கை கடந்த மாா்ச் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28 கடைசி நாளாகும். அதாவது 11 நாள்களே எஞ்சியுள்ளன. எழுத்துத் தோ்வானது ஜூலை 24-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 வரை நடைபெறுகிறது. ோ்வா்கள் ஆா்வம்:

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க தோ்வா்கள் அதிகளவு ஆா்வம் காட்டி வருகின்றனா். இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்ட தோ்வா்கள் விண்ணப்பம் செய்துள்ளனா். இணையதளம் வாயிலாக எந்த நேரமும் விண்ணப்பம் செய்யலாம் என்பதால், விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 15 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வுக்கு விண்ணப்பம் செய்யலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் கணித்துள்ளது.

புதிய மாவட்டங்கள்:

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் அடங்கியுள்ள தாலுகாக்களை தோ்வு மையங்களாக தோ்வாணையம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களில் அதிகபட்சமாக 8 வட்டங்களும், மயிலாடுதுறை, திருப்பத்தூரில் குறைந்தபட்சமாக 4 வட்டங்களும் தோ்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Thursday, March 31, 2022

March 31, 2022

'குரூப் 4' தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்

ஜூலை 24ல், குரூப் 4 தேர்வு

'குரூப் 4' தேர்வுக்கு, விண்ணப்ப பதிவு துவங்கியது. வி.ஏ.ஓ., என்ற கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர் உட்பட, ஏழு வகை பதவிகளில், 7,301 காலியிடங்களை நிரப்ப, ஜூலை 24ல், குரூப் 4 தேர்வு நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' வழி விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.

ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம்

ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம்.இந்த தேர்வில் பங்கேற்க, வரும் ஜூலை 1ல் குறைந்த பட்சம், 21 வயது முடிந்திருக்க வேண்டும்; 60 வயது வயதுள்ளவர்கள் வரை எழுதலாம். கல்வி தகுதியை பொறுத்தவரை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இளநிலை உதவியாளர் பணிக்கு, பிளஸ் 2; மற்ற பதவிகளுக்கு குறைந்தபட்சம், 10ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சான்றிதழ் சரி பார்ப்பு

தட்டச்சர் பணிக்கு, தட்டச்சு முதுநிலையும்; சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து முதுநிலையும் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.எழுத்து தேர்வு முடிவுகள், அக்டோபரில் வெளியிடப்படும். சான்றிதழ் பதிவேற்றம் அக்டோபரிலும், சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் பணி நியமன கவுன்சிலிங், நவம்பரிலும் நடைபெறும். கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in/ என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tuesday, March 29, 2022

March 29, 2022

ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு; நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: TNPSC அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,

ஜூலை 24-ம் தேதி குரூப் 4 தேர்வு:

ஜூலை 24-ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. 3 மணி நேரம் நடைபெறும் தேர்வுகளில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும்.

குரூப் 4 - 7,382 பணியிடங்களுக்கு தேர்வு:

7,382 காலி பணியிடங்களுக்குக்கான குரூப் 4 தேர்வுகள் வரும் ஜூலை 24ம் தேதி நடைபெறுகிறது. 7,382 காலி பணியிடங்களில் 81 பணியிடங்கள் விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெறும். 100 கேள்விகள் தமிழ் மொழி சார்ந்ததாக இருக்கும்; 75 கேள்விகள் பொது அறிவு சம்மந்தப்பட்டவை. 300 மதிப்பெண்களில் 90 மதிப்பெண்கள் எடுத்தவர்கள்தான் தரவரிசை பட்டியலில் இடம்பெறுவார்கள். குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியாகும்:

குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்துக்கு தேர்வு நடைபெற உள்ளது. அக்டோபருக்குள் காலியாகும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்துக்கு விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர். குரூப் 4 தேர்வுக்கு 25 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப் 4 தேர்வு - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்:

குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Total Pageviews

Search This Blog