Breaking

Showing posts with label NEET entrance exam. Show all posts
Showing posts with label NEET entrance exam. Show all posts

Wednesday, January 29, 2025

Monday, March 25, 2024

Tuesday, November 14, 2023

November 14, 2023

NEET, JEE நுழைவு தேர்வுகள் - அரசு பயிற்சியகத்தில் இதுவரை 1,07,225 மாணவர்கள் பதிவு



NEET, JEE Entrance Exams - 1,07,225 students registered in Govt Coaching Center so far - NEE, JEE நுழைவு தேர்வுகள் - அரசு பயிற்சியகத்தில் இதுவரை 1,07,225 மாணவர்கள் பதிவு

மாணவர்கள் நலன் கருதி பாடங்களை முடிக்க சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க வேண்டும் : அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

மாணவர்கள் நலன் கருதி பாடங்களை முடிக்க சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார்.

தற்போது வடகிழக்கு பருவமழை மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கும் அவ்வப்போது விடுமுறை அளிக்கும் சூழ்நிலைகளும் உருவாகிறது. இம்மாதிரியாக விடப்படும் அவசரகால பள்ளி விடுமுறைகளை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வேலைநாட்களாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில்,

பருவகால மழை பெய்து வருவதால் அவ்வப்போது மாவட்டத்தின் நிலை குறித்து அறிந்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகிறார்கள்.

அதே போல அடுத்தடுத்து, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வு ஆகியவை வரவுள்ளது அதனால் சனிக்கிழமைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய சூழல் இருப்பதால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நீட் மற்றும் JEE நுழைவு தேர்வில் அரசு பயிற்சியகத்தில் இதுவரை 46,216 மாணவர்கள் நீட் தேர்வுக்கும், 29 ஆயிரம் மாணவர்கள் JEE நுழைவு தேர்வுக்கும் என மற்ற நுழைவு தேர்வுகள் சேர்த்து மொத்தமாக 1,07,225 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

அடுத்து தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் விளையாட்டுத்துறை சார்பில் ஆண்டு தோறும் 25000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அளிக்கப்படுகிறது.

அதில் குறிப்பிட்ட அளவிலான விளையாட்டு பொருட்களையே மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அதனால் வரும் காலங்களில் ஒரு பொது கணக்கீட்டு எடுத்து அதன் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் தேவியான விளையாட்டு உபகரணங்கள் மட்டுமே வாங்கி அனுப்பும்படி செயல்படுத்த உள்ளோம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

Thursday, September 21, 2023

September 21, 2023

மைனஸ் மதிப்பெண் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் சேரலாம் என்றால், நீட் தேர்வு தகுதியை குறைக்கிறதா, அதிகரிக்கிறதா?



மைனஸ் மதிப்பெண் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் சேரலாம் என்றால், நீட் தேர்வு தகுதியை குறைக்கிறதா, அதிகரிக்கிறதா? - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினா?.

இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பெர்சைன்டைல் ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதியவர்கள் அனைவருமே, கோடிக்கணக்கில் பணம் இருந்தால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்பது தான் இதன் பொருளாகும். நடப்பாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வில் 30 பேர் ஒற்றை இலக்கத்திலும், 14 பேர் பூஜ்ஜியம் மதிப்பெண்களும், 13 எதிர்மறை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இப்போது கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இது மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையில் உயர்த்தாது, கண்டிப்பாக குறைக்கும். இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் 8 ஆயிரத்துக்கும் கூடுதலான முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படாமல் போகும் என்றும், அந்த இடங்களை நிரப்ப தகுதியான மாணவர்கள் இல்லை என்பதால் தான் தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக மத்திய அரசின் தரப்பிலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பிலும் கூறப்படுகிறது. இது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் ஆகும். காலியாக இருக்கும் இடங்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவை தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் தான் உள்ளன. அவற்றின் வருமானம் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. முதுநிலை நீட் தேர்வுக்கான விதிகளின்படி, மொத்தம் 800 மதிப்பெண் கொண்ட தேர்வில் பொதுப்போட்டிப் பிரிவினருக்கு 291 மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 257 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதிய 2 லட்சத்து 517 பேரில், 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மேற்கண்ட மதிப்பெண்களை பெற்று முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் உள்ள மொத்த இடங்களே 45,337 தான். அவற்றை நிரப்ப அந்த இடங்களை விட கிட்டத்தட்ட மும்மடங்கினர் தகுதி பெற்று இருக்கும் போது, தகுதி மதிப்பெண்களை குறைத்து கூடுதலாக 80,000 பேருக்கு தகுதி வழங்க வேண்டிய தேவை என்ன?

முதுநிலை மருத்துவப் படிப்பில் காலியாக இருக்கும் இடங்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்கள் தனியார் கல்லூரிகளில் தான் உள்ளன. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தமிழக அரசின் கல்வி நிறுவனங்களில் ஆண்டு கல்விக் கட்டணமே ரூ.20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை தான். ஆனால், தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கல்விக்கட்டணம் ரூ.40 லட்சத்துக்கும் அதிகம் ஆகும். இந்த அளவு கல்விக்கட்டணத்தை செலுத்துவது இதுவரை தகுதி பெற்ற மாணவர்களால் சாத்தியமில்லை என்பதால் தான், 8000 இடங்கள் நிரம்பவில்லை. இப்போது அந்தக் கட்டணத்தை செலுத்தும் அளவுக்கு புதிய போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கவே தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டு 80,000 பேருக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது சமூக அநீதி ஆகும். முதுநிலை மருத்துவக் கல்வி இடங்கள் வீணாகக் கூடாது, அவ்வாறு வீணானால் மருத்துவ வல்லுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்விக் கட்டணத்தை குறைத்து, அந்த இடங்கள் அனைத்தையும் அரசே கலந்தாய்வு மூலம் நிரப்பினால், ஏற்கனவே தகுதி பெற்ற மாணவர்களைக் கொண்டு அனைத்து இடங்களையும் நிரப்ப முடியும். ஆனால், தகுதியான மாணவர்கள் தேவையில்லை, பணம் வைத்துள்ள மாணவர்கள் தான் தேவை என்று தேசிய மருத்துவ ஆணையமும், தனியார் கல்லூரிகளும் எதிர்பார்ப்பது தான் அனைத்து சிக்கல்களுக்கும், சீரழிவுகளுக்கும் காரணம் ஆகும்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு 2010-ஆம் ஆண்டு முதன்முறையாக அறிவிக்கப்பட்ட போது, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதும் தான் அதன் நோக்கங்கள் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அவை இரண்டுமே நடக்கவில்லை. மாறாக தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தகுதியைப் பற்றிக் கவலைப்படாமல் கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதற்கு துணை செய்வதற்காகவே நீட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது இப்போது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பதே உண்மை. எனவே, மருத்துவப் படிப்புக்கான அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Sunday, August 13, 2023

August 13, 2023

நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநர் பேச்சு - அரசியல் கட்சிகள் நிலைப்பாடு என்ன?

நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநர் பேச்சு - அரசியல் கட்சிகள் நிலைப்பாடு என்ன?

நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருப்பதில் அரசியல் கட்சிகள் நிலைப்பாடு என்ன என்பதை பார்க்கலாம்

Tuesday, January 10, 2023

January 10, 2023

நீட் தோ்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்

நீட் தோ்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்

நீட் தோ்வு விலக்கு சட்டமசோதாவுக்கு குடியரசுத் தலைவா் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநா் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆளுநா் உரையில் கூறியிருப்பது:

நீட் தோ்வு கிராமப்புற ஏழை மாணவா்களை மிகவும் பாதிப்பதாகவும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதை கருத்தில்கொண்டு, இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது.

அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தோ்வில் இருந்து தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இந்தச் சட்டம் குறித்து கோரப்பட்ட விளக்கங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சட்ட முன்வடிவுக்கான ஒப்புதலை விரைந்து வழங்க இந்த அரசு வலியுறுத்துகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, November 01, 2022

November 01, 2022

நீட் பயிற்சி மையத்திலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

நீட் பயிற்சி மையத்திலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!

திருப்பூர்: திருப்பூரில் நீட் பயிற்சி மையத்தின் 3 ஆவது மாடியில் இருந்து குதித்த 16 வயது மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தனியார் நீட் கோச்சிங் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் படியூரைச் சேர்ந்த கட்டட மேஸ்திரியின் மகள் படித்து வந்தார்.

இந்தநிலையில், ஆனந்தி வழக்கம்போல் பயிற்சி மையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளார். இதன் பிறகு பயிற்சி மையத்தின் 3 ஆவது மாடிக்குச் சென்ற ஆனந்தி அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Wednesday, September 07, 2022

September 07, 2022

NEET தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை ஏன்?

NEET தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை ஏன்?

NEET UG தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை இன்று மாலை https://neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Tuesday, August 30, 2022

August 30, 2022

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் தடுக்க கருவிழியை பதிவு செய்ய வேண்டும்

Iris should be registered to prevent impersonation in 'NEET' examination 'நீட்' தேர்வில் ஆள் மாறாட்டத்தை தடுக்க மாணவர்களின் கருவிழியை பதிவு செய்ய வேண்டும் என, சி.பி.ஐ., - சி.பி.சி.ஐ.டி., தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக, சென்னை மாணவர் உதித்சூர்யா உட்பட சிலர் மீது, 2019ல் தேனி சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்தனர்.கைதான இடைத்தரகர் கேரளா, திரூர் உன்னியலைச் சேர்ந்த ரஷீத் உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.ஏற்கனவே விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், 'இவ்வழக்கில் தொடர்புடைய மாணவர்களுக்காக வெளிமாநில தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டம் மூலம் சிலர் தேர்வு எழுதியுள்ளனர்.

'இதுபோல் பிற மாநிலங்களில் நடந்திருக்க வாய்ப்புள்ளது. வரும் காலங்களில் இதுபோல தவறுகள் நடக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து சி.பி.ஐ., பதிலளிக்க வேண்டும்' என்றார்.இந்த வழக்கை நீதிபதி எம்.நிர்மல்குமார் மீண்டும் நேற்று விசாரித்தார். சி.பி.சி.ஐ.டி., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:நீட் ஆள்மாறாட்ட வழக்கில், 13 பேர் கைதாகியுள்ளனர். மூன்று பேர் கீழமை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இரண்டு பேர் முன்ஜாமின் பெற்றுள்ளனர்.

தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது போட்டோ, கைரேகையை தவிர கண்ணின் கருவிழியை பதிவு செய்து பாதுகாக்க வேண்டும்.மாணவர்கள், பெற்றோர் பெயர், முகவரியை முறையாக பதிவு செய்ய வேண்டும். அதற்கு பள்ளி நிர்வாகம் அல்லது அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரியின் சான்றொப்பம் பெற வேண்டும்.இதில், மாறுபாடு இருந்தால் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான தற்காலிக அனுமதி வழங்கும் முன் ஆதார், இ.எம்.ஐ.எஸ்., எண், மாணவர், பெற்றோர் பெயர் இரட்டைப் பதிவுகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவித்தது.இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை பைசல் செய்தார்.

Saturday, August 27, 2022

August 27, 2022

உள்ளாடைகளை அகற்றக் கூறிய விவகாரம்: நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

கேரளத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு அறிவுறுத்திய விவகாரத்தில், மாணவிகளுக்கு நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

கேரளத்தில் அந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதிய மாணவிகளுக்கு மட்டும் செப்டம்பர் 4ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லம் பகுதியில், பாதிக்கப்பட்ட மாணவிகள் மட்டும் மறுதேர்வு எழுத தேசிய தேர்வு முகமை அனுமதி அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயூரில் அமைந்துள்ள தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம், அவா்களின் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு தேசிய தோ்வு முகமையால் சோதனையிடும் பணிக்காக அமா்த்தப்பட்ட நிறுவனத்தின் பணியாளா்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனை ஒரு மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, இது நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

தோ்வு மையத்தில் தனது மகள் அவமதிக்கப்பட்டதாக மாணவியின் தந்தை ஆயூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். மாநில மனித உரிமைகள் குழுவும் இந்த விஷயத்தில் தலையிட்டு விளக்கம் கேட்டுள்ளது.

உள்ளாடைகளை அகற்ற வலியுறுத்திய விவகாரத்தில் நீட் தோ்வு மையப் பணியில் இருந்த 5 பெண்கள் கைது செய்யப்பட்டனா். இதில் மூவா் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இப்பணிக்கு அமா்த்தப்பட்டவா்கள். இருவா் தனியாா் கல்வி நிலையத்தில் பணியாற்றிய பெண் துப்புரவுத் தொழிலாளா்கள் ஆவா்.

Wednesday, July 27, 2022

July 27, 2022

நீட் தேர்வு எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப்? மீண்டும் தேர்வு எழுதலாமா? அல்லது வேறு படிப்புகளை தேர்வு செய்யலாமா? கல்வியாளர் விளக்கம்

நீட் தேர்வு எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் எவ்வளவு? மீண்டும் தேர்வு எழுதலாமா? அல்லது வேறு படிப்புகளை தேர்வு செய்யலாமா? கல்வியாளர் விளக்கம்

நீட் தேர்வில் சிறப்பாக செயல்படாத மாணவர்கள் என்ன செய்யலாம்? அடுத்த நீட் தேர்வுக்கு தயாராகலாமா? அல்லது வேறு படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாமா? இதுபோன்ற கேள்விகளுக்கு கல்வியாளரின் விளக்கத்தை இப்போது பார்ப்போம்.

நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு சற்று எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவு வினாக்கள் விடையளிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக மாணவர்கள் கூறியுள்ளனர். தமிழக மாணவர்களைப் பொறுத்தவரை, இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதி வினாக்கள் விடையளிக்க சற்று கடினமாக இருந்ததாக கூறினார். இதனையடுத்து, தேர்வில் சிறப்பாக செயல்படாத மாணவர்கள் அடுத்து என்ன என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர். சிலர் அடுத்த நீட் தேர்வுக்கு தயாராகலாம் என்றும், சிலர் பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்யலாம் என்றும், சிலர் மருத்துவம் சார்ந்த படிப்புகளைப் படிக்கலாம் என்றும் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், நீட் தேர்வில் சிறப்பாக செயல்படாத மாணவர்கள் என்ன செய்யலாம் என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை பொறுத்தவரை, பொதுப் பிரிவினருக்கு 585-590, BC பிரிவினருக்கு 540-550, MBC பிரிவினருக்கு 520-510, SC பிரிவினருக்கு 430-450 என்ற அளவில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கு குறைவாக மதிப்பெண்கள் வரும் மாணவர்கள், குறைந்தபட்சம் 375-400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து இருந்து, எம்.பி.பி.எஸ் தான் உங்கள் லட்சியம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி தான் வேண்டும் என்றால், மீண்டும் நீட் தேர்வு எழுதலாம். அதேநேரம் 300 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்றவர்கள், மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்குமா என்பதை யோசித்து செயல்படுங்கள்.

அதேநேரம் வேறு படிப்புக்கு செல்ல நினைப்பவர்கள், பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். விரும்பினால் நீங்கள் பயோ மெடிக்கல், பயோ டெக்னாலஜி போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

பொறியியல் படிப்புகளை விரும்பாத மாணவர்கள், கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வளம் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம். இதற்கு அடுத்தப்படியாக, நீட் தேர்வு இல்லாத இந்திய மருத்துவ படிப்பான, இளங்கலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பை தேர்வு செய்யலாம். ஏனெனில் பிற இந்திய மருத்துவ படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அவசியம்.

அதேநேரம், எம்.பி.பி.எஸ் கிடைக்காத அதேநேரம், தேவையான நீட் மதிப்பெண் உள்ளவர்கள் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற படிப்புகளை தேர்வு செய்யலாம்.

இது தவிர மருத்துவம் சார்ந்த படிப்புகளான கண் மருத்துவம், ஸ்பீச் அண்ட் ஆடியாலஜி, பி.பார்ம் ஆகியவற்றையும், விரும்பினால் நர்சிங் மற்றும் பிஸியோதெரபி படிப்புகளையும் தேர்வு செய்யலாம்.

நீட் தேர்வுக்கு மீண்டும் முயற்சிக்க விரும்புபவர்கள் நன்றாக பயிற்சி எடுத்து, அடுத்தமுறை நிச்சயம் வெல்ல முயற்சியுங்கள். ஒருமுறைக்கு மேல் மீண்டும் நீட் தேர்வுக்கு முயற்சிக்காமல், வேறு படிப்புகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது. இவ்வாறு ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.

Monday, July 18, 2022

July 18, 2022

நீட் தேர்வு எழுதிய தந்தை, மகள்: 50 வயதிலும் பார்மசிஸ்ட் ஆர்வம்

ராணிப்பேட்டை மையத்தில் மகள் நீட் தேர்வு எழுதிய நிலையில், 50 வயதான அவரது தந்தை வேலூர் மையத்தில் ஆர்வத்துடன் நீட் தேர்வு எழுதினார். வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள டிகேஎம் மகளிர் கல்லூரியில் நேற்று பிற்பகல் 12 மணியளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீர் தேர்வு மையத்திற்கு சென்றார். அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் அவரை நிறுத்தி, ‘பெற்றோர் உள்ளே செல்ல அனுமதி கிடையாது’ என்றனர். அதற்கு அவர், ‘நானும் நீட் தேர்வு எழுத போகிறேன்’ என்றார். இதையடுத்து, அவரின் அனுமதி சீட்டை சோதனை செய்து, தேர்வு எழுத அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘நான் ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தை சேர்ந்த தயாளன்(50). பார்மஸ்சிஸ்டாக பணிபுரிகிறேன். எனக்கு 2 மகள்கள். மூத்த மகள் மருத்துவம் படித்து வருகிறார். இளைய மகள் ராணிப்பேட்டை டிஏவி பெல் மையத்தில் நீட் தேர்வு எழுதுகிறார். நீட் தேர்வு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் நானும் எழுத வந்துள்ளேன்’ என்றார். * நீட் தேர்வு எழுதிய 70 வயது தாத்தா

கோவை விளாங்குறிச்சியை சேர்ந்த 70 வயதான பிரின்ஸ் மாணிக்கம், கோவை ஈச்சனாரி கற்பகம் கல்லூரி மையத்தில் நேற்று நீட் தேர்வு எழுதினார். அவர் கூறியதாவது:

இதையும் படிக்க | தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை

நான் விவசாயம் படித்து, பிஎச்டி முடித்துள்ளேன். வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். எனக்கு சிறு வயது முதல் டாக்டராக வேண்டும் என்பது கனவு. மாணவர்கள் பலர் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். தேர்வுக்காக தற்கொலை செய்து கொள்வது என்பது தீர்வாகாது. அப்படி என்ன இந்த தேர்வில் இருக்கிறது? என கண்டறியவே இந்த முறை தேர்வு எழுதினேன் என்றார். இதேபோல மதுரை அருகே உள்ள மாடக்குளத்தைச் சேர்ந்த 55 வயது ராஜ்ஜியக்கொடி (55)யும் நீட் தேர்வு எழுதினார்.

Saturday, July 16, 2022

July 16, 2022

NEET ( 17.07.2022 ) - தேர்வு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

நாளை பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஜூலை மாதம் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 543 நகரங்களில் நடைபெறவுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தமிழ், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு எழுதுவதற்காக நாடு முழுவதும் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.



கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 2.57 லட்சம் பேர் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். 10,64,606 பெண்கள், 8,07,711 ஆண்கள் 12 மூன்றாம் பாலினத்தவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து 1,42,286 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 31,803 பேர் தமிழ் மொழியில் எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். நாளை பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு நடைபெறவுள்ளதையடுத்து மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

அதில், ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து குறைந்தபட்சம் இரு நகல்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
பிற்பகல் 1.30 மணிக்கு நீட் தேர்வு மைய நுழைவாயில் மூடப்படும். அதன்பின் மாணவர்களுக்கு அனுமதியில்லை.
மாணவர்கள், பெற்றோரின் கையெழுத்து ஹால் டிக்கெட்டின் உரிய இடத்தில் இருக்க வேண்டும்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் வருகைப் பதிவு பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.
பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்சை அவசியம். மாணவர்கள் செல்போன்களில் கொண்டுவரும் அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
தேர்வு மையத்தில் வழங்கப்படும் என்.95 முகக்கவசத்தை மாணவர்கள் கட்டாயம் அணிய வேண்டும்.
தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என இரு முறை வருகைப் பதிவேட்டில் மாணவர்கள் கையெழுத்திட வேண்டும்.
மாணவர்கள் வெளியே தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில், கூடுதல் புகைப்பட நகல்களை வைத்திருக்கலாம்.
செல்போன் உள்ளிட்ட எந்த மின்சாதனப் பொருளையும் மாணவர்கள் தேர்வறைக்குள் கொண்டுவரக் கூடாது என்பன உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

Total Pageviews

Search This Blog