Breaking

Showing posts with label CBSE EXAMS. Show all posts
Showing posts with label CBSE EXAMS. Show all posts

Wednesday, February 26, 2025

Tuesday, December 05, 2023

December 05, 2023

CBSE தேர்வுகளில் செய்யப்பட்டுள்ள 5 முக்கிய மாற்றங்கள்



CBSE: சி.பி.எஸ்.இ தேர்வுகளில் செய்யப்பட்டுள்ள 5 முக்கிய மாற்றங்கள்

CBSE Board Exams 2024: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) இந்த ஆண்டு வாரியத் தேர்வு முறையில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தப் பிரிவு, தனிச்சிறப்பு அல்லது மொத்த மதிப்பெண் சதவீத அறிவிப்பை நிறுத்துதல் அல்லது கணக்குப்பதிவியல் விடைப் புத்தகங்களை நீக்குதல் என எதுவாக இருந்தாலும், பங்குதாரர்களிடம் பெற்ற கருத்துக்களைக் கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சில முக்கிய புதுப்பிப்புகளின் பட்டியலை கீழே பார்க்கவும்:

1). கணக்குப்பதிவியலுக்கு விடை புத்தகங்கள் இல்லை

கணக்குப்பதிவியல் பாடத்தில் வழங்கப்பட்ட விடை புத்தகங்களை நீக்க வாரியம் முடிவு செய்துள்ளது. பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

“2024 வாரியத் தேர்விலிருந்து, பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ கணக்குப்பதிவியல் பாடத்தில் அட்டவணைகள் வழங்கப்பட்ட விடை புத்தகங்களை நீக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு முதல், 12 ஆம் வகுப்பில் மற்ற பாடங்களில் வழங்கப்பட்டுள்ள சாதாரண வரிகள் கொண்ட விடை புத்தகங்கள் கணக்குப்பதிவியல் பாடத்திற்கு வழங்கப்படும்,” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் 2023-24 போர்டு தேர்வுகளில் இருந்து நடைமுறைக்கு வரும். 2. ஒட்டுமொத்தப் பிரிவு, தனிச்சிறப்பு அல்லது மொத்த மதிப்பெண் சதவீதம் அறிவிப்பை நிறுத்துதல்

2024 ஆம் ஆண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஒட்டுமொத்தப் பிரிவு, தனிச்சிறப்பு அல்லது மொத்த மதிப்பெண் சதவீதத்தை வழங்காது என்று CBSE அறிவித்துள்ளது. சதவீதத்தைக் கணக்கிடுவதற்கான அளவுகோல்களைத் தெரிவிக்க பல விண்ணப்பதாரர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்த பிறகு வாரியம் அதை அறிவித்தது.

வாரியம் மதிப்பெண்களின் சதவீதத்தை கணக்கிடாது, அறிவிக்காது, தெரிவிக்காது.

3. ஒலிம்பியாட் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுத முடியாத தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சர்வதேச ஒலிம்பியாட்களில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, வாரியம் பிற்காலத்தில் சிறப்புத் தேர்வுகளை நடத்தும் என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. இருப்பினும், தனி அல்லது சிறப்பு CBSE 2024 தேர்வு வாய்ப்பு குழு மற்றும் செய்முறை தேர்வுகளுக்கு கிடைக்காது.

இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் பிற கல்விப் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதைப் பெற, விண்ணப்பதாரர்கள் தாங்கள் பங்கேற்கும் விளையாட்டு இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தால் (HBCSE) அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பியாட் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 4. மாதிரி வினாத்தாள்கள், மதிப்பெண் திட்டம் வெளியீடு

10 ஆம் வகுப்புக்கான 60 மாதிரி வினாத்தாள்களும், 12 ஆம் வகுப்புக்கான 77 மாதிரி வினாத்தாள்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதை மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseacademic.nic.in இல் பார்க்கலாம்.

ஒவ்வொரு விடைக்கும் மதிப்பெண்களுடன் விடைகள் மதிப்பெண் திட்டத்தில் கிடைக்கும்.

5. வருடத்திற்கு இரண்டு முறை வாரியத் தேர்வுகள், சிறந்த மதிப்பெண்ணை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்ப

தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 இன் படி புதிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF) தயாராகிவிட்டதாகவும், அதற்கான பாடப்புத்தகங்கள் 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்விற்கு உருவாக்கப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னதாக அறிவித்தார்.

NCF இன் படி, வாரியத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் மற்றும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண்ணைத் தக்கவைக்க அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள் தாங்கள் முடித்த பாடங்களில் போர்டு தேர்வை எழுதலாம்.

கூடுதலாக, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இனிமேல் இரு மொழிகளைப் படிக்க வேண்டும், குறைந்தபட்சம் ஒரு மொழியாவது இந்திய மொழியாக இருக்க வேண்டும் மற்றும் பாடங்களின் தேர்வுகள் அவர்கள் விருப்பத்திற்குரியது, மாணவர்கள் விரும்பிய பாடங்களைத் தேர்வு செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையைப் பெறுவார்கள்.

Sunday, April 23, 2023

April 23, 2023

தமிழ்நாடு CBSE 12-வகுப்பு மாணவர்களுக்கு கடுமையான கேள்வித்தாள்



தமிழ்நாடு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. 12-வகுப்பு கேள்வித்தாள் மிக மிக கடுமை Tamil Nadu CBSE Tough Question Paper for Class 12th Students

தமிழ்நாடு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. 12-வகுப்பு இயற்பியல் மற்றும் உயிரியல் கேள்வித்தாள் மிக மிக கடுமை என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மும்பை, டெல்லி உள்ளிட்ட பிற நான்கு மண்டலங்களில் கேள்வித்தாள் மிக எளிமையாக இருந்துள்ளன. கேள்வித்தாள்கள் மிகக் கடுமையாக இருந்ததாக சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என கடிதம் எழுதி இருந்தேன் எனவும் தெரிவித்தார்.

Thursday, December 29, 2022

December 29, 2022

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி 15ல் துவக்கம்

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி 15ல் துவக்கம் - CBSE general examination for class 10 and 12 will start on February 15

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் பிப்ரவரி 15ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுக்கு இரண்டு பாடங்களுக்கு இடையே போதுமான இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் போட்டி தேர்வுகள் குறித்த விஷயங்களும் கணக்கில் கொள்ளப்பட்டு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் காலை 10.30 மணிக்கு துவங்கும் என தெரிவித்துள்ளது.

#BREAKING : சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு..!!

2022- 23ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. இந்தத் தேர்வு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

பிப்ரவரி 15 முதல் இந்தத் தேர்வுகள் தொடங்குகின்றன.காலை 10:30 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 01:30 -க்கு முடிவடைகிறது.சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புகளுக்கான தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிவடையும்.அதேபோல், 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி முடிவடைகிறது.தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை

Feb 24 - Tamil

Feb 27 - English

Mar 04 - Science

Mar 15 - Social Science

Mar 17 - Hindi

Mar 21 - Mathematics

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை

Feb 24 - English

Feb 28 - Chemistry

Mar 02 - Geography

Mar 06 - Physics

Mar 10 - Tamil

Mar 11 - Mathematics

Mar 16 - Biology

Mar 17 - Economics

Mar 20 - Political science

Mar 21 - Information Technology

Mar 23 - Computer science

MAR 25 - Business Administration

Mar 29 - History

Mar 31 - Accountancy

Apr 01 - Home Science

Apr 03 - Sociology

முழு அட்டவணையை பதிவிறக்க


CLICK HERE TO DOWNLOAD

Saturday, July 23, 2022

July 23, 2022

சிபிஎஸ்இ பொதுத் தோ்வு முடிவுகள்: 12-ஆம் வகுப்பில் 92% தோ்ச்சி; பத்தாம் வகுப்பில் 94.40% தோ்ச்சி

சிபிஎஸ்இ பொதுத் தோ்வு முடிவுகள்: 12-ஆம் வகுப்பில் 92% தோ்ச்சி; பத்தாம் வகுப்பில் 94.40% தோ்ச்சி

நீண்ட தாமதத்துக்குப் பிறகு 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 92.71 சதவீதம் பேரும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 94.40 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இரு தோ்வுகளிலும் மாணவா்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதையும் படிக்க | நீட் தேர்வு விவகாரம் - CCTV காட்சி அடிப்படையில் 2 ஆசிரியர்கள் அதிரடி கைது கரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்தப்படவில்லை. அதன் காரணமாக, சிறப்பு மதிப்பீடு திட்டத்தின் கீழ் முந்தைய தோ்வுகள் மற்றும் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் உள்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டு, மாணவா்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன் மூலமாக கடந்த ஆண்டு 99.37 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.

ஆனால், இந்த முறை நேரடி எழுத்துத் தோ்வு முறையில் பொதுத் தோ்வுகளை சிபிஎஸ்இ நடத்தியது. இருந்தபோதும், கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் மற்றும் பொதுத் தோ்வுகளை இரண்டு பருவங்களாகப் பிரித்து சிபிஎஸ்இ நடத்தியது. இந்தப் புதிய நடைமுறை காரணமாக வழக்கத்தைவிட தாமதமாக பொதுத் தோ்வுகள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக முடிவுகள் அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

இதையும் படிக்க | வகுப்பு 12|கணிதவியல்|பாடம் 8|வகையீடுகள் மற்றும் பகுதி வகை கெழுக்கள் |பகுதி 4

இந்தச் சூழலில், 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் ஒட்டுமொத்தமாக 92.71 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்வில் பங்கேற்ற 14,35,366 பேரில் 13,30,662 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட குறைவு என்றபோதும், நேரடி எழுத்துத் தோ்வு நடைபெற்ற முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கூடுதல் தோ்ச்சியாகும். அதாவது, இந்தத் தோ்ச்சி விகிதமானது 2020-ஆம் ஆண்டில் 88.78 சதவீத அளவிலும், 2019-ஆம் ஆண்டில் 83.40 சதவீதம் என்ற அளவிலும் பதிவாகின. இந்த முறை மாணவா்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகமானோா் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகள் 94.54 சதவீத அளவிலும், மாணவா்கள் 91.25 சதவீத அளவிலும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மூன்றாம் பாலினத்தினா் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்வு எழுதியவா்களில் 33,432 மாணவ, மாணவிகள் 95 சதவீத மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா். 1,34,797 மாணவா்கள் 90 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றுள்ளனா். பொதுத் தோ்வில் 1,04,704 மாணவா்கள் தோல்வியடைந்த நிலையில், அவா்களில் 67,000 மாணவா்கள் (ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி) உடனடி தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகள் (ஜேஎன்வி) 98.93 சதவீத தோ்ச்சியும், மத்திய திபெத் பள்ளி நிா்வாக (சிடிஎஸ்ஏ) பள்ளிகள் 97.96 சதவீத தோ்ச்சியும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 97.04 சதவீத தோ்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.81 சதவீத தோ்ச்சியும், அரசு பள்ளிகள் 93.38 சதவீத தோ்ச்சியும், தனியாா் சிபிஎஸ்இ பள்ளிகள் 92.20 சதவீத தோ்ச்சியும் பெற்றுள்ளன.

இதையும் படிக்க | வகுப்பு 12|அடிப்படை தானியங்கி ஊர் திப்பொறியியல்|பாடம் 8|ஸ்டியரிங் அமைப்பு|அலகு 2

சென்னை மண்டலம் மூன்றாமிடம்: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு தோ்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் மண்டலம் 98.83 சதவீத தோ்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு மண்டலம் (98.16%) இரண்டாமிடமும், சென்னை மண்டலம் (97.79%) மூன்றாமிடமும் பிடித்துள்ளன.

பத்தாம் வகுப்பில் 94.40% தோ்ச்சி: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 94.40 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்வெழுதிய 20,93,978 பேரில் 19,76,668 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதிலும் மாணவா்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகமானோா் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகள் 95.21 சதவீதம் பேரும், மாணவா்கள் 93.80 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மூன்றாம் பாலினத்தவா்கள் 90 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பிரதமா் வாழ்த்து: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதையும் படிக்க | வகுப்பு 12|நுண்ணுயிரியல்|பாடம் 10|மருத்துவ வைரலாஜி| பகுதி 2

அடுத்த ஆண்டுக்கான பொதுத் தோ்வு தேதி அறிவிப்பு

புது தில்லி, ஜூலை 22: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புக்கு அடுத்த ஆண்டுக்கான பொதுத் தோ்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்க உள்ளன.

Total Pageviews

Search This Blog