Breaking

Showing posts with label CBSE EXAMS. Show all posts
Showing posts with label CBSE EXAMS. Show all posts

Tuesday, June 30, 2026

Thursday, June 04, 2026

Wednesday, June 03, 2026

Wednesday, May 13, 2026

Monday, May 11, 2026

Monday, April 20, 2026

Wednesday, April 15, 2026

Saturday, April 04, 2026

Saturday, March 21, 2026

Sunday, February 15, 2026

Friday, February 06, 2026

Friday, October 31, 2025

Tuesday, May 13, 2025

Tuesday, April 01, 2025

Tuesday, March 25, 2025

Wednesday, February 26, 2025

Wednesday, December 04, 2024

Saturday, April 27, 2024

Monday, April 08, 2024

Tuesday, December 05, 2023

December 05, 2023

CBSE தேர்வுகளில் செய்யப்பட்டுள்ள 5 முக்கிய மாற்றங்கள்



CBSE: சி.பி.எஸ்.இ தேர்வுகளில் செய்யப்பட்டுள்ள 5 முக்கிய மாற்றங்கள்

CBSE Board Exams 2024: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) இந்த ஆண்டு வாரியத் தேர்வு முறையில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தப் பிரிவு, தனிச்சிறப்பு அல்லது மொத்த மதிப்பெண் சதவீத அறிவிப்பை நிறுத்துதல் அல்லது கணக்குப்பதிவியல் விடைப் புத்தகங்களை நீக்குதல் என எதுவாக இருந்தாலும், பங்குதாரர்களிடம் பெற்ற கருத்துக்களைக் கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சில முக்கிய புதுப்பிப்புகளின் பட்டியலை கீழே பார்க்கவும்:

1). கணக்குப்பதிவியலுக்கு விடை புத்தகங்கள் இல்லை

கணக்குப்பதிவியல் பாடத்தில் வழங்கப்பட்ட விடை புத்தகங்களை நீக்க வாரியம் முடிவு செய்துள்ளது. பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

“2024 வாரியத் தேர்விலிருந்து, பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ கணக்குப்பதிவியல் பாடத்தில் அட்டவணைகள் வழங்கப்பட்ட விடை புத்தகங்களை நீக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு முதல், 12 ஆம் வகுப்பில் மற்ற பாடங்களில் வழங்கப்பட்டுள்ள சாதாரண வரிகள் கொண்ட விடை புத்தகங்கள் கணக்குப்பதிவியல் பாடத்திற்கு வழங்கப்படும்,” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் 2023-24 போர்டு தேர்வுகளில் இருந்து நடைமுறைக்கு வரும். 2. ஒட்டுமொத்தப் பிரிவு, தனிச்சிறப்பு அல்லது மொத்த மதிப்பெண் சதவீதம் அறிவிப்பை நிறுத்துதல்

2024 ஆம் ஆண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஒட்டுமொத்தப் பிரிவு, தனிச்சிறப்பு அல்லது மொத்த மதிப்பெண் சதவீதத்தை வழங்காது என்று CBSE அறிவித்துள்ளது. சதவீதத்தைக் கணக்கிடுவதற்கான அளவுகோல்களைத் தெரிவிக்க பல விண்ணப்பதாரர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்த பிறகு வாரியம் அதை அறிவித்தது.

வாரியம் மதிப்பெண்களின் சதவீதத்தை கணக்கிடாது, அறிவிக்காது, தெரிவிக்காது.

3. ஒலிம்பியாட் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுத முடியாத தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சர்வதேச ஒலிம்பியாட்களில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, வாரியம் பிற்காலத்தில் சிறப்புத் தேர்வுகளை நடத்தும் என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. இருப்பினும், தனி அல்லது சிறப்பு CBSE 2024 தேர்வு வாய்ப்பு குழு மற்றும் செய்முறை தேர்வுகளுக்கு கிடைக்காது.

இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் பிற கல்விப் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதைப் பெற, விண்ணப்பதாரர்கள் தாங்கள் பங்கேற்கும் விளையாட்டு இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தால் (HBCSE) அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பியாட் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 4. மாதிரி வினாத்தாள்கள், மதிப்பெண் திட்டம் வெளியீடு

10 ஆம் வகுப்புக்கான 60 மாதிரி வினாத்தாள்களும், 12 ஆம் வகுப்புக்கான 77 மாதிரி வினாத்தாள்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதை மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseacademic.nic.in இல் பார்க்கலாம்.

ஒவ்வொரு விடைக்கும் மதிப்பெண்களுடன் விடைகள் மதிப்பெண் திட்டத்தில் கிடைக்கும்.

5. வருடத்திற்கு இரண்டு முறை வாரியத் தேர்வுகள், சிறந்த மதிப்பெண்ணை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்ப

தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 இன் படி புதிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF) தயாராகிவிட்டதாகவும், அதற்கான பாடப்புத்தகங்கள் 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்விற்கு உருவாக்கப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னதாக அறிவித்தார்.

NCF இன் படி, வாரியத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் மற்றும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண்ணைத் தக்கவைக்க அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள் தாங்கள் முடித்த பாடங்களில் போர்டு தேர்வை எழுதலாம்.

கூடுதலாக, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இனிமேல் இரு மொழிகளைப் படிக்க வேண்டும், குறைந்தபட்சம் ஒரு மொழியாவது இந்திய மொழியாக இருக்க வேண்டும் மற்றும் பாடங்களின் தேர்வுகள் அவர்கள் விருப்பத்திற்குரியது, மாணவர்கள் விரும்பிய பாடங்களைத் தேர்வு செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையைப் பெறுவார்கள்.

Total Pageviews

Search This Blog