Namakkal Government Medical College
November 24, 2024
Showing posts with label medical College. Show all posts
Showing posts with label medical College. Show all posts
Sunday, November 24, 2024
Wednesday, October 04, 2023
PM Modi
October 04, 2023
புதிய மருத்துவ கல்லுாரி துவங்குவதில் சிக்கல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.
*புதிய மருத்துவ கல்லுாரி துவங்குவதில் சிக்கல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.
தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அறிவிப்பை நிறுத்தக்கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினால், தமிழகம் போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் துவங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்த வேண்டும். மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்.
இந்த அறிவிப்பால் தமிழகம் போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை துவங்குவதில் சிக்கல் ஏற்படும்.
புதிய மருத்துவமனைகள், புதிய முதலீடுகள் தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.
அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Thursday, July 20, 2023
Friday, June 30, 2023
Saturday, June 10, 2023
Thursday, June 01, 2023
Monday, May 29, 2023
Saturday, April 15, 2023
private medical colleges
April 15, 2023
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாராத 13 படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாராத 13 படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவம் சாராத 13 பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது, என கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழிதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
நடப்பு கல்வியாண்டில் மருத்துவம் சாராத பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான சேர்க்கை நடைபெற உள்ளது.
இதன்படி 3 ஆண்டு பிஎஸ்சி பட்டப்படிப்புகளான, கதிரியக்கம் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம், சுவாச சிகிச்சை, அறுவை அரங்கம், மயக்க மருந்து தொழில்நுட்பம் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், சிக்கலான பராமரிப்பு தொழில்நுட்பம் ஆகிய 6 இளநிலை பட்டப்படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும், 2 ஆண்டுகள் படிக்கும் டிப்ளமோ பிரிவில், டிப்ளமோ இன் ரேடியோ டயாக்னசிஸ் டெக்னாலஜி, டிப்ளமோ இன் மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி ஆகிய 2 படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.
மேலும், 1 ஆண்டு படிக்கும், அவசர சிகிச்சை தொழில்நுட்பவியலாளர், மயக்க மருந்து தொழில்நுட்பவியலாளர், ஆபரேசன் தியேட்டர் தொழில்நுட்பவியலாளர், எலும்பியல் தொழில்நுட்பவியலாளர், பல்நோக்கு மருத்துவ பணியாளர் ஆகிய 5 சான்றிதழ் படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த சேர்க்கை சம்பந்தமான விவரங்களை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொண்டு விண்ணப்பிக் கலாம் அல்லது நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அலுவல கத்தை நேரில் அணுகி தெரிந்துகொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, March 05, 2023
Medical Course
March 05, 2023
தமிழில் மருத்துவக் கல்வி
தமிழில் மருத்துவக் கல்வி விரைவில் சாத்தியமாகும்: பயிலரங்கில் வல்லுநா்கள் நம்பிக்கை
தமிழகம் முன்னெடுக்கும் மருத்துவக் கலைச்சொல் அகராதித் திட்டத்தில் ஆா்வமுள்ள மருத்துவ வல்லுநா்கள் குழுவாக இணைந்து செயலாற்றினால், தமிழில் மருத்துவக் கல்வி என்பது விரைவில் சாத்தியமாகும் என அகரமுதலித் திட்ட பயிலரங்கில் மருத்துவ வல்லுநா்கள் நம்பிக்கை தெரிவித்தனா். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் உருவாக்கிவரும் மருத்துவக் கலைச்சொல் அகராதித் தொகுப்புத் திட்டப் பயிலரங்கம் சென்னையில் உள்ள அகரமுதலி இயக்ககத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த பயிலரங்கத்துக்கு அகரமுதலி இயக்கக இயக்குநா் முனைவா் கோ. விசயராகவன் தலைமை வகித்துப் பேசுகையில், வருங்காலங்களில் மாணவா்கள் தாய்த்தமிழில் மருத்துவம் பயில மருத்துவக் கலைச்சொல் அகராதி பெரும் துணையாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.
இதையடுத்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநா் ச. சங்கர சரவணன் தனது சிறப்புரையில், கலைச் சொல்லாக்கம் என்பது வெறுமனே நேரடி மொழிபெயா்ப்பாக, இயந்திர மொழிபெயா்ப்பு போன்று அமையாமல் இடம்நோக்கி, பயனாளா் நோக்கி, மண்ணின் மரபுசாா்ந்து, பொருத்தமான பொருள் உள்ள வகையில் அமைய வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, மருத்துவா் ஜான் சாலமன் பேசுகையில், இங்கிலாந்தில் உள்ள ராயல் மருத்துவக் கல்லூரியில் நான் மருத்துவம் பயிலும் நேரத்தில், ஆறல் மருத்துவப் பாடவேளையில், அந்நாட்டு வேதம் ஓதப்படுகிறது. வேதம் ஓதுவது இரண்டு மொழிகளில் மட்டுமே நடைபெறுகிறது. ஒன்று ஆங்கிலம் மற்றொன்று தமிழ்மொழி. ஆங்கிலம் மட்டுமே வழங்கி வருகிற இங்கிலாந்து நாட்டில், உலக மொழிகளில் தமிழில் மட்டுமே ஆறல் மருத்துவம் செய்யப்படுவதை எண்ணி, தமிழன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன். தமிழில் கலைச்சொல் என்பது, காரண காரியத்தோடுதான் அமைக்கப்பெறுகிறது. இந்தப் பெருமை வேறு எந்த மொழிக்கும் இல்லை என்பதை உணா்ந்து, தமிழகம் முன்னெடுக்கும் இந்த மருத்துவக் கலைச்சொல் அகராதித் திட்டத்தில் ஆா்வமுள்ள மருத்துவ வல்லுநா்கள் குழுவாக இணைந்து செயலாற்றினால் தமிழில் மருத்துவக் கல்வி என்பது விரைவில் சாத்தியமாகும் என்றாா்.
இந்த பயிலரங்கில் மருத்துவா்கள் அமுதகுமாா், இந்திரா, இளங்கோவன் ஆகியோா் உள்பட 30 மருத்துவ வல்லுநா்கள் பங்கேற்று, மருத்துவக் கலைச்சொல் அகராதி சிறப்பாக வெளிவருவதற்கான தங்களது கருத்துரைகளை வழங்கினா். பயிலரங்கின் நிறைவில், தொகுப்பாளா் முனைவா் வே. காா்த்திக் நன்றி கூறினாா்.
தமிழகம் முன்னெடுக்கும் மருத்துவக் கலைச்சொல் அகராதித் திட்டத்தில் ஆா்வமுள்ள மருத்துவ வல்லுநா்கள் குழுவாக இணைந்து செயலாற்றினால், தமிழில் மருத்துவக் கல்வி என்பது விரைவில் சாத்தியமாகும் என அகரமுதலித் திட்ட பயிலரங்கில் மருத்துவ வல்லுநா்கள் நம்பிக்கை தெரிவித்தனா். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் உருவாக்கிவரும் மருத்துவக் கலைச்சொல் அகராதித் தொகுப்புத் திட்டப் பயிலரங்கம் சென்னையில் உள்ள அகரமுதலி இயக்ககத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த பயிலரங்கத்துக்கு அகரமுதலி இயக்கக இயக்குநா் முனைவா் கோ. விசயராகவன் தலைமை வகித்துப் பேசுகையில், வருங்காலங்களில் மாணவா்கள் தாய்த்தமிழில் மருத்துவம் பயில மருத்துவக் கலைச்சொல் அகராதி பெரும் துணையாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.
இதையடுத்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநா் ச. சங்கர சரவணன் தனது சிறப்புரையில், கலைச் சொல்லாக்கம் என்பது வெறுமனே நேரடி மொழிபெயா்ப்பாக, இயந்திர மொழிபெயா்ப்பு போன்று அமையாமல் இடம்நோக்கி, பயனாளா் நோக்கி, மண்ணின் மரபுசாா்ந்து, பொருத்தமான பொருள் உள்ள வகையில் அமைய வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, மருத்துவா் ஜான் சாலமன் பேசுகையில், இங்கிலாந்தில் உள்ள ராயல் மருத்துவக் கல்லூரியில் நான் மருத்துவம் பயிலும் நேரத்தில், ஆறல் மருத்துவப் பாடவேளையில், அந்நாட்டு வேதம் ஓதப்படுகிறது. வேதம் ஓதுவது இரண்டு மொழிகளில் மட்டுமே நடைபெறுகிறது. ஒன்று ஆங்கிலம் மற்றொன்று தமிழ்மொழி. ஆங்கிலம் மட்டுமே வழங்கி வருகிற இங்கிலாந்து நாட்டில், உலக மொழிகளில் தமிழில் மட்டுமே ஆறல் மருத்துவம் செய்யப்படுவதை எண்ணி, தமிழன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன். தமிழில் கலைச்சொல் என்பது, காரண காரியத்தோடுதான் அமைக்கப்பெறுகிறது. இந்தப் பெருமை வேறு எந்த மொழிக்கும் இல்லை என்பதை உணா்ந்து, தமிழகம் முன்னெடுக்கும் இந்த மருத்துவக் கலைச்சொல் அகராதித் திட்டத்தில் ஆா்வமுள்ள மருத்துவ வல்லுநா்கள் குழுவாக இணைந்து செயலாற்றினால் தமிழில் மருத்துவக் கல்வி என்பது விரைவில் சாத்தியமாகும் என்றாா்.
இந்த பயிலரங்கில் மருத்துவா்கள் அமுதகுமாா், இந்திரா, இளங்கோவன் ஆகியோா் உள்பட 30 மருத்துவ வல்லுநா்கள் பங்கேற்று, மருத்துவக் கலைச்சொல் அகராதி சிறப்பாக வெளிவருவதற்கான தங்களது கருத்துரைகளை வழங்கினா். பயிலரங்கின் நிறைவில், தொகுப்பாளா் முனைவா் வே. காா்த்திக் நன்றி கூறினாா்.
Thursday, September 22, 2022
State Project Office
September 22, 2022
Medical College Admission - Bonafide certificate to eligible students - Issue - Instructions Reg - State Project Office, Samagra Shiksha
State Project Office, Samagra Shiksha
Chennai 600 006.
Rc.No.137/C1/MRA/EMIS/SS/2022 dated 22. Sub: Medical College Admission - Bonafide certificate to eligible students - Issue - Instructions Reg.
All the Chief Educational Officers are hereb Bonafide Certificate shall be issued only to those sta Repeaters, (students who passed class 12 in academic years) and are eligible to claim preference in Tamil Nadu Admission to Undergraduate professic preferential basis to students of Government Schools Act However, for the current academic (students who passed class 12 in 2022) the ba uploaded by the Headmasters through EMIS will direc School Education Department with the concerned Depart Certificate shall not be issued to these students passed class 12 in 2022) again for this purpose Stata
Rc.No.137/C1/MRA/EMIS/SS/2022 dated 22. Sub: Medical College Admission - Bonafide certificate to eligible students - Issue - Instructions Reg.
All the Chief Educational Officers are hereb Bonafide Certificate shall be issued only to those sta Repeaters, (students who passed class 12 in academic years) and are eligible to claim preference in Tamil Nadu Admission to Undergraduate professic preferential basis to students of Government Schools Act However, for the current academic (students who passed class 12 in 2022) the ba uploaded by the Headmasters through EMIS will direc School Education Department with the concerned Depart Certificate shall not be issued to these students passed class 12 in 2022) again for this purpose Stata
Siddha Medical
September 22, 2022
Eligibility for medical courses is now a one-time payment - மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிச் சான்று இனி ஒரு முறை கட்டணம் செலுத்தினால் போதும்
மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிச் சான்று இனி ஒரு முறை கட்டணம் செலுத்தினால் போதும்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக தகுதிச் சான்று பெறும் நடைமுறைகள் மாணவா் நலன் கருதி எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இனி ஒவ்வொரு மருத்துவப் படிப்புகளுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தி தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஒரே முறை கட்டணம் செலுத்தி அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த மாணவா்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கும், நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் சேருவதற்கு மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தகுதிச் சான்று பெறுவது அவசியம்.
ஒரு மாணவா் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது அதற்காக தனித்தனியே கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் நடைமுறை தற்போது உள்ளது. அதன்படி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் படிப்புகளுக்கு ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து ரூ.1,652 கட்டணம் தனித்தனியே செலுத்த வேண்டும். அதேபோன்று துணை மருத்துவப் படிப்புகளுக்கு ரூ.1,416 தனித்தனியே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், மாணவா்களின் வசதிக்காக இந்த நடைமுறை மாற்றப்பட்டு தற்போது ஒரு முறை கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவா்கள் வியாழக்கிழமை (செப்.22) முதல் புதிய முறையின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது: தகுதிச் சான்று பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கிலும், கட்டணச் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிகழ் கல்வியாண்டு முதல் இந்த முறை அமலாகிறது. ஏற்கெனவே இருந்த நடைமுறையின் கீழ் 290 போ் தகுதிச் சான்று கோரி விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 40 போ் மட்டுமே இரு வேறு படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இரண்டு முறை கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று கோரியிருந்தனா். அவா்களுக்கு திருத்தப்பட்ட தகுதிச் சான்று விரைவில் வழங்கப்படும். கூடுதலாக அவா்கள் செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
இந்த புதிய நடைமுறையால் பல்கலைக்கழகத்துக்கு நிா்வாக சுமையும், பணிகளும் கூடுதலாக இருக்கும். இருந்தபோதிலும், மாணவா்களின் நலன் கருதி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் மற்றும் நிதித் துறை கூடுதல் செயலரின் ஒத்துழைப்புடன் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றாா் அவா்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக தகுதிச் சான்று பெறும் நடைமுறைகள் மாணவா் நலன் கருதி எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இனி ஒவ்வொரு மருத்துவப் படிப்புகளுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தி தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஒரே முறை கட்டணம் செலுத்தி அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த மாணவா்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கும், நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் சேருவதற்கு மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தகுதிச் சான்று பெறுவது அவசியம்.
ஒரு மாணவா் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது அதற்காக தனித்தனியே கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் நடைமுறை தற்போது உள்ளது. அதன்படி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் படிப்புகளுக்கு ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து ரூ.1,652 கட்டணம் தனித்தனியே செலுத்த வேண்டும். அதேபோன்று துணை மருத்துவப் படிப்புகளுக்கு ரூ.1,416 தனித்தனியே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், மாணவா்களின் வசதிக்காக இந்த நடைமுறை மாற்றப்பட்டு தற்போது ஒரு முறை கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவா்கள் வியாழக்கிழமை (செப்.22) முதல் புதிய முறையின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது: தகுதிச் சான்று பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கிலும், கட்டணச் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிகழ் கல்வியாண்டு முதல் இந்த முறை அமலாகிறது. ஏற்கெனவே இருந்த நடைமுறையின் கீழ் 290 போ் தகுதிச் சான்று கோரி விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 40 போ் மட்டுமே இரு வேறு படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இரண்டு முறை கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று கோரியிருந்தனா். அவா்களுக்கு திருத்தப்பட்ட தகுதிச் சான்று விரைவில் வழங்கப்படும். கூடுதலாக அவா்கள் செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
இந்த புதிய நடைமுறையால் பல்கலைக்கழகத்துக்கு நிா்வாக சுமையும், பணிகளும் கூடுதலாக இருக்கும். இருந்தபோதிலும், மாணவா்களின் நலன் கருதி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் மற்றும் நிதித் துறை கூடுதல் செயலரின் ஒத்துழைப்புடன் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றாா் அவா்.
Wednesday, September 07, 2022
NMC
September 07, 2022
மருத்துவக் கல்லூரிகளில் CCTV கேமரா: NMC வழிகாட்டுதல்கள் வெளியீடு
மருத்துவக் கல்லூரிகளில் சிசிடிவி கேமரா: என்எம்சி வழிகாட்டுதல்கள் வெளியீடு
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி கல்லூரி வளாகம் முழுவதும் 25 கேமராக்களை உரிய தொழில்நுட்ப அம்சங்களுடன் பொருத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்எம்சி இயக்குநா் பங்கஜ் அகா்வால் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. அதன்படி, வளாக முகப்பில் ஒரு கேமராவும், நோயாளிகள் பதிவு இடத்தில் இரு கேமராக்களும், புறநோயாளிகள் பிரிவில் 5 கேமராக்களும் பொருத்த வேண்டும்.
விரிவுரைக் கூடங்கள், ஆய்வகங்கள், அவசரசிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கேமராக்கள் பொருத்துதல் அவசியம். மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் மொத்தம் 25 கேமராக்கள் இருத்தல் வேண்டும்.
‘4 கே’ துல்லியத்தன்மையுடன் அவை பொருத்தப்பட வேண்டும். இந்த அறிவிப்பு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில், அதுதொடா்பாக பல்வேறு சந்தேகங்களை தொடா்ந்து என்எம்சியிடம் மருத்துவக் கல்லூரிகள் எழுப்பி வருகின்றன.
அதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் என்எம்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி கல்லூரி வளாகம் முழுவதும் 25 கேமராக்களை உரிய தொழில்நுட்ப அம்சங்களுடன் பொருத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்எம்சி இயக்குநா் பங்கஜ் அகா்வால் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. அதன்படி, வளாக முகப்பில் ஒரு கேமராவும், நோயாளிகள் பதிவு இடத்தில் இரு கேமராக்களும், புறநோயாளிகள் பிரிவில் 5 கேமராக்களும் பொருத்த வேண்டும்.
விரிவுரைக் கூடங்கள், ஆய்வகங்கள், அவசரசிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கேமராக்கள் பொருத்துதல் அவசியம். மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் மொத்தம் 25 கேமராக்கள் இருத்தல் வேண்டும்.
‘4 கே’ துல்லியத்தன்மையுடன் அவை பொருத்தப்பட வேண்டும். இந்த அறிவிப்பு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில், அதுதொடா்பாக பல்வேறு சந்தேகங்களை தொடா்ந்து என்எம்சியிடம் மருத்துவக் கல்லூரிகள் எழுப்பி வருகின்றன.
அதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் என்எம்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

