Breaking

Showing posts with label 11th and 12th Class. Show all posts
Showing posts with label 11th and 12th Class. Show all posts

Tuesday, November 28, 2023

November 28, 2023

10, 11 மற்றும் 12ம் பொதுத்தேர்வு - வருகை பதிவுக்கு ஏற்ப மார்க் அளிக்க முடிவு?

10, 11 மற்றும் 12ம் பொதுத்தேர்வு - வருகை பதிவுக்கு ஏற்ப மார்க் அளிக்க முடிவு? 10th, 11th and 12th General Examination - Decision to give marks according to attendance record?



தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடக்க உள்ளது.

இதற்கான வழிகாட்டுதல் விதிகளை, பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்களின் வருகைப்பதிவுக்கு ஏற்ப, அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பொது தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, குறைந்தபட்சம், 75 சதவீதம் வருகைப்பதிவு இருக்க வேண்டும். அதில், 80 சதவீதம் வரை பள்ளிக்கு வந்தவர்களுக்கு, 1 மதிப்பெண்ணும்; 80 முதல் 100 சதவீதம் வந்தவர்களுக்கு, 2 மதிப்பெண்ணும் வழங்கப்படுகின்றன.

நாட்டு நலப்பணி திட்டம், அறிவியல் மன்றம் உள்ளிட்ட, 33 மன்றங்களில், ஏதாவது, மூன்றில் பங்கேற்றவர்களுக்கு, 2 அகமதிப்பீடு வழங்கப்படும்.

தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு மட்டும், வருகைப்பதிவுக்கு அதிகபட்சம், 5 மதிப்பெண்களும், கல்வி இணை செயல்பாடுகளுக்கு, 5 மதிப்பெண்களும் வழங்கலாம். இந்த விதிகளின்படி, பள்ளிகளுக்கு நீண்டநாள் வராதவர்களுக்கு, அக மதிப்பீடு மதிப்பெண் கிடைக்காது

Wednesday, March 22, 2023

March 22, 2023

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்: பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்: பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. கடந்த 13-ம் தேதி 12 வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. ஆண்டு தமிழ் மொழி பாட தேர்விற்க்கே 50ஆயிரம் மாணவர்கள் வரவில்லை என தேர்வு துறை அதிகார பூர்வமாக அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆங்கில பட தேர்வுக்கும் 50 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், முக்கிய தேர்வுகளுக்கு மாணவர்களை வரவைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில், நேரு நடைபெற்ற இயற்பியல் பொருளியல் உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கு கூட 47 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவர்களை தேடி பிடித்து தேர்வுக்கு வரவைக்க முயற்சி எடுத்துவரும் நிலையில், பெரும்பாலான மாணவர்கள் அவர்கள் சொந்த ஊரிலோ, வெளியிடங்களிலோ பணியில் உள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களை தேர்வுக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Thursday, March 09, 2023

March 09, 2023

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி : ஏப்ரல் 10 - இல் தொடக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி : ஏப்ரல் 10 - இல் தொடக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் ஏப்.10-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கான பொதுத் தோ்வு வரும் மாா்ச் 13 முதல் ஏப்.3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகளை தோ்வுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தோ்வை சுமாா் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இந்த நிலையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான காலஅட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

அதில், விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்.10-ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தோ்வுத் துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது: ஒவ்வொரு பாடத்தோ்வு முடிந்த பிறகும், மாணவா்களின் விடைத்தாள்கள் மண்டல தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து திருத்துதல் மையங்களுக்கு விடைத்தாள்கள் ஏப். 7-ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும்.

தொடா்ந்து, ஏப். 10 முதல் 21-ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறவுள்ளது. இப்பணியில் சுமாா் 48 ஆயிரம் முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபடவுள்ளனா்.

மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, தோ்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்றனா்.

Monday, January 30, 2023

January 30, 2023

10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு 10th, 11th and 12th Class Result Date Announcementு

12ம் வகுப்பு தேர்வு முடிவு மே 5ஆம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவு மே 17ஆம் தேதியும் வெளியாக உள்ளதாக தகவல்

மார்ச் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற இருந்த 10, 11, 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம்

பொது தேர்வுக்கும் செய்முறை பொதுதேர்வுக்கும் இடையே கால இடைவெளி குறைவாக இருப்பதால் சில நாட்கள் முன் கூட்டியே நடத்த திட்டம்

கிராமபுற மாணவர்கள் உரிய நேரத்திற்கு தேர்வு மையங்களுக்கு செல்லும் வழி தடங்களை முறையாக ஏற்படுத்தி தர வேண்டும்

- அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை

Total Pageviews

Search This Blog