Breaking

Showing posts with label Education Officer. Show all posts
Showing posts with label Education Officer. Show all posts

Wednesday, January 01, 2025

Saturday, February 11, 2023

February 11, 2023

ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் EL கழிக்கக் கூடாது - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.

ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் EL கழிக்கக் கூடாது - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு. EL should not be deducted if teachers take medical leave – Principal Education Officer orders.


ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் EL கழிக்கக் கூடாது - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.

ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் EL கழிக்கக் கூடாது,என்பதை ஏற்று TAMILNADU LEAVE RULE ன் படி செயல்பட கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.

Earned Leave Deduction Clarifications

CLICK HERE TO DOWNLOAD

Friday, September 16, 2022

September 16, 2022

"பார்" ஆக மாறிய கல்வித்துறை அலுவலகம்... கண்டுகொள்ளாத கல்வி ஆணையர்

"பார்" ஆக மாறிய கல்வித்துறை அலுவலகம்... கண்டுகொள்ளாத கல்வி ஆணையர் The Education Office that has become a "bar"... the Education Commissioner who doesn't see it
சென்னையில் பள்ளிக்கல்வி துறையின் தலைமை அலுவலகம், மது குடிக்கும் இடமாகவும், சினிமா போஸ்டர்கள் ஒட்டும் இடமாகவும் மாறி இருப்பது, சாலையில் செல்போரை வேதனை அடைய செய்திருக்கிறது. பள்ளிக் கல்வித் துறையின் தலைமை அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் இயங்கி வருகிறது . பள்ளிக் கல்வித் துறையின் பிரதான நுழைவாயில் , சினிமா போஸ்டர்கள் ஒட்டும் இடமாக ஆண்டு கணக்கில் இருந்து வருகின்றன. இதேபோன்று வளாகம் முழுவதும் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. மேலும் மாலை 6 மணிக்கு மேல் எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் ஒன்று கூடி மது குடிக்கும் இடமாகவும் டிபிஐ வளாகத்தை பயன்படுத்துகின்றனர்.

Friday, April 29, 2022

April 29, 2022

அரசு பள்ளியில் SSLC தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு மீண்டும் ஹால்டிக்கெட்: கல்வி அலுவலர் விசாரணை

SSLC தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு மீண்டும் ஹால்டிக்கெட்

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு படித்த கணேசனுக்கு தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழும் பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது. கல்வி அலுவலர் விசாரணை

தற்போது, இந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கணேசனுக்கு மீண்டும் ஹால்டிக்கெட் சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளது. இந்த சம்பவம், கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, 10ம் வகுப்பு அனைத்து பாட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, விளக்க கடிதம் பெற்றுள்ளார். இதனை வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார். அதன்படி வேலூர் மாவட்ட சி.இ.ஓ. முனியசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

Total Pageviews

Search This Blog