பள்ளி மாணவர்கள்
July 13, 2022
அரசுப் பள்ளியில் மோதல் 12 மாணவர்கள் இடைநீக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அரசு பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் 12 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் நேற்று முன்தினம் இரு தரப்பாக மோதிக்கொண்டனர்.
இதில், 2 மாணவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் பள்ளியிலும் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி அருகே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடப்பதாகவும், அதுதொடர்பான பிரச்சினையில் மோதல் நடந்ததும் தெரியவந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை மேரி அல்போன்சாள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் நடத்திய விசாரணைக்கு பின்னர் ஒரு மாணவரை பள்ளியில் இருந்து டிசி கொடுத்து நீக்குவது எனவும், 12 மாணவர்களை 1 மாதம் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்வது எனவும் முடிவு செய்து அறிவித்தனர். இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் 10-ம் வகுப்பும் மற்றவர்கள் 12-ம் வகுப்பும் படிக்கின்றனர்.
ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் நேற்று முன்தினம் இரு தரப்பாக மோதிக்கொண்டனர்.
இதில், 2 மாணவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் பள்ளியிலும் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி அருகே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடப்பதாகவும், அதுதொடர்பான பிரச்சினையில் மோதல் நடந்ததும் தெரியவந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை மேரி அல்போன்சாள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் நடத்திய விசாரணைக்கு பின்னர் ஒரு மாணவரை பள்ளியில் இருந்து டிசி கொடுத்து நீக்குவது எனவும், 12 மாணவர்களை 1 மாதம் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்வது எனவும் முடிவு செய்து அறிவித்தனர். இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் 10-ம் வகுப்பும் மற்றவர்கள் 12-ம் வகுப்பும் படிக்கின்றனர்.