vocational teachers
November 27, 2025
Showing posts with label vocational Subjects. Show all posts
Showing posts with label vocational Subjects. Show all posts
Thursday, November 27, 2025
Wednesday, October 29, 2025
Sunday, October 26, 2025
Wednesday, October 04, 2023
Monday, June 26, 2023
Sunday, June 18, 2023
Wednesday, November 09, 2022
vocational Subjects
November 09, 2022
+1 Vocational NEW Group Code!!
Sunday, October 09, 2022
vocational Subjects
October 09, 2022
தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடல்: அமைச்சா் அன்பில் மகேஸ் விளக்கம்
தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படவில்லை: அமைச்சா் அன்பில் மகேஸ் விளக்கம்
தமிழகத்தில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படவில்லை; சில இடங்களில் தற்காலிகமாக மட்டுமே சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் அன்பில் மகேஸ் பங்கேற்று, சிறந்த அரசுப் பள்ளிகள், சிறந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு விருதுகள், பள்ளி மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை ஆகியவற்றை வழங்கினாா். மேலும், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.
இதையடுத்து, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நீட் தோ்வுக்கான பயிற்சி தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவா்களுக்கான பயிற்சி தொடரும். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு நியமிக்கப்படவுள்ள தற்காலிக ஆசிரியா்களுக்கான தொகுப்பூதியத்தை உயா்த்துவது தொடா்பாக வரும் 10- ஆம் தேதி நிதியமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.
டெட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களின் கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் அது தொடா்பாக நல்ல முடிவெடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக பொய்ப்பிரசாரம் செய்கின்றனா்.
மாணவா்கள் இல்லாத காரணத்தால் சில இடங்களில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பிற இடங்களில் வழக்கம் போல் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் செயல்பாட்டில் உள்ளன என்றாா் அவா்.
இதில், தமிழ்நாடு அறக்கட்டளைத் தலைவரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ராஜரத்தினம், அண்ணா பல்கலை. துணை வேந்தா் வேல்ராஜ், விஐடி துணைத் தலைவா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்
தமிழகத்தில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படவில்லை; சில இடங்களில் தற்காலிகமாக மட்டுமே சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் அன்பில் மகேஸ் பங்கேற்று, சிறந்த அரசுப் பள்ளிகள், சிறந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு விருதுகள், பள்ளி மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை ஆகியவற்றை வழங்கினாா். மேலும், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.
இதையடுத்து, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நீட் தோ்வுக்கான பயிற்சி தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவா்களுக்கான பயிற்சி தொடரும். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு நியமிக்கப்படவுள்ள தற்காலிக ஆசிரியா்களுக்கான தொகுப்பூதியத்தை உயா்த்துவது தொடா்பாக வரும் 10- ஆம் தேதி நிதியமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.
டெட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களின் கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் அது தொடா்பாக நல்ல முடிவெடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக பொய்ப்பிரசாரம் செய்கின்றனா்.
மாணவா்கள் இல்லாத காரணத்தால் சில இடங்களில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பிற இடங்களில் வழக்கம் போல் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் செயல்பாட்டில் உள்ளன என்றாா் அவா்.
இதில், தமிழ்நாடு அறக்கட்டளைத் தலைவரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ராஜரத்தினம், அண்ணா பல்கலை. துணை வேந்தா் வேல்ராஜ், விஐடி துணைத் தலைவா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்
Saturday, September 03, 2022
vocational Subjects
September 03, 2022
தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை நிறுத்துவது முரண்பாடுகளின் உச்சமா? ராமதாஸ் கேள்வி
தமிழ்நாட்டில் மாணவர்களின் தொழிற்திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வரும் தமிழக அரசு, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலான தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை நிறுத்துவது முரண்பாடுகளின் உச்சம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ந்தேதி வெளியிடப்பட்டன. அதற்கு அடுத்த சில நாள்களிலேயே 11-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது. தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லை என்றால் அப்போதே தெரிந்திருக்கும்; அவ்வாறு தெரிந்திருந்திருந்தால் அப்போதே மாணவர் சேர்க்கையை நிறுத்தியிருக்கலாம்.
ஆனால், மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகளும் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நிறுத்தப்படுகின்றன என்றால், அதற்கு காரணம் ஆசிரியர் பற்றாக்குறை அல்ல... வேறு ஏதோ ஒன்று தான்.
தமிழ்நாட்டில் மாணவர்களின் தொழிற்திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக நான் முதல்வன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை தமிழக அரசு பெருமிதத்துடன் விளம்பரம் செய்து கொள்கிறது.
இந்தத் திட்டங்களின் நோக்கம் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்றுவது தான். இதைத் தான் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளும் செய்கின்றன. அதைக் கருத்தில் கொண்டு தான் தொழிற்கல்வி பாடப்பிரி வினருக்கு பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சிறப்பு இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன.
தமிழக அரசு எந்த நோக்கத்திற்காக செயல்படுகிறதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலான தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை நிறுத்துவது முரண்பாடுகளின் உச்சம். இது கூடாது.
மேல்நிலைக்கல்வியை முடித்தவுடன் பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் போன்ற படிப்புகளில் சேரவும், வேலை வாய்ப்பு பெறவும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கான எளிய வழி தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தான். அவற்றை மூடி கிராமப்புற ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை வெந்நீர் ஊற்றி அழித்து விடக் கூடாது.
தமிழகத்தில் எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்ளனவோ, அவற்றை தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருந்தால், புதிய ஆசிரியர்களை உடனடியாக நியமித்து பற்றாக்குறையை போக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ந்தேதி வெளியிடப்பட்டன. அதற்கு அடுத்த சில நாள்களிலேயே 11-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது. தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லை என்றால் அப்போதே தெரிந்திருக்கும்; அவ்வாறு தெரிந்திருந்திருந்தால் அப்போதே மாணவர் சேர்க்கையை நிறுத்தியிருக்கலாம்.
ஆனால், மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகளும் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நிறுத்தப்படுகின்றன என்றால், அதற்கு காரணம் ஆசிரியர் பற்றாக்குறை அல்ல... வேறு ஏதோ ஒன்று தான்.
தமிழ்நாட்டில் மாணவர்களின் தொழிற்திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக நான் முதல்வன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை தமிழக அரசு பெருமிதத்துடன் விளம்பரம் செய்து கொள்கிறது.
இந்தத் திட்டங்களின் நோக்கம் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்றுவது தான். இதைத் தான் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளும் செய்கின்றன. அதைக் கருத்தில் கொண்டு தான் தொழிற்கல்வி பாடப்பிரி வினருக்கு பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சிறப்பு இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன.
தமிழக அரசு எந்த நோக்கத்திற்காக செயல்படுகிறதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலான தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை நிறுத்துவது முரண்பாடுகளின் உச்சம். இது கூடாது.
மேல்நிலைக்கல்வியை முடித்தவுடன் பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் போன்ற படிப்புகளில் சேரவும், வேலை வாய்ப்பு பெறவும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கான எளிய வழி தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தான். அவற்றை மூடி கிராமப்புற ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை வெந்நீர் ஊற்றி அழித்து விடக் கூடாது.
தமிழகத்தில் எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்ளனவோ, அவற்றை தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருந்தால், புதிய ஆசிரியர்களை உடனடியாக நியமித்து பற்றாக்குறையை போக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

