Agriculture
June 25, 2025
Showing posts with label Agriculture. Show all posts
Showing posts with label Agriculture. Show all posts
Wednesday, June 25, 2025
Tuesday, May 21, 2024
Thursday, February 01, 2024
Application
February 01, 2024
காளாண் உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்சி விண்ணப்பிக்க வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு
Associate Director of Agriculture invites applications for mushroom production techniques training - வேளாண்மை - உழவர் நலத்துறை காளாண் உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்சி விண்ணப்பிக்க வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு
2023-24ம் ஆண்டின் ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வேளாண்மைத்துறையின் கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை - விரிவாக்க சீரமைப்புத்திட்டம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம். பாப்பாரப்பட்டியுடன் இணைந்து "காளான் உற்பத்தி फ्रीलंप्पलकी" Mushroom Production Techniques என்ற தலைப்பில் 28 விவசாயிகளுக்கு 6 நாட்கள் பயிற்சியாக நடத்தப்படவுள்ளது. எனவே 18-40 வயதிற்குட்பட்ட 10 ஆம் வகுப்பு முடித்த ஆர்வமுள்ள விவசாய இளைஞர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) கலந்து கொண்டு பயன் பெறலாம். தருமபுரி மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றம் கிராமப்புற இளைஞர்கள் தங்களின் புகைப்படம், ஆதார் நகல், மற்றும் கல்வி மாற்றுசான்றிதழ்(TC) நகல் ஆகியவற்றுடன் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் செயல்படும் உழவர் பயிற்சி நிலையத்தை 03.02.2024-ற்குள் அணுகி விண்ணப்பித்து கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிற்சியில் கலந்து பயன்பெற
2023-24ம் ஆண்டின் ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வேளாண்மைத்துறையின் கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை - விரிவாக்க சீரமைப்புத்திட்டம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம். பாப்பாரப்பட்டியுடன் இணைந்து "காளான் உற்பத்தி फ्रीलंप्पलकी" Mushroom Production Techniques என்ற தலைப்பில் 28 விவசாயிகளுக்கு 6 நாட்கள் பயிற்சியாக நடத்தப்படவுள்ளது. எனவே 18-40 வயதிற்குட்பட்ட 10 ஆம் வகுப்பு முடித்த ஆர்வமுள்ள விவசாய இளைஞர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) கலந்து கொண்டு பயன் பெறலாம். தருமபுரி மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றம் கிராமப்புற இளைஞர்கள் தங்களின் புகைப்படம், ஆதார் நகல், மற்றும் கல்வி மாற்றுசான்றிதழ்(TC) நகல் ஆகியவற்றுடன் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் செயல்படும் உழவர் பயிற்சி நிலையத்தை 03.02.2024-ற்குள் அணுகி விண்ணப்பித்து கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிற்சியில் கலந்து பயன்பெற
Sunday, December 24, 2023
Agriculture
December 24, 2023
வேளாண் படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் - ஓர் அடிப்படை வழிகாட்டுதல்
வேளாண் படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் - ஓர் அடிப்படை வழிகாட்டுதல்
பொறியியல் படிப்பதே நல்ல வேலையைப் பெற்றுத்தரும், வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பது போன்ற கற்பிதங்கள் எல்லாம் இன்று மதிப்பு இழந்துவிட்டன. வேலைவாய்ப்புக்கும் வளமான எதிர்காலத்துக்கும் உத்தரவாதம் அளிக்கும் பல படிப்புகள் இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு முன் வரிசைகட்டி நிற்கின்றன. அந்தப் படிப்புகளில் முக்கியமானவை வேளாண் படிப்புகள்.
யார் படிக்க முடியும்? - பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களை முதன்மையாகப் படித்தவர்கள் மட்டுமே வேளாண் படிப்பில் சேர முடியும். இருப்பினும், அக்ரிகல்ச்சர் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி போன்ற படிப்புகளில், கணிதம், கணினி அறிவியல் பாடங்களைப் படித்தவர்களும் சேர முடியும்.
எவ்வளவு மதிப்பெண்கள் தேவை? - வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினர் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் / விலங்கியல் பாடங்களில் 55 சதவீத மதிப்பெண்ணும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்ணும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். பட்டியல் வகுப்பினரும் பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தாலே விண்ணப்பிக்கலாம். வேளாண் படிப்பில் சேரும் வழிகள்: வேளாண் படிப்பில் சேர்வதற்கு டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வை எழுதலாம் அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங்கில் கலந்துகொள்ளலாம்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வை எழுதுவதற்குப் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. நுழைவுத் தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றால், இந்தியாவில் உள்ள சிறந்த வேளாண் கல்லூரிகளில் உங்களுக்கு அனுமதி கிடைக்கும். இந்த நுழைவுத்தேர்வு குறித்த விவரங்களை https://icar.nta.nic.in என்கிற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங் தவிர, சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் தனியே விண்ணப்பித்து, வேளாண்மைப் படிப்பில் சேரலாம்.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக 14 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகள் அனைத்தும் அரசுக் கல்லூரிகளே. இவைதவிர, 29 சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேரலாம். குறைவான கட்டணம்: அரசுக் கல்லூரியில் வேளாண் அறிவியல் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்தால் ஆண்டுக் கட்டணம் ரூ. 30,000-க்குக் குறைவாகவும், தொழில்நுட்ப பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்தால் ஆண்டுக் கட்டணம் ரூ. 70,000-க்கும் குறைவாகவும் பெறப்படுகிறது. ‘முதல் தலைமுறைப் பட்டதாரி’ என்றால் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வேளாண் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள்:
பி.எஸ்சி. (ஹானர்ஸ்) வேளாண்மை
பி.எஸ்சி. (ஹானர்ஸ்) தோட்டக்கலை
பி.எஸ்சி. (ஹானர்ஸ்) வனவியல்
பி.எஸ்சி. (ஹானர்ஸ்) உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல் (ஃபுட் நியூட்ரிஷன் அண்டு டயட்டிக்ஸ்)
பி.டெக். - வேளாண் பொறியியல்
பி.எஸ்சி. (ஹானர்ஸ்) பட்டு வளர்ப்பு
பி.டெக். - உணவுத் தொழில்நுட்பம் (ஃபுட் டெக்னாலஜி)
பி.டெக். - உயிரித் தொழில்நுட்பம் (பயோடெக்னாலஜி)
பி.டெக். - ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்
பி.எஸ்சி. - வேளாண் வணிக மேலாண்மை வேலை வாய்ப்பு: வேளாண் ஆராய்ச்சியாளர், வேளாண் தொழில்நுட்பவியலாளர், கள ஆய்வாளர், பண்ணை மேலாளர், வேளாண் விற்பனை பிரதிநிதி, வேளாண் உணவுப்பொருள் நுகர்பொருள் கிடங்கு அதிகாரி, வேளாண் கல்வியாளர், திட்ட வரைவாளர், மண்வள ஆய்வாளர், வேளாண் தொழில் வல்லுநர், வேளாண் நிர்வாக அதிகாரி எனப் பலவிதமான பொறுப்புகளுக்குச் செல்ல முடியும். அரசு மற்றும் தனியார் வேளாண் நிறுவனங்கள், வேளாண் கருவி தயாரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
மேன்மைக்குரிய படிப்பு: வேளாண் படிப்புகள் இன்று சிறந்த தேர்வாக மாறி இருக்கின்றன. வேளாண் படிப்புகள் தனியொருவரின் மேன்மைக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகின் மேன்மைக்கும் உறுதியளிக்கும் வல்லமை கொண்டவை. மேலும், மனித இனம் இந்தப் பூமியில் வாழும்வரை, உணவு சார்ந்த படிப்பும் தொழிலும் நிலைத்திருக்கும் என்பதால், வேளாண் படிப்புகளைப் படிப்பதன் பயன் ஒருபோதும் நீர்த்துப் போகாது.
- நிஷா | நன்றி: இன்னர் வீல் கிளப் ஆஃப் மெட்ராஸ்
பொறியியல் படிப்பதே நல்ல வேலையைப் பெற்றுத்தரும், வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பது போன்ற கற்பிதங்கள் எல்லாம் இன்று மதிப்பு இழந்துவிட்டன. வேலைவாய்ப்புக்கும் வளமான எதிர்காலத்துக்கும் உத்தரவாதம் அளிக்கும் பல படிப்புகள் இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு முன் வரிசைகட்டி நிற்கின்றன. அந்தப் படிப்புகளில் முக்கியமானவை வேளாண் படிப்புகள்.
யார் படிக்க முடியும்? - பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களை முதன்மையாகப் படித்தவர்கள் மட்டுமே வேளாண் படிப்பில் சேர முடியும். இருப்பினும், அக்ரிகல்ச்சர் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி போன்ற படிப்புகளில், கணிதம், கணினி அறிவியல் பாடங்களைப் படித்தவர்களும் சேர முடியும்.
எவ்வளவு மதிப்பெண்கள் தேவை? - வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினர் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் / விலங்கியல் பாடங்களில் 55 சதவீத மதிப்பெண்ணும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்ணும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். பட்டியல் வகுப்பினரும் பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தாலே விண்ணப்பிக்கலாம். வேளாண் படிப்பில் சேரும் வழிகள்: வேளாண் படிப்பில் சேர்வதற்கு டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வை எழுதலாம் அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங்கில் கலந்துகொள்ளலாம்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வை எழுதுவதற்குப் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. நுழைவுத் தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றால், இந்தியாவில் உள்ள சிறந்த வேளாண் கல்லூரிகளில் உங்களுக்கு அனுமதி கிடைக்கும். இந்த நுழைவுத்தேர்வு குறித்த விவரங்களை https://icar.nta.nic.in என்கிற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங் தவிர, சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் தனியே விண்ணப்பித்து, வேளாண்மைப் படிப்பில் சேரலாம்.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக 14 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகள் அனைத்தும் அரசுக் கல்லூரிகளே. இவைதவிர, 29 சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேரலாம். குறைவான கட்டணம்: அரசுக் கல்லூரியில் வேளாண் அறிவியல் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்தால் ஆண்டுக் கட்டணம் ரூ. 30,000-க்குக் குறைவாகவும், தொழில்நுட்ப பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்தால் ஆண்டுக் கட்டணம் ரூ. 70,000-க்கும் குறைவாகவும் பெறப்படுகிறது. ‘முதல் தலைமுறைப் பட்டதாரி’ என்றால் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வேளாண் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள்:
பி.எஸ்சி. (ஹானர்ஸ்) வேளாண்மை
பி.எஸ்சி. (ஹானர்ஸ்) தோட்டக்கலை
பி.எஸ்சி. (ஹானர்ஸ்) வனவியல்
பி.எஸ்சி. (ஹானர்ஸ்) உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல் (ஃபுட் நியூட்ரிஷன் அண்டு டயட்டிக்ஸ்)
பி.டெக். - வேளாண் பொறியியல்
பி.எஸ்சி. (ஹானர்ஸ்) பட்டு வளர்ப்பு
பி.டெக். - உணவுத் தொழில்நுட்பம் (ஃபுட் டெக்னாலஜி)
பி.டெக். - உயிரித் தொழில்நுட்பம் (பயோடெக்னாலஜி)
பி.டெக். - ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்
பி.எஸ்சி. - வேளாண் வணிக மேலாண்மை வேலை வாய்ப்பு: வேளாண் ஆராய்ச்சியாளர், வேளாண் தொழில்நுட்பவியலாளர், கள ஆய்வாளர், பண்ணை மேலாளர், வேளாண் விற்பனை பிரதிநிதி, வேளாண் உணவுப்பொருள் நுகர்பொருள் கிடங்கு அதிகாரி, வேளாண் கல்வியாளர், திட்ட வரைவாளர், மண்வள ஆய்வாளர், வேளாண் தொழில் வல்லுநர், வேளாண் நிர்வாக அதிகாரி எனப் பலவிதமான பொறுப்புகளுக்குச் செல்ல முடியும். அரசு மற்றும் தனியார் வேளாண் நிறுவனங்கள், வேளாண் கருவி தயாரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
மேன்மைக்குரிய படிப்பு: வேளாண் படிப்புகள் இன்று சிறந்த தேர்வாக மாறி இருக்கின்றன. வேளாண் படிப்புகள் தனியொருவரின் மேன்மைக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகின் மேன்மைக்கும் உறுதியளிக்கும் வல்லமை கொண்டவை. மேலும், மனித இனம் இந்தப் பூமியில் வாழும்வரை, உணவு சார்ந்த படிப்பும் தொழிலும் நிலைத்திருக்கும் என்பதால், வேளாண் படிப்புகளைப் படிப்பதன் பயன் ஒருபோதும் நீர்த்துப் போகாது.
- நிஷா | நன்றி: இன்னர் வீல் கிளப் ஆஃப் மெட்ராஸ்
Thursday, October 12, 2023
Chief Minister M. K. Stalin
October 12, 2023
தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: முதல்வர் அறிவிப்பு
தஞ்சை ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் வைக்கப்படும்: பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: முதல்வர் அறிவிப்பு
தஞ்சாவூரில் உள்ள வேளாண்மை கல்லூரிக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.சட்டசபையில் 110வது விதியின் கீழ் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: மறைந்த வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழக அரசுக்கு பல ஆலோசனைகளை வழங்கி உள்ளார். அவர் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.தஞ்சாவூர் ஈச்சாங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படுகிறது. இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி என அழைக்கப்படும். வேளாண்மை பல்கலையில் மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்கப்படும்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்
Sunday, September 24, 2023
Annamalai University
September 24, 2023
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் துறை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை:27-ந்தேதி நடக்கிறது
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்
வேளாண் துறை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை:27-ந்தேதி நடக்கிறது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் சுயநிதி வேளாண் பட்டப்ப டிப்பு பி.எஸ்சி. (சுயநிதி) மற்றும் பி.எஸ்சி. தோட்டக்கலை (சுயநிதி) படிப்புகளில் உள் ள காலியிடங்களுக்கு உடனடி மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (பி. சி.), பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினர் (பி. சி.எம்.) மற்றும் எஸ்.டி. பிரிவு உள்ளிட்ட வகுப்பைச் சேர்ந்த வர்கள் இந்த மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். இதற்கான தகுதியும், விரும்பமும் உள்ளவர்கள் வருகிற 27- ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அண்ணாமலை பல்க லைக்கழக வேளாண் புலத்திற்கு நேரடியாக சென்று கலந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வை தவறவிட்டவர்கள், சான் றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று தவறவிட்டவர்களும் இந்த நேரடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். இந்த கலந்தாய்வில் மாணவர் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு,அதன் படி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு https://annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல் வெ ளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் சுயநிதி வேளாண் பட்டப்ப டிப்பு பி.எஸ்சி. (சுயநிதி) மற்றும் பி.எஸ்சி. தோட்டக்கலை (சுயநிதி) படிப்புகளில் உள் ள காலியிடங்களுக்கு உடனடி மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (பி. சி.), பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினர் (பி. சி.எம்.) மற்றும் எஸ்.டி. பிரிவு உள்ளிட்ட வகுப்பைச் சேர்ந்த வர்கள் இந்த மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். இதற்கான தகுதியும், விரும்பமும் உள்ளவர்கள் வருகிற 27- ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அண்ணாமலை பல்க லைக்கழக வேளாண் புலத்திற்கு நேரடியாக சென்று கலந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வை தவறவிட்டவர்கள், சான் றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று தவறவிட்டவர்களும் இந்த நேரடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். இந்த கலந்தாய்வில் மாணவர் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு,அதன் படி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு https://annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல் வெ ளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
Thursday, February 09, 2023
Agriculture
February 09, 2023
வேளாண் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை 10.2.2023 கடைசி
தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர்(விரிவாக்கம், வேளாண்மை உதவி இயக்குநர்(விரிவாக்கம்) மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைப் பணிகளில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமன செய்வதற்கான தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் விரைந்து ஆன்லைனில் விண்ணப்பித்து பயனடையவும்.
பணி: வேளாண்மை அலுவலர்(விரிவாக்கம்)
காலியிடங்கள்: 33+4
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,38,500
பணி: வேளாண்மை உதவி இயக்குநர்(விரிவாக்கம்)
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700
பணி: தோட்டக்கலை அலுவலர்
காலியிடங்கள்: 41 + 7
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,38,500
தகுதி: வேளாண் பாடத்தில் இளங்கலை, முதுகலை பட்டம், தோட்டக்கலைப் பாடப்பிரிவில் பட்டம், முதுகலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், தமிழில் போதிய மொழிறிவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு அமைந்த வாய்மொழித் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள், பணியிட ஒதுக்கீடு அடிப்படை.யில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.2.2023
Tuesday, January 31, 2023
jobs
January 31, 2023
விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் மேலான்மை டிரெய்னி வேலை
விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் மேலான்மை டிரெய்னி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதுதில்லியில் செயல்பட்டு வரும் விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Management Trainees
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.60,000
வயதுவரம்பு: 1.1.2023 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கலை, அறிவியல், வணிகவியல், விவசாயம், தோட்டக்கலை, மேலாண்மை, புள்ளியியல், மனிதவள மேலாண்மை போன்ற ஏதாவதொரு பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 25.2.2022
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aicofindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய www.aicofindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Thursday, January 19, 2023
Organic farming training
January 19, 2023
இயற்கை வேளாண் பயிற்சி ஜன.25-க்குள் விண்ணப்பிக்கலாம்
இயற்கை வேளாண் பயிற்சி ஜன.25-க்குள் விண்ணப்பிக்கலாம் Organic farming training can be applied by Jan 25
இயற்கை வேளாண் குறித்து பயிற்சி 15 நாள்கள் நடைபெற உள்ளது. இப் பயிற்சில் பங்கேற்க விரும்புவோா் ஜன. 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட இணை இயக்குநா் கே.விஜயா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண் மற்றும் உழவா்நலத் துறையின் கீழ் 2022-23-ஆம் ஆண்டுக்கு ஊரக இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ‘அங்கக வேளாண்மை’ என்ற தலைப்பில் 20 விவசாயிகளுக்கு ஜன.30 முதல் பிப்.20 வரை 15 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
எனவே 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயதிற்குள்பட்ட ஆா்வமுள்ள ஊரக விவசாய இளைஞா்கள் தங்களின் புகைப்படம், ஆதாா் நகல், கல்விமாற்றுச் சான்றிதழ் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் செயல்படும் உழவா் பயிற்சி நிலையத்தில் ஜன. 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.
இயற்கை வேளாண் குறித்து பயிற்சி 15 நாள்கள் நடைபெற உள்ளது. இப் பயிற்சில் பங்கேற்க விரும்புவோா் ஜன. 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட இணை இயக்குநா் கே.விஜயா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண் மற்றும் உழவா்நலத் துறையின் கீழ் 2022-23-ஆம் ஆண்டுக்கு ஊரக இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ‘அங்கக வேளாண்மை’ என்ற தலைப்பில் 20 விவசாயிகளுக்கு ஜன.30 முதல் பிப்.20 வரை 15 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
எனவே 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயதிற்குள்பட்ட ஆா்வமுள்ள ஊரக விவசாய இளைஞா்கள் தங்களின் புகைப்படம், ஆதாா் நகல், கல்விமாற்றுச் சான்றிதழ் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் செயல்படும் உழவா் பயிற்சி நிலையத்தில் ஜன. 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.
Friday, January 13, 2023
Latest News
January 13, 2023
தமிழ்நாடு வேளாண் அலுவலர் பணிக்கு பிப்ரவரி 10ம் தேதி விண்ணப்பம்
தமிழ்நாடு வேளாண் அலுவலர் பணிக்கு பிப்ரவரி 10ம் தேதி விண்ணப்பம்
தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக் கலை அலுவலர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான போட்டித் தேர்வு எழுத விரும்புவோர் பிப்ரவரி 10ம் தேதி முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேளாண்மை அலுவலர்(விரிவாக்கம்) 37 முன்கொணர்வு பணியிடங்கள், வேளாண் உதவி இயக்குநர் (விரிவாக்கம்) 8 பணியிடங்கள்,தமிழ்நாடு தோட்டக்கலைப் பணிகளில் 8 தோட்டக் கலை அலுவலர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டித் தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்படும். இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்ரவரி 10ம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். வேளாண்மை அலுவலருக்கான தேர்வு தாள்1(வேளாண்மையியல்)மே 20ம் தேதி நடக்கும். வேளாண்மை உதவி இயக்குநர் பதவிக்கான தாள் 1 தேர்வு மே 21ம் தேதி நடக்கும். வேளாண்மை அலுவலர், வேளாண் உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்கான தாள்2க்கான தேர்வு மே 20ம் தேதி நடக்கும். தோட்டக்கலை அலுவலர் பணிக்கான தாள் 1 தேர்வு மே 21ம் தேதி நடக்கும். இந்த பணிக்கான போட்டித் தேர்வு கணினி வழியில் நடக்கும். தாள்1ல் கொள்குறி வகையில் 200 கேள்விகள் இடம் பெறும். தேர்வு நேரம் 3 மணி நேரம்,மொத்த மதிப்பெண்கள் 300, தேர்வுக்கு தகுதி பெற குறைந்த பட்சம் 204 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்சி(அ)ப.ப, மிகவும் பிற்பட்டவர், சீர்மரபினர், பிற்பட்ட வகுப்பினர்(மு), ஆகியோர் 153 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். தாள் 2க்கான தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறும், ஒன்றரை மணி நேரம் தேர்வு நடக்கும். மொத்த மதிப்பெண்கள் 150, நேர்முகத் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள்வழங்கப்படும். தேர்வு மையங்கள் 38 மாவட்டங்களில் அமைக்கப்படும். இந்த தேர்வுக்காக விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்த ஆவணங்கள், சான்றுகள் மாற்ற, பதிவேற்ற, மீள்பதிவேற்றம் செய்ய மே 7ம் தேதி இரவு வரை அனுமதிக்கப்படும்.
தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக் கலை அலுவலர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான போட்டித் தேர்வு எழுத விரும்புவோர் பிப்ரவரி 10ம் தேதி முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேளாண்மை அலுவலர்(விரிவாக்கம்) 37 முன்கொணர்வு பணியிடங்கள், வேளாண் உதவி இயக்குநர் (விரிவாக்கம்) 8 பணியிடங்கள்,தமிழ்நாடு தோட்டக்கலைப் பணிகளில் 8 தோட்டக் கலை அலுவலர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டித் தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்படும். இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்ரவரி 10ம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். வேளாண்மை அலுவலருக்கான தேர்வு தாள்1(வேளாண்மையியல்)மே 20ம் தேதி நடக்கும். வேளாண்மை உதவி இயக்குநர் பதவிக்கான தாள் 1 தேர்வு மே 21ம் தேதி நடக்கும். வேளாண்மை அலுவலர், வேளாண் உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்கான தாள்2க்கான தேர்வு மே 20ம் தேதி நடக்கும். தோட்டக்கலை அலுவலர் பணிக்கான தாள் 1 தேர்வு மே 21ம் தேதி நடக்கும். இந்த பணிக்கான போட்டித் தேர்வு கணினி வழியில் நடக்கும். தாள்1ல் கொள்குறி வகையில் 200 கேள்விகள் இடம் பெறும். தேர்வு நேரம் 3 மணி நேரம்,மொத்த மதிப்பெண்கள் 300, தேர்வுக்கு தகுதி பெற குறைந்த பட்சம் 204 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்சி(அ)ப.ப, மிகவும் பிற்பட்டவர், சீர்மரபினர், பிற்பட்ட வகுப்பினர்(மு), ஆகியோர் 153 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். தாள் 2க்கான தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறும், ஒன்றரை மணி நேரம் தேர்வு நடக்கும். மொத்த மதிப்பெண்கள் 150, நேர்முகத் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள்வழங்கப்படும். தேர்வு மையங்கள் 38 மாவட்டங்களில் அமைக்கப்படும். இந்த தேர்வுக்காக விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்த ஆவணங்கள், சான்றுகள் மாற்ற, பதிவேற்ற, மீள்பதிவேற்றம் செய்ய மே 7ம் தேதி இரவு வரை அனுமதிக்கப்படும்.
Tuesday, November 08, 2022
Tamilnadu Government
November 08, 2022
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பு!!!
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பு!!!
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பது
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு (Offline Counselling) நவம்பர் மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டில் நேரடி கலந்தாய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் பதிவிடப்பட்டுள்ளது.
இத்தகவல் மாணவர்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இணையதள வாயிலாகவும் மற்றும் 0422-6611345, 0422-6611346 என்ற தொலைபேசி உதவிச் சேவை எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பது
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு (Offline Counselling) நவம்பர் மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டில் நேரடி கலந்தாய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் பதிவிடப்பட்டுள்ளது.
இத்தகவல் மாணவர்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இணையதள வாயிலாகவும் மற்றும் 0422-6611345, 0422-6611346 என்ற தொலைபேசி உதவிச் சேவை எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம்.
Thursday, November 03, 2022
government jobs
November 03, 2022
விவசாயம் படித்தோருக்கு மத்திய அரசில் வேலை: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2022
இந்திய வன ஆராய்ச்சி கல்வி கவுன்சிலின் கீழ் கோவையில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு கல்வி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எம்டிஎஸ், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி எம்டிஎஸ் - 5
பணி லோயர் டிவிஷன் கிளார்க்(எல்டிசி) - 3
பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 2
தகுதி: பத்தாம் முடித்தவர்கள், பிளஸ் 2 முடித்து ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள், தாவரவியல், விவசாயம் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 25.11.2022 தேதியின்படி 18 முதல், 27, 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்திறன், திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ஒவ்வொரு பணிக்கும் கட்டணம் வேறுபடும். முறையே ரூ.500, 1000, 1,500 செலுத்த வேண்டு. எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.250, 500, 750 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2022
மேலும் விவரங்கள் அறிய ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Friday, September 30, 2022
University Ranking List
September 30, 2022
வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு - Agriculture University Ranking List Publication
வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு - Agriculture University Ranking List Publication
தமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் இன்று (செப்.,30) வெளியிடப்பட்ட நிலையில், ஏழு மாணவர்கள், 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தனர்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 12 பி.எஸ்சி., பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கு, 6,980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஜூன், 28ம் தேதி முதல் ஆக.,20 வரை பெறப்பட்டன. இந்நிலையில், இன்று பல்கலை வளாகத்தில் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தரவரிசைப்பட்டியலை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அரசு வேளாண் கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையில் 2,567 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணைப்புக் கல்லூரிகளில், அரசு இட ஒதுக்கீட்டில் ஒற்றைச் சாளர முறையில், 2,868 இடங்களும், நிர்வாக இட ஒதுக்கீட்டின் மூலம், 1,545 இடங்கள் என, மொத்தம், 4,413 இடங்களும், தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு, 247 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 120 இடங்களும், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 408 இடங்களும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கு தலா, 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறப்பு இடஒதுக்கீட்டின்கீழ், 391 மாணவர்கள், அரசு பள்ளியில் பயின்ற, 7,773 மாணவர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 144, தொழிற்கல்வி பிரிவில், 1,849, விளையாட்டு வீரர்கள் பிரிவில், 808 என, மொத்தம், 39 ஆயிரத்து, 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 15 ஆயிரத்து, 111 மாணவர்கள், 24 ஆயிரத்து, 378 மாணவியர் அடங்குவர்.
மொத்த விண்ணப்பதாரர்களில், பொதுப்பிரிவு, 1,226, பிற்பட்ட வகுப்பு, 13 ஆயிரத்து, 610, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 11 ஆயிரத்து, 915, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் பிரிவில், 794, பட்டியல் இனத்தவர் பிரிவில், 10 ஆயிரத்து 002, அருந்ததியர் பிரிவில், 1,346, பழங்குடியினர் பிரிவில், 596 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்நிலையில், தரவரிசைப்பட்டியலில், ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தலா இருவர், சேலம், ராமநாதபுரம், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம், ஏழு பேர், 200-க்கு, 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, 199.5 மதிப்பெண் 14 பேரும், 199 மதிப்பெண்களை மூவரும் பிடித்துள்ளனர். மேலும், 195 மதிப்பெண்களுக்கு மேல், 513 பேர் எடுத்து உள்ளனர். கடந்தாண்டு, 161 பேர், 195 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் கட்-ஆப் 185.5 மதிப்பெண் வரை பெற்றவர்கள், தனியார் கல்லூரிகளில், 179 வரை கட்-ஆப் பெற்றவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில், சராசரியாக 181 மதிப்பெண் வரை கட்-ஆப் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மீடியத்தில் கடந்தாண்டு இரண்டு பிரிவுகளில் தலா, 40 இடங்கள் இருந்த நிலையில், தற்போது, 10 இடங்கள் அதிகரிக்கப்பட்டு 50 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கவுன்சிலிங் முடிந்த பிறகு வேளாண் பல்கலை கவுன்சிலிங் துவங்கும். ஆன்லைன் முறையில் கவுன்சிலிங் நடைபெறும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கவுன்சிலிங் தொடர்பாக யூடியூப் மூலம் தவறான தகவல் வெளியிட்டு வரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோல் தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலையின் அதிகாரபூர்வ தகவல்களை மட்டும் மாணவர்கள் நம்ப வேண்டும். யூடியூப் சேனல்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் இன்று (செப்.,30) வெளியிடப்பட்ட நிலையில், ஏழு மாணவர்கள், 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தனர்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 12 பி.எஸ்சி., பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கு, 6,980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஜூன், 28ம் தேதி முதல் ஆக.,20 வரை பெறப்பட்டன. இந்நிலையில், இன்று பல்கலை வளாகத்தில் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தரவரிசைப்பட்டியலை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அரசு வேளாண் கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையில் 2,567 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணைப்புக் கல்லூரிகளில், அரசு இட ஒதுக்கீட்டில் ஒற்றைச் சாளர முறையில், 2,868 இடங்களும், நிர்வாக இட ஒதுக்கீட்டின் மூலம், 1,545 இடங்கள் என, மொத்தம், 4,413 இடங்களும், தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு, 247 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 120 இடங்களும், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 408 இடங்களும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கு தலா, 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறப்பு இடஒதுக்கீட்டின்கீழ், 391 மாணவர்கள், அரசு பள்ளியில் பயின்ற, 7,773 மாணவர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 144, தொழிற்கல்வி பிரிவில், 1,849, விளையாட்டு வீரர்கள் பிரிவில், 808 என, மொத்தம், 39 ஆயிரத்து, 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 15 ஆயிரத்து, 111 மாணவர்கள், 24 ஆயிரத்து, 378 மாணவியர் அடங்குவர்.
மொத்த விண்ணப்பதாரர்களில், பொதுப்பிரிவு, 1,226, பிற்பட்ட வகுப்பு, 13 ஆயிரத்து, 610, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 11 ஆயிரத்து, 915, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் பிரிவில், 794, பட்டியல் இனத்தவர் பிரிவில், 10 ஆயிரத்து 002, அருந்ததியர் பிரிவில், 1,346, பழங்குடியினர் பிரிவில், 596 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்நிலையில், தரவரிசைப்பட்டியலில், ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தலா இருவர், சேலம், ராமநாதபுரம், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம், ஏழு பேர், 200-க்கு, 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, 199.5 மதிப்பெண் 14 பேரும், 199 மதிப்பெண்களை மூவரும் பிடித்துள்ளனர். மேலும், 195 மதிப்பெண்களுக்கு மேல், 513 பேர் எடுத்து உள்ளனர். கடந்தாண்டு, 161 பேர், 195 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் கட்-ஆப் 185.5 மதிப்பெண் வரை பெற்றவர்கள், தனியார் கல்லூரிகளில், 179 வரை கட்-ஆப் பெற்றவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில், சராசரியாக 181 மதிப்பெண் வரை கட்-ஆப் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மீடியத்தில் கடந்தாண்டு இரண்டு பிரிவுகளில் தலா, 40 இடங்கள் இருந்த நிலையில், தற்போது, 10 இடங்கள் அதிகரிக்கப்பட்டு 50 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கவுன்சிலிங் முடிந்த பிறகு வேளாண் பல்கலை கவுன்சிலிங் துவங்கும். ஆன்லைன் முறையில் கவுன்சிலிங் நடைபெறும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கவுன்சிலிங் தொடர்பாக யூடியூப் மூலம் தவறான தகவல் வெளியிட்டு வரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோல் தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலையின் அதிகாரபூர்வ தகவல்களை மட்டும் மாணவர்கள் நம்ப வேண்டும். யூடியூப் சேனல்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
Thursday, August 11, 2022
Tamil Nadu Agricultural University
August 11, 2022
கோவை வேளாண் பல்கலை முதலாமாண்டு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை
கோவை வேளாண் பல்கலை முதலாமாண்டு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!
கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வருபவர் பழனி. இவரது மகன் பிரோதாஸ் குமார் (19) கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். மாணவர் பிரோதாஸ் குமார், இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து வந்த நிலையில், அந்த துறை கிடைக்காததால், பயோ டெக் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரோதாஸ் குமார் பல்கலைகழகத்தின் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், விருப்பப்பட்ட துறை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மாணவர் பிரோதாஸ் குமார் ஏற்கனவே ஒருமுறை வீட்டில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை பெற்றோர்கள் சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், மாணவர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா..? என்பது குறித்து, விடுதியில் உடன் தங்கியிருந்த மாணவர்கள், அவரது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வருபவர் பழனி. இவரது மகன் பிரோதாஸ் குமார் (19) கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். மாணவர் பிரோதாஸ் குமார், இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து வந்த நிலையில், அந்த துறை கிடைக்காததால், பயோ டெக் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரோதாஸ் குமார் பல்கலைகழகத்தின் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், விருப்பப்பட்ட துறை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மாணவர் பிரோதாஸ் குமார் ஏற்கனவே ஒருமுறை வீட்டில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை பெற்றோர்கள் சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், மாணவர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா..? என்பது குறித்து, விடுதியில் உடன் தங்கியிருந்த மாணவர்கள், அவரது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Scheme
August 11, 2022
விவசாயிகள் கவனத்துக்கு... மின் மோட்டர்கள் அமைக்க ரூ.10,000 மானியம் பெறுவது எப்படி?
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் நிலத்துக்கு மின்மோட்டார்கள் அமைப்பதற்கு ரூ.10,000 மானியம் பெற முடியும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு புதிதாக மின் மோட்டார் பம்ப் பொருத்தவும், பழைய மின் மோட்டர்களை மாற்றவும் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருப்பூர், தாராபுரம், உடுமலை பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு மானியத்தில் புதிய மின் மோட்டர் பொறுத்தவும், பழைய மின் மோட்டரை மாற்றி அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில், 3 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டும் பயன் பெறமுடியும். திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதியதாக பொருத்தவும் அதிகபட்சமாக ரூ.10,000 மானியமாக வழங்கப்படுகிறது.
சிறு, குறு விவசாய சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள வரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம், வங்கி புத்கத்தின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
திருப்பூர், தாராபுரம், உடுமலை உட்கோட்ட பகுதி விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) ஜெயக்குமாரை 94432 43495 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் திருப்பூர், தாராபுரம், உடுமலை உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு புதிதாக மின் மோட்டார் பம்ப் பொருத்தவும், பழைய மின் மோட்டர்களை மாற்றவும் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருப்பூர், தாராபுரம், உடுமலை பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு மானியத்தில் புதிய மின் மோட்டர் பொறுத்தவும், பழைய மின் மோட்டரை மாற்றி அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில், 3 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டும் பயன் பெறமுடியும். திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதியதாக பொருத்தவும் அதிகபட்சமாக ரூ.10,000 மானியமாக வழங்கப்படுகிறது.
சிறு, குறு விவசாய சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள வரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம், வங்கி புத்கத்தின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
திருப்பூர், தாராபுரம், உடுமலை உட்கோட்ட பகுதி விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) ஜெயக்குமாரை 94432 43495 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் திருப்பூர், தாராபுரம், உடுமலை உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.
Wednesday, August 10, 2022
வேளாண் பல்கலை
August 10, 2022
முதுநிலை பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு: வேளாண் பல்கலை. அறிவிப்பு
முதுநிலை பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1958-ம் ஆண்டு எம்.எஸ்சி படிப்புகள் தொடங்கப்பட்டன. 1960-ம் ஆண்டு முனைவர் (பி.ஹெச்டி) படிப்புகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் சார்பில், கோவை, மதுரை, மேட்டுப்பாளையம், திருச்சியில் 2 இடங்கள், தேனி, கிள்ளிக்குளம் உள்ளிட்ட 8 கல்லூரிகளில் உள்ள, 32 துறைகளில் எம்.எஸ்சி முதுநிலை பட்டப்படிப்பும், 28 துறைகளில் முனைவர் (பி.ஹெச்டி) பட்டப்படிப்பும் கற்பிக்கப்படுகிறது.
இரண்டாண்டுகளை கொண்ட முதுநிலை பட்டமேற்படிப்பில் 400 இடங்களும், மூன்றாண்டுகளை கொண்ட முனைவர் பட்ட மேற்படிப்பில் 200 இடங்களும் உள்ளன. நடப்புக் கல்வியாண்டு முதுகலை மற்றும் முனைவர் படிப்பக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை கடந்த ஜூன் மாதம் இறுதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://admissionsatpgschool.tnau.ac.in இணையதளம் மூலம் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததது. முதுநிலை பட்டமேற்படிப்புக்கு வரும் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்க பல்கலைக்கழகத்தின் சார்பில் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முதுநிலை பட்ட மேற்ப்படிப்புக்கான இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 16-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இளநிலை, முதுநிலை முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழ் மூலமாகவும், தற்பொழுது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் அல்லது கல்லூரி முதல்வர்களிடம் பெற்ற படிப்பு முடிவுற்ற சான்றிதழ் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். எனினும் பட்டப்படிப்பு சான்றிதழை சமர்ப்பித்த பின்னரே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1958-ம் ஆண்டு எம்.எஸ்சி படிப்புகள் தொடங்கப்பட்டன. 1960-ம் ஆண்டு முனைவர் (பி.ஹெச்டி) படிப்புகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் சார்பில், கோவை, மதுரை, மேட்டுப்பாளையம், திருச்சியில் 2 இடங்கள், தேனி, கிள்ளிக்குளம் உள்ளிட்ட 8 கல்லூரிகளில் உள்ள, 32 துறைகளில் எம்.எஸ்சி முதுநிலை பட்டப்படிப்பும், 28 துறைகளில் முனைவர் (பி.ஹெச்டி) பட்டப்படிப்பும் கற்பிக்கப்படுகிறது.
இரண்டாண்டுகளை கொண்ட முதுநிலை பட்டமேற்படிப்பில் 400 இடங்களும், மூன்றாண்டுகளை கொண்ட முனைவர் பட்ட மேற்படிப்பில் 200 இடங்களும் உள்ளன. நடப்புக் கல்வியாண்டு முதுகலை மற்றும் முனைவர் படிப்பக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை கடந்த ஜூன் மாதம் இறுதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://admissionsatpgschool.tnau.ac.in இணையதளம் மூலம் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததது. முதுநிலை பட்டமேற்படிப்புக்கு வரும் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்க பல்கலைக்கழகத்தின் சார்பில் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முதுநிலை பட்ட மேற்ப்படிப்புக்கான இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 16-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இளநிலை, முதுநிலை முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழ் மூலமாகவும், தற்பொழுது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் அல்லது கல்லூரி முதல்வர்களிடம் பெற்ற படிப்பு முடிவுற்ற சான்றிதழ் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். எனினும் பட்டப்படிப்பு சான்றிதழை சமர்ப்பித்த பின்னரே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.
Friday, August 05, 2022
Tuesday, August 02, 2022
G.Os of Agriculture and Farmers Welfare Department
August 02, 2022
G.Os of Agriculture and Farmers Welfare Department - G.O.Ms.No. 138 Dt: July 01, 2022
வேளாண்மை-உழவர் நலத் துறை– 2022-2023 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள் – பல்வேறு திட்டக் கூறுகளை உள்ளடக்கிய “மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம்” – திட்டச் செயலாக்கத்திற்காக ரூ.51.0225 கோடி நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்- வெளியிடுதல் – ஆணை- வெளியிடப்படுகிறது.
G.Os of Agriculture and Farmers Welfare Department - G.O.Ms.No. 138 Dt: July 01, 2022
CLICK HERE TO DOWNLOAD
G.Os of Agriculture and Farmers Welfare Department - G.O.Ms.No. 138 Dt: July 01, 2022
CLICK HERE TO DOWNLOAD
Sunday, July 31, 2022
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை
July 31, 2022
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரின் அறிக்கை - PDF
CLICK HERE TO DOWNLOAD
செய்தி வெளியீடு எண்: 1284
நாள்: 30.07.2022
செய்தி வெளியீடு
டி.ஸி உரத்திற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் குப்பர் பாஸ்பேட் உரங்களை நெல் விவசாமிகள் பயன்படுத்துமாறு மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களின் வேண்டுகோள்
தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் டிஏபி உரத்தினையே அடி உரமாக பயன்படுத்துகிறார்கள். டிஏபி உரம் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப்பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை அகில உலக அளவில் அதிகரித்துக்கொண்டே செல்வதால், உள்நாட்டில் டிஏபி உர உற்பத்தி குறைந்து. பெரும்பாலான டிஏபி உரங்கள் வெளி நாட்டிலிருந்தே இறக்குமதி செய்து, விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இறக்குமதியின் போது சில நேரங்களில் கப்பல் பற்றாக்குறை அல்லது துறைமுகங்களில் இட இட நெருக்கடி போன்ற காரணங்களினால் டிஏபி உரத்தை துறைமுகத்தில் இறக்கி, மாவட்டங்களுக்கு அனுப்புவதில் சிலசமயம் தாமதம் ஏற்படுகிறது. எனவே, இது தொடர்பாக, ஒன்றிய அரசின் உரத்துறையானது, டிஏபி உரத்துக்கு மாற்றாக, காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை அடி உரமாக இட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி வருகிறது.
அதன்படி, 9 கிலோ தழைச்சத்தும் 23 கிலோ மணிச்சத்தும் உள்ள 50 கிலோ டிஏபி உரத்திற்கு மாற்றாக, அடி உரமாக, காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை கீழ்க்கண்ட மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியினை பயன்படுத்தலாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. 1. மூன்று மூட்டை (150 கிலோ) சூப்பர் பாஸ்பேட்டும், 20 கிலோ யூரியாவும் (அல்லது)
2. ஒரு மூட்டை (50 கிலோ) 20:20:013 காம்ப்ளக்ஸ்சும், 75 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் (அல்லது)
3. ஒரு மூட்டை (50 கிலோ) 16:20:013 காம்ப்ளக்ஸ்சும், 75 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் பயிரின் வளர்ச்சிக்கு அவசியம் தேவைப்படும் கந்தகச்சத்து காம்ப்ளக்ஸ் உரத்தில் 13 சதமும் சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 11 சதமும் உள்ளதால், பயிரின் வளர்ச்சியும், மகசூலும் அதிகரிக்கும். இதனால், டிஏபி இட்ட வயலைப் போன்றே, பயிர்வளர்ச்சி செழித்து, விளைச்சலும் அதிகரிக்கும். தற்போது, அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் காம்ப்ளெக்ஸ் உரமும், சூப்பர் பாஸ்பேட் உரமும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
எனவே, டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை நெல்லுக்கு அடியுரமாக பயன்படுத்துமாறு விவசாயிகளை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளியீடு: இயக்குநர். செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Saturday, July 02, 2022
Tamil Nadu Agricultural University
July 02, 2022
5,000 இடங்களுக்கு 60,000 விண்ணப்பங்கள்... வேளாண் படிப்புகளுக்கு கூடும் மவுசு: தமிழகத்தில் கூடுதல் கல்லூரிகள் அமையுமா?
நமது நாட்டில் ஆண்டிற்கு ஒரு லட்சம் வேளாண் பட்டதாரிகள் தேவைப்படும் நிலையில், 40 ஆயிரம் பட்டதாரிகளே படித்து முடித்து வெளியேறுகிறார்கள். தமிழகத்தில் வேளாண்மை கல்லூரிகளை அதிகமாக தொடங்க வேண்டும் என்று வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழகம், அதன் கீழ் 18 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 28 தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன. இங்கு மாணவர்கள் வேளாண் படிப்புகள் படிக்க 5,000 இடங்கள் உள்ளன.
வேளாண் கல்வி படித்தால் வேளாண்மை அதிகாரி, தோட்டக் கலைத் துறை அதிகாரி, வங்கி அதிகாரி, ஆராய்ச்சி நிலையங்களில் பணி, மத்திய அரசு சார்ந்த ரப்பர் தொழிற்சாலை, காபி வாரியம், தென்னை வாரியம் உள்ளிட்ட பயிர் வாரியங்கள் பணி, தனியார் உரத்தொழிற்சாலை, பூச்சி மருந்து கம்பெனிகள், சர்க்கரை தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி நிலையங்களில் பணி வாய்ப்பு கிடைக்கிறது. இது தவிர சுயதொழிலும் செய்யலாம். போட்டித் தேர்வுகளில் மிக எளிதாக வெற்றிப் பெறலாம். போட்டித் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் வேளாண் படிப்புகளில் உள்ளன. அதனாலே, 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்தால் வெறும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேளாண் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
தற்போது நடப்பு கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. சிறப்பாக படிக்கும் பெரும்பான்மை மாணவர்களின் முதல் தேர்வாக எம்பிபிஎஸ் படிப்பு இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் இன்ஜினிரிங் படிப்பு இருந்தது.
ஆனால், பொறியியல் படிப்பை காட்டிலும் மாணவர்கள் மத்தியில் தற்போது வேளாண் படிப்புகளுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. 12 மாவட்டங்களில் இன்னும் வேளாண் கல்லூரிகள் இல்லை. அதனால், கூடுதல் வேளாண் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்ற எதிபார்ப்பு எழுந்துள்ளது.
வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: "அடிப்படையில் மனித இனம் உயிரோடு இருப்பதற்கு உணவு முக்கியமானது. 1947-ம் ஆண்டு 30 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 120 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், உணவு தயாரிப்பதற்காக அன்று இருந்த விளை நிலங்களில் தற்போது 60 சதவீதம்தான் தற்போது இருக்கிறது. மீதமுள்ள விளைநிலங்கள், ரோடு, விமானநிலையம், குடியிருப்புகள், ஆக்கிரமிப்பு காரணமக குறைந்துவிட்டது. மழையும் சீராக பெய்வதில்லை. நீர் ஆதாரமும் (Aquifers) குறைந்துவிட்டது. அதனால், விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது. நிறையை இடங்களில் உவர் நிலங்கள், கலர் நிலங்கள் போன்ற பயன்படுத்த முடியாத நிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அதனால், 120 கோடி மக்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்வது எதிர்காலத்தில் பெரிய சவாலாக திகழும்.
நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 750 விவசாயிகள், விவசாயம் மீது நம்பிக்கையில்லாமல் மாற்றுத்தொழிலுக்கு செல்கின்றனர். இதற்கு ஒரே தீர்வு, விவசாயத்தை தொழில் நுட்பத்தால் மேம்படுத்தினால் மட்டுமே உண்டு. குறைவான விளைநிலம், குறைவான நீர், குறைவான வேலையாட்களை கொண்டு உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு வேளாண் பட்டதாரிகள் அதிகளவு தேவைப்படுகிறார்கள். வேளாண்மை படிப்பால் மட்டுமே விவசாயத்தை தூக்கி நிறுத்த முடியும்.
விவசாயம் இல்லாமல் தொழில்துறை வளர வாய்ப்பில்லை. ஏனென்றால் எந்த ஒரு மூலப்பொருளும் விவசாயத்தில் இருந்துதான் கிடைக்கப்பெறுகிறது. நமது நாட்டில் ஆண்டிற்கு ஒரு லட்சம் வேளாண் பட்டதாரிகள் தேவைப்படுகிறார்கள்.
ஆனால், 40 ஆயிரம் பட்டதாரிகளே படித்து முடித்து வெளியேறுகிறார்கள். விவசாயிகளை காக்க வேண்டும் என்று சொல்கிற நமது நாட்டில்தான் ஒரு விவசாயியின் மகன் தான் நினைத்த விவசாயப் படிப்பு படிக்க முடியாமல் போகிறது. அதற்கு வேளாண்மை கல்லூரிகளை அதிகமாக தொடங்க வேண்டும்." என்று வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் கூறியுள்ளனர். விவசாய கல்லூரி தொடங்க என்ன தேவை? ஒரு வேளாண்மை கல்லூரி தொடங்குவதற்கு குறைந்தப் பட்சம் 110 ஏக்கர் நிலம் வேண்டும். அதில், நிலத்தடிநீர் ஆதாரத்துடன் கூடிய 80 சதவீதம் விளைநிலம் இருக்க வேண்டும். நஞ்சை, புஞ்சை நிலங்கள் இருக்க வேண்டும். காடு வளர்ப்பு, தோட்டப்பயிர்கள் வளரக்கூடிய சூழல் இருக்க வேண்டும். ஆய்வுக்கூட வசதிகள், வகுப்பறை கட்டிடங்கள், விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு பாடத் திட்டத்துடன் விவசாயப்பயிற்சி அளிக்க முடியும்.
ஆனால், தற்போது அமையும் பெரும்பான்மை வேளாண் கல்லூரிகள், தரமான பேராசிரியர்கள், கட்டிட வசதி, விளைநிலங்கள் வசதியில்லாமல் அமைகின்றன. அதனால், மாணவர்களுக்கு வெறும் வகுப்பறை கல்வி மட்டுமே கற்றுக்கொடுத்து காகித சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதனால், தரமில்லாத வேளாண்பட்டதாரிகள் உருவாகி கொண்டிருக்கின்றனர். வேளாண் படிப்புகளுக்கு மவுசு இருக்கிறது என்பதற்காக புற்றீசல் போல் தரமில்லாமல் கல்லூரிகள் அமைவதை தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழகம், அதன் கீழ் 18 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 28 தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன. இங்கு மாணவர்கள் வேளாண் படிப்புகள் படிக்க 5,000 இடங்கள் உள்ளன.
வேளாண் கல்வி படித்தால் வேளாண்மை அதிகாரி, தோட்டக் கலைத் துறை அதிகாரி, வங்கி அதிகாரி, ஆராய்ச்சி நிலையங்களில் பணி, மத்திய அரசு சார்ந்த ரப்பர் தொழிற்சாலை, காபி வாரியம், தென்னை வாரியம் உள்ளிட்ட பயிர் வாரியங்கள் பணி, தனியார் உரத்தொழிற்சாலை, பூச்சி மருந்து கம்பெனிகள், சர்க்கரை தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி நிலையங்களில் பணி வாய்ப்பு கிடைக்கிறது. இது தவிர சுயதொழிலும் செய்யலாம். போட்டித் தேர்வுகளில் மிக எளிதாக வெற்றிப் பெறலாம். போட்டித் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் வேளாண் படிப்புகளில் உள்ளன. அதனாலே, 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்தால் வெறும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேளாண் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
தற்போது நடப்பு கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. சிறப்பாக படிக்கும் பெரும்பான்மை மாணவர்களின் முதல் தேர்வாக எம்பிபிஎஸ் படிப்பு இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் இன்ஜினிரிங் படிப்பு இருந்தது.
ஆனால், பொறியியல் படிப்பை காட்டிலும் மாணவர்கள் மத்தியில் தற்போது வேளாண் படிப்புகளுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. 12 மாவட்டங்களில் இன்னும் வேளாண் கல்லூரிகள் இல்லை. அதனால், கூடுதல் வேளாண் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்ற எதிபார்ப்பு எழுந்துள்ளது.
வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: "அடிப்படையில் மனித இனம் உயிரோடு இருப்பதற்கு உணவு முக்கியமானது. 1947-ம் ஆண்டு 30 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 120 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், உணவு தயாரிப்பதற்காக அன்று இருந்த விளை நிலங்களில் தற்போது 60 சதவீதம்தான் தற்போது இருக்கிறது. மீதமுள்ள விளைநிலங்கள், ரோடு, விமானநிலையம், குடியிருப்புகள், ஆக்கிரமிப்பு காரணமக குறைந்துவிட்டது. மழையும் சீராக பெய்வதில்லை. நீர் ஆதாரமும் (Aquifers) குறைந்துவிட்டது. அதனால், விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது. நிறையை இடங்களில் உவர் நிலங்கள், கலர் நிலங்கள் போன்ற பயன்படுத்த முடியாத நிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அதனால், 120 கோடி மக்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்வது எதிர்காலத்தில் பெரிய சவாலாக திகழும்.
நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 750 விவசாயிகள், விவசாயம் மீது நம்பிக்கையில்லாமல் மாற்றுத்தொழிலுக்கு செல்கின்றனர். இதற்கு ஒரே தீர்வு, விவசாயத்தை தொழில் நுட்பத்தால் மேம்படுத்தினால் மட்டுமே உண்டு. குறைவான விளைநிலம், குறைவான நீர், குறைவான வேலையாட்களை கொண்டு உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு வேளாண் பட்டதாரிகள் அதிகளவு தேவைப்படுகிறார்கள். வேளாண்மை படிப்பால் மட்டுமே விவசாயத்தை தூக்கி நிறுத்த முடியும்.
விவசாயம் இல்லாமல் தொழில்துறை வளர வாய்ப்பில்லை. ஏனென்றால் எந்த ஒரு மூலப்பொருளும் விவசாயத்தில் இருந்துதான் கிடைக்கப்பெறுகிறது. நமது நாட்டில் ஆண்டிற்கு ஒரு லட்சம் வேளாண் பட்டதாரிகள் தேவைப்படுகிறார்கள்.
ஆனால், 40 ஆயிரம் பட்டதாரிகளே படித்து முடித்து வெளியேறுகிறார்கள். விவசாயிகளை காக்க வேண்டும் என்று சொல்கிற நமது நாட்டில்தான் ஒரு விவசாயியின் மகன் தான் நினைத்த விவசாயப் படிப்பு படிக்க முடியாமல் போகிறது. அதற்கு வேளாண்மை கல்லூரிகளை அதிகமாக தொடங்க வேண்டும்." என்று வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் கூறியுள்ளனர். விவசாய கல்லூரி தொடங்க என்ன தேவை? ஒரு வேளாண்மை கல்லூரி தொடங்குவதற்கு குறைந்தப் பட்சம் 110 ஏக்கர் நிலம் வேண்டும். அதில், நிலத்தடிநீர் ஆதாரத்துடன் கூடிய 80 சதவீதம் விளைநிலம் இருக்க வேண்டும். நஞ்சை, புஞ்சை நிலங்கள் இருக்க வேண்டும். காடு வளர்ப்பு, தோட்டப்பயிர்கள் வளரக்கூடிய சூழல் இருக்க வேண்டும். ஆய்வுக்கூட வசதிகள், வகுப்பறை கட்டிடங்கள், விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு பாடத் திட்டத்துடன் விவசாயப்பயிற்சி அளிக்க முடியும்.
ஆனால், தற்போது அமையும் பெரும்பான்மை வேளாண் கல்லூரிகள், தரமான பேராசிரியர்கள், கட்டிட வசதி, விளைநிலங்கள் வசதியில்லாமல் அமைகின்றன. அதனால், மாணவர்களுக்கு வெறும் வகுப்பறை கல்வி மட்டுமே கற்றுக்கொடுத்து காகித சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதனால், தரமில்லாத வேளாண்பட்டதாரிகள் உருவாகி கொண்டிருக்கின்றனர். வேளாண் படிப்புகளுக்கு மவுசு இருக்கிறது என்பதற்காக புற்றீசல் போல் தரமில்லாமல் கல்லூரிகள் அமைவதை தடுக்க வேண்டும்.







