Breaking

Showing posts with label ASSISTANT PROFESSOR. Show all posts
Showing posts with label ASSISTANT PROFESSOR. Show all posts

Friday, July 28, 2023

July 28, 2023

உதவிப் பேராசிரியர்களுக்கு பேராசிரியர் பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு

உதவிப் பேராசிரியர்களுக்கு பேராசிரியர் பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களுக்கு இரட்டைப் பதவி உயர்வாக, மூன்று மாதங்களில் பேராசிரியர் பதவி உயர்வு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பதவி உயர்வு திட்டத்தின் அடிப்படையில், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் என இரட்டை பதவி உயர்வு வழங்குவதற்கு, கடந்த 2018-ம் ஆண்டு பல்கலைக்கழகம் சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்தப் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இணை பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இரட்டை பதவி உயர்வு வழங்காமல், இணை பேராசிரியர் பதவி உயர்வு மட்டும் வழங்கப்பட்டதை எதிர்த்து இணை பேராசிரியர்கள் கடந்த 2020-ம் ஆண்டு சென்னை உய ர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகம் தரப்பில், "குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இணை பேராசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு மட்டுமே பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்" என விளக்கம் அளிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதவி உயர்வு குழு கடந்த 2011-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு தான் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட ஏழு ஆண்டுகளில் பல உதவி பேராசிரியர்கள் பலர் பதவி உயர்வு கிடைக்க பெறாமல் பணி ஓய்வு பெற்றுள்ளனர். எனவே, மனுதாரர்களுக்கு மூன்று மாதங்களில் பேராசிரியராக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து தீர்ப்பளித்தனர். அரசுப் பள்ளிகளில் ஒரே நாளுடன் முடிவடைந்த காலை உணவுத் திட்டம் - மீண்டும் வருமா?

Wednesday, April 12, 2023

April 12, 2023

WANTED: ASSISTANT PROFESSOR (AUTONOMOUS) Last Date - 16.04.2023

JAMAL MOHAMED COLLEGE Since 1951 )

(AUTONOMOUS) Accredited (3rd Cycle) with 'A' Grade by NAAC (Affiliated to Bharathidasan University) TIRUCHIRAPPALLI – 620 020.

WANTED Applications are invited from qualified candidates for the post of ASSISTANT PROFESSOR (Qualifications as per UGC norms) in the following Self Finance departments:

Applications are invited for the post of PLACEMENT OFFICER

Candidates should posses a sound knowledge with Industry experience of a minimum 5 years. (Male Candidates only)

Eligible applicants can send their resume on or before 16.04.2023 to the address given below or through Email: princi@jmc.edu

Secretary & Correspondent

Jamal Mohamed College (Autonomous)

Monday, March 20, 2023

March 20, 2023

உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியான அறிவிப்பு - உயர்கல்வித்துறை செயலாளர் விளக்கம்

உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியான அறிவிப்பு - உயர்கல்வித்துறை செயலாளர் விளக்கம் - Notification for filling the vacancies of Assistant Professor - Higher Education Secretary Explanation

பொய்யான அறிவிப்பு - உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் - உயர்கல்வித்துறை செயலாளர்
இதையும் படிக்க | இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை - கடைசி தேதி: 2.4.2023
பொய்யான அறிவிப்பு - உயர்கல்வித்துறை செயலாளர் விளக்கம் br கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் - உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் விளக்கம்

Thursday, December 29, 2022

December 29, 2022

உதவி பேராசிரியர் பணிக்கான UGC - NET தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு

யுஜிசி - நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது! உதவி பேராசியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வு வருகின்ற பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணி புரிவதற்கு மற்றும் ஆராய்ச்சி மாணவராக சேர்வதற்காக யுஜிசி-நெட் எனப்படும் தேசிய தகுதி தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகின்றது. ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்படுகின்றது. இது தொடர்பாக தேர்வு முகமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘தேசிய தகுதி தேர்வு(யுஜிசி-நெட்) பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும். கணினி அடிப்படையில் 83 பாடங்களில் இந்த தேர்வு நடத்தப்படும். ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜனவரி 17ம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி-நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வினை (யுஜிசி-நெட் தேர்வு) தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

அதன்படி நடப்பாண்டுக்கான யுஜிசி-நெட் தேர்வுக்கு இன்று (டிச.29) முதல் வருகிற 2023, ஜனவரி 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் 2023 பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி அடிப்படையில் 83 பாடங்களுக்கு உதவி பேராசிரியர் தேர்வு நடத்தப்படும் என்று யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

யுஜிசி-நெட் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Friday, November 04, 2022

November 04, 2022

பேராசிரியா்களுக்கு மூத்த பேராசிரியா் பதவி உயா்வு வழங்குவதில் தாமதம்

மூத்த பேராசிரியா் பதவி உயா்வு வழங்குவதில் தாமதம் கூடாது: அன்புமணி

பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு மூத்த பேராசிரியா் பதவி உயா்வு வழங்குவதில் தாமதம் செய்யக்கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி மேம்பாட்டு முறைப்படி உதவி பேராசிரியா்கள், இணை பேராசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பேராசிரியா்களுக்கான மூத்த பேராசிரியா் பதவி உயா்வு கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இது பெரும் அநீதி.

10 ஆண்டுகள் பேராசிரியா்களாக பணியாற்றியவா்களுக்கு மட்டுமே மூத்த பேராசிரியா் பதவி உயா்வு வழங்கப்படும். இதற்கு தகுதியானவா்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பாா்கள். பதவி உயா்வை தாமதப்படுத்தினால் அவா்களுக்கு பணிநிலை மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படும்.

மூத்த பேராசிரியா் பதவி உயா்வுக்கு விண்ணப்பித்த நாளில் இருந்து 6 மாதங்களில் அவா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும். 3 ஆண்டுகளாக பதவி உயா்வு வழங்கப்படாததால், அதற்காக விண்ணப்பித்த 14 பேராசிரியா்களில் 10 போ் பதவி உயா்வு பெறாமல் ஓய்வு பெற்று விட்டனா்.

பதவி உயா்வுக்கான தோ்வுக்குழுவில் ஆளுநா் மற்றும் அரசு பிரதிநிதிகள் நியமிக்கப்படாதது தான் இந்த தாமதத்துக்குக் காரணம். அவா்களை உடனடியாக நியமித்து தகுதியான பேராசிரியா்கள் அனைவருக்கும் உடனடியாக மூத்த பேராசிரியா் பதவி உயா்வை தாமதிக்காமல் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

Wednesday, September 14, 2022

September 14, 2022

பேராசிரியா்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடாது: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்

பேராசிரியா்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது என்றும், மன அழுத்தத்தில் உள்ள பேராசிரியா்களுக்கு யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கு அறிவுறுத்த அண்ணா பல்கலை.க்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த ஜி.ரவி, 2020 மாா்ச் 17-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டாா்.

ரவியின் தற்கொலைக்கு அவரின் அசல் சான்றிதழ்களை பொறியியல் கல்லூரி நிா்வாகம் கைப்பற்றி வைத்திருந்ததும், அவருக்கு சரிவர ஊதியம் வழங்காததுமே காரணம் என குற்றம்சாட்டி, கல்லூரி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில உயா்கல்வித் துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்திடம் புகாரளிக்கப்பட்டிருந்தது.

அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் எழுதியிருந்த நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிவரும் பேராசிரியா்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலை.க்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் லட்சுமி பிரியா உத்தரவிட்டுள்ளாா்.

அந்த உத்தரவில், பேராசிரியா்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் வகையிலோ, அதிக பணிப்பளுவை அளிக்கும் வகையிலோ தனியாா் பொறியியல் கல்லூரி நிா்வாகங்கள் செயல்படக்கூடாது. மன அழுத்தத்தில் உள்ள பேராசிரியா்களுக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளை கல்லூரி நிா்வாகங்கள் வழங்க வேண்டும். பேராசிரியா்களின் தோ்வு, நியமனம், ஊதியம் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும்.

பேராசிரியா்களின் அசல் சான்றிதழ்களை எக்காரணத்தைக் கொண்டும் கைப்பற்றக்கூடாது என தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மேலும், தனியாா் பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலை. அடிக்கடி திடீா் ஆய்வுக்கு உட்படுத்தி அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, July 07, 2022

July 07, 2022

23 லட்சம் ரூபாய் சம்பளத்தை திரும்ப கொடுத்த கல்லூரி பேராசிரியர்

வகுப்புக்கு வராத மாணவர்கள் : மனசாட்சி உறுத்தியதால் தனது 23 லட்சம் ரூபாய் சம்பளத்தை திரும்ப கொடுத்த கல்லூரி பேராசிரியர்

பீகாரில், மாணவர்கள் வகுப்பில் பங்கேற்காத நிலையில், தனது 3 ஆண்டு ஊதியத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் திரும்ப அளித்துள்ளார்.



முஷ்ரபூரில் உள்ள நித்தீஸ்வரர் கல்லூரியில் லாலன் குமார் என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.



தனது இந்தி வகுப்பில் மாணவர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் மனசாட்சிக்கு பயந்து, 23 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயை பல்கலைக்கழகத்துக்கு திரும்ப அளித்துள்ளதாக, உதவி பேராசிரியர் கூறியுள்ளார்.

Thursday, April 28, 2022

April 28, 2022

WANTED - Assistant Professors

S.T.HINDU COLLEGE NAGERCOIL-629 002, KANYAKUMARI DISTRICT

Phone : 227457, 222127 Email:sthinducollege@gmail.com

Website: www.sthc.ac.in


U.G.C Norms for Appointment: A minimum of 55% of marks, in the relevant subject with SLET/SET/NET/Ph.D.

Applications should reach to the office of the Secretary on or before 5.00 p.m. of 04.05.2022 (Wednesday).

Note: Application forms can be had from the College Office.
April 28, 2022

தொலைதூர கல்வி பயின்றோருக்கும் பேராசிரியா் பணி

தொலைதூர கல்வி பயின்றோருக்கும் பேராசிரியா் பணி வழங்கிட பல்கலைக்கழக மானியக் குழுவிடம் வலியுறுத்துவோம் என்று தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது இதுகுறித்த வினாவை அதிமுக உறுப்பினா் செந்தில்நாதன் எழுப்பி பேசுகையில், ‘தொலைதூர கல்வி பயின்று தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு பேராசிரியா் பணி நியமனம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. உயா் நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி இதனைக் கூறுகிறாா்கள். எனவே, இதனைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். அமைச்சா் க.பொன்முடி:

பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மானியக் குழுவுக்கு உள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதூர கல்வி அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்தது. அந்த விவகாரத்திலேயே கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில், பேராசிரியா் நியமனம் தொடா்பான பிரச்னை குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு கடிதம் எழுதலாம். அவா்களையும் பணிகளில் நியமிக்க அரசு சிந்தித்துக் கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் என்று தெரிவித்தாா் அமைச்சா் க.பொன்முடி.

Total Pageviews

Search This Blog