Breaking

Showing posts with label SMC. Show all posts
Showing posts with label SMC. Show all posts

Tuesday, February 18, 2025

February 18, 2025

SMC Teachers - அரசுப் பொதுத் தேர்விற்கு (12, 11, 10-ம் வகுப்பு) அகத்தேர்வர், அறை கண்காணிப்பாளர் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமனம் செய்ய வேண்டுதல்!

Thursday, August 01, 2024

Saturday, January 06, 2024

January 06, 2024

பள்ளி மேலாண்மை குழு தெரிவித்த அரசு பள்ளிகளுக்கான தேவையை நிவர்த்தி செய்யும் பணிகள் தீவிரம்



பள்ளி மேலாண்மை குழு தெரிவித்த அரசு பள்ளிகளுக்கான தேவையை நிவர்த்தி செய்யும் பணிகள் தீவிரம் According to the School Management Committee, efforts are being made to address the demand for government schools

CLICK HERE TO DOWNLOAD

Friday, January 05, 2024

January 05, 2024

GO ;: 245 & 239 பற்றிய முழுமையான விளக்கம் - இன்றைய SMC கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு உதவும்.

GO ;: 245 & 239 பற்றிய முழுமையான விளக்கம் - இன்றைய SMC கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு உதவும்.

Go 245

➡️குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமைச் சட்டம் 2009ன் படி,

1. கல்வியின் தரத்தை கண்காணித்தல்.

2.பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தயாரித்தல்.

3. அரசு மானியங்கள் பயன்படுத்துவதை கண்காணித்தல்.

4. பள்ளியை திறம்பட செயல்படுவதை கண்காணித்தல்.

➡️ ஏப்ரல் 2022 முதல் TNSED Parent செயலியில் பதிவு செய்யப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றுதல். அனைத்து வகையான பள்ளிகளில் மொத்தம் மூன்று லட்சத்து 61 தேவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டறியப்பட்டுள்ளது.

➡️மேற்கண்ட தேவைகளை நிவர்த்தி செய்ய அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து தேவைகள் அனைத்தையும் முறையாக நிவர்த்தி செய்யவும் தீர்க்கவும் மாநில அளவிலான கண்காணிப்பு குழு அமைத்தல். 1. அரசின் தலைமைச் செயலர் - தலைவர்

2. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் - செயலர்

3. நிதித்துறை செயலாளர் - உறுப்பினர்

4. பொதுப்பணித்துறை செயலாளர் - உறுப்பினர்

5. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளர் - உறுப்பினர்

6. நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறைச் செயலாளர் - உறுப்பினர்

7. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் - உறுப்பினர்

8. சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரம் அளித்தல் துறை செயலாளர் - உறுப்பினர்

9. போக்குவரத்து துறை செயலாளர் - உறுப்பினர்

10. எரிசக்தி துறை செயலாளர் - உறுப்பினர்

11. உள்துறைச் செயலாளர் - உறுப்பினர்

12. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை செயலாளர் - உறுப்பினர்

13. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் - உறுப்பினர்

14. தமிழ்நாடு மாதிரி பள்ளி செயலாளர் - உறுப்பினர் Go 239

➡️ஏப்ரல் 2022 முதல் செப்டம்பர் 2022 வரை tnsed பெற்றோர் செயலியில் பதிவு செய்யப்பட்ட தீர்மானங்களில் 61% உட்கட்ட அமைப்பு சார்ந்த பதிவுகள் உள்ளது என்பதை கண்டறியப்பட்டுள்ளது.

➡️புதிய கட்டிடங்கள் கட்டுதல், பராமரித்தல் மற்றும் பழுது பார்த்தல் மற்றும் கட்டிடங்கள் இடித்தல் போன்ற அரசு திட்டங்கள் உள்ளன. இவற்றில் பள்ளி மேலாண்மை குழுவை ஈடுபடுத்துவதன் மூலமாக உட்கட்டமைப்புகள் தேவைகள் நிவர்த்தி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

➡️குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமைச் சட்டம் 2009ன் படி பிரிவு 21-ல் 2 மற்றும் பிரிவு 22 இல் உட்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு தேவைகள் அடங்கிய பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரிப்பதன் மூலமாக உட்கட்டமைப்புகள் நிறைவேற்றப்படும் என அறியப்படுகிறது.

➡️உட்கட்டமைப்பு தேவைகள் கண்டறிந்து மாநிலத் திட்ட இயக்குனர் சமக்ரா சிக்ஷா, பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Wednesday, January 03, 2024

January 03, 2024

SMC - மேலாண்மை குழுக்கள் பரிந்துரை செய்ததில் அரசுப் பள்ளிகளுக்கு தேவையான 28,000 வசதிகள் நிறைவேற்றம்



SMC - மேலாண்மை குழுக்கள் பரிந்துரை செய்ததில் அரசுப் பள்ளிகளுக்கு தேவையான 28,000 வசதிகள் நிறைவேற்றம் Implementation of 28,000 facilities required for government schools as recommended by SMC - Management Committees

பள்ளி மேலாண்மை குழுக்கள் பரிந்துரை செய்ததில், அரசுப் பள்ளிகளுக்கான 28 ஆயிரம் வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டை கண்காணிக்கவும், பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தயாரித்து பரிந்துரைக்கவும் அமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு (எஸ்எம்சி), கடந்த ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய 20 உறுப்பினர்கள் கொண்டகுழுவாக இது மாற்றி அமைக்கப்பட்டது. இந்த குழு மாதந்தோறும் கூடி விவாதித்து, பள்ளி வளர்ச்சிக்கான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

அதன்படி, கடந்த 14 மாதங்களில் 33,550 பள்ளிகளில் உள்ள எஸ்எம்சி குழுக்கள் 3 லட்சத்து 61 தேவைகள் இருப்பதாக செயலி வாயிலாக பதிவு செய்துள்ளன. அவற்றை துரிதமாக நிறைவேற்ற, பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து தலைமைச் செயலர் தலைமையில் 14 பேர் கொண்ட மாநில கண்காணிப்பு குழுவை (எஸ்எல்எம்சி) தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழு பள்ளிகளின் தேவைகள் குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லதுதேவைப்படும்போது கூடி ஆலோசித்து முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், எஸ்எம்சி குழு சமர்ப்பித்ததில், சுமார் 28ஆயிரம் தேவைகள் வரை நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக மாவட்டஅளவில் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முதல்கட்டமாக சுமார் 30 ஆயிரம் உடனடி தேவைகள் கண்டறியப்பட்டு பட்டியலிடப்பட்டன.

அதாவது, 5,564அரசுப் பள்ளிகளில் நீர், சுகாதாரம், மதிய உணவு வசதிகள், வளாக கட்டமைப்பு, கற்றல் கற்பித்தலுக்கான தளவாட பொருட்கள், பணியாளர்கள், உதவித் தொகை, நலத்திட்டங்கள் என சுமார் 30 ஆயிரம் தேவைகள் உடனே சரி செய்யப்பட வேண்டியதாக உள்ளன. அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுவரை 26,166 தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதில் மின்சாரம் மற்றும் கட்டிடங்கள் சார்ந்த உடனடி தேவைகள் அதிகமாகும். மேலும், 1,900 தேவைகளை நிறைவேற்ற பணிகள் நடந்து வருகின்றன. உடனடி தேவைகளை நிறைவேற்றிய பிறகு, அடுத்தகட்டமாக 50 ஆயிரம் கோரிக்கைகளை நிறைவேற்ற இலக்கு வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Total Pageviews

Search This Blog