Breaking

Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

Thursday, August 04, 2022

August 04, 2022

பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்பட உள்ள நிர்வாக மாறுதல்கள் குறித்த தகவல்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு_ மாநில மையம்

பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்பட உள்ள நிர்வாக மாறுதல்கள் குறித்த தகவல்_*

*🎯அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கு என தனியாக மாவட்ட கல்வி அலுவலகம் துவங்கப்பட உள்ளது*

🎯 *புதிய வரையறையின் படி 30 மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது*

🎯 *ஏற்கனவே அரசாணை எண் 101 படி புதிதாக துவங்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் தற்போது புதிதாக துவங்கப்பட உள்ள அலுவலகங்களுக்கு நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் பணியிடங்கள் புதிதாக அனுமதிக்கப்படவுள்ளது. (சுயநிதி பள்ளி மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஒரு பிரிவுகள் மட்டும் அனுமதிக்கப்படும் நேர்முக உதவியாளர் பணியிடம் அனுமதிக்க படாது) ➖➖➖➖➖➖➖➖ ஊடகப் பிரிவு_ Tngtf ➖➖➖➖➖➖➖➖

Thursday, July 28, 2022

July 28, 2022

1920-இல் பள்ளிகளில் தொடங்கப்பட்ட உணவுத் திட்டம்: தமிழக அரசின் உத்தரவில் தகவல்

1920-இல் பள்ளிகளில் தொடங்கப்பட்ட உணவுத் திட்டம்: தமிழக அரசின் உத்தரவில் தகவல்

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் 102 ஆண்டுகளுக்கு முன்பாகவே மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அப்போதைய சென்னை மாநகராட்சி நிா்வாகம் செயல்படுத்தியுள்ளது. இது தொடா்பான தமிழக அரசின் உத்தரவு: ஏழை, எளிய சமூகக் குழந்தைகளின் காலடிகள் கல்விச் சாலையை எட்ட முடியவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பள்ளியில் உணவளிக்கும் திட்டத்தை முன்மொழிந்து நிறைவேற்றியது, அப்போதைய சென்னை மாநகராட்சி நிா்வாகம். மன்றத்தின் தலைவராக இருந்த சா்.பிட்டி தியாகராயா் தலைமையில் மாநகராட்சி மன்றக் கூட்டம் நடந்தது. 1920 செப்.16-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு மாணவருக்கு நாளொன்றுக்கு ஒரு அணாவுக்கு மிகாமல் செலவு செய்யப்படும் வகையில் இந்தத் திட்டம் தொடக்கப்பட்டது. பின்னா், சேத்துப்பட்டு, மீா்சாகிப்பேட்டை பகுதிகளில் இயங்கிய மேலும் நான்கு பள்ளிகளுக்கு மதிய உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதன் பயனாக, ஐந்து பள்ளிகளில் மாணவா் சோ்க்கையானது 811-லிருந்து ஒரு சில ஆண்டுகளிலேயே 1,671 ஆக உயா்ந்தது. 1957-இல் மதிய உணவுத் திட்டத்தை முன்னாள் முதல்வா் காமராஜா் தொடக்கி வைத்தாா். இதற்காக ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.18 என்ற அளவில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. முதல்வராக இருந்த எம்.ஜி.ஆா். 9-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு அறிவித்த சத்துணவுத் திட்டம் 1982 ஜூலை 1-இல் திருச்சி மாவட்டம் பாப்பாகுறிச்சியில் தொடக்கப்பட்டது. சத்துணவுடன் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முட்டை வழங்குவதை 1989-இல் அறிமுகப்படுத்தினாா், முன்னாள் முதல்வா் கருணாநிதி. பின்னா் வாரத்துக்கு ஒருமுறை முட்டை வழங்கப்பட்டது. சட்டப் பேரவையில் 1998-ஜூலை 23-இல் நிதிநிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்பின், 2008-ஆம் ஆண்டில் சத்துணவுடன் வாரம் 5 முறை முட்டைகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மதிய உணவுத் திட்டத்தைத் தொடா்ந்து, காலை உணவு அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அறிவித்துள்ளாா்.

Total Pageviews

Search This Blog