Breaking

Showing posts with label JACTO-GEO. Show all posts
Showing posts with label JACTO-GEO. Show all posts

Thursday, December 18, 2025

Thursday, January 30, 2025

Monday, January 22, 2024

January 22, 2024

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற இராமதாசு வலியுறுத்தல்



பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்:

தொடர் வேலைநிறுத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியம், ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நாளை முதல் பிப்ரவரி 10-ஆம் நாள் முதல் பல்வேறு கட்ட போராட்ட ஆயத்த பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. அவற்றின் உச்சமாக பிப்ரவரி 15-ஆம் நாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தையும், பிப்ரவரி 26-ஆம் நாள் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையும் நடத்தப்போவதாக ஜாக்டோ -ஜியோ அமைப்பு அறிவித்திருக்கிறது. இந்தப் போராட்டம் தடுக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 20 ஆண்டுகளுக்கு மேலாகவும், பிற கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாண்டுகளுக்கு மேலாகவும் அவர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கடந்த 20 ஆண்டுகளாகவே அதிமுகவும், திமுகவும் மாறி மாறி வாக்குறுதிகளை வழங்கினாலும் அவை எதையும் இரு கட்சிகளின் அரசுகளும் நிறைவேற்றவில்லை. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய பல குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் பெறப்பட்டாலும் கோரிக்கைகள் மட்டும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பல ஆண்டுகளாக பொறுத்துப் பார்த்து, எந்த பயனும் ஏற்படாத நிலையில் தான் ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர் போராட்டங்களை அறிவித்திருக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும், வேலை நிறுத்தப் போராட்டத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை ஆகும்.

மார்ச் மாதத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கப்படவுள்ளன. பிப்ரவரி மாதத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்கள் அறிவிக்கப்படவுள்ளன. இத்தகைய சூழலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலைநிறுத்தம் மேற்கொண்டால், கல்வி எந்திரமும், அரசு எந்திரமும் முடங்கி விடும். இது அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Saturday, December 23, 2023

December 23, 2023

ஜாக்டோஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்

ஜாக்டோஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் Part-time teachers in Jaktojio protest

ஜாக்டோஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் :பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை :

மீண்டும் பழைய ஓய்வூதியம், காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் போன்ற அரசு ஊழியர், ஆசிரியர்கள், தொகுப்பூதியம் பெறுவோர், தினக்கூலிகள் உள்பட பல்வேறு கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜாக்டோஜியோ சார்பில் வருகின்ற டிசம்பர் 28 ந் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

இதில் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் கோரிக்கையும் இடம்பெற்றுள்ளது.

இந்த நேரத்திலாவது முதல்வரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற வகையில் பகுதிநேர ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள் கணினி, உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, வாழ்வியல்திறன், கட்டிடக்கலை, தோட்டக்கலை ஆகிய பாடங்களில் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆண்டாக பணி புரிகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தேர்தலின்போது இன்றைய முதல்வர் வாக்குறுதி கொடுத்ததை நினைவூட்டி வருகின்றனர்.

அனைத்து நாளும் முழுநேரம் வேலை, மே மாதம் சம்பளம், பொங்கல் போனஸ், பண்டிகை முன்பணம், இறந்தோரின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி போன்றவை வழங்கி, இந்த வேலையை முறைப்படுத்தி, பணி பாதுகாப்பு கேட்டு வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்து முதல் முறையாக சம்பள உயர்வு ரூ.2500 வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்ததுகூட இதுவரை வழங்கவில்லை.

எனவே முதல்வர் ஆணையிட்டு சம்பள உயர்வு, பொங்கல் போனஸ், பண்டிகை முன்பணம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.

இதனை ஜாக்டோஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்துவோம்.

*****

எஸ்.செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

செல் : 9487257203

Friday, December 15, 2023

December 15, 2023

ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 19.12.2023

Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations) 15-12-2023

ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் அன்பிற்கினிய தோழர்களே,

வணக்கம்.

ஜாக்டோ ஜியோ உபர்மட்டக்குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் எதிர்வரும் 19.12.2023 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு திருச்சியில் பின்வரும் பொருள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பதால். இக்கூட்டத்தில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நாள்

19.12.2023

இடம்

அருண் ஓட்டல் காங்கலி ஹால் (மத்திய பேருந்து நிலையம் அருகில்) திருச்சி

பொருள்

கடந்த 18.10.2023 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக் குழுக் கூட்ட முடிலின் அடிப்படையில், எதிர்வரும் 28.12.2023 அன்று கோட்டை முற்றுகை போராட்டத்தினை மிக எழுச்சியாக நடத்துவது குறித்தான ஆலோசனை

தோழமை வாழ்த்துக்களுடன் மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்காக

ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுத் தலைவர்களே!!!

ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கனே!!!

அனைவரும் திருச்சியில்

கடந்த 30 மாதங்களாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்அரசு பணியாளர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கத்தினை நிர்பந்திக்கக்கூடிய போராட்டமாக கோட்டை முற்றுகைப் போராட்டடத்தினை நடத்திடுவோம்!!!

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை வென்றெடுப்போம்!!!

பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுப்போம்!!!

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட வைப்போம்!!!

ஜாக்டோ ஜியோ 28.12.2023 கோட்டை முற்றுகை

Friday, December 01, 2023

December 01, 2023

ஜாக்டோ ஜியோ சார்பில் டிச.9ல் சாலை மறியல்

ஜாக்டோ ஜியோ சார்பில் டிச.9ல் சாலை மறியல்

சிவகங்கையில் டிச.9ல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகேஸ்வரன், நாகராஜன், ராம்குமார் தலைமை வகித்தனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர், குமார் மாநில முடிவுகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் தமிழகத்தில் 2003 ஏப்.,க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் வழங்க வேண்டும். முடக்கி வைத்துள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு உடனே வழங்க வேண்டும். இடைநிலை, உயர், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.


அரசு ஊழியர், ஆசிரியர்களிடையே ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். கல்லுாரி பேராசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள பணி மேம்பாட்டு, ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உயர், மேல்நிலை பள்ளி இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்த்த வேண்டும்.

சிறப்பு கால முறை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 9ல் சிவகங்கை அரண்மனை வாசல் முன் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.

டிச., 1 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பிரசார கூட்டங்களை நடத்துவது என தீர்மானித்தனர

Monday, November 20, 2023

November 20, 2023

ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்ட செய்தி



ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்ட செய்தி

ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் காணொளி வாயிலாக இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது. இக்கூட்டத்தின் வாயிலாக 25.11.2023 அன்று ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்டத் தலைநகரில் நடைபெற இருந்த மாபெரும் மறியல் போராட்டத்தை 9.12. 2023 சனிக்கிழமைக்கு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் எப் பணியை அரசு வழங்கினாலும் புறந்தள்ளிவிட்டு பேரெழுச்சியோடு மாவட்ட தலைநகரங்களில் நடைபெறக்கூடிய மாபெரும் மறியல் போராட்டத்தில் ஜாக்டோ- ஜியோவில் இணைந்திருக்கின்ற அனைத்து சங்க பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறையை நிரப்பி கோரிக்கையை வென்றெடுப்பது என இன்றைய கூட்டத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டது.

ஆகவே திட்டமிட்டபடி 9.12.2023 சனிக்கிழமை அன்று மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, November 17, 2023

November 17, 2023

ஜாக்டோ ஜியோ பிரசார இயக்கம் மீண்டும் துவக்கம்: நவ.25ல் மறியல்

ஜாக்டோ ஜியோ பிரசார இயக்கம் மீண்டும் துவக்கம்: நவ.25ல் மறியல்

முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று ஊழியர் சந்திப்பு எனும் பிரசார இயக்கத்தை துவக்கியுள்ளனர்.

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்த ஜாக்டோ ஜியோ அமைப்பு புதிய பென்ஷன் திட்டம் ரத்து, முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நவ.,15 முதல் 24 வரை அரசு அலுவலகங்களில் ஊழியர்களை சந்தித்து போராட்டம் குறித்து பிரசார இயக்கம் மேற்கொண்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செல்வம், முருகையன் உள்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 5 குழுக்களாக மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்களில் பிரசாரம் செய்தனர்.

அவர்கள் கூறியதாவது: முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியை அமல்படுத்த பல்வேறு இயக்கங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே இரண்டாவது கட்ட இயக்கமாக இதனை துவக்கி உள்ளோம். அடுத்து நவ. 25ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல் நடத்த உள்ளோம்.

அரசு ஊழியர், பணியாளர், ஆசிரியர்கள் சங்கங்களை அரசு அழைத்து பேச வேண்டும். ஏப்.,8 ல் மூன்று அமைச்சர்கள் பேசியதால் கோட்டை முற்றுகை போராட்டத்தை ஒத்தி வைத்தோம்.

ஐந்து மாதங்களாகியும் பலனில்லாததால் டிச.,28 ல் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

Monday, October 30, 2023

October 30, 2023

மாவட்ட தலைநகரில் நவம்பர் ஒன்றாம் தேதி ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ ஜியோ 4 கட்ட போராட்ட அறிவிப்பு!



ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு

மாவட்ட தலைநகரில் நவம்பர் ஒன்றாம் தேதி ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ ஜியோ

அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ 4 கட்ட போராட்ட அறிவிப்பு

இதையும் படிக்க | ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) முதல்வருக்கு கோரிக்கை - நாள்.30.10.2023 - 6 Pages - PDF
கோரிக்கைகள்

தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு திட்டம் காலவரையின்றி தள்ளிப்போடப்பட்டிருப்பதை ரத்து செய்து மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

(அ) இடைநிலைஆசிரியர்களுக்கும், முதுநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதியை களையப்பட வேண்டும்.

(ஆ) மேலும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

- சத்துணவு, அங்கள்வாடி, ஊர்ப்புற நூலகர் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்களுக்கும் மற்றும் தொகுப்பூதியம், தினக்கூலியில் பணியாற்றிவரும் எம்.ஆர்.பி. செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

- அரசு பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் களப்பணியாளர்கள் பல்வேறு துறையில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான நிலுவையில் உள்ள பணி மேம்பாடு (CSA) உடனடியாக வழங்கிட வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிக் காலத்தை பணிவரன்முறை செய்திட வேண்டும்.

2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே பணியமர்த்த வேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

தனியார் மய அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.

அரசுத் துறையில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

* தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டுமென ஜாக்டோ - ஜியோ சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

அடுத்த கட்ட போராட்ட அறிவிப்பு

நவம்பர் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஆசிரியர் - அரசு ஊழியர் - அரசுப் பணியாளர் சந்திப்பு

போராட்ட பிரச்சார இயக்கம். நவம்பர் 25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம்.

டிசம்பர் 28-ம் தேதி சென்னையில் லட்சக்கணக்கான தோழர்கள் பங்கேற்கும் கோட்டை முற்றுகை போராட்டம், CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் 0 முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை (DA) சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும்.

தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், MRS செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்புற நூலகர் O உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்

7-வது ஊதியக் குழுவின் 21 மாத நிலுவைத் தொைைகயை வழங்கிட வேண்டும்.

இதையும் படிக்க | ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) முதல்வருக்கு கோரிக்கை - நாள்.30.10.2023 - 6 Pages - PDF




Sunday, April 09, 2023

April 09, 2023

கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

பழைய ஓய்வூதி யத் திட்டம் உள்படபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜியோ ஏப்.11-ஆம் ஜாக்டோக தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த கோட்டைமுற்றுகைபோராட் டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

தலைமைச்செயலகத்தில் அமைச்சர்களுடன் சனிக்கி ழமை நடைபெற்ற பேச்சுவார்த் தைக்குப் பிறகு இந்த அறி விப்பை ஜாக்டோ -ஜியோநிர் வாகிகள் வெளியிட்டனர்.

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு, தங்கம் மகேஸ் தென்னரசு, அன்பில் பொய்யாமொழி ஆகியோர் சனிக்கிழமை நடத்தியபேச் சுவார்த்தையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில், எட்டப்பட்ட முடிவு கள் குறித்து, அமைப்பின் நிர் வாகிகளான கு.வெங்கடேசன், இரா.தாஸ்,கு.தியாகராஜன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி "
எங்களது கோரிக்கைகளின் மீதுஅமைச்சர்கள் விரிவான ஆலோசனைகளை நடத்தினர். அனைத்து கோரிக்கைகளை யும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தெரிவிப்ப தாக உறுதியளித்தனர். இதை ஏற்று போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென வேண்டு கோள் விடுத்தனர். அதன்படி, ஏப்.11-ஆம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டத்தைதற் காலிகமாக ஒத்திவைக்கிறோம்.

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். மூன்று கட்ட போராட்ட அறி விப்புகளை அறிவித்தாலும், எங் களது கோரிக்கைகளை உள் வாங்கிக்கொண்டேஅவற்றை முதல்வர் பரிசீலித்து வருகிறார் என்பதை பேச்சுவார்த்தையின் போது தெரிந்து கொண்டோம். உரிய அறிவிப்புகளை இதற்கான முதல்வர் வெளியிடுவார் என்ற

நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள். ஆசிரியர் கள் நலனுக்கு எதிராக கருத்துக ளைத் தெரிவிக்கும் நிதியமைச் சரின் போக்கு அரசின் கவனத் துக்குக் கொண்டு செல்லப்பட் டுள்ளது என்று அவர்கள் தெரி வித்தனர்.

Friday, April 07, 2023

April 07, 2023

கோட்டை முற்றுகை | ஜாக்டோ- ஜியோ வுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு குழு அமைப்பு.

கோட்டை முற்றுகை | ஜாக்டோ- ஜியோ வுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு குழு அமைப்பு.

ஜாக்டோ- ஜியோ கோட்டை முற்றுகை போராட்ட அறிவிப்பை தொடர்ந்து நமது கோரிக்கைகள் முறையீடுகள் சார்ந்து ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வா.வேலு அவர்கள், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழு நாளை (08.04.23)காலை 10 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திட மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வருமாறு மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Saturday, April 01, 2023

April 01, 2023

ஜாக்டோ ஜியோவுக்கு நாங்கள் போட்டியில்லை - தினமலர் நாளிதழில் வெளியான செய்திக்கு மறுப்பு!



ஜாக்டோ ஜியோவுக்கு நாங்கள் போட்டியில்லை - தினமலர் நாளிதழில் வெளியான செய்திக்கு மறுப்பு - We are not competing with Jacto Jio - Denial of Dinamalar News!

'புதிதாக துவங்கப்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, ஜாக்டோ ஜியோவுக்கு போட்டியான அமைப்பில்லை' என, அதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ என்ற கூட்டமைப்பாக, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த அமைப்பு போல, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாகி உள்ளது. இது குறித்து, நம் நாளிதழில் ( தினமலர் ) நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, புதிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் தியாகராஜன் கூறியதாவது: ஏற்கனவே, ஜாக்டோ ஜியோவில் உள்ள எட்டு ஆசிரியர் அமைப்புகள் இணைந்து, தனி குழுவாக செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று தான், 19 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ஆசிரியர் கூட்டமைப்பாக உருவாகியுள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு என்பது, ஜாக்டோ ஜியோவுக்கு எதிரானதோ, மாற்றானதோ இல்லை. ஆசிரியர்களுக்கு பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண உருவாக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Monday, March 06, 2023

March 06, 2023

JACTTO GEO - 10 அம்ச கோரிக்கை - வரும் 24ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு

JACTTO GEO - 10 அம்ச கோரிக்கை - வரும் 24ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு

10 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி வரும் 24ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்

Thursday, February 16, 2023

February 16, 2023

ஜாக்டோ-ஜியோ (JACTTO - GEO) “வாழ்வாதார உரிமை மீட்பு” மாவட்ட போராட்ட ஆயத்த மாநாடு - திருச்சிராப்பள்ளி மாவட்டம்

ஜாக்டோ-ஜியோ (JACTTO - GEO) - “வாழ்வாதார உரிமை மீட்பு” மாவட்ட போராட்ட ஆயத்த மாநாடு - திருச்சிராப்பள்ளி மாவட்டம்

1.4.2003 க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு , பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உடற்கல்வி இயக்குநர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும்.

2021 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று முறை அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியானது ஆறு மாதம் காலம் கடந்து வழங்கப்பட்டது.

ஒன்றிய அரசிற்கு இணையான அகவிலைப்படியினை ஒன்றிய அரசு அறிவிக்கும் அதே தேதியில் நிலுவைத் தொகையுடன் வழங்கிட வேண்டும்.

முதுநிலை ஆசிரியர்கள் , அனைத்து ஆசிரியர்கள் , அரசுப் பணியாளர்கள் , கண்காணிப்பாளர்கள் , தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் , களப் பணியாளர்கள் , பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் , ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லுாரிப் பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு ( CAS ) உடனடியாக வழங்கிட வேண்டும் . மேலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.

காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்க வேண்டும் . சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு , அங்கன்வாடி , வருவாய் கிராம உதவியாளர்கள் , ஊராட்சி செயலாளர்கள் , ஊர்ப்புற நுாலகர்கள் , கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் , தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள் , சிறப்பு ஆசிரியர்கள் , செவிலியர்கள் , பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் , ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் - பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள்முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும் . உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக வேண்டும் . அனைத்து பள்ளிகளிலும் , கல்லுாரிகளிலும் ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே பணியமர்த்திட வேண்டும். 3500 அரசு தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும் 3500 சத்துணவு மையங்களை மூடுவதையும் முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.

அங்கன்வாடி மையங்களில் LKG / UKG வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை இரத்து செய்ய வேண்டும்.

பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக பணியேற்கும் அலுவலர் அரசுப் பணியில் ஆசிரியர் / மாவட்டக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் / இணை இயக்குநர் ஆகிய நிலைகளில் பணியாற்றி , கல்வித் துறையில் அனுபவ முதிர்ச்சி பெற்றதன் அடிப்படையில் இயக்குநராக நியமிக்கும் நடைமுறையானது கடந்த 150 ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு , இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே , இதனை மாற்றி மீண்டும் பணிமூப்பு - கல்வித் துறையில் பெற்ற கள அனுபவ அடிப்படையின் வரும் அலுவலரையே பள்ளிக்கல்வி இயக்குநராக பணியமர்த்த வேண்டும்.

Total Pageviews

Search This Blog