Breaking

Showing posts with label celebrations. Show all posts
Showing posts with label celebrations. Show all posts

Monday, April 03, 2023

April 03, 2023

மெய்யறிவுக் கொண்டாட்டம் - பள்ளிக் கல்வி ஆணையர் செய்தியாளர் அழைப்பு

மெய்யறிவுக் கொண்டாட்டம் - பள்ளிக் கல்வி ஆணையர் செய்தியாளர் அழைப்பு Awareness Celebration - Commissioner of School Education Press Call

செய்தியாளர் அழைப்பு

மெய்யறிவுக் கொண்டாட்டம்

மாநில அளவிலான வினாடிவினா பயிலரங்கம். இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம், நாள் : ஏப்ரல் 3 காலை 11 மணி

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழ்நாடு அரசின் மற்றுமொரு முக்கியமான முன்னெடுப்பு வினாடிவினா போட்டிகள்.

6 முதல் 9 வகுப்புகள் வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பள்ளிக் கல்வித் துறை 'தேன்சிட்டு' என்கிற சிறார் இதழை நடத்தி வருகிறது. அந்த இதழை வாசித்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் வாசிப்புக்கான நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதழில் வெளியான படைப்புகள் சார்ந்த கேள்விகள் தயாரிக்கப்பட்டு வினாடிவினா போட்டிகள் அனைத்துப் பள்ளிகளிலும் நடத்தப்பட்டன. பள்ளி அளவில் வென்ற மாணவர்கள் வட்டார அளவில் நடக்கும் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டு. அதில் வென்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டப் போட்டிகளில் வென்ற 152 மாணவர்கள் மாநில அளவிலான மெய்யறிவுக் கொண்டாட்டம்' பயிலரங்கத்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்த பள்ளிக் கல்வித் துறை அமைத்துக் கொடுக்கும் தளம் இது. துறைசார் வல்லுநர்களும் பல்வேறு ஆளுமைகளும் மாணவர்களுடன் உரையாட இருக்கின்றனர்.

ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறும் பயிலரங்கின் தொடக்க விழா 03.04.2023 திங்கட்கிழமை அன்று காலை 11 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது. மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமிகு. காகர்லா உஷா இ.ஆ.ப உட்பட பங்கேற்கிறார்கள். துறை அலுவலர்கள் இந்நிகழ்விற்கு தங்கள் நிறுவனத்திலிருந்து செய்தியாளரை அனுப்பி செய்தி சேகரிக்குமாறு வேண்டுகிறோம்.

ஆணையர் பள்ளிக் கல்வி

Monday, February 13, 2023

February 13, 2023

"பெண்ணியம் விருதுகள் 2023 " - மாநில அளவிலான விருது வழங்கும் போட்டி - பள்ளி & கல்லூரி மாணவிகள் கலந்து கொள்ளலாம்

தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு நடத்தும் "பெண்ணியம் விருதுகள் 2023 "

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக

மாநில அளவிலான விருது வழங்கும் போட்டி தேர்வு நடைபெற உள்ளது.

அதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தங்களது இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.

பள்ளி & கல்லூரி மாணவிகள் இப்போட்டி தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இதுதவிர தனித்திறமை அடிப்படையிலும் விருது வழங்கப்பட்ட உள்ளது.

தனித்திறமை கொண்டு சாதனை படைக்கும் பெண்கள் அனைவரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவலுக்கு.,

மின்னஞ்சல் : tsfofficialtn@gmail.com தொலைபேசி எண்: 8675516615, 9443081263.

https://tsfofficial.webnode.in/

சு.ராஜ்குமார் - தலைவர்-தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு

Total Pageviews

Search This Blog