Breaking

Showing posts with label Local Holiday. Show all posts
Showing posts with label Local Holiday. Show all posts

Sunday, May 10, 2026

Sunday, April 26, 2026

Saturday, October 11, 2025

Monday, December 16, 2024

Thursday, December 12, 2024

Wednesday, December 11, 2024

Wednesday, December 04, 2024

Sunday, April 14, 2024

Sunday, March 24, 2024

Tuesday, March 05, 2024

Friday, December 08, 2023

December 08, 2023

23.12.23 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு



திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும். இருப்பினும், பள்ளி, கல்லூரிகளில் அன்றைய தினம் நடத்தப்பட்ட தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும்.

அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் துணை கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும் என ஆட்சியர் எம்.பிரதீப்குமார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Friday, September 01, 2023

September 01, 2023

நாளை (02.09.2023) உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!



நாளை (02.09.2023) உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் திவ்யா உத்தரவு CLICK HERE TO READ FULL NEWS நாளை (02.09.2023) உள்ளூர் விடுமுறை

Tuesday, August 01, 2023

August 01, 2023

ஆகஸ்ட் 3 - உள்ளூர் விடுமுறை அளிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ஆகஸ்ட் 3 - உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிக்கை

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏற்கனவே நாமக்கல் , தருமபுரி , சேலம் , ஈரோடு , திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்த நிலையில்,

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ம்தேதி திருச்சி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை வை்த்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வருகிற ஆகஸ்டு 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படவேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் நீலகண்டன் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களின் விவசாய தேவகைளுக்கும், 25 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குவது காவிரி ஆறு. இத்தகைய சிறப்புக்குரிய காவிரி ஆற்றை தங்களது தாயாக கருதி ஆடிப்பெருக்கு அதாவது ஆடி பதினெட்டாம் நாள் அன்று காவிரி கரையில் பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்துவது வழக்கம். ஆடி பெருக்கு விழா வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற இருப்பதால் காவிரி கரையில் உள்ள திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்தால் மக்கள் இந்த விழாவை சிறப்பாக கொண்டாட வழி பிறக்கும்.

கொரோனா பரவில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக ஆடிப்பெருக்கன்று விழா கொண்டாட அனுமதிக்கப்படாமல் உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படாமல் இருந்தது. எனவே நடப்பாண்டாவது காவிரி கரையில் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாட ஆகஸ்டு மூன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கும்படியும் அதற்கு ஈடாக வேறு ஏதாவது ஒரு நாளை வேலை நாளாக அறிவித்து உதவும்படியும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Wednesday, July 26, 2023

July 26, 2023

தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா - ஆகஸ்ட் 5ம் நாள் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்முறை ஆணைகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறை ஆணைகள்

உள்ளூர் விடுமுறை - தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகரம் - தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா கொண்டாட்டம் ஆகஸ்ட் 5ம் நாள் கொண்டாடப்படுவது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்தல் - உத்தரவிடப்படுகிறது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 441 ஆவது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 10 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

Monday, July 24, 2023

July 24, 2023

ஜுலை 31 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு



July 31 - Local Holiday - Notification of District Administration - ஜுலை 31 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் கல்லுாரிகளுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் தகவல் ஆடித்தபசு திருநாள் 31.07.2023 திங்கள் கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேலேகுறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 19.08.2023 சனிக்கிழமைஅன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருதுரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Thursday, July 20, 2023

Sunday, July 16, 2023

Tuesday, April 04, 2023

April 04, 2023

ஏப்.18, 19 தேதிகளில் உள்ளூர் விடுமுறை



ஏப்.18, 19 தேதிகளில் உள்ளூர் விடுமுறை - April 18th and 19th are local holidays

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்.18-ம் தேதியும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்.19-ம் தேதியும் நடைபெறவுள்ளன. இதையொட்டி, திருச்சி மாவட்டத்துக்கு ஏப்.18, 19 ஆகிய 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை, மாவட்டத்தில் உள்ள தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தும். அதேவேளையில், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் பொருந்தாது.

இந்த விடுமுறை நாட்களில், மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இந்த விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் ஏப்.29, மே 13 வேலை நாட்களாக இருக்கும்.

Tuesday, January 03, 2023

January 03, 2023

ஜன.4-ம் தேதி உள்ளூர் விடுமுறை - 4th Jan is a local holiday

நீலகிரி மாவட்டத்தில் ஜன.4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

உதகை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வெளியிட்ட அறிக்கையில், "ஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் வரும் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், குறிப்பிட்ட பணியாளர்களோடு கருவூலம் மற்றும் சார் நிலைக் கருவூலங்கள் செயல்படும். இதற்கு பதிலாக வரும் 21-ம் தேதி சனிக்கிழமை, மாவட்டத்தில் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Total Pageviews

Search This Blog