Breaking

Showing posts with label Bilingual policy in Tamil Nadu. Show all posts
Showing posts with label Bilingual policy in Tamil Nadu. Show all posts

Sunday, April 24, 2022

April 24, 2022

தமிழகத்தில் இரு மொழி கொள்கை: பள்ளிகல்வித்துறை உறுதி

இரு மொழி கொள்கை

தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிகல்வித்துறை கமிஷனர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும். தமிழக அரசு தன்னுடைய மொழி கொள்கையை பல்வேறு காலகட்டங்களில் தெளிவுபடுத்தியுள்ளது. தாய்மொழியான தமிழுடன் இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இரு மொழிக்கொள்கை மட்டுமே அமலில் உள்ளது. பள்ளிகல்வித்துறை உறுதி

2006ம் ஆண்டு தமிழ்நாடு சட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவரும் 10ம் வகுப்பு வரை தமிழை கட்டாயம் படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனினும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மாணவர்கள் தமிழை தாய் மொழியாக கொள்ளாதவர்களும், தமிழ் மொழியுடன் சேர்த்து அவர்தம் தாய்மொழியையும் விருப்ப பாடமாக படித்து தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog