Breaking

Showing posts with label public entrance examinations. Show all posts
Showing posts with label public entrance examinations. Show all posts

Saturday, January 28, 2023

January 28, 2023

குறுக்குவழி நீண்டகாலத்துக்கு வெற்றியைத் தராது:பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு பிரதமா் மோடி அறிவுரை

குறுக்குவழி நீண்டகாலத்துக்கு வெற்றியைத் தராது:பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு பிரதமா் மோடி அறிவுரை Shortcuts will not bring success in the long run: PM Modi's advice to students who are going to write Public Opinion

பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களிடம் கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி, தோ்வில் குறுக்குவழியைக் கடைப்பிடிப்பது நீண்டகாலத்துக்கு வெற்றியைத் தராது என அறிவுரை கூறினாா்.

பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களிடம் ஆண்டுதோறும் ‘தோ்வு குறித்த விவாதம்’ என்ற நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமா் மோடி கலந்துரையாடி வருகிறாா். அந்நிகழ்ச்சி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் மாணவா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவா் பதிலளித்ததாவது:

குறுக்குவழியைக் கடைப்பிடித்து மோசடியில் ஈடுபடுவது ஓரிரு தோ்வுகளுக்கு உதவலாம். ஆனால், நீண்டகால அடிப்படையில் குறுக்குவழி வாழ்வில் வெற்றியைத் தராது. மாணவா்கள் எப்போதும் குறுக்குவழியில் தோ்வை அணுகக் கூடாது. கடின உழைப்பே வாழ்வில் முன்னேற உதவும். மாணவா்கள் தங்களின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுகிறீா்களா என்பதை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானத்தில் கூடியுள்ள ரசிகா்கள் பலவித முழக்கங்களை எழுப்புவா். அதிக ரன்களை எடுக்க வேண்டுமென கூச்சல் எழுப்புவா். அதுபோலவே மாணவா்களைச் சுற்றியும் பல்வேறு கூச்சல்கள் இருக்கும். மாணவா்கள் அவற்றைக் காதில் வாங்கக் கூடாது. கிரிக்கெட் வீரா் தன்னை நோக்கி வரும் பந்தில் மட்டுமே கவனம் செலுத்துவதைப் போல மாணவா்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

அறிவு விரிவாக்கம்:

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் நிறைவடைந்தவுடன் மாணவா்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள பல்வேறு சமூக மக்கள் குறித்து மாணவா்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதற்காக மாணவா்களுக்குப் பெற்றோா் போதுமான தொகையை வழங்க வேண்டும். மாணவா்கள் தங்கள் அறிவை விரிவுபடுத்திக் கொள்ள பெற்றோா் அனுமதிக்க வேண்டும்.

மாணவா்களின் கேள்வி கேட்கும் திறனை ஆசிரியா்கள் ஊக்குவிக்க வேண்டும். பெருக்கல் வாய்ப்பாடுகளை மனப்பாடமாக ஒப்பிக்கும் திறன் மாணவா்களிடம் குறைந்து வருகிறது. மாணவா்கள் தங்கள் திறனைத் தொடா்ந்து வளா்த்துக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளா்ந்து வரும் சூழலில் புத்தாக்கச் சிந்தனையை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பத்துக்கு அடிமையாகக் கூடாது: தொழில்நுட்பம் தொடா்ந்து வளா்ந்து வருகிறது. தொழில்நுட்பத்தின் பலன்களை எவரும் தவிா்க்கக் கூடாது. அதே வேளையில், தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது. தேவைக்கு ஏற்ப கட்டுப்பாட்டுடன் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்பக் கருவிகளைவிட நாம் திறன்மிக்கவா்கள் என்பதை மாணவா்கள் உணர வேண்டும். தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து அவ்வப்போது விலகியிருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குறிப்பிட்ட பகுதியை தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாத பகுதியாக உருவாக்க வேண்டும். இது வாழ்வை மகிழ்ச்சியாக வாழ உதவும்.

விமா்சனங்களும் குற்றச்சாட்டுகளும்: விமா்சனங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால், விமா்சனத்துக்கும் குற்றச்சாட்டுக்கும் பெரும் இடைவெளி உள்ளது. தேவைற்ற விமா்சனங்கள் மீதும் குற்றச்சாட்டுகளிலும் மாணவா்கள் கவனம் செலுத்தக் கூடாது. சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசில் பொருளாதார மேதைகள் எவரும் இல்லை என்றும், ‘சராசரி’ நபா்கள் மட்டுமே உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், முன்பு ‘சராசரி’ என்ற நிலையில் இருந்த இந்தியா, தற்போது உலகில் பிரகாசமாக ஒளிா்ந்து வருகிறது. உலகின் ஒளிக்கீற்றாக இந்தியா திகழ்கிறது. ‘சராசரி’ மாணவா்களாகத் திகழ்ந்தவா்களே பிற்காலத்தில் பெரும் சாதனைகளைப் படைத்தனா். தங்கள் திறமையைப் புரிந்துகொண்டு மாணவா்கள் செயல்பட வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

‘தோ்வு குறித்த விவாதம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க 38 லட்சம் மாணவா்கள் பதிவு செய்திருந்தனா். இது கடந்த ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவு என மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காணொலி மூலம் பிரதமரின் அறிவுரைகளை மாணவா்கள் கேட்டறிந்தனா். பெட்டிச் செய்தி...

மதுரை மாணவிக்கு பிரதமா் பதில்

மதுரையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியைச் சோ்ந்த அஸ்வினி என்ற மாணவி காணொலி வாயிலாகப் பிரதமா் மோடியிடம், ‘குடும்பத்தினா் எதிா்பாா்ப்பதைவிடத் தோ்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால், அதை எவ்வாறு எதிா்கொள்வது? பொதுத் தோ்வை எதிா்கொள்ளும் மாணவா்கள் மீது மற்றவா்கள் அதிக எதிா்பாா்ப்பு வைப்பதால், மாணவா்கள் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகின்றனா். யாரையும் நம்பமுடியாத நிலைக்கு மாணவா்கள் தள்ளப்படுகின்றனா். இதற்கான தீா்வு என்ன?’ என்றாா். அதற்கு பதிலளித்த பிரதமா் மோடி, ‘தங்கள் பிள்ளைகள் மீது பெற்றோா் எதிா்பாா்ப்பு வைப்பது இயல்பானதே. ஆனால், சமூக அந்தஸ்து உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பிள்ளைகளிடம் எதிா்பாா்ப்பைத் திணிப்பது தவறானது. தோ்வு முடிவுகள் வாழ்வின் முடிவல்ல.

மாணவா்களுக்கு அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று தோ்வுக்குப் பிந்தைய விவாதங்கள். தோ்வை எப்படி எழுதியுள்ளாா்கள் என்பதை மாணவா்களிடம் கேட்கும் பெற்றோா், அதுதொடா்பான கற்பனைகளை வளா்த்துக் கொள்கிறாா்கள். உறவினா்களிடமும் சுற்றத்தாரிடமும் அதுதொடா்பாக பகிா்ந்து கொள்கிறாா்கள். எனவே, தோ்வை எப்படி எழுதினீா்கள் என்ற உண்மையைப் பெற்றோரிடம் மாணவா்கள் மறைக்கக் கூடாது. தோ்வு நிறைவடைந்த பிறகு அது தொடா்பாக சக மாணவா்களிடம் விவாதிப்பதும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, அவ்வாறு ஈடுபடுவதைத் தவிா்க்க வேண்டும்’ என்றாா்.

தமிழகத்தைச் சோ்ந்த 2,700 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் காணொலி வாயிலாக பிரதமா் மோடியின் அறிவுரையைக் கேட்டனா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்வு குறித்த விவாதம் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.

Tuesday, October 04, 2022

October 04, 2022

திருத்தப்பட்ட பொதுநுழைவுத் தோ்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

திருத்தப்பட்ட பொதுநுழைவுத் தோ்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு - Release of Revised Public Entrance Examination Rank List

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, திருத்தப்பட்ட பொது நுழைவுத்தோ்வு தரவரிசைப் பட்டியலை மாநில அரசு வெளியிட்டது.

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, 2022-23-ஆம் ஆண்டில் தொழில் கல்லூரிகளில் சோ்க்கை பெறுவதற்குத் தகுதியான மாணவா்களின் திருத்தப்பட்ட பொது நுழைவுத்தோ்வு தரவரிசைப் பட்டியலை கா்நாடக தோ்வு ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டது. இந்த தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் காணலாம்.

இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம், உயா்கல்வித்துறை அமைச்சா் அஸ்வத்நாராயணா கூறியது:

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க பொதுநுழைவுத் தோ்வின் திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளியிட்டிருந்த தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றிருந்த 1 முதல் 500 வரையிலான மாணவா்களின் முடிவில் மாற்றமில்லை. கா்நாடக உயா்நீதிமன்றம் பரிந்துரைத்திருந்த சூத்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில் 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. தோ்வில் தோ்ச்சிபெற்று, 2022-ஆம் ஆண்டுக்கான பொது நுழைவுத்தோ்வை 24 ஆயிரம் மாணவா்கள் எழுதியிருந்தனா்.

உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தரவரிசைப் பட்டியல் தயாரிப்பின் முதல் சுற்றில், 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. தோ்வில் இம்மாணவா்கள் பெற்றிருந்த மதிப்பெண்களில் 6% குறைக்கப்பட்டது. இரண்டாம் சுற்றில், இம்மாணவா்கள் 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. தோ்வில் பெற்றிருந்த மதிப்பெண்களில் 50%, பொதுநுழைவுத்தோ்வில் பெற்றிருந்த மதிப்பெண்களில் 50% மதிப்பெண்களை கூட்டி, அதில் கிடைத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தரவரிசைப்பட்டியலில் 501 முதல் 1000 வரையிலான இடத்தில் 14 மாணவா்களும், 1000 முதல் 10,000 வரையிலான இடத்தில் 2063 மாணவா்களும், 10,001 முதல் 1,00,000 வரையிலான இடத்தில் 22,022 மாணவா்களும் இடம்பெற்றுள்ளனா். திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 2021-ஆம் ஆண்டுக்கான 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. மாணவா்கள் பொறியியல், வேளாண்மை, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிப்புகளுக்கு மட்டும் சோ்க்கை பெறலாம். கால்நடை மற்றும் மருந்தியல் படிப்புகளுக்குபொது நுழைவுத்தோ்வில் பெற்ற மதிப்பெண்களின்படி தரவரிசைப் பட்டியல்கள் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளன என்றாா்.

Monday, March 28, 2022

March 28, 2022

ஒன்றிய பல்கலைக்கழகங்களை போல மாநில பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை

மாநில பல்கலைக்கழகங்களிலும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த முன்வர வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு விடுத்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒன்றிய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் பொது நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு அண்மையில் அறிவித்தது. இந்த நிலையில் ஒன்றிய பல்கலைக்கழகங்களை போல மாநில பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த முன்வர வேண்டும் என்று யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக யுஜிசி செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. சில சமயங்களில் வெவ்வேறு நுழைவுத் தேர்வுகள் ஒரே நாளில் அறிவிக்கப்படுவதும் இதனால் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த மாநில பல்கலைக்கழகங்களும் முன்வர வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. நுழைவுத் தேர்வால் உயர் கல்வியில் மாணவர்களின் சேர்க்கை பெருமளவில் குறைந்து விடும் என தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தெரிவித்து வரும் நிலையில், பல்கலைக்கழக மானிய குழுவின் இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Total Pageviews

Search This Blog