பல்கலை
July 26, 2022
அமெட் பல்கலையில் இலவச ஐ.ஏ.எஸ். அகாடமி தொடக்கம்
சென்னை கானத்தூர் அமெட் பல்கலைக்கழகத்தில் கோபால கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அகாடமி இலவச பயிற்சி மையத்தை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
அகாடமியைத் தொடங்கிவைத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில்,
“இந்திய ஆட்சிப்பணி என்ற உயர்ந்த பணிக்கான பயிற்சி பெறப்போகும் மாணவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் சமுதாயத்தின் பெருமைக்கும் வெற்றி தேடித்தர வேண்டும்” என்றார். அதைத்தொடர்ந்து தனது பெற்றோர் பெயரில் செயல்பட்டு வரும் அறக்கட்டளை மூலம் அகாடமிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு சான்றிதழ், கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
விழாவிற்கு தமிழ்நாடு யாதவ மகாசபையின் தலைவரும் அமெட் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டாக்டர் நாசே ஜெ.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
அகாடமியைத் தொடங்கிவைத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில்,
“இந்திய ஆட்சிப்பணி என்ற உயர்ந்த பணிக்கான பயிற்சி பெறப்போகும் மாணவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் சமுதாயத்தின் பெருமைக்கும் வெற்றி தேடித்தர வேண்டும்” என்றார். அதைத்தொடர்ந்து தனது பெற்றோர் பெயரில் செயல்பட்டு வரும் அறக்கட்டளை மூலம் அகாடமிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு சான்றிதழ், கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
விழாவிற்கு தமிழ்நாடு யாதவ மகாசபையின் தலைவரும் அமெட் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டாக்டர் நாசே ஜெ.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.