Breaking

Showing posts with label கலை கல்லூரி. Show all posts
Showing posts with label கலை கல்லூரி. Show all posts

Wednesday, July 13, 2022

July 13, 2022

பள்ளி விடுதிகளில் கல்லூரி மாணவியருக்கு அனுமதி!

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியரைச் சேர்த்துக்கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியரைச் சேர்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 367 பள்ளிகளில் உள்ள விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் ஏற்கனவே தங்கிப் பயிலும் மாணவியரின் எண்ணிக்கைக்கு ஊறு விளைவிக்காத வகையில், இடவசதியைக் கருத்தில் கொண்டு கல்லூரி பயிலும் மாணவியரைச் சேர்த்துக்கொள்ளலாம் சொல்லப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவியருக்கு அனுமதி வழங்குவதால் ஆகும் கூடுதல் செலவினத்துக்கு ரூ.48.36 லட்சம் நிதியை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடுள்ளது. இதனால், மாணவர்கள் தடையின்றி தங்கிப் படிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

CLICK HERE TO DOWNLOAD PDF

Thursday, July 07, 2022

July 07, 2022

கலை கல்லூரி அட்மிஷன் விண்ணப்பிக்க இன்று கடைசி

கலை கல்லூரி அட்மிஷன் விண்ணப்பிக்க இன்று கடைசி

தமிழகம் முழுதும் 163 அரசு கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு ஜூன் 20ல் வெளியான நிலையில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளில் சேரும் வகையில், கல்லுாரி கல்வி இயக்குனரகம் வழியே, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலையில் சேர விரும்புவோர், https://tngasa.in/# என்ற இணையதளம் வழியே, விண்ணப்ப பதிவு செய்து வருகின்றனர். நேற்று வரை 3.15 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 2.70 லட்சம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.இந்நிலையில், இந்த விண்ணப்ப பதிவுக்கு இன்று கடைசி நாள் என்பதால், மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை விரைந்து பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, இன்னும் பிளஸ் 2 தேர்வு முடிவு வராததால், அவர்களுக்காக கூடுதல் அவகாசம் தரப்படும் என, பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

Total Pageviews

Search This Blog