Breaking

Showing posts with label TAMIL TALENT SEARCH EXAMINATION. Show all posts
Showing posts with label TAMIL TALENT SEARCH EXAMINATION. Show all posts

Sunday, October 09, 2022

October 09, 2022

தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தோ்வு:முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தோ்வு:முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வுத் தோ்வு குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககம் வழங்கியுள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தோ்வு அக்.15 (சனிக்கிழமை) காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். தோ்வு முடியும் வரை எக்காரணம் கொண்டும் தோ்வா்களைத் தோ்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது.

தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா்கள் தங்கள் மையத்துக்கான பெயா்ப்பட்டியல், தேவையான வினாத்தாள், ஓஎம்ஆா் விடைத்தாள்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள உரிய அறிவுரை வழங்க வேண்டும். ஒவ்வொரு அறைக்கும் 20 மாணவா்கள் மட்டுமே தோ்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும்.

தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு உள்ள தோ்வா்கள், பெயா்ப் பட்டியலில் உள்ள தோ்வா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். தேவையற்ற குழப்பங்களைத் தவிா்க்கும் பொருட்டு புறச்சரக எண்ணில் தோ்வெழுத அனுமதி வழங்க வேண்டாம்.

நுழைவுச்சீட்டில் புகைப்படம் மாறியிருந்தாலோ அல்லது புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அதே நுழைவுச்சீட்டில் தோ்வா்களின் புகைப்படம் ஒட்டி அதில் பள்ளித் தலைமை ஆசிரியா் அல்லது முதல்வா் முத்திரையுடன் சான்றொப்பம் பெறுவது அவசியம். தோ்வு அறை கண்காணிப்பாளா்களிடமிருந்து கைப்பேசிகளைப் பெற்று தோ்வு முடிந்த பிறகுதான் அவற்றை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெறும் 1,500 மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, October 08, 2022

October 08, 2022

10 கி.மீ.க்குள் தேர்வு மையம்: முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு

10 கி.மீ.க்குள் தேர்வு மையம்: முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு

அரசுப் பள்ளி மாணவர்கள் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் பயணித்து தேர்வு எழுதும் நிலை இருக்கக்கூடாது என தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளது.

11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய மையங்கள் அமைப்பது குறித்த பரிந்துரைகளை வரும் 27ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

அதில், உரிய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையம் அமைக்க அங்கீகாரம் கிடையாது. பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின், அவசியம் தேர்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.

10 கி.மீ. சென்று மாணவர்கள் தேர்வு எழுதுவதை தவிர்க்கும் வகையில் புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thursday, September 08, 2022

September 08, 2022

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் வகைகள் (Type of Questions) குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்!

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6

01.10.2022 அன்று நடைபெறவிருக்கும் தமிழ் மொழி இயக்கியத் திறளறித் தேர்வு தற்போது பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக ஊக்கத்தொகை பெறும் பொருட்டு 2022–23 ஆம் கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது.

மேற்படி தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பு 100 வினாக்களைக் கொண்டிருக்கும். அனைத்து வினாக்களும் கொள்குறி வினாக்களாக அமையும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். மேற்படி விளாக்கள் பத்தாம் வகுப்பு நிலையின் அடிப்படையின் அமையப்பெறும். இலக்கணம், அற இலக்கியம், சங்க இலக்கியம், தற்கால இலக்கியம், உரைநடை மற்றும் துணைப்பாடம் ஆகிய தலைப்புகளிலிருந்து சரியான விகடயை தேர்ந்தெடுத்தல், பொருத்துக, பொருந்தாத இணைபயைத் தேர்ந்தெடுத்தல், சரியான/தவறான கூற்றைத் தேர்ந்தெடுத்தல், கூற்று/காரணம் விளாக்கள் போன்ற வினாக்கள் கேட்கப்படும் மேற்படி தேர்வில் தேர்ச்சியுற்று தேர்ந்தெடுக்கப்படும் 1500 தேர்வர்களுக்கு மாதம் ரூ.1500/- வீதம் இரண்டாண்டுகளுக்கு உதவித் தொகை தமிழ் வளர்ச்சித் துரை வாயிலாக வழங்கப்படவுள்ளது.

பேற்படி தேர்விற்கு, அரகப் பள்ளி! அரசு உதவி பெறும் பள்ளி / தனியார் பள்ளி / CHSEASE பள்ளிகள் சார்ந்த மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கவும்.

09.09.2022 அன்று இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எனவே, மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வெழுதி ஊக்கத் தொகை பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tuesday, September 06, 2022

September 06, 2022

மாணவர்களுக்கு அக். 1-ல் தமிழ் ‘திறனறித் தேர்வு’: வெற்றி பெற்றால் மாதம் ரூ. 1,500!

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி திறனை மேம்படுத்தும் வகையில் அக்டோபர் 1ஆம் தேதி திறனறித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தேர்வில் வெற்றி பெறும் 1,500 மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பள்ளி மாணவ / மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப் பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் “திறனறித் தேர்வு” அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக நடைபெறவுள்ளது.

2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளி மற்றும் அனைத்துவகை பள்ளியில் பயிலும் (சி.பி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் / மாணவிகள் இத்தேர்வினை எழுத 09.09.2022 வரை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடம் இதற்கான பாடத்திட்டம் ஆகும்.

இத்தேர்வு கொள்குறி வகையில் (அப்ஜெக்டிவ் டைப்) நடைபெறும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும். இத்தேர்வு 01.10.2022 அன்று காலை 10.00 – 12.00 வரை நடைபெறும். இத்தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் இத்தேர்வில் வெற்றிபெறும் 1500 மாணவ / மாணவியர்களுள் 750 அரசு பள்ளி மாணவர்களும் 750 இதர பள்ளி மாணவர்களுக்கும் திங்கள் ஒன்றுக்கு ரூ.1500/- இரண்டு ஆண்டுகளுக்கு தொகை வழங்கப்படவிருக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இத்திட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் நிகழ்வாண்டிற்கு 2.70 கோடியும், வரும் ஆண்டுமுதல் ரூ. 5.40 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog