Breaking

Showing posts with label Counseling and Guidelines. Show all posts
Showing posts with label Counseling and Guidelines. Show all posts

Tuesday, June 27, 2023

June 27, 2023

TRANSFER COUNSELLING - ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு - வழிகாட்டு நெறிமுறைகள்

Monday, April 03, 2023

April 03, 2023

அறை கண்காணிப்பாளர் வழிகாட்டி!

. .அறை கண்காணிப்பாளர் வழிகாட்டி.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். | என்ற குறளின் படி
ஆகச் சிறந்த ஆசிரியர்களைகத் தேர்ந்தெடுத்து செயற்கரிய செய்வார் பெரியார் என்ற வாக்கிற்கு ஏற்ப தேர்வுப் பணி நம்மிடம் கல்வித்துறை ஒப்படைத்துள்ளது.
மாணவர் உள நலம் / உடல் நலம் கருத்தில் கொண்டு முழு பாதுகாப்போடு/ சுகாதாரத்தைப் பேணுதல் நம் தலையாய கடமை.
மையத்திற்கு தேர்வர் வருகைபுரிந்ததில் இருந்து தேர்வு எழுதி வெளியேறும்வரை உரிய நேரத்தில் உரிய பணியினைத் திறம்பட செய்து தேர்வர்களுக்கு வழிகாட்டுதல் அவசியம்.
🌷கட்டுப்பாட்டு அறையில். 1. மையத்திற்கு
8.30 am வருகை புரிதல் செல்போனை அணைத்து ஒப்படைத்தல்..பேட்ஜ் அணிதல்
2. வருகை கையொப்பம்
3. குலுக்கல் முறையில் அறை தேர்வு
4.அறைக்கு உரிய பை பெறுதல்
5. பையின் உள்ளே
a. விடைத்தாள் கொண்ட ஸ்பெஷல் எண்கள் ஒட்டப்பட்ட பிரவுன் உறை
b. தேர்வர் வருகைப்பதிவு படிவம்
c. ஹால்டிக்கெட்
d கூடுதல் விடைத்தாள்
f. சிறு கத்தி . 6. விடைத்தாள் முகப்புத்தாளில் மு.கண்காணிப்பாளர் பேசிமலி.. விடைத்தாள் பிரவுன் உறையில் ஒட்டப்பட்ட தேர்வர் எண்கள் படிவம்..
தேர்வர் வருகைப் பதிவு ( ‌‌attendance sheets)தாள்கள்.. விடைத்தாட்களின் முகப்புச் சீட்டு ஒப்பிட்டு....நுழைவுச் சீட்டு ஆகியன சரிபார்க்க வேண்டும்.
7. விடைத்தாளின் முகப்புச்சீட்டின் part.A வின் வலப்புறம் மேல் பகுதியில் உரிய இடத்தில் Verified என எழுதி சுருக்கொப்பம்.
8. அறைக்கு செல்ல தயார்படுத்திக் கொள்ளல்
9. 9.40am க்கு வினாத்தாள்
உறை மற்றும் அறைக்கு உரிய bag, blue pen.. red pen எடுத்து கொண்டு அறைக்கு செல்லுதல்.

🌷தேர்வறையில்
1. அறையை திறந்து முதலில் சென்று தேர்வருக்கான இருக்கை அமர்வு,காற்றோட்டம், வெளிச்ச வசதி ஏற்பாடு
2. தேர்வரை சோதிட்டு ஒதுக்கப்பட்ட 20 தேர்வரையும் அவரவர்க்கு உரிய இடத்தில் அமரச்செய்தல்.
( மிதியடி..பெல்ட் வெளியே)
கைக்குட்டை/ சானிடைசர் அனுமதிக்கலாம்.
3.பள்ளி மாணவர்கள் சீருடையில் தான் அனுமதிக்கப் படுவர்.
4.ஹால்டிக்கெட் வழங்குதல்.
5. 9.55am வினாத்தாள் உறை பாதுகாப்பு தன்மை விளக்கி இருதேர்வரிடம் பதிவெண் எழுதி கையொப்பம் பெற்று cut செய்தல். 10.00am வினாத்தாள் வழங்கல்..
6. ‌10.10 வரை தேர்வரை வினாத்தாள் மட்டுமே பார்க்க அனுமதித்தல்.( அச்சு தெளிவாக அனைத்து பக்கங்களில் உள்ளதை உறுதி செய்க) பதிவு எண் எழுதச் சொல்லுதல்.
7. ‌10.10 am விடைத்தாள்
வழங்கல். முகப்புச் சீட்டில் உள்ள விவரம் தங்களுடையது தானா என சரிபார்த்தல்.. விடைத்தாள் மொத்த பக்கமும் பக்க வாரியாக சோதிக்க அறிவுறுத்தல்...
மொத்த பக்கங்களின் எண்ணிக்யும் சரிபார்த்து தேர்வரின் கையொப்பம் பெறுதல். 8. ‌10.15 am "start writing" என கூறுதல்
9. . வருகை பதிவுத்தாளில் தேர்வர் கையொப்பம்.
விடைத்தாளில் blue டிக் செய்து கண்காணிப்பாளர் கையொப்பம்.
10. ‌அறைக்கு வரும் பதிவேட்டில் வராதோர் எண் எழுதி கையொப்பம்.
விடைத்தாள் உறையில்blue pen கொண்டு P/ red pen கொண்டு ABSENT எழுதுதல் 11. 10.30 am வராதோர் விடைத்தாளின் முகப்புச் சீட்டில் red tick மற்றும் கையொப்பம். ஹால் டிக்கெட்டில் சுருக்கொப்பம்.
12.. வராதோர் வினாத்தாள்- விடைத்தாள் ஒப்படைப்பு.
13. கண்காணிப்பு பணி இடையிடையே தேவைப் படின் வருகை படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் பெற்று கூடுதல் விடைத்தாள் வழங்கல்
14. ‌1.10 pm ஹால்டிக்கெட் சேகரித்து உறையில் வைத்தல்
15. ‌ 1.15 pm stop writing and Stand up நிகழ்த்தி எழுதாத பக்கங்கள் அனைத்திலும் பேனாவால் குறுக்குக் கோடிட அறிவுறுத்துதல். வரிசையாக விடைத்தாள் பெற்று உறையிலிடுதல்
அறையை சோதித்துவிட்டு தேர்வர்களை செல்ல அனுமதித்து( விளக்கு பேன் off செய்தபின்பு)தாமும் கட்டுப்பாட்டு அறைக்கு விரைதல். 🌷கட்டுப்பாட்டு அறையில்
1. கவனமாக DGE/SSLC (விடைத்தாள் மேல் பகுதியில் பக்கங்கள் சந்திப்பு பகுதியில்)முத்திரை இடல். விடை முடிவுறும் இடத்திலும் முத்திரை இடல்.
2. Part - A பிரிப்பு.
Part-A எண்ணிக்கை விடைத்தாள் எண்ணிக்கை சரிபார்ப்பு.
( Tic mark, present/absent மார்க், கையொப்பங்கள், பேசிமலி...etc) பிரிக்கப்பட்ட part-A உடன் விடைத்தாள்கள் சரிபார்த்து
3.முதன்மை கண்காணிப்பாளர்/ துறையலுவலர் முன்னிலையில் விடைத்தாள்களை ஸ்பெஷல் பிரவுன் உறையில் வைத்து ஒட்டி கையொப்பம் இடல்.
Part- A ..pin செய்துவழங்குதல்
4.CSD பூர்த்தி செய்தல்
5.அறைக்கு உரிய பை -யில் உள்ள எஞ்சிய பொருட்களை ஒப்படைத்தல்.
6. கட்டுகள் தயார் செய்வதை பார்வையிடல்
7. அனுமதி பெற்று இன்றைய பணி சிறப்பாக அமைந்ததை எண்ணி மகிழ்வுடன் செல்லுதல்.
தேர்வர்கள் மகிழ்வோடும் வசதியோடும் பிழையின்றி விவரங்களை தெளிவாக சரிபார்க்க தேர்வறையில் உரிய நேரத்தில் ரத்தினச் சுருக்க அறிவிப்பு அவசியம்.
அருவினை என்ப உளவோ கருவியாலா காலமறிந்து செயின். என்பதை நாம் கற்பித்தும் கடமையாற்றியும் வருவதால் ...தேர்வுப் பணி சிறப்பாகவும் செம்மையாகவும் அமைந்திட வாழ்த்துகள்.

Tuesday, October 04, 2022

October 04, 2022

MBBS , BDS படிப்புகளுக்கு அக். 11 முதல் கலந்தாய்வு.

MBBS , BDS படிப்புகளுக்கு அக். 11 முதல் கலந்தாய்வு.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு அக்டோபர் 11-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கும் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு அக். 20 வரை நடைபெறும்.

அக்டோபர் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்குள் மாநிலங்களில் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம். மருத்துவக் கலந்தாய்வு மூலம் கல்லூரிகளை தேர்வு செய்தவர்கள், அக்டோபர் 28ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற்றுவிட வேண்டும்.

இதுபோல, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு நவம்பர் 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும். அதுபோல, மாநிலங்களுக்கான 2அம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 7ஆம் தேதி 18ஆம் தேதி வரை நடைபெறும். இந்த மருத்துவக் கலந்தாய்வுகளில் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் நவம்பர் 18ஆம் தேதிக்குள்ளும், மாநிலங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் நவம்பர் 21ஆம் தேதிக்குள்ளும் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுவிட வேண்டும்.

இதன்பிறகு, காலியாக இருக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களுக்கு டிசம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடைபெறும். நாடு முழுவதும் முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர் 15ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 21, 2022

September 21, 2022

Eng., First Round: 'Admission' ends tomorrow - இன்ஜி., முதல் சுற்று: 'அட்மிஷன்' நாளை கடைசி

Tomorrow is the last day for the first round allotted students in engineering counseling to join colleges.

Engineering General Counseling started on 10th. Out of a total of four rounds, 12,591 candidates were allotted seats in the first round. 6,277 confirmed this allotment and got the final allotment. Also, 4,430 people have got their allotment and are on the waiting list to get allotment if desired seats are available.

In this case, all those who have got quota have been given a week's time to confirm their admission. Accordingly, the concerned students will submit their original certificates, pay the tuition fee and accept the provisional allotment tomorrow to confirm the admission and the final allotment order will be issued on 25th.

Accordingly, it has been announced that the 'Choice Billing' registrations for the second round will start on the 25th. For more information, visit www.tnea online.org.

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், முதல் சுற்றில் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், கல்லுாரிகளில் சேர்வதற்கு நாளை கடைசி நாளாகும்.

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங், 10ம் தேதி துவங்கியது. மொத்தம் நான்கு சுற்றுகளில், முதல் சுற்றில் 12 ஆயிரத்து, 591 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஒதுக்கீட்டை, 6,277 பேர் உறுதி செய்து, இறுதி ஒதுக்கீடு பெற்றனர். மேலும், 4,430 பேர் தங்களுக்கான ஒதுக்கீட்டை பெற்றதுடன், விரும்பிய இடங்கள் கிடைத்தால் ஒதுக்குமாறு, காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில், ஒதுக்கீடு பெற்ற அனைவரும் சேர்க்கையை உறுதி செய்வதற்கு, ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை அளித்து, கல்வி கட்டணம் செலுத்தி, சேர்க்கையை உறுதி செய்வதற்கு நாளை கடைசி.தற்காலிக ஒதுக்கீட்டை ஏற்று, முன்னிலை இடங்களுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு, வரும், 25ம் தேதி இறுதி ஒதுக்கீட்டு உத்தரவு வழங்கப்படும்.

இதையடுத்து, இரண்டாம் சுற்றில் உள்ளவர்களுக்கு, விருப்ப கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு தேர்வுக்கான 'சாய்ஸ் பில்லிங்' பதிவுகள், 25ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.tnea online.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tuesday, August 23, 2022

August 23, 2022

உயர் கல்வி, ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் - 12 ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! - 23.08.22

Total Pageviews

Search This Blog