Breaking

Showing posts with label 11th & 12th Class General Examinations. Show all posts
Showing posts with label 11th & 12th Class General Examinations. Show all posts

Saturday, February 25, 2023

February 25, 2023

பிளஸ் 1, பிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கு பிப்.28-இல் நுழைவுச்சீட்டு

பிளஸ் 1, பிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கு பிப்.28-இல் நுழைவுச்சீட்டு

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வெழுத விண்ணப்பித்த தனித் தோ்வா்கள் செவ்வாய்க்கிழமை (பிப்.28) தோ்வுக் கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்த தனித்தோ்வா்கள் (தட்கல் உள்பட) தோ்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை பிப்.28-ஆம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதியை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிளஸ் 1 (அரியா்), பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள தனித் தோ்வா்களுக்கு இரண்டு தோ்வுகளுக்கும் சோ்த்து ஒரே தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும். பொதுத் தோ்வுகளுக்கான கால அட்டவணைகளை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, January 30, 2023

January 30, 2023

10,11,12-ம் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

10,11,12-ம் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு Individual candidates who failed to apply for 10th, 11th, 12th general examination can apply by Takkal mode: Directorate of Government Examinations Notification

நடைபெறவுள்ள மார்ச், ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, தக்கல் முறையில் இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏற்கனவே 26.12.2022 (திங்கட்கிழமை) முதல் 03.01.2023 (செவ்வாய்க்கிழமை) வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது 05.01.2023 (வியாழக்கிழமை) முதல் 07.01.2023 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை), ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தத்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி, மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறிய பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்கள் தற்போது தக்கல் முறையில் இன்று 30.01.2023 முதல் 01.02.2023 வரையிலான நாட்களில் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் (Government Examinations Service centres) நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் (Government Examinations Service centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் இணையதளத்தில் அறிவுரைகள் ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் www.dge1.tn.gov.in என்ற இனையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Wednesday, June 01, 2022

June 01, 2022

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது..

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு :விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ம் தேதி தொடங்குகிறது.

11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 83 மையங்களிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 86 மையங்களிலும் திருத்தப்படுகிறது.

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது..

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.

தமிழகம் முழுவதும் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அடுத்த கல்வியாண்டு விரைவில் தொடங்க உள்ளதால் தேர்வு முடிவுகள் விரைந்து அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது

Monday, May 30, 2022

May 30, 2022

+2 மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை

+2 Chemistry Course: 2 Bonus score to question

In the 12th grade chemistry course, 2 questions will be given to the bonus score Notice of School Education.

The full score of those who wrote the answer to the Question No. 9 or Question Number 5 in Part 1 Will be given.

Those who respond to Question No. 29 in Part 2 will also be given full score -The school department
+2 வேதியியல் பாடத்தேர்வு: 2 கேள்விக்கு போனஸ் மதிப்பெண்

12ம் வகுப்பு வேதியியல் பாடத்தேர்வில், 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

பகுதி 1ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5க்கு பதில் எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும்.

பகுதி 2ல் கேள்வி எண் 29க்கு பதில் எழுதியவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும்

-பள்ளிக்கல்வித்துறை

Wednesday, May 18, 2022

May 18, 2022

பொது தேர்வில் ஆப்சென்ட் ஆன 1.18 லட்சம் மாணவர்களின் நிலை குறித்து அறிக்கை தர கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு.

ஆப்சென்ட் ஆன 1.18 லட்சம் மாணவர்

கொரோனாவிற்கு பின் நடந்த அரசு பொது தேர்வில் ஆப்சென்ட் ஆன 1.18 லட்சம் மாணவர்களின் நிலை குறித்து அறிக்கை தர கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ல் கொரோனா பரவல் துவங்கியது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக பள்ளி திறக்கப்படவில்லை. மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர். பள்ளி விடுமுறையால் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று விட்டனர். பல மாணவர்கள் பிழைப்பிற்காக பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

தற்போது நடக்கும் 10 ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொது தேர்வில் ஆப்சென்ட் எண்ணிக்கை 1.18 லட்சமாக உள்ளது. இதன்படி 10 ம் வகுப்பு படிக்கும்12 லட்சம் பேரில் 42,000, பிளஸ் 1 படிக்கும் 9 லட்சம் பேரில் 43,533,பிளஸ் 2ல் 10 லட்சம் பேரில்32,600என 1 லட்சத்து 18 ஆயிரத்து 133 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர். அறிக்கை தர கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

கொரோனாவிற்கு முன்னர் வரை நடந்த அரசு தேர்வுகளில் இறப்பு, இடைநிற்றல் என சொற்ப அளவிலேயே மாணவர் 'ஆப்சென்ட்' இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தேர்வு எழுத தகுதி பெற்ற 31 லட்சம் பேரில் 1.18 லட்சம் மாணவர் 'ஆப்சென்ட்' ஆனது கல்வித்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இடைநிற்றலை தவிர்க்கும் நோக்கில் பள்ளிக்கு தொடர்ந்து வராத மாணவர்கள் விபரம், வேலைக்கு சென்றால் அவர்களை பள்ளிக்கு அழைத்து வருதல், பிற காரணங்களை அறிந்து பள்ளிக்கு வரவைத்தல் பணிகளுக்காக கலெக்டர்கள் மூலம் அரசு விபரத்தை சேகரிக்கிறது, என்றார்.

Thursday, April 21, 2022

April 21, 2022

10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு அதிகாரிகள் நியமனம் - 38 மாவட்டங்களுக்கும் தனித்தனி அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Examination Nodal Officer GO - PDF

Total Pageviews

Search This Blog