Tamil Nadu Teachers Eligibility Test
November 30, 2025
Showing posts with label Education Department. Show all posts
Showing posts with label Education Department. Show all posts
Sunday, November 30, 2025
Monday, January 27, 2025
Saturday, January 04, 2025
Wednesday, January 01, 2025
Wednesday, November 27, 2024
Monday, September 30, 2024
Friday, September 27, 2024
Monday, April 22, 2024
Tuesday, April 09, 2024
Saturday, February 10, 2024
Incentive
February 10, 2024
Incentive for +2 students: Education Department notification
+2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: பள்ளிக்கல்வித் துறை +2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு Incentive for +2 students: Education Department notification
தொழிற் பயிற்சி பெறும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 நாட்கள் அகப்பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1,000 ஊக்கத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, அகப்பயிற்சி மேற்கொள்ளும் பிளஸ் 2 மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பள்ளி தலைமையாசிரியர்கள் பெற வேண்டும். மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் மற்றும் அகப்பயிற்சிக்கு சென்ற தொழிற் நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்கள் உட்பட விவரங்களை www.tnemis.tn.schools.gov.in இணையதளத்தில் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அந்த விவரங்கள வட்டார வளமைய மேற்பார்வையாளர்களால் சரிபார்க்கப்பட்டு, அதன்பின் நிதியானது விடுவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொழிற் பயிற்சி பெறும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 நாட்கள் அகப்பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1,000 ஊக்கத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, அகப்பயிற்சி மேற்கொள்ளும் பிளஸ் 2 மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பள்ளி தலைமையாசிரியர்கள் பெற வேண்டும். மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் மற்றும் அகப்பயிற்சிக்கு சென்ற தொழிற் நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்கள் உட்பட விவரங்களை www.tnemis.tn.schools.gov.in இணையதளத்தில் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அந்த விவரங்கள வட்டார வளமைய மேற்பார்வையாளர்களால் சரிபார்க்கப்பட்டு, அதன்பின் நிதியானது விடுவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Friday, January 05, 2024
NEWS
January 05, 2024
தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் உள்ள பள்ளிகளில் 1,500 ஆசிரியர்கள் புதிய நிபந்தனையுடன் நியமனம் செய்ய உத்தரவு.
Order to appoint 1,500 teachers in schools under Tamil Nadu Primary Education Department with new conditions. தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் உள்ள பள்ளிகளில் 1,500 ஆசிரியர்கள் புதிய நிபந்தனையுடன் நியமனம் செய்ய உத்தரவு.
தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமனம் செய்ய அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் 31,214 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 35 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, கரோனா பரவலுக்கு பிறகு, அரசுப் பள்ளிகளில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மட்டும் 2.8 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கை பெற்றனர். ஆனால், 2013-14-ம் கல்வி ஆண்டுக்கு பிறகு, தமிழக அரசால் இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் 8,643 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன.இவற்றை சமாளிக்க தொகுப்பு ஊதியத்தில் பட்டதாரிகள் நியமனம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுதவிர பெரும்பாலான பள்ளிகளில் ஒரு ஆசிரியர், இரு ஆசிரியர்களை கொண்டு இயங்கும் நிலை உள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், வரும் ஆண்டுகளில் ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால் காலி பணியிடங்களை துரிதமாக நிரப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.
அதை ஏற்று, முதல்கட்டமாக 1,000 இடைநிலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நியமனம் செய்து கொள்ள தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. தொடர்ந்து, தற்போது கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
தொடக்க கல்வி இயக்குநரகத்தின்கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டிய இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பற்றிய விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தொடக்க கல்வி இயக்குநரின் கருத்துருவை நன்கு பரிசீலனை செய்தபிறகு, 2023-24-ம் கல்வி ஆண்டில் கண்டறியப்பட்ட 8,643 எண்ணிக்கையிலான காலி இடங்களில் 1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அந்த பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அனுமதி அளிக்கப்படுகிறது.
அதற்கு முன்பாக, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட உபரியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, அதிககாலி இடங்கள் உள்ள மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு நிரவல் செய்யவேண்டும்.
5 ஆண்டு பணிபுரிய நிபந்தனை
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோரை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அந்த மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், கடந்த ஆகஸ்ட் மாதமே இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கிவிட்ட நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் அதற்கான அறிவிப்பாணையை கூட வெளியிடவில்லை. வாரியத்தின் இந்த மெத்தனத்தால் தேர்வர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனினும், இடைநிலை ஆசிரியர் பணிநியமன போட்டி தேர்வு குறித்த அறிவிப்பாணை விரைவில் வெளியாகும் என்று துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘டெட்’ முதல் தாள தேர்ச்சி பெற்ற சுமார் 48 ஆயிரம் பட்டதாரிகள் இந்த பணிக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, November 23, 2023
Higher Education Department
November 23, 2023
பள்ளிகளில் ‘ பிராட்பேண்ட் ' : கல்வித் துறை உத்தரவு. 'Broadband' in Schools: Education Department
பள்ளிகளில் ‘ பிராட்பேண்ட் ' : கல்வித் துறை உத்தரவு.
தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை நிறுவுவது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களில் சராசரியாக பத்து முதல் இருபது கணினிகள், புரொஜக்டா்களும் நிறுவப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஒருங்கிணைந்த பிராட்பேண்ட் சேவை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இணையத்தின் வேகம் மிகவும் குறைவாக இருந்ததால் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களின் பயன்பாடும் குறைந்தது. எனவே, ஒவ்வொரு பள்ளிகளும் தங்களுக்கு தனித்தனியாக 100 ம்க்ஷல்ள் வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை அதிகபட்சம் ரூ.1,500 (ஜிஎஸ்டி உள்பட) கட்டணத்துக்குள் நிறுவிக் கொள்ளலாம்.
அதற்கான தொகை பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். பிராண்ட் பேண்ட் இணைப்புக்கான நிறுவுதல் கட்டணத்தை பள்ளிக்கு வழங்கப்படும் மானியத் தொகையிலிருந்து செலுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, November 14, 2023
Education Department
November 14, 2023
Edu dept starts process to transfer 1,300 PG teachers posted as HMs
Edu dept starts process to transfer 1,300 PG teachers posted as HMs
THE school education depart ment has started the process to transfer around 1,300 PG teach ers who were posted as high school headmasters after January 1 , 2016. This comes after the high court quashing a clause in the orders of the department which allowed recruitment of PG teachers as headmasters of government high schools based on their service as BT assist ants ( graduate ) teachers...
THE school education depart ment has started the process to transfer around 1,300 PG teach ers who were posted as high school headmasters after January 1 , 2016. This comes after the high court quashing a clause in the orders of the department which allowed recruitment of PG teachers as headmasters of government high schools based on their service as BT assist ants ( graduate ) teachers...
THE school education depart- ment has started the process to transfer around 1,300 PG teach- ers who were posted as high school headmasters after Janu- ary 1, 2016. This comes after the high court quashing a clause in the orders of the department which allowed recruitment of PG teachers as headmasters of government high schools based on their service as BT assist- ants (graduate) teachers
The department has written to all chief education officers to collate and send the details of promoted PG teachers who are working as high school head- masters in their districts. It is mulling what similar posts HC QUASHES CLAUSE This comes after HC quashed a clause in the orders of the department which allowed recruitment of PG teachers as government high schools HM based on their service as BT assistants (graduate) teachers could be given to the headmasters.
Sources said the department was left with no other option as both the Supreme Court and subsequent review petition filed with the Madras High Court held that there are no provisions under the rules to make promoted postgraduate teachers as high school head- masters. "If a BT assistant has been promoted as PG teacher,
his service would come under the higher secondary wing. He can't come back to high school as headmaster. The pay and cadre of high school headmas- ter and PG teacher are the same," said A V Annamalai, state special president of Pro- moted Bachelor of Teaching and Tamil Teachers Associa- tion. Annamalai has filed sev- eral cases against the depart- ment's decision since 2008.
He added that there are near- ly 60,000 BT assistants and 5,800 high schools in the state. "If promoted PG graduates are also posted as high school HMs, this would deny BT assistants their chance for promotions," he said. The association has filed a contempt petition in the HC to implement the order
Wednesday, September 27, 2023
Education Department
September 27, 2023
தமிழகம் முழுவதும் காலாண்டுத் தேர்வு இன்று நிறைவு பெற்ற நிலையில், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித் துறை
தமிழகம் முழுவதும் காலாண்டுத் தேர்வு இன்று நிறைவுபெற்ற நிலையில், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்/ உயர்மேல்நிலைப் பள்ளிகளில் 6 - 12ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளிகளுக்கு அக்டோபர் 9இல் பள்ளிகள் திறக்கப்படும்.
2023 - 24ஆம் கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வுகள் இன்று நிறைவு பெற்றுள்ளது. விடுமுறை முடிந்து அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 6 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பொது வினாத்தாள் முறையில் காலாண்டுத் தோ்வு செப்.19ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தோ்வு இன்றுடன் நிறைவு பெற்றது. முன்னதாக செப்.15-ஆம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு காலாண்டு தோ்வு தொடங்கி நடைபெற்று வந்தது.
தோ்வுக்குப் பிறகு செப்.28 முதல் அக். 2-ஆம் தேதி வரை காலாண்டு தோ்வு விடுமுறை விடப்படுகிறது. இதையடுத்து, அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட
ும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியா்களுக்கு தோ்வு கண்காணிப்பு, எமிஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
*தமிழகம் முழுவதும் காலாண்டுத் தேர்வு இன்று நிறைவுபெற்ற நிலையில், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.*
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்/ உயர்மேல்நிலைப் பள்ளிகளில் 6 - 12ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 - 24ஆம் கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வுகள் இன்று நிறைவு பெற்றுள்ளது. விடுமுறை முடிந்து அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 6 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பொது வினாத்தாள் முறையில் காலாண்டுத் தோ்வு செப்.19ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தோ்வு இன்றுடன் நிறைவு பெற்றது.
முன்னதாக செப்.15-ஆம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு காலாண்டு தோ்வு தொடங்கி நடைபெற்று வந்தது.
தோ்வுக்குப் பிறகு செப்.28 முதல் அக். 2-ஆம் தேதி வரை காலாண்டு தோ்வு விடுமுறை விடப்படுகிறது. இதையடுத்து, அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், 6 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.
வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு மாறாக, இந்த ஆண்டு கோடை வெயில் காரணமாக ஜூன் 13ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதையும் படிக்க | காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதிகள் - இயக்குநர்களின் செயல்முறைகள் (DSE/DEE/தனியார் பள்ளிகள்)
கடந்த ஆண்டு 9 நாள்கள் வரை காலாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 5 நாள்கள் மட்டுமே விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆசிரியா்களுக்கு தோ்வு கண்காணிப்பு, எமிஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. உளவியல் ரீதியாக ஆசிரியா்களுக்கும் ஓய்வு வழங்கப்பட வேண்டும்.
எனவே, கடந்த ஆண்டைப்போல நிகழாண்டிலும் காலாண்டு தோ்வுக்குப் பிறகு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையே, பள்ளிகள் அக்டோபர் 3ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
Monday, August 28, 2023
exam news
August 28, 2023
மாணவர்களுக்கு ’ஷாக்’ கொடுத்த பள்ளிக்கல்வித்துறை!
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுக்கான பொதுவினாத்தாள் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டு இறுதியில் மட்டுமல்லாது மாணவர்களுக்கு எல்லா தேர்வும் பொது தேர்வு போலவே நடைபெற உள்ளது.
2023 - 24ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11, 12ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ம் தேதியும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ம் தேதியும் காலாண்டு தேர்வுகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 27ம் தேதி தேர்வுகள் நிறைவடைந்த பின், 28ம் தேதி முதல் அக்டோபர் 2 ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதனிடையே 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு பொது வினாத்தாள்கள் வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
Wednesday, August 09, 2023
VIDEOS
August 09, 2023
கல்வித்துறையில் நடக்கும் மெகா ஊழல்
Wednesday, June 07, 2023
Tuesday, March 28, 2023
Selling students personal details
March 28, 2023
Selling students' personal details - மாணவர்களின் சுய விவரங்கள் விற்பனை: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிக்கினர்; அதிர்ச்சியில் பெருந்தலைகள்!!!
மாணவர்களின் சுய விவரங்கள் விற்பனை: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிக்கினர்; அதிர்ச்சியில் பெருந்தலைகள்! Selling students' personal details: School officials caught; Big heads in shock!!!
பள்ளிகளில் படிக்கும் 20 மாவட்டங்களை சேர்ந்த 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களின் சுய விவரங்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, சைபர் க்ரைம் போலீசார் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு பொது தேர்வு நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் மாணவர்களின் சுய விவரங்கள் வேண்டும் என்றால் இ-மெயில் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என்ற பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து ஆடியோ ஒன்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியது.
அந்த ஆடியோவில், தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களில் விருதுநகர், தென்காசி, திருச்சி, மதுரை என 20 மாவட்ட மாணவர்களின் சுய விவரங்கள் எங்களிடம் உள்ளது. இந்த விவரங்கள் உங்களுக்கு வேண்டும் என்றால், ஒரு மாவட்டத்தில் உள்ள பிளஸ்2 மாணவரின் சுய விவரங்களுக்கு ரூ.5 ஆயிரம், 10ம் வகுப்பு மாணவர்களின் என்றால் ரூ.3 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போன் ஆப் பணம் செலுத்தினால் பிளஸ்2 மாணவர்களின் ஒரு மாவட்ட விவரங்கள் ரூ.3 ஆயிரத்திற்கு வழங்கப்படும் என்று ஒருவர் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகியது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேநேரம், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களின் முகவரி, தொடர்பு எண்கள் என அனைத்து சுய விவரங்களும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் பொறியியல், தொழில் நுட்ப நிலையங்களின் நிர்வாகிகளுக்கு அவை சென்றது எப்படி என குழப்பம் நிலவியது. பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருக்கும் சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த விவரங்களை விற்பனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த மோசடி பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரி புண்ணியக்கோடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்திய போது, அனைத்தும் ஆன்லைன் மூலம் மோசடி நடந்துள்ளது. மாணர்களின் சுய விவரங்கள் அனைத்தும் வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களுங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரகசியமாக பராமரிக்கப்பட்டு வந்த தகவல் எப்படி வெளியானது என்று விசாரணை நடத்திய போது, மாணவர்களின் டேட்டாக்களை அனைத்தும் ‘ஹேக்’ செய்து அதன் மூலம் மாணவர்களின் சுய விவரங்கள் திருடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு இருந்தாலும், பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் துணை இல்லாமல் இந்த மோசடி நடக்க வாய்ப்பு இல்லை என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால், மோசடி தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிலரை நேரில் அழைத்து விசாரணை நடத்த சைபர் க்ரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதேநேரம், 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களின் சுய விவரங்கள் விற்பனை செய்த மோசடி நபர்கள், விவரங்களை பணம் கொடுத்து வாங்கிய தனியார் கல்வி நிறுவனங்களிடமும் விசாரணை நடத்த உள்ளதாக சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு எழுதும் மாணவர்களின் சுய விவரங்கள் வெளியான விவகாரம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் சுய விவரங்கள் அனைத்தும் வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களுங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது பள்ளி மாணவர்களின் விபரங்கள் திருடப்பட்டு, தனியாருக்கு விற்கப்பட்டது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கல்வித்துறை சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் விபரங்களும், பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில், சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபரங்கள் திருடப்பட்டு, தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டதாக, புகார்கள் எழுந்தன.
இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை செயலர், காகர்லா உஷா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து, நடந்த விசாரணையில், ‛ஜி-பே' வாயிலாக, 10 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு, பள்ளி கல்வித்துறையில் இருந்தே, வெளி நபர்களின் ‛இ-மெயில்' முகவரிக்கு, தகவல்கள் அனுப்பப்பட்டிருப்பது தெரிந்தது.
மாநில பாடத்திட்டத்தில், சுமார் 6 லட்சம் பேர், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 35 ஆயிரம் பேரின் தகவல் திருடி விற்கப்பட்டதை, அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரி புண்ணியக்கோடி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,‛பள்ளி மாணவர்களின் விபரங்களை, தனிநபர்கள் சிலர், பணம் பெற்று கொண்டு, 20 மாவட்டங்களைச் சேர்ந்த, வெளி நபர்களுக்கு விற்றுள்ளனர்.
இது, மிகவும் கண்டிக்கத்தக்கது.
மாணவர்களின் பாதுகாப்பை இது, கேள்விக்குறியாக்கி உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' எனக் கூறப்பட்டுள்ளது.
இப்புகார் குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
பள்ளிகளில் படிக்கும் 20 மாவட்டங்களை சேர்ந்த 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களின் சுய விவரங்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, சைபர் க்ரைம் போலீசார் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு பொது தேர்வு நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் மாணவர்களின் சுய விவரங்கள் வேண்டும் என்றால் இ-மெயில் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என்ற பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து ஆடியோ ஒன்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியது.
அந்த ஆடியோவில், தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களில் விருதுநகர், தென்காசி, திருச்சி, மதுரை என 20 மாவட்ட மாணவர்களின் சுய விவரங்கள் எங்களிடம் உள்ளது. இந்த விவரங்கள் உங்களுக்கு வேண்டும் என்றால், ஒரு மாவட்டத்தில் உள்ள பிளஸ்2 மாணவரின் சுய விவரங்களுக்கு ரூ.5 ஆயிரம், 10ம் வகுப்பு மாணவர்களின் என்றால் ரூ.3 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போன் ஆப் பணம் செலுத்தினால் பிளஸ்2 மாணவர்களின் ஒரு மாவட்ட விவரங்கள் ரூ.3 ஆயிரத்திற்கு வழங்கப்படும் என்று ஒருவர் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகியது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேநேரம், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களின் முகவரி, தொடர்பு எண்கள் என அனைத்து சுய விவரங்களும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் பொறியியல், தொழில் நுட்ப நிலையங்களின் நிர்வாகிகளுக்கு அவை சென்றது எப்படி என குழப்பம் நிலவியது. பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருக்கும் சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த விவரங்களை விற்பனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த மோசடி பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரி புண்ணியக்கோடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்திய போது, அனைத்தும் ஆன்லைன் மூலம் மோசடி நடந்துள்ளது. மாணர்களின் சுய விவரங்கள் அனைத்தும் வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களுங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரகசியமாக பராமரிக்கப்பட்டு வந்த தகவல் எப்படி வெளியானது என்று விசாரணை நடத்திய போது, மாணவர்களின் டேட்டாக்களை அனைத்தும் ‘ஹேக்’ செய்து அதன் மூலம் மாணவர்களின் சுய விவரங்கள் திருடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு இருந்தாலும், பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் துணை இல்லாமல் இந்த மோசடி நடக்க வாய்ப்பு இல்லை என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால், மோசடி தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிலரை நேரில் அழைத்து விசாரணை நடத்த சைபர் க்ரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதேநேரம், 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களின் சுய விவரங்கள் விற்பனை செய்த மோசடி நபர்கள், விவரங்களை பணம் கொடுத்து வாங்கிய தனியார் கல்வி நிறுவனங்களிடமும் விசாரணை நடத்த உள்ளதாக சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு எழுதும் மாணவர்களின் சுய விவரங்கள் வெளியான விவகாரம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் சுய விவரங்கள் அனைத்தும் வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களுங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது பள்ளி மாணவர்களின் விபரங்கள் திருடப்பட்டு, தனியாருக்கு விற்கப்பட்டது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கல்வித்துறை சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் விபரங்களும், பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில், சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபரங்கள் திருடப்பட்டு, தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டதாக, புகார்கள் எழுந்தன.
இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை செயலர், காகர்லா உஷா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து, நடந்த விசாரணையில், ‛ஜி-பே' வாயிலாக, 10 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு, பள்ளி கல்வித்துறையில் இருந்தே, வெளி நபர்களின் ‛இ-மெயில்' முகவரிக்கு, தகவல்கள் அனுப்பப்பட்டிருப்பது தெரிந்தது.
மாநில பாடத்திட்டத்தில், சுமார் 6 லட்சம் பேர், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 35 ஆயிரம் பேரின் தகவல் திருடி விற்கப்பட்டதை, அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரி புண்ணியக்கோடி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,‛பள்ளி மாணவர்களின் விபரங்களை, தனிநபர்கள் சிலர், பணம் பெற்று கொண்டு, 20 மாவட்டங்களைச் சேர்ந்த, வெளி நபர்களுக்கு விற்றுள்ளனர்.
இது, மிகவும் கண்டிக்கத்தக்கது.
மாணவர்களின் பாதுகாப்பை இது, கேள்விக்குறியாக்கி உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' எனக் கூறப்பட்டுள்ளது.
இப்புகார் குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
Tuesday, January 31, 2023
IAS
January 31, 2023
கல்வித் துறைக்கு 2 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கூடுதலாக நியமனம்
கல்வித் துறைக்கு 2 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கூடுதலாக நியமனம் - Appointment of 2 additional Indian Civil Service Officers in Education Department
கல்வித் துறைக்கு 2 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கூடுதலாக நியமனம்
பள்ளிக் கல்வித் துறை சிறப்புச் செயலாளராக திருமதி.ச.ஜெயந்தி & ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக திருமதி.P.ஸ்ரீ வெங்கட பிரியா நியமனம்.
பள்ளிக் கல்வித் துறை சிறப்புச் செயலாளராக திருமதி.ச.ஜெயந்தி & ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக திருமதி.P.ஸ்ரீ வெங்கட பிரியா நியமனம்.
Tuesday, January 03, 2023
SMC
January 03, 2023
பள்ளி மேலாண்மைக்குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பள்ளி மேலாண்மைக்குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பள்ளி மேலாண்மைக்குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் தற்காலிகமாக பல ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் தேவையுள்ள பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் இந்த கல்வியாண்டு முடியும் வரை, அதாவது ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்களை பணி அமர்த்தலாம். இந்த பணியினை வருகிற 9-ந்தேதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு பணியமர்த்தும்போது கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்விவரம் வருமாறு:
* இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தகுதியுடையவராக இருப்பின் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
* பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500-ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000-ம் மதிப்பூதியம் வழங்கப்படும்.
* இல்லம் தேடி கல்வி பணிடிகளில் ஈடுபட்டு இருக்கும் ஆசிரியர்கள் தங்கள் பணியை முடித்து எப்போது பள்ளிக்கு திரும்பினாலும், பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக பணிவிடுப்பு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மேலாண்மைக்குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் தற்காலிகமாக பல ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் தேவையுள்ள பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் இந்த கல்வியாண்டு முடியும் வரை, அதாவது ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்களை பணி அமர்த்தலாம். இந்த பணியினை வருகிற 9-ந்தேதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு பணியமர்த்தும்போது கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்விவரம் வருமாறு:
* இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தகுதியுடையவராக இருப்பின் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
* பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500-ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000-ம் மதிப்பூதியம் வழங்கப்படும்.
* இல்லம் தேடி கல்வி பணிடிகளில் ஈடுபட்டு இருக்கும் ஆசிரியர்கள் தங்கள் பணியை முடித்து எப்போது பள்ளிக்கு திரும்பினாலும், பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக பணிவிடுப்பு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



