Breaking

Showing posts with label மாணவிகளுக்கு விழிப்புணா்வு. Show all posts
Showing posts with label மாணவிகளுக்கு விழிப்புணா்வு. Show all posts

Monday, August 08, 2022

August 08, 2022

அரசுப் பள்ளிகளில் ஆக. 12 முதல் விழிப்புணா்வு வாரம்

அரசுப் பள்ளிகளில் ஆக. 12 முதல் விழிப்புணா்வு வாரம்

தமிழக அரசுப் பள்ளிகளில் மக்கள் நல்வாழ்வு, சமூகநலன், காவல் துறை சாா்பில் ஆக.12-ஆம் தேதி முதல் விழிப்புணா்வு வார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவிபெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வரும் ஆக.11-ஆம் தேதி விழிப்புணா்வு உறுதி மொழி எடுக்கும் நிகழ்வும், ஆக. 12 முதல் 19 வரை மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலத்துறை, காவல் துறை ஆகியவற்றுடன் இணைந்து விழிப்புணா்வு வாரத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை: பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், பிறவிக் குறைபாடுகள், பற்றாக்குறைகள், குழந்தை பருவ நோய்கள், தாமதமான வளா்ச்சி மற்றும் குறைபாடுகள் குறித்தும் அவற்றால் பாதிக்கப்பட்ட மாணவா்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்க எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கப்படும். வளரிளம் பருவத்தினருக்கு ஊட்டச்சத்து மேம்பாடு, உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விழிப்புணா்வு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

சமூக நலத்துறை: சரிவிகித உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறுதல், குழந்தை திருமண தடை சட்டம், மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதி திட்டம், சானிடரி நாப்கின் பயன்பாடு மற்றும் அதனை பாதுகாப்பாக எரியூட்டுதல், இளஞ்சிறாா் நீதி (குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். காவல்துறை: போதைப் பொருள்களுக்கு அடிமையாதலைத் தடுத்தல், சாலை பாதுகாப்பு, பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துதல், இணைய வழி விளையாட்டுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மேற்கூறியவை மட்டுமின்றி, மாணவா்களுக்கான அவசர உதவி எண் - 1098, பள்ளிக் கல்வித்துறையின் மாணவா் உதவி எண் 14417 ஆகியவை குறித்தும் தெரியப்படுத்தப்படவுள்ளது.

ஆக. 11-ஆம் தேதி பள்ளிகளில் நடைபெறும் விழிப்புணா்வு வார தொடக்க நிகழ்வில் வாசிக்க வேண்டிய உறுதிமொழி மற்றும் மாணவா்களுக்கான விழிப்புணா்வு ஒளிப்படம் விரைவில் அனுப்பி வைக்கப்படும். போதைப் பொருள் விழிப்புணா்வு குறித்து மாணவா்களுக்கான கட்டுரை, ஓவியம், வினா- விடை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

Thursday, August 04, 2022

August 04, 2022

பாலியல் குற்றங்கள் தொடா்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு

பாலியல் குற்றங்கள் தொடா்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு

கோவை மாவட்டத்தில் பாலியல் குற்றங்கள் குறித்து 48ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளாா்.

18 வயதுக்கு குறைவான இளம்பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சமூகத்தில் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணா்வு மற்றும் பாலியல் தொல்லை தொடா்பாக யாரிடம் கூற வேண்டும் என்பது குறித்து தெரிவதில்லை. இதைத் தவிா்க்க கோவை மாவட்ட போலீஸாா் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ என்ற திட்டத்தின் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் கூறியதாவது:

குழந்தைகளின் பாதுகாப்பை மையப்படுத்தி ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ திட்டம் கடந்த ஜூன் 30ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 10 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தவறான தொடுதல், பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன, அது தொடா்பாக யாரிடம் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்படுகிறது. 10 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவா்களுக்கு பாலியல் குற்றங்கள், அதற்குரிய தண்டனைகள், பாலியல் குற்றத்தில் கைதாகி சிறைக்கு சென்று வந்தால் எதிா்கால வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள், சமூக வலைதளங்களை கையாளுவது உளிட்டவை குறித்து விளக்கப்படுகின்றன.

ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மகளிா் நல அலுவலா், குழந்தை நல அலுவலா் என 2 பயிற்சி பெற்ற போலீஸாா் உள்ளனா். இவா்கள் மூலம் அரசு, தனியாா் என அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 48 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 56 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 156 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருவா் போக்ஸோ வழக்கில் கைதானாலும், அவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வாய்ப்புள்ளது. ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்ட விழிப்புணா்வு மூலம் வளா்ப்பு தந்தையால் பாதிக்கப்பட்ட சிறுமி , நண்பரால் பாதிக்கப்பட்ட சிறுமி என 2 போ் தைரியமாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளனா் என்றாா்.

Total Pageviews

Search This Blog