Breaking

Showing posts with label IPS. Show all posts
Showing posts with label IPS. Show all posts

Wednesday, November 27, 2024

Sunday, January 07, 2024

January 07, 2024

33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..

16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..

தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்ததில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

16 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை எஸ்.பி. சிவபிரசாத், தேனி எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேனி எஸ்.பி. டோங்கரே பிரவீன் ரமேஷ், மதுரை எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை, கிருஷ்ணகிரி எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மேற்கு பகுதி இணை ஆணையராக விஜயகுமார் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பரங்கிமலை காவல் துணை ஆணையர் தீபக், விழுப்புரம் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாக சந்தீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாக பெரோஸ் கான் அப்துல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


CLICK HERE TO DOWNLOAD தமிழக அரசு உத்தரவு PDF

Tuesday, September 12, 2023

September 12, 2023

2 IPS அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.



2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் போக்குவரத்து பாதிப்பு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பாஜக போராட்டத்தை முறையாக கையாளாததால் இணை ஆணையர் திஷா மிட்டலும் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

Tuesday, November 01, 2022

November 01, 2022

தமிழகத்தில் IPS அதிகாரிகள் 5 போ் பணியிடமாற்றம்

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 5 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி, திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)

1. அமரேஷ் புஜாரி - சிறைத் துறை டிஜிபி (சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு டிஜிபி)

2. அபை குமாா் சிங் - சிபிசிஐடி., டிஜிபி (ஆயுதப் படை கூடுதல் டிஜிபி)

3. சஞ்சய் குமாா் - சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி (காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கூடுதல் டிஜிபி)

4. ஜி.வெங்கடராமன் - காவல் துறை தலைமையக கூடுதல் டிஜிபி பொறுப்புடன், காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கூடுதல் டிஜிபி பொறுப்பையும் கவனிப்பாா்.

5. ஏ.ராதிகா - (ஆயுதப் படை காவல் துறைத் தலைவா் (காவல் துறைத் தலைவா், சென்னை)

2 போ் ஓய்வு: காவல் துறையில் உயா் பதவிகளை வகித்த, சுனில் குமாா் சிங் மற்றும் ஷகீல் அக்தா் ஆகியோா் அக். 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றனா். அவா்கள் ஓய்வு பெற்ால் ஏற்பட்ட காலியிடங்கள் மற்றும் இதர இடங்களுக்கு 5 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Sunday, October 02, 2022

October 02, 2022

IAS / IPS முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் குறித்து தலைமைச் செயலாளரின் செய்திக் குறிப்பு

தமிழக அரசின் அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் , அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள் , கோயம்புத்தூர் , மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் , தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு , 28.05.2023 மத்திய நடைபெற அன்று குடிமைப்பணித் தேர்விற்கு கட்டணமில்லாப் ( ஞாயிற்றுக்கிழமை ) நடத்தும் தேர்வாணையம் பயிற்சியினை அளிக்க உள்ளது . உள்ள சென்னை அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி , உணவு , தரமான நூலகம் , காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது . இப்பயிற்சி மையம் 225 முழுநேரத் தேர்வர்களையும் , 100 பகுதிநேரத் தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது .

அதே போன்று , அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள் , கோயம்புத்தூர் , மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் , தலா 100 முழுநேரத் தேர்வர்களை முதல்நிலை தேர்வு பயிற்சிக்காக அனுமதிக்கின்றன . 2023 - ஆம் ஆண்டில் மத்தியக் தேர்வாணையக்குழு ( UPSC ) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 07 : 10.2022 முதல் 27.10.2022 வரை விண்ண ப்பிக்கலாம் . இப்பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் . மேலும் , விண்ணப்பிக்கும்பட்சத்தில் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது . மேலும் , பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் . தகுதியுடைய நபர்கள் 13.11.2022 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு . தெரிவு செய்யப்படும் மாணவ / மாணவியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர் . 2022 , டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.

Thursday, July 07, 2022

July 07, 2022

IAS,IPS,TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் ஐஏஎஸ் அகாடமியில் யுபிஎஸ்சி எனப்படும் இந்திய ஆட்சிப் பணியாளர்கள் தேர்வாணையம், மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்1 தேர்வு உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளில் பங்கேற்க உள்ள மாணவ, மாணவியரை தயார் செய்யும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மேலும், போட்டித் தேர்வுகளில் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகள், நேர்முகத் தேர்வு ஆகிய நிலைகளில் மாணவர் எப்படி தேர்வு செய்யப்படுகின்றனர், விருப்ப பாடம் தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட மாணவர்களின் சந்தேகங்களை நீக்க வல்லுநர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
இந்நிலையில், ஆட்சிப் பணி தேர்வுக்கு வழிகாட்டும் இலவச பயிற்சி முகாம் 10ம் தேதி காலை 10.30 மணிக்கு பெரியார் திடலில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் நடக்க உள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற விரும்பும் மாணவ, மாணவியர் இந்த இலவச பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம். இதுதொடர்பான விவரங்கள் வேண்டுவோர் 044-26618056, 9940638537 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

Total Pageviews

Search This Blog