teachers news
March 19, 2026
Showing posts with label government teachers. Show all posts
Showing posts with label government teachers. Show all posts
Thursday, March 19, 2026
Wednesday, February 21, 2024
government teachers
February 21, 2024
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பார்வையில் தமிழக அரசின் பட்ஜெட் ஆதரவும் எதிர்ப்பும்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பார்வையில் தமிழக அரசின் பட்ஜெட் ஆதரவும் எதிர்ப்பும் !
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பார்வையில் தமிழக அரசின் பட்ஜெட் ஆதரவும் எதிர்ப்பும் ! தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மீதான கருத்து பதிவுகளாக அகில இந்தியச் செயலாளர் ஐபெட்டோ அண்ணாமலை தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் மா. நம்பிராஜ், பொதுச் செயலாளர் அ. வின்சென்ட் பால்ராஜ், மாநில பொருளாளர் க.சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் இன்று சட்ட பேரவையில் தாக்கல் செய்து படித்துள்ளார். அறிஞர் அண்ணா அவர்கள் நிதியமைச்சராக இருந்த பொழுது தாக்கல் செய்த விவரத்தினையும் பதிவு செய்தார்கள்.
64 பக்க அறிக்கையில் மூன்றரை கோடி மக்கள் பயனடையும் வகையில் இடம்பெற்றதாக அறிஞர் அண்ணா சொன்னதாக தெரிவித்த போது நெஞ்சம் நெகிழ்ந்தது. வரவேற்கக் வேண்டிய பொது அம்சங்கள்:
* தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் ( 6 முதல் 12 ஆம் வகுப்பு ) வரைக்கும் படிக்கின்ற மாணவிகளுக்கு புதுமைப் பெண் கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயில்வதற்கு மாதந்தோறும் ரூபாய்1000/- வழங்கப்படும் *ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ள அறிவிப்பாகும். அரசுப் பள்ளியில் படிக்கும் அக்காவிற்கு சலுகை அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் தங்கைக்கு சலுகைகள் இல்லையா? என்றெல்லாம் எழுதினோம்.
அதே போல் அரசு பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு உதவிடும் பொருட்டு “தமிழ்ப்புதல்வன் ” திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்கபட இருக்கிறது. சலுகைகள் விரிவுபடுத்தப்பட்டிருப்பதை மனந்திருந்து தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழக நிதி அமைச்சர் அவர்களுக்கும், இந்த நேரத்தில் நன்றி பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கின்ற நாளில் போராடி வருகிறார்கள். ஆனால், போராடி வருபவர்களுக்கு ஏதாவது ஒரு அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்த்துதான் இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை அறிவித்து போராடி வருகிறார்கள். ஆனால், எல்லோரும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்ற கொள்கை முடிவினை கூட ஆளுநர் உரையிலும், இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை என்பது பெருத்த ஏமாற்றத்தினையும் அதிருப்தியையும் அளிக்கிறது. அதுபோல் நிறுத்தி வைக்கப்பட்ட, முடக்கி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பினுடைய அனுமதியும் தொடரும் என்ற அறிவிப்பாவது வெளிவரும் என்று எதிர்பார்த்தார்கள் அதுவும் வெளிவரவில்லை. மற்றபடி கல்வித்துறை சார்ந்த நிதி ஒதுக்கீட்டில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் 90% *ஆசிரியர்ளை பெரிதும் பாதிக்கு உள்ளாக்கி வரும் அரசாணை எண் 243 ரத்து செய்வது, இடைநிலை ஆசிரியர்களுடைய ஊதிய முரண்பாடான மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உட்பட அறிக்கைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம்.
நிதி ஒதுக்கீட்டினை பொருத்த வரையில் கடந்த ஆண்டை விட அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு கூடுதலாக செய்துள்ளார்கள். கல்வித்துறையை பொருத்தவரையில் பள்ளிக்கல்வித்துறைக்கு 44000/- கோடி ஒதுக்கியுள்ளார்கள். சென்ற ஆண்டு ரூ40299/- கோடி நிதிநிலை ஒதுக்கி இருந்தார்கள். உயர் கல்வித்துறையை பொறுத்தவரையில் சென்ற ஆண்டு ரூ6967/- கோடி ஒதுக்கி இருந்தார்கள்.
இந்த ஆண்டு ரூ8212/- கோடி ஒதுக்கி உள்ளார்கள். அதேபோல் அனைத்து துறைகளுக்கும் ஒதுக்கி உள்ளார்கள். அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாட்டில் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் அரசு அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் என முடிவு செய்துள்ளார்கள். அதேபோல் ஒரு லட்சம் மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை பெற கல்வி கடன் ரூ2500/-கோடி வழங்குவதாக அறிவித்து உள்ளார்கள். அகில இந்திய அளவில் நிதி ஆயோக் புள்ளி விவரப்படி சுமார் எட்டு கோடி மக்கள் உள்ள தமிழ்நாட்டில் 14 லட்சம் பேர் (2.2%பேர்) வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக அறிவித்துள்ளார்கள். அதில் 5 லட்சம் பேரை வறுமைக்கோட்டில் இருந்து மீட்கப்படுவார்கள் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் ரூ50000/- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்து உள்ளார்கள். வரி வருவாயை பொருத்தவரையில்ரூ 1.49 லட்சம் கோடி எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது பற்றாக்குறை ரூ44907/- கோடி.
நிதித்துறை முதன்மை செயலாளரைப் பொறுத்தவரையில் நிதி நிலையை ஆரோக்கியமாக நம்மால் வைத்திருக்க முடியுமென்று உறுதியளித்துள்ளார்.
தேசிய அளவைவிட பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதாக நிதித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தடைகளை தாண்டி வளர்ச்சியை நோக்கி என்ற ” லோகோ “வுடன் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது மகிழ்ச்சியை தருகிறது. மேற் சொன்ன பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டுமாய் தமிழக முதலமைச்சர் அவர்களையும், தமிழக நிதியமைச்சர் அவர்களையும் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பாக பெரிதும் வேண்டி கேட்டு கொள்கிறோம். ” என்பதாக அந்த கூட்டறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப் பிரிவு.
Thursday, December 29, 2022
VIDEOS
December 29, 2022
ஆசிரியர்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி | teachers protest
Wednesday, December 28, 2022
Pongal Bonus
December 28, 2022
தமிழக அரசின் பொங்கல் போனஸ் ஏமாற்றமளிக்கிறது: அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு
தமிழக அரசின் பொங்கல் போனஸ் ஏமாற்றமளிக்கிறது: அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு
மதுரை: தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் போனஸ் அறிவிப்பும், அகவிலைப்படி உயர்வில் மவுனம் சாதிப்பதும் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் சு.தமிழ்ச் செல்வி, பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமி நாராயணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் அறிவிக்கக் கோரியும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.7.2022 முதல் உயர்த்தி வழங்கப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக 1.7.2022 முதல் வழங்கக் கோரியும் நாளை (டிச.29) அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தோம்.
இந்தச் சூழலில் தமிழக அரசு அவசர அவசரமாக பொங்கல் போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதத்துக்குப் பதில் முன்கூட்டியே அறிவித்து அரசு ஊழியர் நலனில் மிகவும் அக்கரை கொண்டுள்ளதைப் போன்ற போலியான தோற்றத்தை தமிழக அரசு உருவாக்க முயன்றுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸாக வழங்கப்பட்டு வருகிறது.போனஸ் என்பது அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய கொடுபடா ஊதியம் எனவும், போனஸ் அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமை எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதை வசதியாக மறந்தும், மறைத்தும், கருணைத் தொகை என்றும், மிகை ஊதியம் என்றும் போனஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுகிறது.
ரூ 7 ஆயிரத்துக்குப் பதிலாக 3 ஆயிரம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. சி மற்றும் டி பிரிவில் காலியிடங்கள் அதிகம் இருக்கும் நிலையில், ரூ.221.42 கோடி செலவு என்பது மிகைப்படுத்தப்பட்ட தொகை.
4 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழக அரசு மவுனம் சாதித்து வருகிறது. பெரும்பான்மையான ஊழியர்களை வஞ்சிக்கும் வண்ணம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த செயலை கண்டித்து நாளை நடக்க உள்ள போராட்டத்தில் ஊழியர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மதுரை: தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் போனஸ் அறிவிப்பும், அகவிலைப்படி உயர்வில் மவுனம் சாதிப்பதும் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் சு.தமிழ்ச் செல்வி, பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமி நாராயணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் அறிவிக்கக் கோரியும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.7.2022 முதல் உயர்த்தி வழங்கப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக 1.7.2022 முதல் வழங்கக் கோரியும் நாளை (டிச.29) அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தோம்.
இந்தச் சூழலில் தமிழக அரசு அவசர அவசரமாக பொங்கல் போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதத்துக்குப் பதில் முன்கூட்டியே அறிவித்து அரசு ஊழியர் நலனில் மிகவும் அக்கரை கொண்டுள்ளதைப் போன்ற போலியான தோற்றத்தை தமிழக அரசு உருவாக்க முயன்றுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸாக வழங்கப்பட்டு வருகிறது.போனஸ் என்பது அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய கொடுபடா ஊதியம் எனவும், போனஸ் அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமை எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதை வசதியாக மறந்தும், மறைத்தும், கருணைத் தொகை என்றும், மிகை ஊதியம் என்றும் போனஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுகிறது.
ரூ 7 ஆயிரத்துக்குப் பதிலாக 3 ஆயிரம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. சி மற்றும் டி பிரிவில் காலியிடங்கள் அதிகம் இருக்கும் நிலையில், ரூ.221.42 கோடி செலவு என்பது மிகைப்படுத்தப்பட்ட தொகை.
4 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழக அரசு மவுனம் சாதித்து வருகிறது. பெரும்பான்மையான ஊழியர்களை வஞ்சிக்கும் வண்ணம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த செயலை கண்டித்து நாளை நடக்க உள்ள போராட்டத்தில் ஊழியர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
Saturday, September 24, 2022
This is your place
September 24, 2022
This is your place: teachers make no mistake! - இது உங்கள் இடம்: ஆசிரியர்களே தப்பு செய்யாதீங்க!
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
ரா.சேது ராமானுஜம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஜாதிகள் இல்லையடி பாப்பா... குல தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்...' என்று பாடியுள்ளார் மகாகவி பாரதியார். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஒன்றில், அங்கு படிக்கும், 40 மாணவர்களுக்கும், அப்பகுதி யில் உள்ள மகளிர் பள்ளியில் படிக்கும், 45 மாணவியருக்கும், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அங்கு நடந்த சம்பவத்தை நினைத்தால் நெஞ்சு எரிகிறது.
அதாவது, மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்ட சைக்கிள்களில், எம்.பி.சி., - பி.சி., மற்றும் எஸ்.சி., என, சாக்பீசில் எழுதப்பட்டிருந்ததுடன், எஸ்.சி., பிரிவை சேர்ந்த மாணவ - மாணவியருக்கான சைக்கிள்கள் தனியாக பிரித்து வைக்கப்பட்டு வழங்கப்பட்டு உள்ளன.
சைக்கிள்களின் இருக்கைகளில், சாக்பீசால் ஜாதி வாரியாக பிரித்து எழுதியதே தவறு. அப்படிப்பட்ட நிலையில், எஸ்.சி., பிரிவு மாணவ - மாணவியருக்கான சைக்கிள்களை தனியாக நிறுத்தி வைத்து வழங்கியது, அதை விட பெரிய தவறாகும். புத்திசாலித்தனமாக வேலை செய்கிறோம் என்று நினைத்து, இப்படிப்பட்ட முட்டாள்தனமான வேலையை ஆசிரியர்கள் செய்திருக்கின்றனர்.
இங்கு நடைபெற்ற சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில், பர்கூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும் பங்கேற்றுஉள்ளார். அவராவது, மாணவர்களை பிரித்துக் காட்டிய, ஆசிரியர்களின் செயலை கண்டித்திருக்க வேண்டும்; அதுவுமில்லை.
ஆசிரியர்கள், இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளை நடத்தும் போது, யாருடைய மனதையும் புண்படுத்தாமலும், ஜாதி ரீதியான ஏற்றத்தாழ்வு பார்க்காமலும், அனைத்து மாணவர்களும் சமமானோர் என்ற ரீதியில், தங்கள் கடமையை செய்ய வேண்டும் என்பதே, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பு. ஆசிரியர்களே... இனியும் இதுபோன்ற தப்பை செய்யாதீங்க!
ரா.சேது ராமானுஜம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஜாதிகள் இல்லையடி பாப்பா... குல தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்...' என்று பாடியுள்ளார் மகாகவி பாரதியார். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஒன்றில், அங்கு படிக்கும், 40 மாணவர்களுக்கும், அப்பகுதி யில் உள்ள மகளிர் பள்ளியில் படிக்கும், 45 மாணவியருக்கும், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அங்கு நடந்த சம்பவத்தை நினைத்தால் நெஞ்சு எரிகிறது.
அதாவது, மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்ட சைக்கிள்களில், எம்.பி.சி., - பி.சி., மற்றும் எஸ்.சி., என, சாக்பீசில் எழுதப்பட்டிருந்ததுடன், எஸ்.சி., பிரிவை சேர்ந்த மாணவ - மாணவியருக்கான சைக்கிள்கள் தனியாக பிரித்து வைக்கப்பட்டு வழங்கப்பட்டு உள்ளன.
சைக்கிள்களின் இருக்கைகளில், சாக்பீசால் ஜாதி வாரியாக பிரித்து எழுதியதே தவறு. அப்படிப்பட்ட நிலையில், எஸ்.சி., பிரிவு மாணவ - மாணவியருக்கான சைக்கிள்களை தனியாக நிறுத்தி வைத்து வழங்கியது, அதை விட பெரிய தவறாகும். புத்திசாலித்தனமாக வேலை செய்கிறோம் என்று நினைத்து, இப்படிப்பட்ட முட்டாள்தனமான வேலையை ஆசிரியர்கள் செய்திருக்கின்றனர்.
இங்கு நடைபெற்ற சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில், பர்கூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும் பங்கேற்றுஉள்ளார். அவராவது, மாணவர்களை பிரித்துக் காட்டிய, ஆசிரியர்களின் செயலை கண்டித்திருக்க வேண்டும்; அதுவுமில்லை.
ஆசிரியர்கள், இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளை நடத்தும் போது, யாருடைய மனதையும் புண்படுத்தாமலும், ஜாதி ரீதியான ஏற்றத்தாழ்வு பார்க்காமலும், அனைத்து மாணவர்களும் சமமானோர் என்ற ரீதியில், தங்கள் கடமையை செய்ய வேண்டும் என்பதே, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பு. ஆசிரியர்களே... இனியும் இதுபோன்ற தப்பை செய்யாதீங்க!
Wednesday, September 14, 2022
government teachers
September 14, 2022
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செயல்திறன் மதிப்பீடு: அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதிசெய்ய, அனைத்து ஆசிரியர்களும் சுயமதிப்பீடு செய்து தங்களை மேம்படுத்திக் கொள்ள ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டது.
அதன்படி ஒவ்வோர் ஆசிரியரும் தங்கள் வகுப்பறை நிகழ்வுகளை வடிவமைத்து, மாணவர் கற்றல் அடைவு நிலையைமேம்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த செயல்திறன்களை ஒவ்வொரு ஆசிரியரும் அடைந்து, அதை முழுமையாகப் பின்பற்றுவதை சுயமாக மதிப்பீடு செய்ய,தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் மேலாய்வுக் குறிப்பு எழுதித்தர வேண்டும்.
சுயமதிப்பீட்டுக்கான வழிகாட்டுதல்களை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதை ஆரம்ப நிலை முதல் மேல்நிலை வரை பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும். இதற்கான மாதிரிப் படிவங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் கிடைக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஆசிரியர் செயல்திறன் மதிப்பீட்டு பணிக்காக ரூ.30.23லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி, பள்ளிகளில் உள்ள இணையதள செலவினங்களுக்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதிசெய்ய, அனைத்து ஆசிரியர்களும் சுயமதிப்பீடு செய்து தங்களை மேம்படுத்திக் கொள்ள ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டது.
அதன்படி ஒவ்வோர் ஆசிரியரும் தங்கள் வகுப்பறை நிகழ்வுகளை வடிவமைத்து, மாணவர் கற்றல் அடைவு நிலையைமேம்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த செயல்திறன்களை ஒவ்வொரு ஆசிரியரும் அடைந்து, அதை முழுமையாகப் பின்பற்றுவதை சுயமாக மதிப்பீடு செய்ய,தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் மேலாய்வுக் குறிப்பு எழுதித்தர வேண்டும்.
சுயமதிப்பீட்டுக்கான வழிகாட்டுதல்களை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதை ஆரம்ப நிலை முதல் மேல்நிலை வரை பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும். இதற்கான மாதிரிப் படிவங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் கிடைக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஆசிரியர் செயல்திறன் மதிப்பீட்டு பணிக்காக ரூ.30.23லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி, பள்ளிகளில் உள்ள இணையதள செலவினங்களுக்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
