Breaking

Showing posts with label Part Time Teachers Post. Show all posts
Showing posts with label Part Time Teachers Post. Show all posts

Wednesday, July 22, 2026

Friday, March 13, 2026

Monday, February 03, 2025

Wednesday, January 08, 2025

Saturday, December 07, 2024

Sunday, June 23, 2024

Saturday, August 05, 2023

August 05, 2023

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்த முடிவு

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்

அரசுப் பள்ளிகளில் மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி கடந்த 11 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தியும் எங்களது கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என வரிசை எண் 181 ல் அறிவித்திருந்தது.ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவடையும் நிலையிலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கடந்த ஆட்சியில் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலையில் தான் இன்று வரை இருக்கின்றோம்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நாங்களும் மாண்புமிகு அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பல முறை மனுக்கள் கொடுத்தும்,பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் எங்கள் கோரிக்கைகளை அரசுக்கு மீண்டும் நினைவூட்டும் விதமாக வருகின்ற செப்டம்பர் மாதம் காலாண்டு விடுமுறையில் சென்னையில் மாபெரும் தொடர் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றோம்.

பழ.கௌதமன்

மாநில தலைவர்

ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம்..

Saturday, April 01, 2023

April 01, 2023

தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாத திமுக* ஏமாற்றத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்

தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாத திமுக ஏமாற்றத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்

2012 முதல் அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. திமுக ஆட்சி அமைந்த உடன் நாங்கள் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவோம் என சந்தோசப்பட்டோம்.கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் எங்களுக்கான பணிநிரந்தர அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்தோம்.இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையிலாவது எங்களுக்கான நல்லதொரு அறிவிப்பு வரும் என்று ஆவலோடு 12,000 ஆசிரியர்களும் காத்திருந்தோம்.ஆனால் இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் எங்களைப் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாதது கண்டு மனம் வேதனை அடைகிறோம். வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும் வேலைக்கு செல்வதால் எங்களுக்கு பள்ளியிலும்,சமூகத்திலும் ஏன் வீட்டிலும் கூட மரியாதை இல்லை.எனவே உடனடியாக பணிநிரந்தரம் செய்ய இயலாத பட்சத்தில் தற்காலிக தீர்வாக ஊதியத்தை உயர்த்தி அனைத்து வேலை நாட்களிலும் முழுநேர வேலையாவது வழங்குங்கள் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.அமைச்சரும் எங்கள் கோரிக்கை குறித்து நம்பிக்கையான வார்த்தைகளை அளித்தார்.அமைச்சரின் வார்த்தைகளை நாங்களும் முழுமையாக நம்பினோம்.ஆனால் எங்களின் நம்பிக்கை பொய்த்து போனது.

இந்த நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் முடிவதற்குள்ளாவது 110 விதியின் கீழ் எங்களுக்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆசிரியர்களின் மகிழ்ச்சியே அரசின் மகிழ்ச்சி என்று அடிக்கடி சொல்லும் அமைச்சர் எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவார் என நம்புகிறோம். ஒரு வேளை இந்தக் கூட்டத்தொடரில் எங்களுக்கான அறிவிப்பு வரவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டத்தை நடத்தும் முடிவில் உள்ளோம்.

பழ.கௌதமன்,

மாவட்ட பொறுப்பாளர்,

திருப்பூர்.

Wednesday, September 28, 2022

September 28, 2022

பகுதி நேர ஆசிரியா் ஓய்வு வயது 60 ஆக உயா்வு - Retirement age of part-time teacher increased to 60

பகுதி நேர ஆசிரியா் ஓய்வு வயது 60 ஆக உயா்வு - Retirement age of part-time teacher increased to 60

பகுதிநேர ஆசிரியா்களின் ஓய்வு பெறும் வயதும் 60-ஆக உயா்த்தி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை: அனைத்து வகையான தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் சுமாா் 16 ஆயிரம் ஆசிரியா்களும், பிற பணியாளா்களும் 60 வயது வரை தொடா்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டாா்.

அதனடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளா்கள், சிறப்பு ஆசிரியா்கள் மற்றும் பகுதி நேர பயிற்றுநா்கள், பாதுகாவலா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிகழாண்டு செப்டம்பா் மாதம் முதல் ஒய்வு பெறும் வயது 58-இல் இருந்து 60 ஆக உயா்த்தி ஆணையிடப்படுகிறது. இதுதொடா்பாக பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மற்றும் வட்டார வள மையங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்கள், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற பாடங்களை பகுதி நேர ஆசிரியா்கள் கையாளுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, August 08, 2022

Total Pageviews

Search This Blog